Friday, August 12, 2016

"உரை மருந்து" மறந்துடோமே

மறந்துடோமே !!!!!!!  "உரை மருந்து" :
இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம்.ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டி இடமோ இதை பத்தி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும்," ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை".இந்த அறிய பொக்கிஷத்தை: மூடநம்பிக்கை, நேரமின்மை, சரியான புரிதல் இன்மை மற்றும் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைப்பது இப்படி பல காரணங்களால் மறந்துவிட்டோம்.நாங்கள் நீங்கள் இதை செய்தே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தவில்லை.ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் நன்மைக்காக இந்த மருந்துவ முறை  பற்றி சிறிது ஆராய்ந்து பின்னர் முடிவு எடுங்கள்.அந்தக்காலத்தில் மருத்துமனைக்கு குழந்தைகளை தூக்கி சென்றதே இல்லை என்ற நிலை தற்போது மாறிஇருப்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.
உரை மருந்து என்றால் என்ன? 
இயற்கை மருந்துகள் சிலவற்றை உரைகல்லில் உரைத்து  குழந்தைகளுக்கு புகட்டுவது.
எவை எவை உரை மருந்தாகிறது?
1.வசம்பு
2.கடுக்காய்         
3.மாசிக்காய் 
4.சித்தரத்தை  
5.ஜாதிக்காய் 
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
எப்படி உபயோகப்படுத்துவது?
*முதலில் மேற்கூறப்பட்டுள்ள  மருத்துகளை ஒரு கப்  தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க  விடவும்.பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன்,தண்ணீரை  வடிகட்டி விட்டு மருத்துகளை நிழலில்  உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
                         
*பிறகு மருத்துகளை உரைகல்லில் தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு உரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
*ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரைக்கலாம்.(வசம்பை தவிர)
*உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் சிறிது தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு குழந்தைக்கு  புகட்ட வேண்டும்.
எப்போது கொடுக்க வேண்டும்?
*குழந்தையை குளிக்க வைத்தவுடன் இந்த மருந்தை கொடுப்பது வழக்கம்.
*ஒரு நாள் விட்டு மறுநாள் கொடுக்கலாம்.
*குழந்தையின் இரண்டு மாதம் முதல் மூன்று வயது வரை கொடுக்கலாம்.
*தற்போதைய நவீன மருத்துவமுறை குழந்தையின் ஆறு மாதம்  வரை  தண்ணீர் மற்றும்  தாய்பால் தவிர வேறு எதையும்  கொடுப்பதை ஏற்பதில்லை.அவ்வாறு  நினைக்கும் தாய்மார்கள்  ஆறு மாதத்திற்கு  பிறகு  இம்மருந்தை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
மருத்துவ பயன்கள்:
1.வசம்பு- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும், பசியை  தூண்டும்.           
2.கடுக்காய்- மலமிளக்கி.        
3.மாசிக்காய்- நாவில் வெள்ளை  படலத்தை  தவிர்க்கும்        
4.சித்தரத்தை-  சளி, இருமலுக்கு அரும்மருந்து         
5.ஜாதிக்காய்- நன்கு தூக்கம் வரும்     
6.சுக்கு- சளி, இருமலை போக்கும்
மஞ்சள்- கிருமிநாசினி.
குறிப்பு:
வசம்பை "பிள்ளை வளர்ப்பான்" என்று அழைப்பார்கள்.அதற்காக நிறைய பயன்படுத்துவது  நல்லதல்ல.எப்போதுமே வசம்பை அதிகமாக  பயன்படுத்த கூடாது.
வசம்பை  உபயோகபடுத்தும்  முறை:
                                             வசம்பை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணை இட்ட விளக்கிலோ, அல்லது கேஸ்  அடுப்பிலோ காட்டி அது கருப்பாக மாறிய பின் உரைகல்லில் உரைத்து பயன் படுத்த வேண்டும்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...