Saturday, August 26, 2017

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா?

இதுபோன்ற மேலும் பயனுள்ள விவசாயத் தகவல்களை இலவசமாக பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்க

www.kvsmt.com

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!


ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா?

💪 நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்காதவர்களே இல்லை.

💪 நினைத்தால் மட்டும் போதுமா? அதற்காக கொஞ்சம் நாமும் மெனக்கெட வேண்டும்.

💪 ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், போக போக நாமே இந்த பழக்கங்களை பின்பற்ற தொடங்கி விடுவோம்.

👉 தினமும் மாதுளை பழச்சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை எனப் பல பிரச்சனைகளை போக்கலாம்.

👉 வாரம் மூன்று முறை பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் தணியும்.

👉 இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் வராது.

👉 ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால், ஆப்பிளை தோலோடு சாப்பிட வேண்டும். ஆனால் சுத்தமாக கழுவி சாப்பிட வேண்டியது உங்கள் பொறுப்பு.

👉 அடிக்கடி உணவில் சுண்டைக்காயைச் சேர்த்தால் நாக்குப்பு ச்சித் தொல்லை, வயிற்றுப்பு ச்சித் தொல்லை போன்றவை குணமாகும்.

👉 பு ண்டை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும்.

👉 மேலும், இது வெள்ளை அணுக்களை அதிகம் உற்பத்தி செய்வதோடு, புற்றுநோய் உருவாக்கும் செல்களை உருவாகாமலும் தடுக்கிறது.

👉 காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால், உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

👉 தினமும் உணவில் தர்பு சணி துண்டுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் மன அழுத்தம் குறையும்.

👉 உடலில் சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்க புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

👉 கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைய உண்டு.

👉 காலை உணவுக்கு பதிலாக பழங்களை உண்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள் பறந்து போய்விடும்.

👉 பச்சைப் பயிறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சு ட்டைத் தணிக்கிறது.

👉 வெங்காயம், பு ண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் உணவு பொருட்கள் ஆகும்.

💪 பின்பற்ற சிரமமாக இருந்தாலும், உடல் நலத்தை கருத்தில் கொண்டு சாப்பிட ஆரம்பியுங்கள்.

💪 ஆரோக்கியம் உங்களை தேடி வந்துவிடும் !!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...