Tuesday, August 30, 2016


முதலில் தேங்காய், தென்னை மரத்தின் நற்குணங்கள் நமக்கு தெரியுமா ? நாம் பயன்படுத்துகிறோமா ?

* நம் உடல் இயக்கத்திற்கு தேவையான அதிகமான சத்துக்கள் தேங்காயில் உள்ளன. ( கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு மற்றும் தாதுப்பொருள், விட்டமின் சி, பி காம்ப்ளஸ் மற்றும் பல )

* நம் முன்னோர்கள் பயன்படுத்திய அற்புதமான சித்த மருத்துவத்தில் தேங்காய் மிக அதிக அளவில் சேர்க்கப்பட்டது. வயிற்று வேக்காலம், உடலில் உள்ள விஷம் முறிப்பதற்கு, நாம் சாப்பிடும் மருந்துபி பொருள்களால் உடலில் பக்க விளைவுகள் உருவாகாமல் தடுப்பதற்கு, உள் உடலில் உள்ள புண்களை ஆற்றுவதற்கு தேங்காய் பாலினை மருந்துகளாக கொடுத்தனர்.

* தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான லாரிக் அமிலம் இந்த தேங்காய் பாலில் உள்ளதால் நமக்கு அதிகமான எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் நமக்கு கொடுக்கிறது.

* நம் உடலில் உள்ள புற்றுநோயை குணப்படுத்தும் சக்தியாகவும், எய்ட்ஸ் நோயாளிக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் சக்தியுள்ள பொருளாகவும் தேங்காய் பயன்படுகிறது.

* தேங்காய் உடலின் ஆக்க சக்தியை பலமடங்காக அதிகரிக்கிறது.

* தேங்காய் குடல் பூச்சிகளை அழிக்கும் மற்றும் வெளியேற்றும் சக்தி உடையது.
* தேங்காயில் நம் உடலிலுள்ள கொழுப்பை குறைக்கும் " காப்ரிக் ஆசிட் " உள்ளதால் கொழுப்பையும், கொலஸ்ட்ராலையும் குறைக்கும் சக்தி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

* முற்றிய தேங்காய் ஆண்மை, பெண்மை சக்தியை அதிகரிக்க பயன்பாடுள்ளதாக ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.

* பெண்களுக்கான மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை தேங்காய்ப்பால் கட்டுப்படுத்துகிறது.

* வைரஸ் நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் தேங்காய் உள்ளது.

* மனிதர்களின் முதுமையை தடுத்து எப்போதும் இளமையாக சுறுசுறுப்பாக இயங்க தேங்காய் பயன்படுகிறது.

* பிறக்கும் குழந்தைகள் நல்ல நிறமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க தேங்காய்ப் பூவினை சாறாக்கி கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் பழக்கம் நீண்டகாலமாக நம் கலாச்சாரத்தில் இருந்து வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேங்காய் எண்ணெய் :
_________________________
தேங்காய் எண்ணையின் பயன்கள் ஏராளம்.
நம் அண்டை மாநிலமான கேரளாவில் சமையலுக்கு தேங்காய் எண்ணையை தான் பயன்படுத்துகிறார்கள்.
தீப்புண் பட்ட காயங்களில் தேங்காய் எண்ணையை தடவி வந்தால் ஆறிவிடும்.
தேமல், சிரங்கு, படை நோய்களுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
நம் உடம்பின் வெளிப்புற பாதுகாப்பிற்கு காவலனாக தேங்காய் எண்ணெய் உள்ளது.
நம் வெளிப்புற தோலினை அழகுபடுத்தவும், பளபளப்பாக வைத்திருக்கவும், அதிகமான அழகு பொருள்களில் தேங்காய் எண்ணெய் பயப்படுத்தப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் நம் உடலின் உள்ளே ஏற்படும் புண்களை குணப்பபடுத்த தேங்காய் எண்ணெய் மருந்துடன் கொடுக்கப்படுகிறது.

இளநீர் :
- - - - - - - -

* இது நம் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாக்கும்.

* நம் உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

* சிறுநீர் பையில் ஏற்படும் கற்களை கரைக்க இது பயன்படுகிறது.

* காலரா காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தாக இளநீர் உள்ளது.

* நம் உடலில் ஜீரண சக்தியை வலுப்படுத்துகிறது.

* உடல் சூடு, மூலச்சூடு, மூளை சூடு குறைய இளநீர் அற்புத மருந்தாகும்.

* உடல் பருமன் இருப்பவர்கள் எடை குறைக்கவும், இரத்த அழுத்தம் உடையவர்கள் சமநிலைப்படுத்தவும் இளநீரை பயன்படுத்தலாம்.

* நம் உடலில் அளவுக்கு அதிகமாக உள்ள பித்தம், வாதம், கபம் குறைக்க இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

* இளநீர் சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உடையது.

* இளநீர் நம் இரத்தத்திலுள்ள நச்சுப்பொருள்களை சுத்தம் செய்யும் ஆற்றல் உடையது.

* இதில் வைட்டமின் பி சத்து உள்ளது. நரம்புகள், ஜீரண உறுப்புகளை பாதுகாக்கிறது.

* தள்ளாத வயதிலும் இளநீர் மிகுந்த புத்துணர்ச்சியை தரும்.

* அந்த காலங்களில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. உடலில் எதிர்ப்புசக்தி கூடவும், உடலில் களைப்பு குறையவும், நோய் விரைவில் சரியாகும் நோக்கத்திற்காக ஆய்வுகள் கூறுகிறது.

* இளநீர் உணவுக்கு பின் 1 மணி நேரம் பின் குடிப்பது கூடுதல் நலனை ஏற்படுத்தும்.

பதினைந்து நாட்களுக்கு முன் எனக்கு வயிறு, நீர்ப்பை, நீர் போகும் இடத்தில் வேக்கலம் இருந்தது.

சர்க்கரை சுய பரிசோதனை செய்தேன்.

ஒருநாள் 200 அடுத்தநாள் 225 ம் ( சாப்பாடு முன் ) இருந்தது. அன்றிலிருந்து நாள் ஒன்றுக்கு ஒரு வேலை தேங்காய்ப்பால், பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தேன். ஒரு வாரத்தில் வேக்கலம் காணவில்லை. சர்க்கரை சுய பரிசோதனை செய்தேன். 136 அளவாக குறைந்து காணப்பட்டது. இன்றுவரை தேங்காய்ப்பால் குடித்து வருகிறேன். நண்பர்களுக்கு கொடுத்து வருகிறேன். இவை நூறு சதவிகிதம் உண்மையானது.

இதை பதிவிட காரணம் :

தேங்காயின் மருத்துவம், தேங்காய் சம்மந்தமான உணவுகள் அறிந்து, நம் ஆரோக்கியத்தை வலுப்படுத்த அதிகமாக முறையாக நாம் தேங்காவை பயன்படுத்த வேண்டும்.அதுவும் தேங்காவை பச்சையாக, தேங்காய் பாலாக, சத்துள்ள தின்பண்டமாக பயன்படுத்துவதும், சுத்தமான தேங்காய் எண்ணையை சிறப்பாக பயன்படுத்தவும் வேண்டும்.
நாம் பயன்படுத்துவது மட்டும் போதாது நம் நண்பர்கள், உறவினர்களுக்கு தேங்காயின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 திருமணங்கள், விசேஷங்களில் தேங்காய் பாலையும், தேங்காய் பலகாரங்களையும் சேர்த்து மற்றவர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டும்.
நாம் நல்லவைக்கு மாறினால் நம் உலகமும் மாறும்.
சில சுயநல, பண சிந்தனை ஒன்றே குறிக்கோளாக உள்ள கயவர்களின் பேச்சினை கேட்டு நல்ல மருத்துவ பொருளான தேங்காயை சேர்க்காமல் இருப்பது அறிவு இருந்தும் அறியாமையின் பண்பினை எடுத்துரைக்கும்.

***
2. நல்ல பொருள்களின் தரம் குறைய காரணம், அதில் தரம்கெட்ட பொருள்களை கலந்து விற்பதே...
இந்த வேலை அதிகமான தரம்கெட்ட வியாபாரிகளால் செய்யப்படுகிறது.
தலையில் முடி கொட்டாமல் இருக்கவும், முடி அடர்த்தியாக வளரவும் தேங்காய் எண்ணெய் பயன்பெறும் என்பது 100% உண்மை.

ஆனால் ......

அதிகமான வியாபாரிகளோ மிக சொற்ப அளவில் தேங்காய் எண்ணையும், அதிக அலையில் விலை மலிவான குருடாயில் போன்றைப்போல சேர்த்து சந்தையில் சுத்தமாம தேங்காய் எண்ணெய் என போலி விளம்பரம் செய்து விற்பனை செய்கிறார்கள்.

இவை தடுத்து நிறுத்தப்பட

விழிப்புணர்வுக்காக
நம் இதயத்திற்கு மிகவும் கெடுதல் விளைவிப்பவை...

(1) ஒரே எண்ணையை பல முறை திரும்ப திரும்ப பயன்படுத்துவது ( அதில் முக்கியமாக பாமாயில் மிகவும் விஷமாகிறது )

(2) வடை, பஜ்ஜி மற்றும் உணவுகள், பலகாரங்களில் சோடாப்பு சேர்ப்பது...( இவற்றால் வயிறு வெந்து புற்றுநோய், இதயம் பாதிப்பு ஏற்படும் )

(3) உணவின் ருசிக்காக அஜினாமோட்டா என்ற வேதிப்பொருளை உணவில் சேர்ப்பது. ( இவற்றால் வயிறு வெந்து புற்றுநோய், இதயம் பாதிப்பு அதிகம் ஏற்படும் ) இவை அதிகமாக அசைவ உணவுகளில் ருசிக்காக சேர்க்கபோட்டு மாரடைப்பு நோயை வாங்கும் நிலை ஏற்படுகிறது.

(4) டால்டா என்பது தாவர கொழுப்பு. இவற்றை மிக குறைந்த அளவே சேர்க்கவேண்டும். அதிக அளவு சேர்த்தால் இதய பாதிப்பு நிச்சயம் உண்டு. இவை உணவகங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

(5) உணவில் கலருக்காக சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் ( இவை வயிறு கோளாறு, புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகள் ஏற்படும்...

( உணவுக்கு பின் இளஞ்சூடான தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சர்க்கரை நோயின் தாக்கம் அதிக அளவில் குறையும் வாய்ப்புள்ளது )

விழிப்புணர்வுக்காக
சிஷ்யன் தி சிதம்பரம்
பட்டுக்கோட்டை.

நன்றியுடன் .
உயிர்நாடி விவசாயக்குழு.

( பேராவூரணியில் தென்னை விவசாயிகள் கூட்டத்தில் எனது கட்டுரையை சமர்ப்பித்தேன் )
நாமும் தெரிந்துகொள்வோம் தோழமைகளே

1. அன்பு சொந்தங்களே,
கொஞ்சம் சிந்தியுங்கள்...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...