முருங்கை கீரையின் நன்மைகள்
முருங்கை கீரை ஏழைகளின் வைட்டமின் மாத்திரை. மல்டிவைட்டமின் மாத்திரைகளை மிஞ்சும் சக்தி கொண்டது. இதில்
காரட்டை விட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ
வாழையை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம்
ஆரஞ்சை விட 15 மடங்கு அதிக வைட்டமின் சி
ஸ்பினச் (பாலகீரை) விட 25 மடங்கு அதிக இரும்புச்சத்து ஆகியவை உள்ளன
இதில் உள்ள க்ளோரொஜெனிக் அமிலம் எனும் அமினோஅமிலம் ரத்த சர்க்கரை செல்களில் உறிஞ்சப்படும் வேகத்தை கட்டுபடுத்தி ரத்தசர்க்கரை அளவுகளை குறைக்கிறது. சில ஆய்வுகளில் தினம் 50 முதல் 100 கிராம் வரை முருங்கைகீரையை தினம் உண்பது மட்டுமே ரத்தசர்க்கரை அளவுகளை 13% அளவு குறைப்பதாக கண்டுபிடித்தார்கள்.
இதில் இருந்து எடுக்கபடும் மொரிங்கா ஆயில் எனப்படும் முருங்கை எண்ணெய் அல்சருக்கு மருந்தாக பரிந்துரைக்காப்டுகிறது
நிலத்தடி நீர் மாசடைந்து ஆர்சனிக் எனும் விஷம் நம் உடலில் சேரும் வாய்ப்பு உண்டு. சில ஆய்வுகளில் எலிகளுக்கு ஆர்சனிக்குடன் முருங்கை இலைகளி சேர்த்து கொடுக்கையில் செல்களில் ஆர்சனிக் சேரும் விகிதம் மட்டுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கபட்டது
இதில் உள்ள ஐசோதியோசைனடு எனும் மூலச்சத்து அல்சர், காஸ் தொல்லைகளை உருவாக்கும் எச்.பைலோரி எனும் பாக்டியாக்களை அழிக்கவல்லது என சில ஆய்வுகள் கூறுகின்றன
ஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக முருங்கை ஆயில் மோரிங்கா ஆயில் எனும் பெயரில் சந்தைக்கு வந்துள்ளது. இது ஆலிவ் ஆயிலை விட 15 மடங்கு விலை அதிகமுள்ள சூப்பர் புட்
இத்தனை நன்மைகளை அளிக்கும் முருங்கை இலைகளை எப்படி நம் உணவில் சேர்த்துகொள்வது? இது எங்கே கிடைக்கும்?
அமெசானில் 100 மிலி மொரிங்கா ஆயில் 470 ரூபாய்க்கு கிடைக்கிறது. 240 கிராம் மொரிங்கா பவுடர் அமெசானில் 250 ரூபாய்க்கு கிடைக்கிறது.
தப்பி தவறி கூட கிராமங்களில் உள்ள உங்கள் பாட்டிவீட்டு பொடக்காளியில் இது கிடைத்துவிடாது. ஏன் என்றால் கிழவிகளுக்கு என்ன மருத்துவம் தெரியபோகிறது? நாம மொரிங்கா ஆயிலையும், மொரிங்கா பவுடரையும் அமேசானில் வாங்கலாம் வாங்க.
முருங்கை கீரை ஏழைகளின் வைட்டமின் மாத்திரை. மல்டிவைட்டமின் மாத்திரைகளை மிஞ்சும் சக்தி கொண்டது. இதில்
காரட்டை விட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ
வாழையை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம்
ஆரஞ்சை விட 15 மடங்கு அதிக வைட்டமின் சி
ஸ்பினச் (பாலகீரை) விட 25 மடங்கு அதிக இரும்புச்சத்து ஆகியவை உள்ளன
இதில் உள்ள க்ளோரொஜெனிக் அமிலம் எனும் அமினோஅமிலம் ரத்த சர்க்கரை செல்களில் உறிஞ்சப்படும் வேகத்தை கட்டுபடுத்தி ரத்தசர்க்கரை அளவுகளை குறைக்கிறது. சில ஆய்வுகளில் தினம் 50 முதல் 100 கிராம் வரை முருங்கைகீரையை தினம் உண்பது மட்டுமே ரத்தசர்க்கரை அளவுகளை 13% அளவு குறைப்பதாக கண்டுபிடித்தார்கள்.
இதில் இருந்து எடுக்கபடும் மொரிங்கா ஆயில் எனப்படும் முருங்கை எண்ணெய் அல்சருக்கு மருந்தாக பரிந்துரைக்காப்டுகிறது
நிலத்தடி நீர் மாசடைந்து ஆர்சனிக் எனும் விஷம் நம் உடலில் சேரும் வாய்ப்பு உண்டு. சில ஆய்வுகளில் எலிகளுக்கு ஆர்சனிக்குடன் முருங்கை இலைகளி சேர்த்து கொடுக்கையில் செல்களில் ஆர்சனிக் சேரும் விகிதம் மட்டுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கபட்டது
இதில் உள்ள ஐசோதியோசைனடு எனும் மூலச்சத்து அல்சர், காஸ் தொல்லைகளை உருவாக்கும் எச்.பைலோரி எனும் பாக்டியாக்களை அழிக்கவல்லது என சில ஆய்வுகள் கூறுகின்றன
ஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக முருங்கை ஆயில் மோரிங்கா ஆயில் எனும் பெயரில் சந்தைக்கு வந்துள்ளது. இது ஆலிவ் ஆயிலை விட 15 மடங்கு விலை அதிகமுள்ள சூப்பர் புட்
இத்தனை நன்மைகளை அளிக்கும் முருங்கை இலைகளை எப்படி நம் உணவில் சேர்த்துகொள்வது? இது எங்கே கிடைக்கும்?
அமெசானில் 100 மிலி மொரிங்கா ஆயில் 470 ரூபாய்க்கு கிடைக்கிறது. 240 கிராம் மொரிங்கா பவுடர் அமெசானில் 250 ரூபாய்க்கு கிடைக்கிறது.
தப்பி தவறி கூட கிராமங்களில் உள்ள உங்கள் பாட்டிவீட்டு பொடக்காளியில் இது கிடைத்துவிடாது. ஏன் என்றால் கிழவிகளுக்கு என்ன மருத்துவம் தெரியபோகிறது? நாம மொரிங்கா ஆயிலையும், மொரிங்கா பவுடரையும் அமேசானில் வாங்கலாம் வாங்க.