நவீன ஆத்திச்சூடி:
அ ன்பு பாரட்ட வேண்டும்.!
அ றிவு நமையாள வேண்டும்!!
ஆ ற்றல் மேலோங்க வேண்டும்.!
ஆ சை அளவோடு வேண்டும்.!!
இ யற்கை வேளாண்மை வேண்டும்.!
இ யற்கை அழியாமை வேண்டும்.!!
ஈ டுபாடு எதிலும் வேண்டும்.!
ஈ கையில் இன்பம் காணவேண்டும்.!!
உ ன்னை நீ நம்ப வேண்டும்.!
உ ழைப்பால் உலகை ஆளவேண்டும்.!!
ஊ னமில்லா நல்உள்ளம் வேண்டும்.!
ஊ டகம் உண்மையானதாய் வேண்டும்.!!
எ ண்ணங்கள் நேர்மறையாய் வேண்டும்.!
எ டுத்துக்காட்டாய் நீவாழ வேண்டும்.!
ஏ மாற்றங்கள் இனி மாற வேண்டும்.!
ஏ ற்றத்தாழ்வுகள் எரிந்தொழிய வேண்டும்.!!
ஐ க்கியம் என்றும் எதிலும் வேண்டும்.!
ஐ யமில்லாத அறிவு வேண்டும்.!!
ஒ ப்புக்கு பழகாத உறவு வேண்டும்.!
ஒ ருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.!!
ஓ திஞானம் நாம் காண வேண்டும்.!
ஓ ய்வறியாத உழைப்பு வேண்டும்.!!
ஔ வியம் இல்லா நல்ல மனம் வேண்டும்.!
ஔ தாரியம் கொண்ட பொன்மனம் வேண்டும்.!!