குதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..!
குதிக்கால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாது. சில சமயங்களில் கடினமாக தளங்களில் அவர்களால் நடக்கவும் முடியாது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.
அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதிலிருக்கும் சாறை முற்றிலுமாக எடுத்து விடவேண்டும். நமக்கு தேவை அந்த எலுமிச்சை தோல் மட்டும் தான். சற்றே காய்ந்த அந்த தோலை எடுத்து, அதை உங்கள் குதிக்காலில் படும்படி வைக்கவும். உங்கள் குதிக்கால் வெடிப்புகளை முழுவதும் கவர் செய்யிம்படியாக வைக்கவேண்டும்.
பிறகு அந்த எலுமிச்சை தோலின் நிலை விலகாத வண்ணம், சாக்ஸை அணிந்துக் கொள்ளுங்கள். இது சருமத்தின் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்ய உதவும். இதை இரவு நேரங்களில் பின்பற்றுவதால், எங்கும் நடக்காமல் ஓரிடத்தில் இருப்பதால் நல்ல பலன் அடையமுடியும். எலுமிச்சையின் நறுமணம் இரவு உங்கள் தூக்கமின்மை பிரச்சனையை போக்க உதவும். இதை தொடர்ந்து செய்து வருவதால், உங்கள் குதிக்கால் வெடிப்பு மெல்ல, மெல்ல குணமடைவதை நன்கு உணர முடியும்.
Shared by M VIJAYAN
[10/07, 12:09] Biont நூலகம்அடம: பாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா?
top5 tamil
பாட்டி வைத்தியம் என்பது நம்முடைய முன்னோர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த, உணவு மருந்து என்னும் அடிப்படையிலான இயற்கை மருத்துவ முறைகள் ஆகும். இந்த பாட்டி வைத்தியத்தின் மிக அடிப்படையான விஷயமே நாம் சாப்பிடும் உணவையே நம்முடைய நோயைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துவது தான்.
நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு எது நன்மையோ அதையே தங்களுடைய உணவு முறையாகப் பின்பற்றி வந்தனர். ஆனால் இன்றைய மாறிவிட்ட வாழ்க்கை முறையில், நம்முடைய உணவுப் பழக்கம் என்பது முற்றிலும் மாறிவிட்டது. ஃபாஸ்ட் ஃபுட், பீட்சா, பர்கர், நூடுல்ஸ் என்று சாப்பிட்டு விட்டு, உடலில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் அதிகமான பின், மருத்துவரிடம் சென்று நிற்கும்போது, அவர் மீண்டும் நம்முடைய பழமையாக உணவு முறையைப் பின்பற்றச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். நாமும் நம்முடைய பாரம்பரிய உணவு முறையையே இப்போது தனி மருத்துவ முறையாகப் பின்பற்றி வருகிறோம்.
வாழைக்காய்:
வாழைக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருந்தாலும், வாழைக்காயை சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை உண்டாகும் என்னும் ஒரு வதந்தி இருக்கிறது. ஆனால் நம்முடைய முன்னோர்கள் வாழைக்காயை பல்வேறு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். வாழைக்காய் பாட்டி வைத்தியத்தில் எதற்கெல்லாம் பயன்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள்:
வாழைக்காயில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. நோஞ்சானாக இருப்பவர்கள் அடிக்கடி உணவில் வாழைக்காயை சேர்த்துக் கொண்டால் உடல் தேற ஆரம்பிக்கும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும். என்னென்ன பிரச்னைக்கு வாழைக்காயை எப்படி சாப்பிடலாம்?
நீரிழிவு:
வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால், பசி மிக விரைவாக அடங்கி விடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைக்காயை சாப்பிடலாமா என்ற சந்தேகம் இயல்பாக எழுவது வழக்கம் தான். ஆனால் நீரிழிவு நோயுள்ளவர்கள் வாழைக்காய் கச்சல் செய்து சாப்பிடுங்கள். அதாவது வாழைக்காயில் சீரகமும் மிளகும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படி அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
ரத்த விருத்திக்கு:
ரத்த விருத்திக்கு வாழைக்காயை சமைத்து சாப்பிட்டு வருவது நல்லது. வாழைக்காயின் மேல் தோலை மட்டும் சீவி விட்டு, சமைப்பது தான் சிறந்த முறை. அப்போது தான் நார்ச்சத்து முழுமையும் நம்முடைய உடலுக்கு வந்து சேரும். வாழைக்காயின் மேல் தோலை மெலிதாக சீவி எடுத்து அதை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி வைத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் உளுந்து, சிறிது சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு 4 பல், உப்பு, ஒரு நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றைச் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும். அது மட்டுமல்லாது, வயிறு இரைச்சல், வாயில் எச்சில் ஊறுதல், வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.
வயிற்றுப்போக்கு:
வயிற்றுப் போக்குக்கு பத்திய சாப்பாடு சாப்பிடுகிறவர்கள் வாழைப் பிஞ்சினை நெய்யில் வதக்கி, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வாருங்கள். வயிற்றுப் போக்கு உடனடியாக நிற்கும்.
ஏப்பம்:
சிலருக்கு அடிக்கடி தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அதற்கு மிக முக்கியமான காரணமே அஜீரணக் கோளாறு தான். அப்படி அஜீரணக் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், வாழைக்காயினை சின்ன சின்ன வில்லைகளாக வெட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வர அஜீரணக் கோளாறு நீங்கும்.
அதேபோல், உலர்த்திய வாழைக்காயுடன் சிறிது உளுந்து, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து இட்லி பொடி, சாதப்பொடி போலவும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வரலாம். வயிற்றுக் கடுப்பு தீரும்.
Shared by M VIJAYAN
[10/07, 12:09] Biont நூலகம்அடம: பூட்டிய அறையில் தூங்கினால் வரும் உடல் உபாதைகள் :
ஏ.சி. அறையிலோ அல்லது கொசுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
இன்று பலரும் 10-க்கு 10 அடி அளவுகொண்ட சிறிய அறையில் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு ஏ.சி. போட்டு தூங்குகிறார்கள். ஏ.சி. இல்லாதவர்கள் கூட கொசுக் கடிக்கு பயந்து கதவு ஜன்னல் எல்லாவற்றையும் சிக்கென்று அடைத்து தூங்குகிறார்கள். இப்படி தூங்கினால் ஆரோக்கிய குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பூட்டிய அறைக்குள் ஒருவர் மட்டும் 4 மணி நேரம் தூங்கினாலே அந்த அறையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும்.
பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. இந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது 10 சதவீதத்திற்கும் கீழே குறைந்து போகிறது. அப்படி குறையும்போது நுரையீரலால் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத நிலை ஏற்படும், இது தொடர்ந்தால் மனிதன் மூர்ச்சையாகி விடுவான். உடலில் உள்ள உயிர் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். அதனால் ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்யத் தொடங்கும்.
அது நம் உடலில் உள்ள தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்யும். தண்ணீரில் இரு மடங்கு ஆக்ஜிஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் உள்ளன. இந்த நீரில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்துக் கொடுக்கிறது. அதனால்தான் சிறுநீரகத்தை மனிதனின் ‘இரண்டாவது நுரையீரல்‘ என்று அழைக்கிறார்கள்.
சிறுநீரகம் இந்த வேலையை செய்யத்தொடங்கியவுடன் அதுவரை அது செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலையை நிறுத்திவிடும். நமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அது கழிவுநீராக மாறிவிடும். அந்த கழிவுநீரை வெளியேற்ற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். மீண்டும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனால் சிறுநீரகம் அதிக வேலைப்பளுவுடன் தள்ளாடுகிறது.
இந்த தள்ளாட்டத்தால் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன், ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்களும் அதிகரிக்கின்றன. மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவமாக படிகிறது. சிறுநீரகத்திலும் இந்த படிமம் படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மூட்டு வலி தோன்றுகிறது.
ஏ.சி. அறையிலோ அல்லது கொசுக்கு பயந்து பூட்டிய அறையிலோ இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது இத்தனை உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனை நமது பழந்தமிழர் மருத்துவத்தில் ‘காற்றுத்தீட்டு‘ என்று அழைத்தார்கள். அதனால் காற்று தீட்டு இல்லாத காற்றோட்டமான அறையில் தூங்குவோம். ஆரோக்கியத்தை பேணுவோம். சிறுநீரகத்தை காப்போம்.
[10/07, 12:10] Biont நூலகம்அடம: முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.
அளவில் சிறிய🌿🌿🌿 குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில்🌳🌲 முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.🌿🍃🌱☘
மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை🚰🚰🚰 சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.
ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் 🌲🌳வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.
வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை🍃🥗🌿 வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.
முருங்கை மரத்தின் இலைகள்🌿, பூக்கள்🌸, காய்கள்🎋 என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.
முருங்கைக்கீரையின்🍵 சாறு ரத்த அழுத்தத்தை💓 சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத்💔🖤💔🖤💗💗💗 தணிக்கவும் வல்லதாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப்🍃🌿🌱 போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்குத்👨👩👧👦👬🚶🏻 தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் 🥗உள்ளது.
மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ 🍤🍗🍖🍳உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.
அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.🍀🍃🌿☘🌱
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 🍃🌿🍃🌿1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
குழந்தையின்மைப்💔 பிரச்னைக்கு முருங்கைக்கீரை🌿 மட்டுமின்றி, முருங்கைப்பூவும்🌸 மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.
முருங்கைக்கீரையில் தயிரில்🍶🍶 இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப்🍊🍊🍊 பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.
வாழைப்பழத்தில்🍌🍌🍌 உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில்🥕🥕🥕🥕 உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் 🥛🥛🥛🥛உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.
மற்ற கீரைகளைப்🌿🍃 போல அல்லாமல் காய்ந்த முருங்கை🍂🍂🍂 இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.
✨🌟✨🌟✨🌟✨🌟✨
[10/07, 12:10] Biont நூலகம்அடம: தோல்களில் அரிப்பு ஏற்படுகிறதென்றால் பெருங்குடல் பகுதியில் கூடுதலாக கழிவுகள் சேர்ந்துள்ளது என்று பொருள் .
தீர்வு
பசிக்கும்போது உணவும், இரவு தூக்கமும் அவசியம்
வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை விரதம் இருப்பது சிறந்தது.
குளிப்பதற்கு சோப்பு பயண்படுத்தவேண்டாம் , மாற்றாக மண், கடலைமாவு, பாசிமாவு இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பழகுங்கள்,
சிறிதுகாலம் இரவு நேரங்களில் பசித்தால் பழங்களை மட்டும் உணவாக உண்டுவாருங்கள் நல்ல மாற்றம் கிட்டும்.
அமைதியான நேரங்களில் ( இரவு ) காதுகளில் ஓசை கேட்கிறதென்றால் ஏதோ ஒரு குணமாகும் செயல் நடைபெற்றுகொண்டுள்ளது என்று பொருள் , அதை நினைத்து பயம்கொள்ளவேண்டாம் .
நீங்கள் குளிக்கும்போதெல்லாம் தலையுடன் சேர்த்து ஒட்டுமொத்த உடலையும் நனைத்து குளிக்க பழகுங்கள் விரைவில் எளிமையான முறையில் குணமாகும் 👍🙏
[10/07, 12:10] Biont நூலகம்அடம: சித்தர்கள் கூறும் பருவகால பழக்க வழக்கங்களும்,மற்றும் உணவு முறைகளும்..!
🌿🌷🙏🙏🙏🙏🙏🌷🌿
ஆண்டு ஒன்று போனால் வயதொன்று கூடும். அதற்கு முன்னாள் ஒவ்வொரு ஆண்டுகளையும் நாம் கடக்க நமது வாழ்கை நெறிமுறைகளை தெரிந்து கொண்டு நோயற்ற வாழ்வு வாழவேண்டும்
அப்படிப்பட்ட வாழ்கை தான் இந்த மண்ணில் நமக்கு கிடைத்த இனிமையான பேரிண்ப வாழ்வாகும்
ஒரு வயது என்பது 12 மாதங்களை கடப்பது.
ஒவ்வொரு 12 மாதங்களில் 6 பருவங்களை நாம் சந்தித்துதான் நாம் உயிர் வாழமுடியும்.
நமது வாழ்க்கை முறையை நிர்ணயக்கும் 6 பருவகால மாற்றங்களுக்கு கட்டுப்பட்டு இயற்கை நியதிப்படி நாம் உண்ணும் உணவாலும், உழைப்பாலும் மற்றும் உடற்பயிற்சியாலும் நம்மை நாமே நெறிப்படுத்தி வாழ்ந்தால் தான் வாழ்க்கையில் நோய்நொடி தொல்லைகள் இல்லாமல் நமது உடலும் உயிரும் உள்ளமும் இனிதாகி மருந்துகள் இல்லாத சுக வாழ்வு சுவைக்கும்.
இது போன்ற பிணி அனுகாத வாழ்க்கை முறையை சித்தர்கள் வாழ்ந்து காட்டி உள்ளனர்.
தற்போது சுட்டெரிக்கும் கோடை காலத்தை இளவேனிற்காலம் என்பர்
இது போன்று இன்னும் ஐந்து பருவகாலங்கள்,
மொத்தம் ஆறு பருவகாலங்களில் நாம் என்ன வகையான உணவுகளை உண்ண வேண்டும்.
மேலும் அக்காலத்திற்கு ஏற்ற உணவுவின் சுவை மற்றும் உடற்பயிற்சி, உறக்கம், குளியல், நறுமண பூச்சு போன்றவைகளை கூட நமது சித்தர்கள் வகுத்து உள்ளார்கள்,
அதை கீழே உள்ள அட்டைவனையில் காண்போம்.
இளவேனிர்காலம் – சித்திரை, வைகாசி பசு நெய், துவரை, தேன், கோதுமை,
முக்கனிகளான மா,பலா,வாழை, முந்திரி, கற்கண்டு, காய்கறி, கடலை, வெட்டிவேர் மற்றும் சந்தன சத்துக்கள் சேர்ந்த நீர் அருந்தலாம் நெய்ப்பு குணம் உள்ளது,
புளிப்பு இனிப்பு பொருந்திய உணவுகளும் காலை 6-7.30 5-7 மணி நேரம் பகல் உறக்கம் கூடாது உடற்பயிற்சி செய்யலாம்.
இன்பமாக கலந்து வாழ உகந்த காலம் சந்தனம் பூசி வரலாம்
முதுவேனிர் காலம் – ஆனி, ஆடி சம்பா அரிசி, முட்டை, ஆட்டிறைச்சி, முக்கனிகள், மாதுளை, திராட்சை, ஏலம், ஈச்சம்பழம், கற்கண்டு, மாமிச உணவுகள் வெட்டிவேர் கலந்த நீரை அருந்த நலம் தரும் துவர்ப்பு, இனிப்பு சுவை உள்ள உணவு(கார்ப்பு, உப்பு, புளிப்பு தவிர்பது நலம்)
காலை 6-8 மணி 5-7 மணி நேரம் பகலில் சிறிது நேரம் நித்திரை செய்யலாம் உடற்பயிற்சி செய்தால் உடல் வன்மை குறையும் புணர்ச்சி கூடாது சந்தனம் பூசி வரலாம்
கார் காலம் – ஆவணி, புரட்டாசி துவரை, உளுந்து, பயிறு, பழைய தானியம், மாமிசம், தேனி, பூண்டு, காய்கறிகள், பஞ்சகவியம் சேர்ந்த நீர் மோர் அருந்தலாம்,
ஆறிபோன உணவுகளை உண்ண கூடாது புளிப்பு, உப்பு, இனிப்பு சுவையுள்ள உணவுகளை உண்ணலாம்
காலை 5-7 மணி 5-7 மணி நேரம் பகலில் நித்திரை செய்யலாம் உடற்பயிற்சி தேவை புணர்ச்சி செய்யலாம் பச்சை கற்பூரம், கத்தூரி, அகில், சந்தனம் சேர்ந்த கலவையை பூசி கொள்ளலாம்
கூதிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை சம்பா அரிசி, பயறு, சர்க்கரை, நெல்லிக்கனி, தேன், வேப்பம்பூ, நெய், எண்ணெய், வாழை, நீரை காய்சாமலே அருந்தலாம் கைப்பு, இனிப்பு, சுவை உள்ள உணவு
காலை 5-8 மணி 6-8 மணி நேரம் உடற்பயிற்சி அதிகம் தேவை புணர்ச்சி செய்யலாம் வெட்டிவேர், பச்சை கற்பூரம், சந்தனம் ஆகியன கலந்து பூசிக் கொள்ளலாம்
முன்பனி காலம் – மார்கழி, தை மாமிசம், உளுந்து, கோதுமை, கரும்பு, வெல்லம், அரிசி, திராட்சை, நெய், கிழங்கு வகைகள் இனிப்பு, உப்பு, புளிப்பு சுவையுள்ள உணவுகளை மிகுதியாக உண்ணலாம்.
ஆறு சுவைகளும் இக்காலத்தில் உண்ண நலம் பயக்கும் காலை 6-8 மணி 7-8 மணி நேரம் உடற்பயிற்சி அதிகம் தேவை புணர்ச்சி செய்யலாம்
குங்குமப்பூ, கிச்சிலி கிழங்கு, அசிர்சாந்து, கத்தூரி, சந்தனம், சவ்வாது ஆகியவற்றை பன்னீர் விட்டு குழைத்து பூசி வரவும்
பின்பனி காலம் – மாசி, பங்குனி பயறு, காய்கறி, பழரசங்கள் மற்றும் முன்பனி கால உணவுகளை உண்ணலாம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு
காலை 6-8 மணி 6-7 மணி நேரம் உடற்பயிற்சி அதிகம் தேவை புணர்ச்சி செய்யலாம் குங்குமப்பூ, கிச்சிலி கிழங்கு, அசிர்சாந்து, கத்தூரி, சந்தனம், சவ்வாது ஆகியவற்றை பன்னீர் விட்டு குழைத்து பூசி வரவும்
அட்டைவனையில் கூறிய படி உணவு மற்றும் பிற ஒழுக்கங்களை நாம் அன்றாட வாழ்வில் கடைபிடித்தோம் எனில் சித்தர்களின் பிணியணுகா வாழ்வு வாழ்வது திண்ணம்.🌿🌷🙏🙏🙏🙏🙏🌷🌿
[10/07, 12:10] Biont நூலகம்அடம: *நீர் கோர்வை/தலை கனம் தீர*
சுக்கு கிராம்பு கல்லுப்பு பொடி செய்து சூடான பாலில் கலந்து நெற்றியில் பற்றிடவும்...
கடைகளில் கிடைக்கும் நீர் கோர்வை மாத்திரை வாங்கி வெந்நீரில் கலந்து நெற்றியில் கனமாக பற்றிடவும்...
சளி இருக்கா???
மூக்கில் நீர் வடிகிறதா என்று கூறவும்...
[10/07, 12:10] Biont நூலகம்அடம: *இதயக்கோளாறு தீர செம்பருத்திப்பூச்சாறு*
*தேவையானவை*
ஒற்றை செம்பருத்திப்பூ – 5
பனங்கற்கண்டு – 5 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
*செய்முறை*
செம்பருத்திப்பூவின் காம்பு, நடுவில் உள்ள நரம்பு பகுதியை நீக்கி ஆய்ந்து எடுக்கவும். பாத்திரத்தில் செம்பருத்திப்பூ இதழ்கள், பனங்கற்கண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டவும். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து அதிகாலையில் பருகவும்.
*பயன்கள்*
இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும். இதயக்கோளாறு நீங்கும்.
[10/07, 12:10] Biont நூலகம்அடம: சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!
[11/07, 08:31] Biont நூலகம்அடம: # அத்திப்பழத்தின் மகிமை
# அத்திப்பழத்தைப் புட்டுப் பாத்தா அத்தனையும் சொத்தைன்னு சொன்னாங்க அதோட மகிமை தெரியாதவங்க. என் மனைவிக்கு ஹீமோகுளோபின் அளவு கம்மின்னு டாக்டர் சொல்லிட்டு ஏகப் பட்ட டானிக், மாத்திரை மருந்து எல்லாம் எழுதிக் கொடுத்தாங்க.
ஆனா நான் நேரா dry fruit கடைக்குப் போயி அஞ்சீர் எனப் படும் அத்தி உலர்பழத்தை வாங்கிட்டு வந்து கொடுத்தேன். தினமும் காலை மாலை இரவு மூன்று வேளையும் ஒரே ஒரு அத்தி உலர்பழத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அரைகிளாஸ் குடிக்கச் சொன்னேன்....
மூன்றே வாரங்களில் 8 என்ற அளவில் இருந்த ஹீமோகுளோபின் அளவு 10ஐ த் தொட்டது. அத்தி உலர்பழம் ரத்தசோகைக்கு ஒரு அருமருந்து. குறிப்பாக பெண்களுக்கு. கை மேல் பலன் தரும் இந்த அருமருந்தை ரத்தசோகை உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பா சாப்பிடணும்..
இந்த அத்திரச நீர் அதிரசத்தை விட இனிப்பா சுவையா இருக்கும். சக்கரையோ, தேனோ எதுவும் சேர்க்க வேண்டாம். அதனாலே குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடலாம்.
[11/07, 12:03] +91 90924 61425: _*Encourage your parents and senior citizens to practise this ""Chair Suryanamaskara"" 12 times daily. This will improve their overall health, reduce joint stiffness, improve lung capacity, strengthen the knees and muscles, reduce age related issues such as acidity and gas etc. It's very mild but effective in a long run and very much sustainable. It's also practicable and beneficial for people with knee problems and those who find difficult to walk.👇👇👇*_
[11/07, 22:34] Biont நூலகம்அடம: வெள்ளைபடுதல் வெட்டை சூடு தனிய உடல் குளிர்ச்சி பெற மருத்துவ முறைகள்
காலை மருத மர இலையை இடித்து புதுமண் பாண் Lத்தில் ஜலத்தோடு கலந்து இரவில் பணியில் வைத்திருந்து விடியற்காலை அந்த ஜலத்தை எடுத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு போட்டு 3 நாளைக்கு சாப்பிட்டு வரவும்
பெண்களுக்கு வெள்ளை படும் போது உறவு கொன்டதினால் ஆண்களுக்கு ஏற்படும் வெள்ளை குத்து வெள்ளை முசுக்கு நீர் அடைப்பு நீர் எரிச்சல், தீர மருத்துவம்
செவ்வாழை பழத்தில் துளை செய்து அதில், சந்தன அத்தரை ஒரு துளி விட்டு பல்லில் படாமல் 3 நாள் 6 வேளை சாப்பிடவும்
நோய் தீரும்
முறை 3
புளித்த தயிரில் கிழாநெல்லி இலையை அரைத்து கரைத்து சாப்பிட்டு உப்பில்லா சோறு பத்தியமிருக்கறேஸ் தீரும்
ஒரு நாளைக்கு காலையில் ஒரு வேளை விடாமல் நாளைக்கு கூப்பிடவும்
முறை 4
மஞ்சவெள்ளைதந்தி வெள்ளை இவை தீர மருத்துவம்
மருதானி இலையை எலுமிச்சங்காய் அளவு அரைத்து இரண்டரை பலம் நல்லென்னையில் குழப்பி உள்ளுக்கு சாப்பிட்டு உப்பில்லா பத்தியமிருப்பதுடன் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க வேண்டும்
புளிய மர காற்று ஆகாது
3 நாள் இது போல் செய்து மறு 3 நாள் இச்சா பத்தியம் இருக்க வேண்டும்
முறை 6
கோழி அவரை கொடியின் இலையை அரைத்து எலுமிச்சங்காய் அளவு
தயிரில் குழப்பி காலையில் 3 நாள் சாப்பிட்டு உப்பில்லா பத்தியமிருக்க வெள்ளை நோய் தீரும்
[13/07, 20:21] +91 94888 91144: குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்..!
சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.
நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும்.
இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும்.
பின் கவனமாக பழத்தை பிரித்து உள்ளே உள்ள தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்.
இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும்.
இந்த பழம் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். நீர்கட்டி தானாக அழியும். எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது.
[13/07, 21:18] Biont நூலகம்அடம: *வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்*
ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…
அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.
*வெந்தய டீ தயாரிப்பது எப்படி?*
*ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.*
பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.
இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.
*நன்மை 1*
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
*நன்மை 2*
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.
*நன்மை 3*
ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
*நன்மை 4*
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்
*நன்மை 5*
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.
*நன்மை 6*
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
*நன்மை 7*
குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.
*நன்மை 8*
உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.
*நன்மை 9*
வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.
*நன்மை 10*
பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.
*நன்மை 11*
ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.
*நன்மை 12*
வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.
*நன்மை 13*
வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.
*நன்மை 14*
வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
*நன்மை 15*
வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.
*நன்மை 16*
காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.
*நன்மை 17*
வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.
*நன்மை 18*
வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.
*நன்மை 19*
வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.
*நன்மை 20*
வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.
[13/07, 21:20] Biont நூலகம்அடம: மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்!
crystel news
மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
செய்ய வேண்டியது?
காலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம், ஆனால் ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது. எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.
மருந்து?
உடலின் வலிவிற்கும் மனதின் பொலிவிற்கும் சித்தர்கள் கூறும் காய கற்பங்கள், உறு துணையாகும், காய கற்பங்கள் மூலம் நோய் நீங்கி மனமும் செம்மையாகி, நரை திரை மூப்பு இன்றி, பெரு வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் நல் வாக்கு. அத்தகைய பெருமையும் உயரிய குணங்களும் கொண்ட காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலாய்க் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். கடுக்காய் உண்டால், மிடுக்காய் வாழலாம் என்பது மூத்தோர் வாக்கு. மிக உயர்ந்த நலம் பயக்கும் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டு விளங்குவதால் தான் சித்தர்கள், கடுக்காயை தாயினும் மேலான இடத்தில் வைத்துப் போற்றுகின்றனர்.
இத்தகைய ஆற்றல் மிக்க தேவ மூலிகை கடுக்காய் மூலம் இளம் பெண்டிரின் மாத விடாய்க் கோளாறுகளை சரி செய்வது எவ்வாறு, எனப் பார்க்கலாமா?
கடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும், இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும் என்பதே, சித்தர்கள் கூறும் இரகசியம்.
பயன்படுத்தும் முறை?
கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.
அது மட்டுமா, ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகும், பெண்கள் அதன் பிறகு இனி, மாதா மாதம் மாதவிடாய் நேரங்களில், நிம்மதியாக இருக்கலாம். கடுக்காய் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் நலம் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக காரம் மற்றும் கொழுப்புகள் சேர்ந்த உணவுகளால், உடலின் செரிமானத் திறன் பாதிக்கப்பட்டு, அதனால் வயிற்றில் சேரும் நச்சுத் தன்மைகளே உடலின் பல்வேறு உபாதைகளுக்கும் மூல காரணம், இத்தகைய நச்சுக்களால் தான், மாதாந்திர வலிகளும் கடுமையாக ஏற்பட்டன.
Shared by M VIJAYAN
[14/07, 20:57] Biont நூலகம்அடம: சக்கரை நோயினால் வரும் உடல் பலகீனம் ஆன்மைக் குறைவு தாதுபலகீனம் தீர உடல் உஷ்ணம் குறைய மருத்துவம்
கடழிஞ்சில் பட்டை 20 கிராம் எடுத்து 60 மில்லி நீரில் ஊற வைத்து காய்ச்சி கஷாயத்தை எடுத்து கடற்பாசி 35 கிராம் தூள் போட்டு ஒரு கின்னத்தில் போட்டு 10 கிராம் ஆவாரம்பி சின் பொடி செய்து போட்டு கின்னத்தை மூடி விடவும் 4 மணி நேரம் கழித்து பார்க்கர வா உப்புமா போல இருக்கும் அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவும்
மரு.ரமேஷ் சிவன்
9043 199315
கும்மிடிப்பூண்டி
[14/07, 20:57] Biont நூலகம்அடம: சிறுநீரக கல் கரைய மருத்துவம்
நீர்முள்ளி ச மூலம் ஒரு பங்கு
சிறு நெருஞ்சில் ஒரு பங்கு
பெருநெருஞ்சில் ஒரு பங்கு
மூக்கரட்டை ஒரு பங்கு
துத்தி வேர் ஒரு பங்கு
சிரு கண் பீளை ஒரு பங்கு
கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன்
மாவிலங்கபட்டை ஒரு பங்கு
பேரா முட்டி வேர் ஒரு பங்கு சுக்கு கால் பங்கு
சுரக்காய் கொடி ஒரு பங்கு' இவை ஒரு லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து 600 மில்லியாக வற்ற வைத்து ஒரு வேளைக்கு 200 மில்லி விதம் 3 வேளை சாப்பிடவும் குறைந்தது 15 தினம்
முள்ளங்கி சார் 100 மில்லி அளவில் எடுத்து அதில் நன்டுகள் பற்பம் 10 கிராம் வெங்கார பற்பம் | 5 கிராம் கலந்து சாப்பிட்டு வர கல்லடைப்பு நீரடைப்பு தீரும்
மருI ரமேஷ் சிவன்
9043 199315
கும்மிடிப்பூண்டி
[15/07, 10:11] Biont நூலகம்அடம: கூந்தல் வளர்ச்சிக்கு உடல் உஷ்ணம் கபால சூடு தனிய உடல் குளிர்ச்சி கண் பார்வை தெளிவடைய பித்தம் தீர தைலம்
கறிவேப்பிலை
செம்பருத்தி பூ
மருதாணி இலை பூ
அவுரி
நெல்லிக்காய் சார்
கரிசலாங்கன்னி
வெந் திகம்
வெட்டி வேர்
சந்தனம்
தாமரை பூ
செவ்விளநீர்சோற்றுகற்றாழை
/ இவைகள் வகைக்கு 100 கிராம் எடுத்து நன்கு மசிய அரைத்து இளநீரில் கலந்து
இரண்டு கிலோ தேங்காய் என்னை இரும்பு கடாயில் ஊற்றி என்னை சூடானதும் மற்ற சரக்குகளை கலந்து நீர் சுன்ட காய்ச்சி வடித்து | தலைக்கு தேய்த்து வரவும்
நெல்லிக்காய் பொடி
கருவேப்பிலை பொடி சமன் கலந்து காலை இரவு ஒரு ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வரவும்
[15/07, 21:40] +91 76675 33930: சித்த மருத்துவம்
* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.
[16/07, 08:38] Biont நூலகம்அடம: #இடுப்பு_வலி_நீங்க
#இயற்கை_வைத்தியம்
இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்சனை இடுப்புவலி.
#இடுப்புவலி_ஏற்டுவதற்கு #என்ன_காரணம்?
அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர்.
காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.
#பெண்கள்……
நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.
அதனால் அதை தவிர்த்து கொள்ளவும்.
#இதற்குத்_தீர்வு_என்ன?
அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும். பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.
தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.
#வைத்தியர்_வைத்தியம்……
♦இடுப்பு நீங்க எளிய எண்ணெய்
ஓமம் – 1 கரண்டி
தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
கற்பூரப் பொடி - சிறிதளவு
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
♦#மூட்டுத்_தேய்வு__நீங்க
#தேவையானவை
பிரண்டை இலை – 10 கிராம்
முடக்கத்தான் இலை – 10 கிராம்
சீரகம் – 10 கிராம்
ஆகியவற்றை எடுத்து நன்கு காயவைத்து அரைத்து பத்திரப்படுத்தவும். தினமும் அதிகாலை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி போன்ற குறைகள் தீரும்.
♦ எருக்கம் இலையை நல்லெண்ணெய்யில் போட்டுக் கொதிக்கவைத்து , அந்த எண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு வந்தால் மூட்டு வலி , மூட்டு வாதம் , இடுப்பு வலி போன்றவை குணமாகும்.
* எருக்கம் இலையை நல்லெண்ணெய்யில் போட்டுக் கொதிக்க வைத்து , அந்த எண்ணெய்யை பக்கவாதம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து தேய்த்துவந்தால் விரைவில் குணம் பெறலாம்.
* நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை எண்ணெயை வாங்கி ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்யவேண்டும். கட்டியாக இருக்கும் இலுப்பை எண்ணெயை சூடு செய்ததும் அது கரைய ஆரமிக்கும். எண்ணெய் நன்கு கரைந்ததும் அதை ஆறவைக்க வேண்டும். பிறகு இடுப்பு பகுதியில் எங்கு வலி உள்ளதோ அந்த இடத்தில் இந்த எண்ணெயயை தடவி விட்டு சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை செய்தால் இடுப்பு வலிக்கான உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அதிகாலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். உடல் வலிகள் நீங்கும்.
* சுக்கு, மிளகு, பூண்டு, பனை வெள்ளம் மற்றும் பொடுதலை இலை ஆகிய ஐந்தையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்கு பொடியாக அரைக்க வேண்டும். இதை காலையில் இரண்டு குண்டுமணி அளவில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.
* ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து அதோடு 100 மி லி அளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். மேலும் அதோடு கற்பூரத்தையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதை வெது வெதுப்பான சூட்டில் இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவினால் இடுப்பு வலி குறையும்.
* கஸ்தூரி மஞ்சள் மற்றும் வெள்ளைப் பூண்டோடு நொச்சி இலையை சேர்த்து அரைத்துவைத்துக்
கொண்டு அதை வேப்ப எண்ணெய் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவினால் இடுப்பு வலி குறையும்.
* இடுப்பு வலி நீங்க முடக்கற்றான் இலை பெரிதும் உதவுகிறது. முடக்கற்றான் இலையோடு வெங்காயம் மற்றும் பருப்பு சேர்த்து நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.
* மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.
* அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து இளஞ்சூடாக இருக்கும் போது தேய்க்க வேண்டும்.
* முருங்கைப் பட்டை, சுக்கு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து மேலே பூச வலி போகும்.
* நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி பூசவும்
* பூண்டை போட்டு காய்ச்சிய வேப்பெண்ணை தடவவும்.
* பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறு கலந்து தடவவும்.
* விழுதி இலையை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணையை கலந்து 5 மி.லி வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.
* வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.
* மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் நல்லெண்ணையை கலந்து உள்ளுக்கு சாப்பிட இடுப்பு வலி குறையும்.
* தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.
[16/07, 08:39] Biont நூலகம்அடம: பாரம்பரிய மருத்துவம்
தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.
தும்பை இலை, கீழா நெல்லி இலை, சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.
தும்பைச்சாறு 1 மில்லியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து குடிக்கக் கொடுத்து, தேள் கொட்டிய கடிவாயில் தும்பையிலையை அரைத்துக் கட்ட விஷம் கீழே இறங்கும். கடுப்பும் நீங்கும்.
தும்பையிலை, குப்பைமேனி இலை, நாய்கடுகு இலை இவற்றைச் சமஅளவில் எடுத்து அரைத்து உடம்பில் பூசி 3 மணிநேரம் கழித்து வெந்நீரில் குளித்துவர நமது உடலில் பூச்சிக் கடியினாலோ, வேறு சில காரணத்தாலோ ஏற்பட்ட தடிப்பு, நமைச்சல், சொறி, சிரங்கு குணமாகும்.
நஞ்சுள்ளவை நம்மைத் தீண்டிவிட்டால் தும்பையிலைச் சாறு 50 மில்லியுடன் சிறியாநங்கை இலைச்சாறு 2 சொட்டு கலந்து குடிக்கக் கொடுக்க சிறிது நேரத்தில் வாந்தியும் பேதியும் உண்டாகி விஷம் முறிந்து குளிர்ந்த உடம்பு சூடாகி ஜன்னி நீங்கும்.
<p>உடம்பில் சூடு ஏறுகிறது என்றால் விஷம் முறிகிறது என்று அர்த்தம். பேதி அதிகமானால் தயிர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு கொடுக்க பேதி நீங்கும். மேலும் விஷம் தீண்டியவர்களை 24 மணி நேரத்திற்குத் தூங்க விடக் கூடாது. எப்போதும் தலை மட்டும் உயரத்தில் இருக்க வேண்டும் தாழ்வாக இருக்கக் கூடாது.
தும்பையிலை, உத்தாமணியிலை சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து இருவேளை தொடர்ந்து குடித்துவர ரத்தப்போக்கு, தாமதமாகப்படுகின்ற மாதவிலக்கு சரியாகும்.
தும்பைப் பூ 50 கிராம் எடுத்து நல்லெண்ணெய் 50 மில்லி எடுத்து அதில் காய்ச்சி வடிகட்டி தலை முழுகத் தலைபாரம், நீரேற்றம் குறையும்.
தும்பை இலை, கீழாநெல்லி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சம அளவாக எடுத்து அரைத்து பாக்கு அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர எப்படிப்பட்ட நாள்பட்ட மஞ்சள் காமாலையானாலும் குணமாகும்.
Shared by M VIJAYAN
[18/07, 06:34] Biont நூலகம்அடம: ஆன்மைக் குறைவு நரம்புத் தளர்ச்சி உடல் பலகீனம் உடல் சூடு விந்து அனுக்கள்
அதிகரிக்க ஆன்மை பலம் பெற தாது புஷ்ட்டி அல்வா
வெள்ளை பூசனிக்காய் சார்
தொட்டாற் சிலிங்கி சார்
சோத் து கற்றாழை கார்
நெருஞ்சில்சார்
அமுக்குறாசூரனம்
இவைகள் வகைக்கு 300 கிராம் எடுத்து கொன்டு ஒன்றை கிலோ பனங் கருப்பட்டி சுன்னாம் புதெளிவு நீரில் கரைத்து வடிகட்டி காய்ச்சவும் சூடானதும்
300 கிராம் கட்டு கொடி இலை சூரணம் போட்டு கிளறவும்
25 கிராம் ஜாதிக்காய் சூரணம் போட்டு கிளறவும்
உலர்ந்த திராட்சை i
கொட்டை நீக்கிய பேரிச்சம் பழம்
வால் நட்பருப்பு
பிஷ்த்தா பருப்பு தேவையான அளவு போட்டு நெய் விட்டு கிளறி ஒரு சமமான தட்டில் கொட்டி சின்ன சின்ன துண்டுகளங்க கிறி ஆற விட்டு எடுத்து
பாட்டலில் அடைத்து
காலை மதியம் இரவு ஒரு துண்டு சாப்பிட்டு வரவும்
[18/07, 10:39] Biont நூலகம்அடம: காலிஃபிளவர் உங்களுக்கு பிடிக்காதா? அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்?
crystal news
யாராவது உங்களிடம் கலர் கலரான வண்ண மயமான எல்லா வித காய்கறிகளையும் தேடித்தேடி சாப்பிடுங்கள் எனக் கூறினால் அவர்கள் சிறந்த ஊட்டச்சத்து மையமான இதனை மறந்துவிட்டார்கள் என்பதே இதன் பொருள்.
அப்படி என்ன அந்த அதிசயக் காய் என்று தானே கேட்கிறீர்கள். அதுதான் காலிஃபிளவர். ஆமாங்க. இந்த காலிஃபிளவர்க்குள்ள தான் இவ்வளவு ஆயிரமாயிரம் சத்துக்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
காலிஃபிளவர்
காலிஃபிளவரின் மிதமான நறுமணச் சுவை, இதனை மற்ற சத்து குறைவான மற்றும் அதிக-கார்ப் கொண்ட உணவுபொருளுக்கு மாற்றாக பயன்படுத்த வழிவகுக்கிறது. பிரிஸ்கா குடும்பத்தின் உறுப்பினரான இது டன் கணக்கில் நார்சத்து மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு சத்துக்கள் கொண்டுள்ளது. நீங்கள் இதனை உணவிலும், சாதத்தின் வகையிலும் எடுத்துக் கொள்வதற்கான சில காரணங்களை இங்கு பார்ப்போம்.
ஒரு கப் - ஊட்டச்சத்து விவரங்கள்
• 27 கலோரிகள்
• 2.1 கிராம் புரதம்
• 5.3 கிராம் கார்போஹைட்ரேட்
• 2.1 கிராம் ஃபைபர்
• 2 கிராம் சர்க்கரை
• 0 கிராம் கொழுப்பு
• 53 மிகி வைட்டமின் சி
• 15% டிவி ஃபோலேட்
• 18% டி.வி. வைட்டமின் கே
• 15% டி.வி. வைட்டமின் பி 6
ஆரோக்கிய நன்மைகள்
• வீக்கத்தினால் ஏற்படும் ஆபத்தை குறைகிறது: காலிஃபிளவரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நாட்பட்ட நோய்க்கு வழிவகுக்கும் செல்கள் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
• இரத்த அழுத்தத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்துகிறது: இதன் மெக்னீசியம் உள்ளடக்கம் தசை சுருக்கம் தடுத்தல் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றிற்கும் உதவுகிறது.
• நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது: காலிஃபிளவரில் உள்ள ஃபோலேட் மற்றும் வைட்டமின் B6 ஆகியவையே இதற்க்கு முக்கிய காரணம்.
• எலும்புகளை பாதுகாக்கிறது. வைட்டமின் கே எலும்பு-கனிம அடர்த்தி மற்றும் இரத்த உறைதல் ஆகியவற்றிற்கு மிக அவசியம்.
நீங்கள் இன்னும் உறுதியாக நம்பவில்லையா? இதோ காலிஃபிளவர் பற்றி ஊட்டசத்துவியலாளர்கள் பதிலளித்த சில வினாக்களும் விடையும்
காலிஃபிளவர் சாதம் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
காலிஃபிளவர் சாதம் நல்லது மட்டுமல்ல, ஒரு பழக்கமான (வெள்ளை அரிசி) உணவான சாதத்தை காய்கறிகளுடன் அறிமுகப்படுத்துதல் ஒரு சிறந்த வழியாகும். பாதிக்கு பாதி காய்கறிகளை சேர்க்கும்போது நிறைய காய்கறிகளுடன் குழந்தைகள் விருப்பப்படும் சுவையையும் பெறலாம். காலிஃபிளவர் சாதத்தினை எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.
அதிக கார்ப்ஸ் உள்ளதா?
இல்லை! காலிஃபிளவர் என்பது அனைத்து காய்கறிகளையும் போல ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இருப்பினும், இது நார்ச்சத்து மற்றும் குறைவான சர்க்கரை அளவே கொண்டுள்ளது. ஒரு கப் காலிஃபிளவரில் அளவில் சமைத்த பாஸ்தா அல்லது சாதத்தில் உள்ள கார்போஹய்ட்ரேட் ஆறில் ஒரு பங்கே உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு அல்லது அவர்களின் இரத்த சர்க்கரையை சீராக பராமரிக்க ஒரு சிறந்த வழி செய்யும்.
எப்படி இதை சமைக்க வேண்டும்?
கொதிக்க வைத்தல் தவிர மற்ற சமையல் முறைகள் அனைத்தும் காலிஃபிளவரில் உள்ள அனைத்து சத்துக்களையும் இழக்காமல் இருக்க உதவும். வறுத்தல், உணவின் அளவை குறைத்தாலும் சுவைக்க ருசியாக இருக்குமென்பதால் இம்முறையை அதிகம் விரும்புகின்றனர்.