Friday, July 21, 2017

அச்சுறுத்தும் டெங்கு ! என்ன செய்யலாம், எப்படி தப்பிக்கலாம் ???

அச்சுறுத்தும் டெங்கு ! என்ன செய்யலாம், எப்படி தப்பிக்கலாம் ???

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது.பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே மக்களின் அச்சமும்,என்ன செய்தால் தப்பிக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் டெங்கு வரும் முன் தடுக்கலாம்.

டெங்கு உருவாவது எப்படி ?

1. ஏடிஸ் ( Aedes ) எனப்படும் கொசு கடிப்பதனால்
2. இந்த வகை கொசு தேங்கிய தண்ணீரில் முட்டை வைத்து உயிர் வாழும்
3. பகல் நேரத்தில் மட்டும் உலா வந்து மனிதர்களை கடிக்க கூடியவை

டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது ?

1. டெங்கு நோயளிகளிடம் இருந்து டெங்கு நோய் பரவுவதில்லை
2. டெங்கு நோயளிகளை கடித்து விட்டு மற்றவர்களை கடித்த பிறகு டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ?

1. சாதாரண காய்ச்சல்
2. கண்வலி
3. தலைவலி
4. மூட்டுவலி
5. வயிற்றுவலி
6. தொடர் வாந்தி
7. சருமத்தில் அரிப்பு
8. கால் முட்டிக்கு கீழே சிவந்த புள்ளிகள்
9. மூக்கில் இரத்தம்
10. ஈறுகளில் மற்றும் கழிவுகளில் இரத்தம்

டெங்கு வராமல் இருக்க & டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட  ?

1. தண்ணீர் நிறைய அருந்த வேண்டும் அதே அளவு சிறுநீரை வெளியேற்ற வேண்டும்
2. பப்பாளி இலையை நன்கு அரைத்து சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் குடிக்க வேண்டும்
3. மலைவேம்பு இலையை நன்கு அரைத்து  குடிக்க வேண்டும்
4. நிலவேம்பு பொடியில் கசாயம் குடித்தால் டெங்கு நீங்கும்
5. காய்ச்சல் வந்தவர்கள் பயம்,பதற்றமில்லாமல் மருத்துவரை அணுகி என்ன வகையான காய்ச்சல் என்று தெரிந்து சிகிச்சை பெற வேண்டும்
6. FBC ( Full Blood Count ) Test செய்து பார்க்கவும் ( Blood Count Normal ஆகும் வரை )
7. Platelet Count & PCV Test எடுத்து பார்க்க வேண்டும்
8. நீர்ச்சத்தினை தக்க வைக்கவும்
9.குளூக்கோஸ்,இளநீர்,கஞ்சி,கிவி பழம்,ஆரஞ்சு Juice,சாத்துக்குடி Juice குடிக்க வேண்டும்,( Blood Count Increse ஆகும்)
10. காய்ச்சல் வந்தால் Medical Shop சென்று மாத்திரை வாங்கி சாப்பிடக்கூடாது,
11. Medical Shop-ல் விற்கும் ஆஸ்பிரின்,புரூபென் Tablets-யை சாப்பிடக்கூடாது

Blood Count பற்றிய குறிப்பு :

மனித உடலில் உள்ள இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை 2 lakhs to 3 lakhs,இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை 15000 வரை குறைந்து ஆபத்தில் இருந்து மீண்டவர்கள் கூட இருக்கின்றனர்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...