Wednesday, March 29, 2017

இந்துமதம் கண்ட அறிவியல்

இந்து மதம் என்பது வெறுமனே கடவுள் நம்பிக்கை சர்ந்தது மட்டும் அல்ல...அது இசை,மருத்துவம்,கலவி,நாட்டியம்,விஞ்ஞானம் என்பவற்றிலும் அக்காலதிலேயே பல பரிமாணங்களை கொண்டு அமைந்தது..எமது சூரியக்குடும்பத்தில் 9 கோள்கள் என்பதும் அவை சூரியக்குடும்பத்தில் சூரியனை மையமாக வைத்து சுற்றுகின்றது இந்துக்கள் இன்று நேற்று கண்ட உண்மை அல்ல...அது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நவக்கிரக வழிபாட்டில் எடுத்து சொல்லபட்டது..அது போக ஆலய வழிபாட்டில் நடுவில் சூரியனையும் சுற்றிவர பிற கோள்களையும் அமைத்து அறிவியலையே உரசும் வண்ணம் ஒரு கொள்கைகளை ஏற்படுத்தினர்...

எத்தனையோ விஞ்ஞானிகள் இந்து மத அறிவியலை பார்த்து வாயைடைத்து போய் உள்ளனர்...அதில் மிகவும் முக்கியமானவர் உலக மாமேதை ஐன்ஸ்டீன்.....அவர் பகவத் கீதை பற்ரி கூறும் போது "தன்னுடைய கடைசி காலத்தில்தான் பகவத் கீதையைப்படிக்க நேர்ந்தது என்றும் முன்னரே படிக்க வாய்ப்பு கிடைத்டிருந்தால் தன்னுடைய ஆராய்ச்சியில் புதிய பரிமாணங்களை உருவாக்கி இருக்க முடியும்" என்றும் குறிப்பிட்டு உள்ளார்...”

அதிலும் குறிப்பாக விஞ்ஞானத்தையும் தாண்டி வானவியலில் இந்துக்களின் வளர்ச்சி விஞ்ஞானிகளையே மிஞ்சியது...விஞ்ஞானிகளை விட மிகவும் துல்லியமாக கணிக்கும் சாஸ்திர முறைமை இந்து மததில் உண்டு..பெளர்ணமி,அம்மாவாசை மற்றும் இதர வானியல் சார் கணிப்புகள் இந்து மததின் பெருமையை பறைசாற்றுவதாய் உள்ளது..

இன்று இந்து மதத்தின் அறிவியலை சில ஆதாரங்களோடு பார்க்கலாம்...

1.மரத்தில் இருந்து விழுந்த ஆப்பிள் பழத்தை கண்ட நியூற்றன் புவியீர்ப்பு விசையை கண்டார்..பின்பு கிரகங்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசையை அவர் கண்டதன் விளைவாக பல முன்னேற்றகரமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார்...

ஆனால் இந்து மதத்தின் "பிரஸ்ன உபநிஷதம்" என்கிற ஒரு வேதாந்த நூலில் இது பற்ரி ஏற்கனவே குறிப்புகள் இடப்பட்டு உள்ளது...பிராணா சக்தி,அபனா சக்தி என்ற இரண்டு சொற்கள் மூலம் இது விளக்க படுகிறது...அபனா சக்தி என்பது ஈர்ப்புசக்தி..பிரணாசக்தி என்பது எதிர் ஈர்ப்பு சக்தி...இதை கிரகங்களோடு ஒப்பிட்டும் பூமியின் இயக்கத்தோடு ஒப்பிட்டு அந்தப்புராணத்தில் பல சுலோகங்கள் உண்டு..இவைகள் எல்லாம் இரண்டு பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்துக்களால் எப்படி சொல்ல முடிந்தது என்பதற்கு ஒரே விடை இறை சக்தி என்பதே..

2.பிரபல விஞ்ஞானி கெப்லரும்,கலிலியோவும் பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனை சுற்றி வருவதாக சொன்னார்கள்.ஆனால் இவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரிய்ப்பட்டர் எனும் இந்துமத அறிவியலாளர் பூமி சூரியனை சுற்றி வருவதை "லாகவ கவுரவா" என்னும் வார்த்தை மூலம் குறிப்பிட்டார்....அதாவது ஒரு சிறிய அமைப்பு ஒரு பெரிய அமைப்பால் ஈர்க்கபட்டு சுற்றி வருவது என்பது இதன் பொருள்..

அதுமட்டும் அல்ல "ஆத்ரேய பிராம்மணத்தில் சொல்லபட்டு உள்ள சில விடயங்கள் பார்த்து இன்று கூட விஞ்ஞானிகள் வாயடைத்து போய் உள்ளனர் ….அதி சூரியன் உதிப்பதும் இல்லை,மறைவதும் இல்லை என்றும் பூமி தன்னுடைய அச்சில் தன்னைதானே சுற்றிக்கொள்வதால் பகல் இரவுத்தோற்றங்கள் ஏற்படுவதாகவும் சொல்லபடுகிறது...ஆரியப்பட்டா உலகம் உருண்டை எனவும் அது தன்னை தானே சுற்றுகிறது எனவும் குறிப்பிட்டார்..உலகம் உருண்டையாக இருப்பினும் அது ஏன் தட்டையாக நமக்கு காட்சி அளிக்கின்றது எனவும் அவர் சொல்லியிருக்கிறார்..

அது மட்டு அல்ல "சித்தாந்த சிரோன்மனி என்னும் நூல் புவியீர்ப்பு சக்தித்ததுவத்தை விரிவாக விளக்கி உள்ளது....காளிதாசன்,சந்திரன் ஒளியை சூரியனிடன் இருந்துதான் பெறுகிறது என்றும் சந்திர் கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுகின்ற தோற்றப்பாடே என்பதும் தன்னுடைய ரகுவம்சம் என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்...

அதைவிட கணிதவியலிலும் இந்து மதம் பெரும் நுட்பங்களை உலகிற்கு தந்தது என்பதும் வியக்கத்தக்க விடயம் …

எல்லொருக்கும் பைதகரஸ் என்னும் கிரேக்க விஞ்ஞானியை தெரியும்...ஆனால் அவருக்கு பல நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த அதாவது கி.மு 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஆபஸ்தம்பரால் " ஒரு செய்யுள் மூலம் குறிப்பிட்டு உள்ளார்..

“தீர்க்கஸ்யாஷ்ணயா ரஜ்ஜி பார்ச்வமானி" என்னும் செய்யுளில் வர்க்கமூலம் இரண்டுக்குரிய துல்லியமான பெருமானத்தை கணித்து உள்ளார்..அது 1.4142156 என்பதாய் அமைகிறது...

இதைவிடுத்து சில கடவுள்களின் தோற்றங்கள் மூலம் கூட மிகப்பெரிய விஞ்ஞான கருத்துகள் வெளியிடப்பட்டன...

உதாரணமாக சூரியன் 7 குதிரைகளை தனது தேரில் பூட்டி ஓட்டினான் என்பது இந்து புராணங்களின் வாசகங்கள் கூறுகின்றன..அதுவே விஞ்ஞானத்தில் சூரியனில் இருந்து வரும் வெள்ளொளி 7 நிறங்களை கொண்டு அமைவதாக கூறிகிறது...இவற்றில் விலகல் கூடிய கதிர் ஊதா எனவும் குறைந்த கதிர் சிவப்பு எனவும் கூறப்படுகிறது..

இவ்வாறான இந்து மதம் காலத்திற்கும் அழியாது என்பது திண்ணம்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...