Monday, August 13, 2018

*உடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை*

*உடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை*

சமையலில் சுவை மற்றும் மணம் கூட்டுவதற்கு உலர் திராட்சை பயன்படுத்தப்படு கிறது என்றே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், இந்த உணவுப்பண்டத்திற்கென மருத்துவ குணங்கள் நிறைய உள்ளன.

* பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வயதினருக்கும் ஏற்ற உலர் திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்; உணவு வேளைக்குப் பின்னரும் சாப்பிடலாம்.

* உலர் திராட்சை எளிதாகக் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த ஓர் உணவுப்பொருள். கறுப்பு மற்றும் வெளிர் நிறம் என இரண்டு வகைகள் இதில் உண்டு.

* நேரடியாக சூரிய ஒளியில் உலர வைத்தல், சல்ஃபர் டை ஆக்சைடு என்ற வேதிப்பொருள் சேர்த்து பதப்படுத்துதல், தண்ணீரில் ஊற வைத்து பதப்படுத்துதல் என மூன்றுவிதமாக திராட்சையைப் பதப்படுத்தி உலர் திராட்சையாக மாற்றுகிறார்கள்.

* புளிப்புத்தன்மை, இனிப்பு சுவை இரண்டும் கலந்த உலர் திராட்சையில் தேனின் மருத்துவ குணம் நிறைய உள்ளது.

* விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஏற்ற சத்துணவாக இது திகழ்கிறது. இவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் கலோரி தேவைப்படும்.

* ஒரு கப் உலர் திராட்சை சாப்பிட்டால் 130 கலோரி கிடைக்கும். பயிற்சியின் இடையேயும் பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்றவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

* பெண்கள் மெனோபாஸ் காலக்கட்டத்தில், தினமும் 5 உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் எலும்பு பலவீனம் அடைவது தடுக்கப்படும். ரத்தசோகை குறைபாட்டை சரி செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.

* உலர் திராட்சையை உண்பதால் செரிமான குறைபாடு வராது. மலச்சிக்கல் பிரச்சினை தீரும். நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும்.

* உலர் திராட்சையில் புரதம் 3 சதவீதமும், நார்ச்சத்து 3.7%-லிருந்து 6.8 சதவிகிதமும் உள்ளன. இவற்றைத் தவிர, வைட்டமின்-சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, மினரல்கள் மற்றும் தாதுக்களும் அதிகம் உள்ளன.

* கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு உடல் நலனுக்குத் தீங்கும் உண்டாக்கும் கெட்ட கொழுப்பு சேர்வதையும் உலர்திராட்சை குறைக்கிறது. புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உலர்திராட்சைக்கு உண்டு.

* பல் சொத்தை, ஈறு தொடர்பான பிரச்சினைகளையும் சரி செய்யும். வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வளர விடாமல் தடுக்கும்.

* ரசாயனம் சேர்க்கப்பட்டு உலர் திராட்சை பதப்படுத்தப்படும் வாய்ப்பு உண்டு என்பதால் தண்ணீரில் நீண்ட நேரம் ஊற வைத்து நன்றாக கழுவிய பின்னர் சாப்பிடுவதே பாதுகாப்பானது.

எப்படி வரும் ஆரோக்கியம்?

உடலுக்கு வடிவம் கொடுப்பதில் தொடங்கி, உடலின் சமநிலையைத் தக்க வைத்துக்கொள்வது வரை அனைத்து செயல்களுக்கும் எலும்புகள் அவசியம் என்பது நமக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்காக எலும்புகளின் ஆரோக்கி யத்தைக் குலைக்கும் விஷயங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்துகொள்வோம்.

உடலியக்கம்

தினமும் உடற்பயிற்சிகள் செய்வோருக்கும், உடலள வில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்போருக்கும் எலும்புகள் ஆரோக்கியமாகவே இருக்கும். உடலுழைப்பே இல்லாதவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் இள வயதிலேயே பாதிக்கப்படும்.

கால்சியம்

எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து அடிப்படை. சிறு வயது முதல் பால் பிடிக்காது, தயிர் பிடிக்காது என்று வளர்பவர்களுக்கும், காய்கறி, பழங்கள், தானியங்கள் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் உடலில் போதுமான அளவு கால்சியம் இருக்காது. அவர்களுக்கு எலும்புகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். தவிர சிறிய அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு எலும்புகள் உறுதியின்றி இருக்கும்.

புகை மற்றும் குடிப்பழக்கம்

இந்த இரண்டும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. புகைப்பழக்கத்தால் எலும்புகளின் அடர்த்தி குறையும். அதே போல தினமும் குடிப்பவர்களுக்கு உடலில் கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை பாதிக்கப்படுவதால் எலும்புகள் உறுதியிழக்கும்.

பாலினம்

ஆண்களைவிட பெண்களுக்கே எலும்பு தொடர்பான பாதிப்புகள் அதிகம். காரணம் அவர்களுக்கு இயல்பி லேயே ஆண்களைவிட எலும்புத் திசுக்களின் அளவு குறைவு. தவிர மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது மிகவும் சகஜமான ஒன்று. அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாதல் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புகள் மிக அதிகம்.

உடல் எடை

அதிக உடல் பருமன் இதயம் முதல் எலும்புகள் வரை ஆரோக்கியத்தை பாதிக்கிற விஷயம். அதே போல சராசரிக்கும் குறைவான உடல் எடை கொண்டவர்களுக்கும் எலும்புகளின் ஆரோக்கியம் சீராக இருக்காது. ஒல்லியாக இருப்பவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு எலும் புகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

ஹார்மோன் சமநிலையின்மை

தைராய்டு ஹார்மோன்களின் சீரற்ற தன்மையும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு வெகுவாகக் குறைவதும் ஒரு காரணம். மெனோபாஸ்க்கு முன் நீண்ட நாட்களாக மாதவிடாய் வராமலிருப்பதும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும். ஆண்களைப் பொறுத்தவரை டெஸ்ட் டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அளவு குறைவது அவர்களுக்கு எலும்புகளின் உறுதியை பாதிக்கும்.

முறையற்ற உணவுப்பழக்கம்

சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு உண்ணத் தவறுகிறவர்களுக்கு எலும்புகள் ஆரோக்கியம் இழக்கும். உதாரணத்துக்கு உடல் எடை அதிகரிக்குமோ என்கிற பயத்தில் உணவைத் தவிர்ப்பவர்கள், சாப்பிட்டதை உடனே வாந்தி அல்லது பேதி மூலம் வெளியேற்றுகிறவர்கள் போன்றவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக் கப்படும்.

மருத்துவ சிகிச்சைகள்

சில வகை பிரச்சினைகளுக்காக ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கும் அதன் விளைவு எலும்புகளின் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். புற்றுநோய்க்காக எடுத்துக் கொள்கிற சில மருந்துகளும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம்

மேம்பட என்ன செய்யலாம்?

* கால்சியம் : 19 வயது முதல் 50 வயது வரையிலான ஆண்களுக்கு தினசரி 1000 மி.கி கால்சியமும், 50 வயது முதல் 70 வயது வரையுள்ள பெண்களுக்கும், ஆண் களுக்கும் இந்த அளவு 1200 மி.கி அளவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பாதாம், ப்ரோக்கோலி, சோயா, சாலமன் மற்றும் சார்டைன் வகை மீன்கள் போன்றவற்றில் கால்சியம் அதிகமுள்ளதால் அவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். இவற்றை எடுத்துக்கொள்வதில் நடைமுறை சிரமங்கள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.

* வைட்டமின் டி : கால்சியம் சத்தை உட்கிரகிக்க வைட்டமின் டி சத்தும் அவசியம். அதை சூரிய வெளிச்சத்திலிருந்து இயற்கையாகப் பெறலாம். இளம் வெயிலில் உடற்பயிற்சி செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவை பலனளிக்கும். அளவைப் பரிசோதித்துத் தெரிந்துகொண்டு, அதற்கும் மருத்துவரிடம் கேட்டு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம்.

* உடற்பயிற்சியும் உடலியக்கமும் : எடை தூக்கும் பயிற்சிகள் மிக முக்கியம். நடைப்பயிற்சி நல்லது. ஜாகிங், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவை சிறந்த பயிற்சிகள். புகையும் குடியும் தவிர்க்கப்பட வேண்டும்.

இன்னும் சில சத்துக்கள்

கால்சியம் மற்றும் வைட்டமின் டி மட்டுமே எலும்பு களின் நலன்காக்க போதுமானவை அல்ல. இவை தவிர வேறு சில சத்துகளும் அவசியம். அதன்படி மக்னீசியம் எலும்புகளின் அடர்த்தி குறைவதை இது தடுக்கும். கீரைகள், பீன்ஸ், நட்ஸ் மற்றும் சீட்ஸ் போன்றவற்றில் மக்னீசியம் இருக்கிறது. வைட்டமின் பி எலும்பு முறிவுக் கும், வீக்கத்துக்கும் காரணமான ஹோமோசிஸ்டைனை கட்டுக்குள் வைத் திருக்க வைட்டமின் பி அவசியம். முழுதானியங்கள், பால், முட்டை, கீரை, பழங்களில் இது அதிகமுள்ளது. வைட்டமின் ஏ அளவு குறைந்தாலும், கூடினாலும் எலும்புகளுக்கு நல்லதல்ல. கேரட், ஈரல், வெண்ணெய், முட்டை போன்றவை வைட்டமின் ஏ நிறைந்தவை.புரதம் எலும்புகளின் அடர்த்திக்கு 20 சதவிகிதம் புரதச்சத்து அவசியம். புரதத்தின் அளவும் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

தெரியுமா?!

கிரீன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்கும், சர்க் கரை நோய் வராமல் தடுக்கும் என்பதை நாம் கேள்விப் பட்டிருப்போம். இதுபோன்ற நன்மைகளால் கிரீன் டீ பருகு பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு கிரீன் டீயில் காணப்படும் பாலிபெனால்ஸ் மூலக்கூறுகள் உடலுக்கு பலவிதங்களில் நன்மை புரிவதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மூலக் கூறுகள் கல்லீரலால் கிரகிக்கப்பட்டு பல்வேறு வளர்சிதை மாற்றப் பணிகளில் பங்கெடுக்கிறது. ரத்தம் மற்றும் தோல் செல்களாலும் இந்த மூலக்கூறுகள் உறிஞ்சப்படுகின்றன.  குடல் பகுதியும் கிரீன் டீயிலுள்ள இந்த மூலக்கூறுகளை கிரகிப்பதாக இந்த புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிரீன் டீயிலுள்ள இந்த மூலக்கூறு உடல் எடை  குறைப்பிற்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Sunday, August 12, 2018

ஆங்கில #வைத்தியத்தால் 51 #வகை #வியாதிகளை #குணப்படுத்த #முடியாது #என்பது #உண்மையா?

#ஆங்கில #வைத்தியத்தால் 51 #வகை
#வியாதிகளை #குணப்படுத்த #முடியாது #என்பது
#உண்மையா?

"கழிவின் தேக்கம் வியாதி..." "கழிவின்
வெளியேற்றம் குணம்..."

இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய
மருத்துவமும் இல்லை...

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த
மருத்தவமும் இல்லை...

மக்களே சிந்தியுங்கள்!... நம் வரிப்பணத்தில்
அந்நிய நாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு
தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை
அங்கீகரிக்கும் அரசையும் புரிந்து
கொள்ளுங்கள்...

கீழே விரிவான விளக்கம் இருக்கிறது

BRAIN DEATH
"மூளை இறக்குமா?..."

- டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M(CHINA)
Zhejiang University, Hangzhou,(China)
(Chinese Traditional Medicine).

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா
என்பதை அறிய முதலில் மூச்சு
இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்...

பாமரர் முதல் படித்தவர் வரை உயிர்
இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும்
உள்ள நடைமுறை இதுதான்...
ஆனால்?...........இன்றோ!!!?

மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!
இரத்த ஓட்டம் இருக்கின்றது!
நாடி துடிப்பு இருக்கின்றது!
இதயத்துடிப்பும் இருக்கின்றது!

இருந்தும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி
உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று
அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற
பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம்
டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக்
கொண்டு வருகின்றது...

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும்
டாக்டர்கள் இவர்கள்...

மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது
மிகவும் வேதனைப் படக்கூடிய,
வெட்கப்படக்கூடிய விசயமாகும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி
தமக்கு தேவையான அனைத்து
உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த
கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை
மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்...

மூளை இறக்குமா?

அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை
இருக்குமா?

மூளை இறந்துவிட்டது என்று
சொல்லுபவர்களே...

நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை
இருக்குமானால், மனச்சாட்சி உள்ள
டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...
பதில் சொல்லுங்கள்...

இறந்துவிட்டது என்று சொன்ன மூளை,
உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு,
இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு
இவையெல்லாம் இறந்த அந்த மூளையை
உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த
ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு
இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே!
ஏன்? ஏன்? ஏன்?...

காரணம் மூளை இறக்கவில்லை, மூளை
இயங்கி கொண்டுதானிருக்கின்றது...

மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை
மூளையானது இயங்கி கொண்டுதானிருக்கும்...
சிந்தியுங்கள்...
மக்களே!...

இது ஒரு மாபெரும் கொலை!...
பெரிய மோசடி!!!

இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும்
துணை போவதுதான் மிகக்கொடுமை...

நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய
உறுப்புகள் எல்லாம் இயங்கி
கொண்டிருக்கும்போது, மூளை
இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய
மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல்
உறுப்புகளை தானம் என்ற பெயரில்
கொள்ளையடிப்பதைத்தான்...

இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல
குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும்
இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி
அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை
வெளியில் சொல்லுவதில்லை!
பல குழந்தைகள் பெற்றோரை இழந்து
அனாதைகள் ஆவதை வெளியில்
சொல்லுவதில்லை!!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து
தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை!!!

இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60
வயதானவர்கள் வரை இவர்களின்
கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன...
இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே
விழுந்துவிட கூடாது...

அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம்
போகக் கூடாது...

காரணம் மூளை இறந்துவிட்டது என்று
சொல்லி கொலை செய்து உறுப்புகளுக்கு
விலைபேசி விற்று விடுவார்கள்...

இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும்
அதை மற்றவர்களுக்கு பொருத்தும்
ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக
(இலவசமாக) செய்வார்களா?...
செய்ய மாட்டார்கள்...

மக்களே! எச்சரிக்கையாக இருங்கள்!!
இவர்களின் நோக்கம் பணம் தான்... மக்கள்
நலமல்ல!!! என்பதை நினைவில்
கொள்ளுங்கள்...

நம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள்
மற்றும் டி.வி விளம்பரங்களுக்க
ு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான்
ஒரு மாபெரும் வேதனை...

கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள்
"Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று
சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.
கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல
மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர்
பிழைத்து நலமாக வாழும் பலரை நாம்
பார்த்திருக்கிறோம்.

அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா
நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள்
அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக
கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன
என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்...

இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய
கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு
அதிகபட்ச தண்டனையை அரசாங்கம்
இவர்களுக்கு வழங்க வேண்டும்.
உலகில் எத்தனையோ விதமான மருத்துவங்கள்
இருக்க அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர
்களிடம் எல்லாம் எவ்வித யோசனையும்
கேட்காமல் ஆங்கில மருத்துவம் கூறுவதை
அப்படியே அரசும் மக்களும் நம்பியதால்
இவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்து
விட்டார்கள்.

1947-ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம்
விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த
ஆங்கில மருத்துவத்தையும் விரட்டியிருக்க
வேண்டும்...

அப்படி விரட்டாமல் அரசியலில் மட்டும்
சுதந்திரம் அடைந்து ஆங்கில மருத்துவத்திற்க
ு அடிமையானதின் விளைவுதான் இன்று
நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்...

இந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி,
ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே
நோயை குணப்படுத்தும் சீன மருத்துவமான
அக்குபஞ்சர், ஆகியவை இருக்க, மற்றும்
ஆங்கில மருத்துவத்தின்
கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன்
உலகுக்கு வழங்கிய ஹோமியோ
மருத்துவம்"இது போன்ற நல்ல மருத்துவங்கள்
எல்லாம் இருக்க
அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக
இவர்களை பின் பற்றியதின் விளைவுதான்
இன்று உயிரோடு இருக்கும்போதே கண்களை
எடுக்கிறார்கள்...

இந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு
மெடிக்கல் கவுன்சில் என்று பெயரை மாத்திரம்
வைத்துக்கொண்டு அதில் ஆங்கில
மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு
அதற்கு அரசாங்கம் சேவகம் செய்வதால் தான்
இந்த அவலங்களை, கொடுமைகளை நாம்
அனுபவிக்கின்றோம்.

இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய
மருத்துவமும் இல்லை...

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த
மருத்தவமும் இல்லை...

மக்களே சிந்தியுங்கள்!...
நம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு
மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்
அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும்
அரசையும் புரிந்து கொள்ளுங்கள்..

திறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு
மருத்துவங்களை படித்த பல
இலட்சக்கணக்கான டாக்டர்கள் வெளியில்
தெரியமல் போனதற்கும் அவர்கள் திறமை
பயன்படாமல் அமுங்கி போனதற்கும்
மக்களாகிய நாமும், அரசும் தான் காரணம்.

இந்த மருத்துவங்களுக்காக தேவையான
உதவிகளை அரசு செய்திருக்குமானால்
விண்ணை முட்டும் வளர்ச்சியை நம் மருத்தும்
பெற்றிருக்கும்.

சமீபத்தில் 198 ஆம்புலன்சுகளை வழங்கிய
நம் தமிழக அரசு ஒரே ஒரு ஆம்புலன்சை கூட
இந்திய மருத்துவங்களுக்காக வழங்கவில்லை
என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்!...

அரசும் இதனை உணர்ந்து செயல்பட
வேண்டும்!...

மேலும் உறுப்புகள் தானம் என்ற பெயரில்
கொலைகள் நடக்காமல் சட்டம் இயற்றி
அரசாங்கம் இதை உடனடியாக தடுக்க
வேண்டும்.

ஆங்கில மருத்துவ கொடுமைகளிலிருந்து
விடுதலை பெற நாம் தெளிவு பெற
வேண்டும். அதற்காக முழு முயற்சியுடன்
பாடுபட வேண்டும்.

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை
ஒழுங்குப்படுத்துவது, புரிந்து கொள்ளுவதன்
மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது
சாத்தியமாகும்...

அதாவது,
"கழிவின் தேக்கம் வியாதி..."
"கழிவின் வெளியேற்றம் குணம்..."
"Accumulation of waste / toxins in our body is
disease
Elimination of waste / toxins is cure"
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது
நோக்கம்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" -
திருக்குறள்.

அதாவது,
"எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச்
சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக்
கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து
தெளிவதுதான் அறிவுடைமையாகும்."

நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில
மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும்
குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச்
சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே
முடியும்...

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்
(Drugs and Cosmetic Act) 1995-ல்
திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற
பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை
வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று
இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.
அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள
நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம்
பார்க்க கூடாது.

ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள
51 நோய்களின் பட்டியல் பின்வருமாறு:-

1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in
Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக,
புற்றுநோய்
வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To
Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண்
அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று
கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து
கோளாறுகள்.
16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக
மாற்றுதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம்
(BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி
செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To
Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக்
குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய்
(Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த
தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை
(Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
(Impotance)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில்
ஏற்படும்
அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள்,
நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல்
(Varicose Vein).

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில
மருத்துவத்தில் மருந்தும் கிடையாது,
மருத்துவமும் பார்க்கக்கூடாது என
இந்தியச்சட்டம் சொல்கிறது.

மக்களே! இனிமேலாவது விழிப்படையுங்கள்!!!
உங்களையும் உங்கள் சந்ததிகளையும்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்!...

இந்த தகவல்கள் உண்மை என உணர்ந்தால்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள்... *Forwarded as received*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...