Tuesday, July 31, 2018

மஞ்சள்காமாலைக்கு ஒரு வேளை மருந்து:*

*மஞ்சள்காமாலைக்கு ஒரு வேளை மருந்து:*

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
*******   ******   *****  *****
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.

உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.

சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.
சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.

எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.

அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.

மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.

மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி  ,கீழாநெல்லி  இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.
இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.

அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.
பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.

அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.

அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.
மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.

நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.

எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை  மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும்  விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.

நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை
வழக்கமான உணவு உண்ணலாம்.

என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
பையன் முகத்தில் ஒருத் தெளிவு.
மருந்  துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.

எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.

மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.

பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே   வே  ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.

விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம்
கெங்கராயம்பாளையம் உள்ளது. Forwarded msg

தொப்பையை குறைக்க

தொப்பையை குறைக்க இன்றையஇளைஞர்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது. கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை இடைவெளியின்றி பின்பற்றிவந்தால் தொப்பையை சீக்கிரமே குறைத்துவிடலாம்.


உடல் எடை குறைக்க விரும்புவர்களுக்கு அருகம்புல் மிக சிறந்த மூலிகை. அருகம்புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் சுத்தமாகி உடல் எடை குறையும்.

முதல்நாள் இரவே அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் ஓமத்தை பொடிசெய்து போட வேண்டும். இந்த கலவையை ஒரு குவளை நீரில் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கிவிடவும். பின்பு அதை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.

மறுநாள் காலை அதை நன்றாக சாறுபிழிந்து சக்கையை நீக்கிவிட வேண்டும். இந்த சாறை தினமும் இதே போல் தயார் செய்து பத்து நாட்கள் வேறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை வற்றிவிடும்.
தேவையற்ற கொழுப்பை குறைக்க கேரட்டை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவாக கொழுப்பு குறைந்து உடல் மெலியும்.

இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும். (குறிப்பு : கொதி நீரில் தேன் கலக்கக்கூடாது மிதமான சூட்டில் மட்டும் தான் தேன் கலக்க வேண்டும்)

பொன்னாங்கண்ணி. For கண்

*👁👁👁👁👁✍தஞ்சாவூரிலிருந்து அசோக் குமார் என்பவர் தனது 5 வயது மகனுக்கு கண்ணாடி போட்டுள்ளான் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கண்ணாடி பவரை அதிகரிக்க வேண்டும் என்று டாக்டர் கூறுகின்றார் கண்ணாடியின் பவர் அதிகம் ஆகாமலிருக்க மருத்துவம் இருக்கிறதா சுத்தமாக கண்ணாடி போடாமல் இயற்கையாக கண் தெளிவாக தெரிவதற்கு மூலிகைகளில் மருத்துவம் உள்ளதா என்று கேட்டு இருந்தார் அவருக்காக பதிவிடுகிறேன்*.        கண் பார்வைக் கோளாறுகள் நமது சித்தர்கள் 96 வகை என்று அந்தக் காலத்தில் வகுத்துள்ளார்கள் ஆனால் ஆங்கில மருத்துவத்திலோ இரண்டு பகுதியாகப் பிரித்து விட்டார்கள் ஒன்று கிட்டப்பார்வை மற்றொன்று தூரப்பார்வை வாழ்க்கை முறை இயற்கையை ஒட்டி இருந்தால் ஆங்கிலம் மட்டும் சொல்லக்கூடிய இரண்டு வகையான பார்வை கோளாறுகளும்சித்த மருத்துவர்கள் சொல்லக்கூடிய 96 வகைகளையும் வெல்லக்கூடிய தீர்க்கக்கூடிய குணமாக்கக்கூடிய மூலிகை எதுவென்றால் *பொன்னாங்கண்ணி கீரை ஒன்றே போதும் பொன்னாங்கண்ணி ஒரு காயகற்ப மூலிகை என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுகின்றார் தங்கச் சத்து நிறைந்து உள்ளது என்றும் கூறுகின்றார் இதை முறைப்படி உண்பவர்களுக்கு தங்கம் போன்று மேனி யை தரும் என்று கூறியுள்ளார்கள் இதை முறைப்படி கற்ப முறையிலாவது அல்லது உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டு வந்தால் கண்டிப்பாக 96 வகையான கண்நோய்கள் தீரும் 🤩குறிப்பாக சற்று மேடான பகுதியில் விளைந்த பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்யில் வதக்கி மிளகு இந்துப்பு கூட்டி தொடர்ந்து ஓரிரு மண்டலங்கள் சாப்பிட்டு வர கருவிழி நோய் கண்ணில் வரக்கூடிய ரத்த அழுத்தம் கண்காசம் கண் புகைச்சல் கண் எரிச்சல் ஒவ்வாமையினால் வரக்கூடிய அரிப்பு கண் சிவத்தல் இது போன்ற கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்க வல்லது ஆனால் புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓👀👀👀👀👀👀👀👀 கண்ணாடியின்          பவரை குறைக்க மேற்கண்டபடி சாப்பிடவும் பொன்னாங்கண்ணி கீரையை சுத்தமான நாட்டு பசு நெய்விட்டு வதக்கி ஒரு மண்டலம் தான் கண்களில் கட்டிவர கண்ணாடியின் பவர் குறைவதை பார்க்கலாம் இதுபோன்று செய்ய முடியாதவர்களுக்கு 📕📕📕📕📕📕தைலமுறையாவது கைகொடுக்கும் அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் பொன்னாங்கண்ணி இலைச்சாறு ஒரு லிட்டர் வெள்ளை கரிசாலை சாறு அரை லிட்டர் நாட்டு நெல்லிக்காய் சாறு அரை லிட்டர் சுத்தமான நாட்டு செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஒரு லிட்டர் 👉குறிப்பு😎(இதில் கருப்பட்டி வெல்லம் சேர்த்து எண்ணெய் தயாரித்து இருக்கக்கூடாது) நாட்டு பசும்பால் ஒரு லிட்டர் அதிமதுரம் 25 கிராம் எடுத்து பால் விட்டு அரைத்து கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடிகட்டி தலை மூழ்கி வர 96 வகையான கண்நோய்கள் தீரும் என்பது உண்மை புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் சித்த வைத்தியர் பெருமாள் பிள்ளை ஆர் ஐ் எம் பி அவர்கள் மிக எளிமையான முறையை குறிப்பிடுவார்கள் தினம்தோறும் காலை வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அளவு பொன்னாங்கண்ணி இலை சாப்பிட்டு வர பகலில் நட்சத்திரம் தெரியும்என்று ஆதாரப்பூர்வமாக கூறியது மட்டுமல்லாமல் அவர் சாப்பிட்டு ஸ்ரீரங்கத்தில் சித்த ஆயுர்வேத புத்தக வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த திரு சோமு அவர்களும் திரு தியாகராஜன் அவர்களும் பரிசோதனை முயற்சியாக சாப்பிட்டு வெற்றி கண்டதாக சிவ பெருமாள்பிள்ளை ஒரு நூலில் குறிப்பிடுகின்றார் ஆகவே எந்த வழியிலாவது எப்படியாவது பொன்னாங்காணிக்கீரையை முறைப்படி சாப்பிடுங்கள் கண்பார்வை சம்பந்தப்பட்ட அனைத்து  நோய்களில் இருந்து விடுபட சித்தர்கள் துணை நிற்பார்கள் *நன்றி தாழ்மையுடன் அருள் நாகலிங்கம் பாரம்பரிய சித்த மருத்துவன் அருள் சித்த ஆயுர்வேத மருந்தகம், அருள் ஹெர்பல்ஸ் ,அருள் இன்ஸ்டியூட் ஈரோடு**9095905000👁👁👁👁👁👁

Monday, July 30, 2018

வாதவல்லி கிழங்கு!! மூட்டு வலி இனி இல்லை....

மூட்டு வலி இனி இல்லை....
====================
இந்த தகவல் உங்களுக்கோ உங்கள் குடும்பத்தாருக்கோ நிச்சயம் பயன்படும். மூட்டு வலி, இடுப்பு வலி, கைகால் குடைச்சல், எலும்பு தேய்மானம், குதிகால் வலி, கெண்டைக்கால் வலி, கழுத்து வலி என ஏதாவது ஒரு எலும்பு சம்பந்தமான வலிகளுடனே இன்று பலரும் வாழ்ந்து வருகிறோம். காரில் சென்று வருபவர்கள் முதல் சைக்கிளில் செல்பவர்கள் வரை இந்த பிரச்சனை பொதுவாகி போனது இன்று. டாக்டரிடம் போனால் எக்ஸ்ரே , ஸ்கேன் என எடுக்க சொல்லி பின்னர் வலி நிவாரண மாத்திரைகளை கொடுத்து விடுவார். சில வருடங்கள் கழித்து வலி அதிமாகி போனால் உங்களுக்கு ஜவ்வு தேய்ந்து விட்டது. லீகுவிட் இல்லை எனவே ஒரு ஆபரேஷன் செய்தாலே தான் இதற்க்கு தீர்வு என்று நம்முடைய சேமிப்பு சில லட்சத்தை பிடுங்கி கொள்வார்கள். இதற்க்கு நிரந்தர தீர்வு கிடையாதா?
நிச்சயம் இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு நமது தாத்தா பாட்டிகளுக்கு இப்படி நோய்கள் இருந்து யாராவது ஆபரேஷன் செய்ததாக தகவல் இருக்கிறதா? இதனை மருத்துவமனைகள் இருந்துள்ளதா? காரணம் அப்போது அவர்கள் சாப்பிட்ட சில உணவுகள்.. அப்படி மறைக்கப்பட்ட மருத்துவ உணவுகள் நிறைய.. எலும்பு மூட்டு நோய்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதனை குணப்படுத்தக்கூடிய ஒரு சக்தி உள்ளது தான் வாத வள்ளி கிழங்கு. போகர் 12000 நூலில் இதனை கற்பமூலிகை என சொல்கிறார். ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....

வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம். நூறு கிராம் அளவிற்கு கிழங்கை சூப்பாக வைத்து இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி....
இந்த அற்புத வாத வள்ளி கிழங்கு தேவைக்கு 98430 93824 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கி பயன் பெறுங்கள்..
இந்த அரிய தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் நீங்கள் உள்ள மற்ற க்ரூப்புகளுக்கும் பகிருங்கள்.

கருஞ்சீரகம் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பது நாம் அறிந்த ஒன்றே.

கருஞ்சீரகம் அதிக மருத்துவ குணம் கொண்டது என்பது நாம் அறிந்த ஒன்றே.

ஆனால் இதை எதற்கு எப்படி பயன்படுத்துவது என்பதே நம்மில் சிலருக்கு தெரிவதில்லை. இந்த பதிவில் கருஞ்சீரகத்தை எந்த பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தவறாமல் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெண்ணீரில் கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்த பை கற்களும் மறைந்து விடும். இதை காலை மாலை என இருவேலைகளிலும் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்ப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அறைத்த பூண்டுடன் சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

அதேபோல் அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிக்கபடுபவர்கள் கருஞ்சீரகத்தை வறுத்து பின் அதை அரைத்து தூளாக்கி எண்ணெயில் ஊற வைத்து அதனை மூக்கில் இரண்டு அல்லது மூன்று முறை விட்டுவந்தால் ஜலதோஷத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மேலும் தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாசிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகள் மறையும். குளியளுக்கு பயன்படுத்தும் பொருட்களில் கருஞ்சீரகத்தை அரைத்து பயன்படுத்துவது நல்லது.

அடுத்து முக்கியமாக சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடி வயிறு கனமாகி சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். இதற்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து தூள் செய்து கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு 10 நாட்கள் முன்பு இருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேலை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு குணம் குறைந்து சிறுநீர் நன்றாக புரியும்.மேலும் கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மீது தடவி வர தேமல் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

இதை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ள வேண்டாம்.

Sunday, July 29, 2018

மருத்துவமணை நாடாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் , நல்ல ஆரோக்கியமான குழந்தையை ஈன்ற

உணர்வென்றும் அறிவியலென்றும்!

மரு.கோ. பிரேமா BHMS,
27/7/2018.

கடந்த சனிக்கிழமை திருப்பூரில் மருத்துவமணை நாடாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் , நல்ல ஆரோக்கியமான குழந்தையை ஈன்ற ஒரு மணிநேரம் பின் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைய அவசரநிலைக்கு மருத்துவமணை செல்லும் வழியில் இறந்துவிட்டார். இது நடந்து முடிந்து ஐந்து நாட்கள் பின்னர் வெளிவருகிறது செய்தி யாதெனில், அம்மாவட்ட சுகாதார நிலையத்தில் குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர் இந்த மரணத்தை வீட்டு பிரசவத்தினால் ஏற்பட்டதால் தான் என்று சந்தேகிக்கும்படி புகார் கொடுத்து விசயம் இப்போது ஒரு முக்கிய விவாதப்பொருளாக மாறிவிட்டது.

எப்படி இவர்கள் வீட்டில் பிரசவம் பார்க்கலாம்? மருத்துவ பயிற்சி பெற்றவர் உடனிருந்துதான் ஒருவர் பிரசவிக்கவேண்டும் என்றும் இதை சுற்றி நயமாக ஒரு புதிய வாழ்வியல் விதியை உட்புகுத்துகிறார்கள்.

முதலில் மக்கள் ஏன் விரும்பி வீட்டில் பிரசவம் பார்க்க விளைகிறார்கள், ஏன் மருத்துவமணையை புறந்தள்ளுகிறார்கள் என்ற அடிப்படை கேள்வியை வைக்காமல் அதை விவாதிக்காமல் வெறும்  சட்டவிதிகளை வைத்து மட்டும் இந்த மாற்றங்களை ஒடுக்கிவிடலாம் என்றென்னுவது மடமை.

அலோபதி விபத்துகளுக்கும் அவசரசிகிச்சைகளுக்கும் தேவையானது.
சரியாக சொல்ல வேண்டும் என்றால், இதற்கு மட்டும் தான் தேவை.
மற்றவற்றில் அவர்களின் மருத்துவ முறைகள் நன்மையைவிட தீங்கையே ஏற்படுத்துகிறது. ஆதலினால் அதில் இருந்து ஒதுங்குவதே அறமாகும். ஆனால் விடுமா வணிக ஆசை?

அலோபதி மருத்துவத்துறையின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் நம்பிக்கையின்மையும் தான் இன்றைய விவாதததிற்கு காரணம் என்றால் அதை இல்லை என்று சொல்ல முடியுமா?
எனில்?
அறமற்ற பல மோசடிகளை அனுதினமும் அலோபதி மருத்துவமணைகளில் நடப்பதுவே மக்களை மாற்று வழிக்கு தேடவைக்கிறது.
விளைவு?
வாட்ஸ்ஆப் முகநூல் சமூகவலைத்தளங்கள் யூடியூப் போன்றவற்றில் முளைத்து விட்ட திடீர் மரபு மருத்துவர்களின் பால் போகச்செய்கிறது.

அலோபதி மருத்துவம் வளர்ந்து வருகிறது என்பதே அம்மக்கள் மேலும் மேலும் ஆரோக்கியமற்ற சமூகமாக மாறிவருவதனால் தானே?
எனில் அலோபதியின் வெற்றி தான் என்ன?
நிரந்தர நோயாளிகளாக மக்கள்  அனுதினமும் தள்ளப்பட்டு வருவதா?
தடுப்பூசி உண்மையில் பலன் அளிக்கிறது என்றால் குறைந்தபட்சம் குழந்தைகள் நல மருத்துவர்களாவது எண்ணிக்கையில் தேவையின் அடிப்படையில் குறைந்து இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இங்கு இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட15 கூடுதல் சிறப்பு பிரிவுகள் குழந்தைகள் மருத்துவத்தில் மட்டும். இது எதை காண்பிக்கிறது?
உண்மையில் ஒரு மருத்துவமுறையின் சாதனை மக்களை ஆரோக்கியமாக மருத்துவத்தின் அவசியம் குறைவாக வைத்திருப்பது தானே? ஆனால் நிலைமை மக்களின் ஆரோக்கியம் தொலைந்தும் இவர்களின் வணிகம் மட்டுமே வளர்ந்தும் வருகிறது.

இந்நிலை எப்படி மக்களிடம் அவர்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தும்?

ஒரு சமூகத்தில் ஆரோக்கியமற்ற காரணிகளை என்றாவது சரியாக சுட்டிக்காட்டி அதனால் அச்சமூகம் ஆரோக்கியமானதாக எங்காவது கேள்விப்படுகிறோமா? நேர்மாறாகத்தானே இருக்கிறது.

இது அறிவியலின் சதி அல்ல. வணிகத்தின் சூழ்ச்சி!
அரைகுறை அறிவியலை மட்டும் வைத்து கொண்டு , வணிகநோக்கிற்காக மட்டுமே அந்த அறிவியலை பிடித்து நகரும் ஒரு துறை தானும் பெயர் கெட்டு அந்த அறிவியலுக்கும் கலங்கம் விளைவிக்கிறது.
அறிவியல் என்றாலே அது சூழ்ச்சி வணிகம் என்ற அச்சத்தை மக்கள் மனதில் விதைத்ததன் விளைவு? அறிவியல் என்றாலே ஆபத்து என்றும் அதனால் முன்னோர் கூறிய மரபு மட்டுமே சரி என்றும் மக்கள் மீண்டும் கண்மூடித்தனமாக திசைமாறவைத்துவிட்டது.

இயற்கையும் மரபும் அறிவியலும் ஒன்று தான். பிரிக்க முடியாதது.
இயற்கையை புரிந்து கொள்ள ஒரு மொழிதான் அறிவியல்.
ஆனால் உண்ரவுகளே போதும் என்ற அளவுக்கு அறிவியலை புறந்தள்ளும் அளவுக்கு மக்களை விளிம்புக்கு இட்டு சென்றது அலோபதியின் வணிக அரசியல் தான். இதில் மருத்துவர்கள் பாவம், வெறும் கைப்பாவைகளே. சிலர் இதை உணர்ந்தவர் வணக்கத்துக்கு உரியவர்கள். பலர் ஆட்டுமந்தை போல,பரிதாபத்திற்கு உரியவர்கள்.
வெகுசிலர் இருக்கிறார்கள் , இந்த அரசியலை புரிந்தும் அதன் வணிகத்திற்கு துணை போகும் நயவஞ்சகர்கள்.

பிரசவத்திற்கு வருவோம். முக்கிய அச்சம் என்ன? சுகபிரசவம் நடக்க உதவாமல் அறுவைசிகிச்சை செய்து வணிகம் வளர்க்கிறார்கள் என்ற அச்சமே.
இது முற்றிலும் இல்லை என்று யாராவது கூறமுடியுமா?

முதலில் இன்றைய மருத்துவர்களில் எத்தனை பேருக்கு பிரசவத்தின் இயல்பான நிலை அதாவது postion எப்படி எப்போது என்ன காரணங்களுக்காக தந்திரமாக மறக்கடிக்கப்பட்டு இன்றைய நிலையை சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்ற முக்கிய ஐரோப்ப மருத்துவ வரலாறு தெரியுமா??

2016ல் லேன்சட்டில் வெளிவந்த அறிவியல் ஆய்வுக்கட்டுரை இந்தியாவின் பிரசவத்தில் மருத்துவத்தின் ஊடுருவல் பற்றி சொல்வது அச்சுருத்ததான் செய்கிறது.

https://www.news18.com/news/lifestyle/health-and-fitness-caesarean-section-deliveries-up-from-10-to-30-percent-in-india-1347492.html

கடந்த 20 ஆண்டுகளில் சிசேரியன் எனப்படும் அவசர அறுவைசிகிச்சை மட்டும் 10-30% அதிகரித்திருக்கிறது என்கிறது.
உலக சுகாதார மையம் நிர்னயித்துள்ள ஒரு குறிப்பிட்ட மக்களில் தேவைப்படும் சிசேரியன் எண்ணிக்கையை என்றோ இந்தியா எகிறி சென்றுவிட்டது.

இதே காலகட்டத்தில் சுயமாக இயங்கும்(மருத்துவ நிறுவனங்களின் தலையீடு இல்லாத) ஆய்வு இங்கு ஆரம்ப விகிதமே 10% அல்ல, 18% என்கிறது!
தெலுங்கானாவில் அதிகபட்சமாக தனியார் மருத்துவமனையில் சிசேரியன் விகிதம் 75%, அரசு மருத்துவமணையில் 40.6%  . சராசரியாக58%!!

தமிழகத்தில் சராசரியாக 34%!!
உலக சுகாதார மையம் 10% தொட்டுவிட்டாலே அது அதிகம் என்கிறது.
அதாவது உண்மையில் ஆரோக்கியமான சமூகத்தில் மருத்துவ உதவியுடன் கூடிய கர்பங்களில் பிரசவ சிக்கல்களானது 10% க்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
எனில் இதில் வணிக நோக்கம் தானே மேலோங்கி இருக்கிறது?

இதில் வேடிக்கை என்னவென்றால், உலக சுகாதார மையம் எந்த குறிப்பிட்ட மக்கள் தொகையில் பிரசவத்தில் சிசேரியன் அறுவைசிகிச்சை சதவிகிதம்10% தொடுகிறதோ அங்கு பிரசவ சிக்கலினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறையும் என்கிறது.
ஆனால் உண்மை நிலவரம் இந்தியாவின் அதிகளவிலான அவசர சிசேரியன் அறுவைசிகிச்சை எந்தவிதத்திலும் பிரசவ மரணங்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு!!
இது இந்தியாவுக்கு பிரசவத்தில் அலோபதியின் தலையீடு வணிகம் சார்ந்ததாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த பிரசவ மரணங்களில் முதற்காரணமாக  மருத்துவமணைகளிலும் அறியப்படுவது அதிக உதிரப்போக்கு தான். அவ்வளவு எளிதாக மருத்துவ உதவி இருந்தும் இதை தவிர்க்க முடியவில்லை என்பதை அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டும். 

பிரசவ வணிக வளர்ச்சி உண்மையில் பிரசவ மரணங்களின் சதவிகிதத்தை பன்மடங்கு குறைத்திருந்தால் அந்த வணிகத்தில் குறைந்தபட்சம் அறம் இருப்பதாக கொள்ளலாம். ஆனால் அப்படி இல்லையே.

இந்த ஆய்வு அடிப்படையில் தான் இரண்டு ஆண்டுகள் முன்னர்,அலோபதி மருத்துவர்கள் வணிகத்திற்காக தேவையற்ற சிசேரியன் செய்வதை தடுக்க ஒவ்வொரு சிசேரியனையும் தீவிரமாக கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது அப்போதே செய்திகளில் கொஞ்சம் சலசலத்தது நினைவிருக்கலாம்.

சரி இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன?

உண்மையில் பிரசவத்தில் ஒரு மருத்துவரின் கண்காணிப்பு தேவையா?இல்லை என்கிறது உலக சுகாதார மையமே.
85-95% பிரசவங்கள் சிக்கல் இல்லாத இயல்பாக நடப்பவை தான். ஆதலால் இவர்களுக்கு மருத்துவர்கள் தேவையில்லை.
மருத்துவச்சிகள் போதும்.

ஆங்????
மருத்துவச்சிகளா? அப்படி னா?என்கிற அளவில் தான் இருக்கிறது இந்தியாவில் மருத்துவச்சிகள் நிலைமை.

முன்னர் அனுபவசாலிகளாக இருந்தவர்களையும் அழித்துவிட்டு, இப்போது இதை ஒரு முறையான அமைப்பில் அரசு அங்கீகாரத்துடன் பயிற்சி பெற்று பிரசவங்களை மக்களோடு மக்களாக மருத்துவமணை போல அச்சுறுத்தல் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் கையாளவேண்டியவர்களாக இருக்க வேண்டியவர்கள் இந்தியாவில் ஏட்டில் மட்டுமே இருக்கிறார்கள்.

ஆம்! உலக சுகாதார மையம் ஒவ்வொரு குறிப்பட்ட மக்கள்தொகைக்கும் மருத்துவச்சிகளின் தேவையை அழுத்தி தான் சொல்கிறது.

இங்கிலாந்தில் அரசே மக்களிடம் ஆரோக்கியமான கர்ப்பிணிகள் தயவுசெய்து மருத்துவமணை வராதீர்கள், மருத்துவச்சிகளை நாடுங்கள். மருத்துவர்களை உண்மையில் அவர்கள் தேவைப்படும் அவசர மருத்துவ உதவிக்கு செயல்பட அனுமதியுங்கள் என்கிறது.

இங்கே?

அனைவரும் மருத்துவர்களைதான் மருத்துவமணைதான் நாடவேண்டுமாம்.

இது அறிவியல் அறியாமையா? அல்ல வஞ்சகமான வணிக அரசியலா?

ஒரு சமூகத்தில் மருத்துவ வளர்ச்சி என்பது உண்மையில் அம்மக்களை மருத்துவ தேவையில் இருந்து விடுவிப்பதாக இருக்கவேண்டும்.
மேலும் மேலும் கூட்டம் சேர்பதும் மருத்துவமணை வளர்வதும் வணிகத்தின் வளர்ச்சி மட்டுமே. மருத்துவத்தின் வளர்ச்சி அல்ல.

உண்மையில் மருத்துவ அக்கரையோடு மக்களுக்காக செயல்பட விரும்பும் அரசென்றால் கொண்டு வாருங்கள், மீண்டும் மருத்துவச்சி முறையை.
இந்தியா போன்ற கிராங்கள் நிறைந்த, ஏழை, படிப்பறிவு குறைந்த மக்களிடம் சரியான முறையான பிரசவ கண்காணிப்பை எடுத்து செல்ல வேண்டும் என்றால் அது மருத்துவமணைகளால் மருத்துவர்களால் ஒருபோதும் முடியாது, மக்களோடு மக்களாக வணிகநோக்கம் குறைவான மருத்துவர்களின் ஊடுருவல் இல்லாமல் தனித்து இயங்ககூடிய மருத்துவச்சிகளால் மட்டுமே முடியும்!

செய்யுமா அரசுகள்?

அத்தனை விதிகளும் ஏடுகளில் இருந்தும் நடைமுறையில் இத்தனை ஆண்டுகளிலும் இம்முறை வராததற்கு காரணம்? மருத்துவ வணிகம் பாதிக்குமே!

இக்காரணங்கள் மக்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.
இந்நிலைதான் இவர்களை கோமாளித்தனமானதாக இருந்தாலும் இறுதி நோக்கம் அறம் சார்ந்த நல்லவையாக இருப்பதால் மரபு என லேசாக முனங்குபவரிம் கூட மக்களை ஈர்க்கிறது.

அரைகுறை அறிவியலை தொங்கிகொண்டு அதை நயவஞ்சமாக வணிகத்திற்கு பயன்படுத்துபவர்களை விட, கோமிளித்தனமாக இருந்தாலும் இறுதி தகவல் குறைந்த பட்சம் அதிக பாதகம் செய்யாத, வணிகநோக்கம் குறைவாக உள்ளவர்கள் பக்கம் மக்களை கூடச்செய்கிறது.

மெத்த படித்த அறிவியல் அறிவாளிகள் என்பதை அவர்கள் எனது பதிவுகளில் உதிர்க்கும் முதல் வார்த்தை ஃபக் fuck ல் தெரிந்துகொள்வேன். இவர்களை பார்த்தால் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கும்.

இந்த காரணங்கள் தான் என்னை,  இவர்களில் எந்த பக்கம் துணை நிற்கவேண்டும் என்ற கேள்வியில் வணிகர்களைவிட கோமாளிகளை காப்போம் என அவர்களுக்கு வாதிட , அவர்கள் பால் வீசப்படும் மிகநேர்த்தியாக தந்திரமான ஒடுக்குமுறை நோக்கோடு எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கவும் வைக்கிறது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...