Monday, May 2, 2016

எந்த விஷப்பூச்சி கடித்தாலும் நம் உடம்பிற்கே அந்த விஷத்தை முறியடிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கத் தெரியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நமது நாக்கு எந்தச் சுவையைக் கேட்கிறதோ அதை உடனே தாராளமாகக் கொடுப்பதும், அதன் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நம்புவதும்தான்.

அதற்காகப் பாம்பு கடித்தவுடன் வேப்பிலையும், பாகற்காயும் சாப்பிட்டுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டாம்! இது ஒரு தற்காப்பு வைத்தியம் மட்டுமே! மனதில் தீர்க்கமான துணிச்சலுடன் கசப்பைச் சாப்பிட்டால் கண்டிப்பாகப் பாம்பு விஷத்தை முறியடிக்கலாம். இருந்தாலும், பாம்பு கடித்தால் பாகற்காயைச் சாப்பிட்டுவிட்டு, மருத்துவமனைக்கும் செல்லுங்கள்! ஏனென்றால், சில பாம்புகளின் விஷம் இந்தக் கசப்புக்கும் மீறி வேலை செய்ய வாய்ப்புள்ளது.

கோவில்களில் திருவிழாவின்போது முதுகில் கொக்கி போட்டுத் தேரை இழுப்பது, வாயில் அலகு குத்துவது, நாக்கில் அலகு குத்துவது, தீச்சட்டி எடுப்பது போன்றவற்றைச் செய்பவர்கள் முழு எலுமிச்சம்பழத்தை வாயில் வைத்துச் சாப்பிடுவார்கள். வேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள். ஏன் அவ்வாறு சாப்பிடுகிறார்கள்? ஏனென்றால் உடலுக்குக் காயம் ஏற்படும்பொழுது அந்த உறுப்புகளிலுள்ள செல்கள் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்பொழுது உடலில் நெருப்பு சக்தி தீர்ந்து போகும். நெருப்புச் சக்தி மீண்டும் நம் உடலுக்குத் தேவைப்படும் என்பதால் நாக்கு கசப்பைக் கேட்கிறது. எனவே அவர்கள் கசப்பான பொருட்களை மென்று சாப்பிடும்பொழுது அவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை.

அதே நபர்கள் அடுத்த நாள் வீட்டில் உட்கார்ந்து இருக்கும்பொழுது வேப்பிலையைக் கொடுத்துப் பாருங்கள். அவருக்கு அது கசக்கும்!

எனவே, கசப்புக்கும், நெருப்புப் பிராணனுக்கும், இதயம், இதயத்தின் மேலுறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, நாக்கு ஆகிய உறுப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் தொடர்புண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இந்தத் தொடர்புகளைப் புரிந்து கொண்ட மருத்துவரால் மட்டுமே உங்கள் நோய்களைக் குணப்படுத்த முடியும். இது தெரியாத மருந்துவர்கள்தான் ஒரு குறிப்பிட்ட உறுப்பில், ஆராய்ச்சி செய்து, அறுவை சிகிச்சை செய்து காலத்துக்கும் மருந்து, மாத்திரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
பாகற்காய், 
சுண்டக்காய், 
கத்தரிக்காய், 
வெந்தயம், 
பூண்டு, 
எள்ளு, 
வேப்பம்பூ, 
ஓமம் 
                             போன்றவற்றில் இந்த கசப்புச் சுவை மிகுதியாய் உள்ளது. தேங்காய் மற்றும் தேன் இவற்றை நம் உடல் கசப்பு சுவையாக எடுத்துக்கொள்ளும்.
வாழைக்காய், 
மாதுளை, 
மாவடு, 
மஞ்சள், 
அவரை, 
அத்திக்காய் 
                             போன்ற காய் வகைகளில் துவர்ப்புச் சுவை மிகுதியாய் உள்ளது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...