சுமார் 20 வருடங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பன் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதை கேள்விப் பட்டு அவரைப் பார்க்கச் சென்றோம்.
என்னை கண்டதும் என் நண்பனும் அவன் மனைவியும் கதறி அழுதனர் .உடன் டாக்டரிடம் சென்று நண்பனின் வியாதியைப் பற்றி விசாரித்தேன். என் நண்பனுக்கு சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிவிட்டதாகவும்
எங்கு சென்றாலும் குணமாகாது என்றும், உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார்.
நான் நண்பன் மற்றும் அவன் மனைவியிடம் எந்த உதவி வேண்டுமானாலும் தகவல் கொடுங்கள் என்றும் கூறிவிட்டு கண்ணீரோடு திரும்பினேன்.
20 நாட்கள் கடந்து விட்டது என் நண்பனிடம் இருந்து ஒரு தகவலுமில்லை.நானாக அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் என் நண்பனின் நிலை என்ன இருக்கிறதா என்று கேட்டேன், அடுத்து அவன் சிரித்துக் கொண்டே உங்கள் நண்பன் தற்போது நன்கு நடக்கிறார் காலில் கட்டு எதுவுமில்லை சிறு வடு தான் இருக்கிறது. டாக்டர் அப்படி சொன்னாரே இது எப்படி நடந்தது என்றேன். கொடுமுடி ,முத்தூர் வெள்ளகோவில் இடையே தாசநாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது அங்கே சில குடும்பங்கள் மட்டும் ஒரு முலிகை எண்ணெய் கட்டுப் போடுகிறார்கள் ஒரு வாரத்தில் பலன் கிட்டி விடுகிறது இது ஒரு குடும்ப. வைத்தியம் என்றார். உடனடியாக நண்பனின் கிராமத்திற்கு சென்று அந்த நாளையே அவரோடு கழித்தோம்.40 நாட்களில் பைக்கில் வர ஆரம்பித்து விட்டார் .இவ்வளவு ஆண்டுகளுக்கு ப் பின் நான் கொடுமுடி வடக்கு வீதியில் எல்லை பகவதியம்மன் கட்டுமான பணிக்காக அங்கு சென்று கவனிப்பேன் .அப்போது
அந்த பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் பாத்திலேயே பெரிய பேண்டேஜோடு நொன்டி
நொன்டி வருவார். டாக்ஸி வந்து நிற்க்கும் அதில் தடுமாறி ஏறுவார் . மாலை 3 மணிக்கு மேல் புது துணிக்கட்டோடு வந்து இறங்குவார் .சுமார் 10 நாட்களுக்கு இது தெடர்ந்தது.ஒரு நாள் டாக்ஸியில் ஏறப்போன அவரைக் கூப்பிட்டேன் என்ன விபரம் என்ன என்றுக்கேட்டேன்,சர்க்கரை இருப்பதால் காலில் இருக்கும் புண் ஆறவில்லை என்றும் உள்ளுர் வைத்தியம் முடிந்து ஈரோடு வைத்தியம் தொடர்வதாக கூறினார்.
எனக்கு உடனடியாக தாசநாயக்கன்ப்பட்டி ஞாபகம் வந்தது. ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு என்றேன் 1500ரூபாய் என்றார்.
சரி நான் சொல்வதற்காக தாசநாயக்கன்ப்பட்டி செல்லுங்கள் என்று சொல்லி தாசநாயக்கன்ப்பட்டி அனுப்பினேன்.இரண்டு நாள் கழித்து அவரை பார்த்தேன்.காலில் கட்டிலில்லை எண்ணெய்ப் பூச்சு மட்டும் இருந்தது.ஒரே ஒரு முறை சென்று 1 பாட்டில் முலிகை எண்ணெயோடு வந்தவர் புண் தழும்புக்கூட இல்லாமல் காலை குதித்துக் காட்டி சிரிக்கிறார்....
எல்லோரும் ஷேர் செய்யுங்கள்.....
நம்புங்கள் சென்று பலனடையுங்கள்.........
K.C.பாலக்கிருஷ்ண்ன் Ex.பேருராட்சித்தலைவர்,கொடுமுடி..
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Monday, September 11, 2017
சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காக புரையோடிவிட்டதாகவும் எங்கு சென்றாலும் குணமாகாது என்றும், உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார்.
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...