Sunday, August 13, 2017

எளிய வீட்டு மருந்துகள்

எளிய வீட்டு மருந்துகள்

*ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு

கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

*உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில்

போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து

வந்தால் போதும்.

*அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி

வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

*பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு

சரியாகும்.

*சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம்

குறையும்.

*மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை

கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம்

கிடைக்கும்.

*துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி

மூளை பலம் பெறும்.

*மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி

சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

*வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து

வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி

நீங்கும்.

*பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று

முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய்

துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

*வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல

வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால்

வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன்

சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

*வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும்

காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச்

சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

*அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர்

மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

*அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி

மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு

ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...