இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது
[17/04 23:10] Fzbk Sathyamurthy: சிறுநீரகக் கல் வந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்?
உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், வாழைத்தண்டு சாறு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக அளவில் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் உள்ளன. இவை சிறுநீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்ளப்படும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் ஜூஸ் குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமிலத் தன்மையைக் குறைத்து கல் உருவாவதைத் தடுக்கும்...
[17/04 23:14] Fzbk Sathyamurthy: உடல் உஷ்ணம் ஓடிப்போகும்!
குளிர்காலம் என்றால் ஜலதோஷம், வெயில் காலம் என்றால் வெப்பம் இப்படி பருவகாலங்கள் மாறி, மாறி உடல் ஒரு நிலைக்கு வருவதற்குள் அப்பப்பா... கஷ்டம் தான்.
பருவ காலங்கள் மாறுவது ஒரு புறம் இருக்க... சிலருக்கு உடல் சூடு மட்டும் மாறாமல் இருக்கும். இதற்கு இவர்களது உடல் இயற்கையாகவே சூடாக இருப்பது தான் காரணம். இவர்களுக்காகவே இந்த சூப்பர் ஆலோசனைகள். தலைக்குளியல் போடுவதற்கு, 4 மணி நேரத்திற்கு முன் கீழ்வரும் செயல்களை செய்ய வேண்டும்:
* முதலில், ஒரு பாத்திரத்தில், நல்லெண்ணெய் வேண்டியளவு ஊற்றி, நன்கு காய வைக்க வேண்டும்.
* காய வைத்த நல்லெண்ணெயில், ஏழு அல்லது எட்டு மிளகை சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்ததும், டப்டப் ஒலி கேட்டவுடன் இறக்கி வைக்க வேண்டும்.
* காய வைத்த எண்ணெயை, காட்டன் துணியால் தொட்டு, முடியின் வேர்களில் படும்படி, நன்கு ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், எண்ணெயின் பயன் வேர்கள் வழியே உள்ளே சென்று சூட்டை தணிக்கும்.
* முக்கிய பிரச்னையாக பெண்களால் கருதப்பட்டு வரும், முடி கொட்டும் தொல்லையும் தீர்ந்துவிடும்.
* இரண்டு மணி நேரம் கழித்து, மிதமாக வெப்பப்படுத்திய தண்ணீரால், மீண்டும் காட்டன் துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
* அடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து, தலைக்கு குளித்தால், உடம்புக்கே ஒரு ரிலீப் கிடைத்தது போல் தோன்றும்.
இப்படி, வாரம் இரண்டு முறை செய்து வந்தால், உடல் சூடு குறைந்து, நலமும் வளமும் பெறும். அனைவரும் பின்பற்றுங்கள்... ஆரோக்கியம் மிளிரட்டும்.