Tuesday, August 21, 2018

கர்ப்பிணிகளுக்கு ஆயுர்வேதம் சொல்லும் அறிவுரைகள்

கர்ப்பிணிகளுக்கு ஆயுர்வேதம் சொல்லும் அறிவுரைகள்

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.M.Sc.,MBA
டாக்டர் .ஜீவா .,BAMS
டாக்டர்.கீர்த்திகா .,BAMS

இயற்கை முறையில் கர்ப்பத்தை காப்போம்

      பெண்களின் அடுத்த பிறவியாக கருதப்படும் பிரசவமானது இன்றைய காலத்தில் பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

     பெண்கள் நாட்டின் கண்களாக கருதப்படுபவர்கள். ஆனால், இக்காலக்கட்டத்தில் பெண்களே, கண்மூடித்தனமாக தேவையற்ற மருந்து, மாத்திரைகளை கர்ப்பகாலத்தில் பயன்படுத்துகிறார்கள்.

     நம் முன்னோர்களின் காலத்தில் எவ்வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் இயற்கை உணவு முறைகள் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலமாக நான்கு ஐந்து குழந்த்தைகலானாலும் சுகப்ரசவமாகவே அமைந்தது.பிரசவத்திற்கு பிறகும் தாயும் சேயும் எவ்வித குறைபாடும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

      நவீன காலக்கட்டத்தில் உதாரணமாக கர்பிணி பெண்களில் multivitamins மாத்திரைகள் உட்கொள்ளாதவர்களை காண்பது மிக அரிது. ஆனால்  தேவியற்ற பல இம்மாத்திரைகளால் தாய்க்கோ அல்லது சேய்க்கோ எவ்வித ஆரோக்யமும் பலனும் கிடைப்பதில்லை.

      இவ்வாறு தேவையின்றி பணத்தையும் காலத்தையும் வீணாக செலவிட்டாலும் இக்காலத்தில் pre eclampsia,வரம்பு மீறிய கருவளர்ச்சி(Restricted Fetal Growth),நரம்பு குழாயில் குறைபாடு(Nural Tube Defect ),எலும்புகளில் குறைபாடு (Skeletal Deformity ),குறைந்த எடைகொண்ட குழந்தை (Low Birth Weight) ஆகிய பாதிப்புகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேதான் வருகிறது.

அம்மாவாக போகிற தாய்மார்களின் கனவு எல்லாம் –நல்ல அறிவான ,அழகான ,ஆரோக்யமான குழந்தை –அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளார்கள் ..வெறும் மதர் ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் போதும் என்கிற மன நிலைக்கு இன்றைய விளம்பரங்கள் நம்மை புத்தி மழுங்க செய்து விட்டது.

ஆயுர்வேதம் என்கிற வாழ்கை அறிவியல் –கரு தரித்த நாள் முதல் சுக பிரசவம் வரை செய்ய வேண்டிய வழிமுறைகளை தொகுத்து வழங்கியுள்ளது..ஆங்கில மருத்துவ பரிசோதனைகள் நாம் ஒட்டு மொத்தமாக தவிர்க்க முடியாது என்றாலும் –தேவை இல்லாமல் பல பரிசோதனைகள் –தேவை இல்லாத மருந்துகள் எடுப்பதற்கு வழி வகுக்கும் என்பதை மறந்து விட கூடாது ..

அம்மாவாக போகிறவர்களுக்கு ஆயுர்வேதம் சொல்கிற வாழ்வியல் –உணவியல் ஆலோசனைகள்

ஆரோக்ய குழந்தை பெற மாதா மாதம் கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள் -ஆயுர்வேதம் சொல்வது என்ன ?

  ஆயுர்வேத ஆச்சர்யாக்களின் கூற்றுப்படி மாசானுமாசிக பத்தியம்

ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய ஆயுர்வேத உணவு முறைகள் :-

முதல் மாதம் :-

       பால்,இனிப்பான குளிர்ச்சியான திரவ உணவுகள்,அதிமதுரம் + வெண்ணெய் சேர்த்து உண்ணவேண்டும், குறுந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும் .கருப்பு உலர் திராட்சை பருகலாம்.ஆச்சார்யர் சரகர் எதையும் கலக்காத தூய்மையான பாலை காய்ச்சி குளிர செய்து தக்க அளவில் அடிக்கடி பருக சொல்கிறார்

இரண்டாவது மாதம் :-

      இனிப்பு சுவைக்கொண்ட மூலிகைப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட பாலினை உட்கொள்ள வேண்டும்,இனிப்பான பாலில் காகோலி சேர்த்து பருக வேண்டும்,லக்ஷண மூலிகையின் பால் கஷாயம் பருக வேண்டும்.காகோலி மூலிகை கிடைக்காதவர்கள் சதாவரியை பயன்படுத்தலாம்

மூன்றாவது மாதம் :-

       பாலில் தேன் மற்றும் நெய் சேர்த்து பருக வேண்டும்.
சிறு நாகபூ நாட்டு சர்க்கரையுடன்  பால் கஷாயம் செய்து பருக வேண்டும்.

நான்காவது மாதம் :-
       பால்,வெண்ணெய்,குறுவை அரிசி,தயிர்,மாமிச ரசம்,ஓரிலை பால் கஷாயம் ஆகியவற்றை பருக வேண்டும் .

ஐந்தாவது மாதம்:-

      வெண்ணையை உருக்கி எடுத்த நெய்,குறுவை அரிசி,மாம்சரசம்,பால்,நெய்,சீந்தில் பால் கஷாயம் ஆகியவற்றை பருக வேண்டும் .பாலில் இருந்து எடுத்த வெண்ணெயை ஒரு கவள அளவு அருந்த வேண்டும் .

ஆறாவது மாதம் :-

      நெய்யில் செய்த இனிப்பு பண்டங்கள்,நெருஞ்சில் மூலிகையை நெய்யுடன் சேர்த்து எடுக்க வேண்டும், ஓரிலை  பால் கஷாயம் செய்து பருக வேண்டும்.
பாலில் இருந்து எடுத்த வெண்ணையில் தயாரான நெய்யை இனிப்பு மருந்துகளுடன் கலந்து பக்குவம் செய்து அந்த நெய்யை பருக வேண்டும்

ஏழாவது மாதம்:-

      விதாரிகந்த முதலிய மூலிகைகளை நெய்யுடன் சேர்த்து உண்ண வேண்டும்,பார்லி அரிசி, கோதுமை பால் கஷாயம் ஆகியவற்றை உண்ண வேண்டும் .
ஏழாவது மாதத்தில் ஆறாவது மாதத்தில் சொன்ன அதே நெய்யை பருக வேண்டும்

எட்டாவது மாதம் :-

     கஞ்சியுடன் பால் சேர்த்து உண்ண வேண்டும்.
     குறுந்தொட்டி முதலிய மூலிகைகளைக் கொண்டு கஷாயவஸ்தியும், மதுர கன திரவியங்களில் ஸ்நேகங்களைக் கொண்டு அனுவாசன வஸ்தியும் மேற்கொள்ள வேண்டும்.
     மூர்வா அல்லது குருந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும்.

ஒன்பதாவது மாதம்:-

     நெய் சேர்த்த அரிசி கஞ்சி,மாம்ச ரசம் ஆகியவற்றை பருக வேண்டும்.
     குருந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும்.
     அனுவாசன வஸ்தி,யோனி பிச்சு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம்
வலியற்ற சுகப்ரசவம் நடைபெறும்.

கர்பகாலத்தில் தவிர்க்க வேண்டியவை :-

  காரமான குளிர்ச்சியான உணவு வகைகள்.
  கடினமான உடற்பயிற்சி.
  உடலுறவு கொள்ளுதல்.
  தொலைதூர பயணம்.
  பகலில் உறங்குவது.
  இரவில் கண்விழித்தல்.
  இயற்கை உபாதைகளை அடக்கி வைத்தல்.
  அதிக எடையினை சுமத்தல்.
  சிவப்பு நிற ஆடைகளை அணிவது.
  அதிக நேரம் நிமிர்த்து படுத்திருப்பது .
  இறுக்கமான ஆடைகளை அணிவது.
  விரதம் இருப்பது.
  கோபம்,துக்கம்,பயம்.

இனிவரும் கர்ப்பங்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இவ்வுலகில் கால்பதிக்க ஆயுர்வேத மருத்துவத்தை பின்பற்றுவீர்.
தரமான ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை –ஆங்கில மருந்துகளோடும் தொடரலாம். தேவையான மருந்து எது ,தேவையற்ற மருந்து எது என்றும் ஆலோசனை பெற்று ,ஆயுர்வேத முறைப்படி அழகான ஆரோக்ய குழந்தை பெற ஆலோசனைக்கு –அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை     90 4333 6000

Special Thanks To Dr.Jeeva.,BAMS.,

http://ayurvedamaruthuvam.blogspot.in/2017/04/blog-post_20.html

Saturday, August 18, 2018

ice cold water - ஐஸ் வாட்டர் - சில் தண்ணீர்* குடிப்பதினால் நம் உடலில் உண்டாகும் பாதிப்புகள்!!!

*ice cold water - ஐஸ் வாட்டர் - சில் தண்ணீர்* குடிப்பதினால் நம் உடலில் உண்டாகும் பாதிப்புகள்!!!
👉 ஐஸ் வாட்டர் குடிப்பதினால் உங்கள் வயிற்றின் சீரண திறன் குறையும் (disturbs digestion)
👉 உங்கள் உடம்பின் சக்தி (body energy drops) குறையும்
👉சளி உருவாகும் (mucus), தொண்டை எரிச்சல் உண்டாகும்
👉இதய துடிப்பு குறையும்(slows heart rate)
👉உங்கள் உடம்பின் தண்ணீர் அளவு  குறைய தொடங்கும்
(hinders hydration)
👉மலச்சிக்கல் (constipation) உண்டாகும்
👉தலைவலி (head ache) உருவாகும்
👉கொழுப்பு அதிகரிக்கும் (increases fat)
கோடை காலத்தில்..
இந்த முக்கிய பதிவை பகிருங்கள் !!!

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*

*உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*

இந்த செய்தியை நீங்கள் படிப்பது மட்டுமின்றி உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும் பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது.
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்ப்படுகிறது.  இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

*தேவையான பொருள்கள் :*

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

*செய்முறை:*

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். *சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.*
இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

_*2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது*_ சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
இதனை I.T துறையில்  வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

முதுகு வலிக்கு சிறந்த வழிமுறைகள்

*மருத்துவ குறிப்பு:*
*முதுகு வலிக்கு சிறந்த வழிமுறைகள் / இதோ உங்களுக்காக ஒரு சில TIPS*
https://goo.gl/xQrRDz

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*

*உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*

இந்த செய்தியை நீங்கள் படிப்பது மட்டுமின்றி உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும் பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது.
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்ப்படுகிறது.  இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

*தேவையான பொருள்கள் :*

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

*செய்முறை:*

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். *சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.*
இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

_*2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது*_ சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
இதனை I.T துறையில்  வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம்

*உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?*

"The World's only living civilization"
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும்
ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.

ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் "மதுரை "தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.
நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை
*"The World's only living civilization"*
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின்
"The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.

இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.
அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.

ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு *"தூங்கா நகரம்"* என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.

*ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும் மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான்* என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!

இதில் 1 டீஸ்பூன் சாப்பிடுங்கள்: 20 நாட்கள்.. 15 கிலோ எடை குறையுமாம்

இதில் 1 டீஸ்பூன் சாப்பிடுங்கள்: 20 நாட்கள்.. 15 கிலோ எடை குறையுமாம்

வாசனை மிகுந்த மசாலா பொருட்களில் ஒன்றான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிலும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆய்வு

தினமும் சீரகத்தை சாப்பிட்டு வருவதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் சீரகமானது மாரடைப்பைத் தடுத்து, ஞாபக சக்தி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து, ரத்த சோகை, செரிமானம் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்க சீரகத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, அதை காலையில் தினமும் குடிக்க வேண்டும்.சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பல்வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்து, அதில் துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் சாப்பிட

கருப்பட்டி - ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து! ..

கருப்பட்டி - ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து! ..

இந்த பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.அதனை தற்போது பார்ப்போம்.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.

கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.

சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்…

கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.

கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்

மேனிபளபளப்பை பெறும்.

கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்

சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்

ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.

கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்

நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.

குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது

சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது.

சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்

அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கும் நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.

மருந்துக் கம்பெனிகளின் கொள்ளையைத் தடுக்க 700 மருந்துகளின் விலை உச்சவரம்பு அரசால் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது !


[18/04/2017, 14:45] ‪+91 94873 55097‬: மருந்துக் கம்பெனிகளின் கொள்ளையைத் தடுக்க 700 மருந்துகளின் விலை உச்சவரம்பு அரசால் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது !

இதில் இதய நோய் , டயபெடீஸ் உட்பட நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகள் அடங்கும் !

நல்ல விஷயங்களைப் பாராட்டலாமே !

http://m.ndtv.com/india-news/prices-for-700-medicines-fixed-to-ensure-people-not-fleeced-pm-modi-1682591?pfrom=home-health

தொப்புளில் எண்ணை போடுங்கள்

[18/04/2017, 14:02] ‪+91 99652 67805‬: *தொப்புளில் எண்ணை போடுங்கள்*

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்  3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா?  நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
 
*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

*முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை!*

*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...