Sunday, July 9, 2017

8 Tips for Treating Thyroid Problems Naturally


8 Tips for Treating Thyroid Problems Naturally
1. Eat Sea Vegetables Twice a Week
Sea vegetables are a good natural source of iodine to support the thyroid. Incorporating some sea veggies into your diet can be as simple as:
•  Adding a piece of kombu to a pot of beans or soup during cooking
•  Sprinkle kelp granules over your salads or hot dishes just like you would use salt
•  Making a nori wrap (this is what’s used to wrap sushi)
For recipes, check out Andrea’s website here or the Integrative Nutrition recipes featuring sea veggies.
2. Don’t Be Afraid of Butter
“The endocrine system loves butter,” Andrea said.  Even if you’re cutting out other forms of dairy like milk and cheese, consider keeping grass-fed butter (like KerryGold butter) in your diet.
3. Cook Your Kale
If you have thyroid issues, then raw cruciferous vegetables may not be the best choice. You might want to skip the kale smoothies and salads, and eat your greens cooked instead. The reason is that the cruciferous vegetables contain goitrogens that may disrupt the thyroid if consumed in large quantities. Other cruciferous veggies include cabbage, Brussels sprouts, broccoli and cauliflower.
4. Slow Down Your Eating
The thyroid gland is located in your throat area, so it literally connects the mind and body. When you rush while eating, the food moves so quickly from mouth to stomach that the connection from mind to body is not strong. The mouth doesn’t know what the stomach is doing and vice versa. This is good health advice no matter what: sit down, slow down, savor, breathe and chew your food. Since the thyroid is the master of your metabolism, you want to eat slowly enough so it can record the message that food is entering the body.
5. Drop the cell phone
We already know about the connection between cell phones and brain tumors. But this little radiation machine that you hold up to your ear is awfully close to your thyroid gland as well. A good alternative is to get a headset to use while speaking on the phone.
6. Find Your Voice
Once again, if you look to the anatomy, you find the thyroid gland located in the throat, the center of our communication with the world. Andrea has found in her practice that people with hypothyroid tend to “swallow down” what they really want to say. It’s been very healing for them to learn to speak their truth. On the flip side, she has found that people with hyperthyroid are talking too much, and can benefit by listening more.
7. Do Yoga
During my experience at yoga teacher training, I was astonished and delighted to learn how much the yoga asanas can stimulate and support the entire endocrine system. The shoulderstand (sarvangasana) is especially beneficial for stimulating the thyroid gland.
8. Support Your Adrenals
The thyroid and adrenal glands work together, so if you are exhausted and depleted you may benefit from adrenal support. In the Be Well store we offer Adaptogens, which are herbs to support the adrenals as well as a comprehensive Fatigue Fighting program.

யோகா மற்றும் முழுமை ஆரோக்கியம் குழுவில் இணைய

https://t.me/joinchat/AAAAAED2xACL6GDwFgHCcA

https://chat.whatsapp.com/7Ow0h3qkqxp9d9iQ859fC0

தைராய்டை சரிசெய்யும் 13 ஆரோக்கிய உணவுகள்!!!


தைராய்டை சரிசெய்யும் 13 ஆரோக்கிய உணவுகள்!!!

தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம். இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ ஹார்மோன்களை சுரப்பதனால் ஏற்படுவது தான். இந்த தைராய்டு சுரப்பியானது தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இரண்டு இன்ச் நீளமுள்ள இந்த சுரப்பியானது, உடலில் உள்ள மெட்டபாலிசம், கால்சியம் போன்றவற்றை சீராக வைக்க உதவுகிறது. இத்தகைய தைராய்டு சுரப்பியில் ஏதேனும் கோளாறு இருந்தால், அவற்றை ஒருசில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம். நிறைய மக்கள் இத்தகைய அறிகுறிகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அவற்றை சாதாரணமாக நினைத்து விடுகின்றனர். அந்த அறிகுறிகளாவன: மன அழுத்தம், பசியின்மை, மலச்சிக்கல், மயக்கம், அதிகப்படியான சோர்வு, உடல் எடையை அடிக்கடி மாற்றம் போன்றவை. எனவே இத்தகைய அறிகுறிகள் அடிக்கடி உடலில் தென்பட்டால், சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது அவசியம்.

இந்த தைராய்டு குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் தான். ஆகவே சிகிக்கை மேற்கொண்டும் சரிசெய்யலாம். இதே சமயம் ஒரு சில உணவுகளை உட்கொண்டும், சரிசெய்துவிடலாம். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
ஸ்ட்ராபெர்ரி
உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.

காளான்
செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

பூண்டு
செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.

பசலைக் கீரை
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், நல்லது.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.

முட்டை
முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளல் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.

தானியங்கள்
தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.

ப்ராக்கோலி
இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

மாட்டின் கல்லீரல்
மாட்டிறைச்சி என்றாலே சிலர் அறவெறுப்பாக நினைப்பார்கள். ஆனால் அத்தகைய மாட்டின் ஈரலில் வைட்டமின் பி12 மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், செலினியம் குறைபாடு இருந்தால் குணமாக்கலாம்.

தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

கடல் சிப்பி
தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பர் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காப்பர் கடல் சிப்பியில் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படும் என்று பலர் தவிர்க்கின்றனர். ஆனால் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், இதிலுள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும்.

யோகா மற்றும் முழுமை ஆரோக்கியம் குழுவில் இணைய

https://t.me/joinchat/AAAAAED2xACL6GDwFgHCcA

https://chat.whatsapp.com/7Ow0h3qkqxp9d9iQ859fC0

தைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்!


தைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்!

என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும்.

உலகம் முழுதும் 200மில்லியன் பேர்களுக்கு தைராய்டு நோய் உள்ளது. கடந்த மே மாதம் 25ஆம் தேதி உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்பட்டது.

அறிகுறிகள்:

கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள்.

மேலும், நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.

உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையும் தைராய்டு அறிகுறிகளாகும்.

சிகிச்சை:

தைராய்டிற்கு சிகிச்சை என்பது தைராய்ட் கிளாண்டை முழுமையாகவோ அல்லது பாதியோ வெட்டி எடுத்தல் இதனுடன் கதிர்வீச்சு அயோடின் சிகிச்சையும் செய்யப்படுகிறது.

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். எனவே அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கடல் உணவுவகைகளும் நல்லது. பசலைக் கீரை, எள், பூண்டு ஆகியவை மிகச்சிறந்தது.

செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளில் இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம்.

மனக்கவலை, அழுத்தமும் தைராய்ட் சுரப்பி சரியாக வேலை செய்யாததின் ஒரு அறிகுறியே. எனவே மனதை இலகாக்குவது அவசியம்.

சிலருக்கு தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாக சுரக்கும். இது ஹைபோ தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

தைராய்டு சுரப்பி பழுதை உடனடியாக குணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

யோகா மற்றும் முழுமை ஆரோக்கியம் குழுவில் இணைய

https://t.me/joinchat/AAAAAED2xACL6GDwFgHCcA

https://chat.whatsapp.com/7Ow0h3qkqxp9d9iQ859fC0

பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்களும்


பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்களும்

S.SETHU RAMAN.B.Sc

பெண்களின் பிறப்புறுப்பின் வழியே 'சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம்.

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே 'சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.

இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும்.

கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும். இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்.

இந்த நோய் வருவதற்கான காரணங்கள் .......

* தவறான உணவுப் பழக்கங்கள்.

* கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்.

* சுகாதாரமற்ற உள்ளாடைகள்.

* சுய இன்பம் காணுதல்.

* மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்.

* ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள்.

* உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.

* கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள்.

* சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம்.

* ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

* தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.

* சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

* அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப்படுதல் உண்டாகிறது.

* மாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.

* எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

நோயைத் தவிர்க்க :

* உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

* உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

* சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவு முறைகள்:

* உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

* எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.

* மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.

* இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

* தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

* பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.

* சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

* வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.

* அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

* இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

* ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

* நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

* புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது!

* மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி

*♨பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்*

*♨பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்*

பிராய்லர் கோழி யாரும் சாப்பிடவேண்டாம். அதனை சாப்பிடுவதனால் அதிகமாக உடம்பு எடை அதிகமாகிறது. மிக குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர். மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை. அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது.

இதனால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. மிக குறைந்த வயதில் கர்ப்பப்பை பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. பெண்கள் சிறு வயதிலேயே பிராய்லர் கறி கோழி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் உடம்புக்கு நல்லது. உணவில் நல்ல அதிக அளவு காய்கறி எடுத்து கொள்ளுங்கள்.

கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளு க்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இரும்பு சத்துள்ள முருங்கை கீரை, உளுந்த கஞ்சி, மாதுளம் பழம், எல்லா சத்தும் நிறைந்த பழமான கொய்ய பழம் போன்றவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ளுங்கள். நவ்வாப்பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டை நன்றாக குறைக்கும்.

*♨உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்*

*♨உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்*

தற்போதைய அவசர உலகில் ஃபாஸ்ட் புட் மற்றும் ஜங்க் உணவுகளையே பெரும்பாலான மக்கள் தினந்தோறும் சாப்பிடுகின்றனர். இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை அன்றாடம் சாப்பிடுவதால், உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும், நம்மால் வாயைக் கட்டிப் போட முடியாமல் வாங்கி ஒரு நாளில் ஒன்றும் ஆகாது என்று சாப்பிட்டுவிடுகிறோம். ஆனால் எப்போது இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டாலும், அதனால் தீங்கை கட்டாயம் சந்திக்கக்கூடும். ஃபாஸ்ட் புட் மற்றும் ஜங்க் உணவுகளால் உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய சில ஆரோக்கிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது.

க்ரீன் டீ உணவுகளின் மீதான அதிகப்படியான நாட்டத்தைத் தடுக்கும் மற்றும் ஜங்க் உணவுகளால் உடல் செல்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்கும்.

முட்டை மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஆம்லெட்டை சாப்பிட்டால், அது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மதுவால் உடல் ஆரோக்கியம் பாழாவதைத் தடுக்கும்.

தயிரில் பெர்ரிப் பழங்களைத் துண்டுகளாக்கி, ஜங்க் உணவுகளை உட்கொண்ட பின் சாப்பிட்டால், அது குடலில் அழற்சி அல்லது காயங்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தி, செரிமான கோளாறுகள் வராமலும் தடுக்கும்.

ஜங்க் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை உட்கொண்ட பின், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் அந்த உணவுகளால் உடலில் சேர்ந்த டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதோடு, வயிற்று உப்புச பிரச்சனையும் தடுக்கப்பட்டு, செரிமானம் சுமூகமாக நடக்கும்.

புதினா அல்லது இஞ்சி கொண்டு தயாரிக்கப்பட்ட டீ குடித்தால், செரிமான பாதைகள் சுத்தமாகி, வயிற்று பிடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

இவற்றில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இதை ஒரு பௌல் உட்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த உடலும் சுத்தமாவதோடு, செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராக இருக்கும்.

நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை ஒரு பௌல் சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நீர்ச்சத்து டாக்ஸின்களை வெளியேற்றி, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை கிடைக்கச் செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

வாழைப்பழத்தில் உள்ள கனிமச்சத்துக்கள், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்கும்.

*வறண்ட சருமம்*

*வறண்ட சருமம்*

பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு இன்னும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படையும் என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்சு.

அதேப்போன்று அரை மூடி எலுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.

தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர வறண்ட சருமம் மின்னுவதை காணலாம்.

வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும். மேற்கூறியவற்றில் உங்களுக்கு எளிமையானதை உபயோகித்து வறண்ட சருமத்தை போக்கி பளபளக்கும் மேனியை பெறுங்கள்.

*♨அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?*

*♨அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?*

தோலின் நிறமானது மெலனின் வகை மற்றும் அளவு, தோல் நிறமியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. தோலின் நிறம் சுற்றுப்புற சூழலை விட மரபணு சார்ந்தே மாறுகின்றது. இந்த அழகு சம்பந்தப்பட்ட அனைத்து கிரீம்களும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி தோலை சேதப்படுத்துவதுடன் இயற்கையாக தோலின் நிறம் அதிகரிப்பதை தடுக்கும்.

"இந்த கிரீம்கள் நிஜத்தில் அழகையோ, நிறத்தையோ தருவதில்லை". இந்த கிரீம்கள் தோலை அதிக சூரிய ஒளியினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாத்து பராமரிக்கின்றது. தோலை வெளுப்பாக்கக் கூடிய ரசாயனம் ஹைட்ரொகுவினோன் கொண்டுள்ளது என்றும் இவை தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களை கொண்டுள்ளது என்றும் நிரூபித்துள்ளது.

பெரும்பாலும் பலர் இருக்கும் இடத்தை பொறுத்தே இந்த கிரீம்கள் அதிகம் விற்பனையாகிறது. சிலர் இந்த கிரீம்களை பற்றிய அறிவுடன் இருந்தாலும் அழகை அதிகப்படுத்த நினைக்கும் ஆசையில் காதுகளை மூடி கொண்டு உபயோகப்படுத்துகின்றனர். பெரும்பாலான விளம்பரங்கள் மக்களின் ஆசையை தூண்டும் விதமாகவே அமைந்துள்ளன. இந்த கிரீம்கள் அதிகம் விற்கப்படுகின்றன.

கிரீம்களில் கலந்துள்ள பொருட்கள்: ஹைட்ரொகுவினோன்-இது தோலை வெண்மையாக்க பயன்படுத்தப்படுகிறது. இது தோலிற்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தும். கோஜிக் அமிலம்-இது 1 சதவிகிதத்திற்கும் குறைவாக சேர்க்கப்படுகிறது. தோலில் மெலனின் உற்பத்தியை தடுக்கும் வைட்டமின் சி வகையை சார்ந்த குணம் கொண்டது.ரெட்டினோயிக் அமிலம்-வைட்டமின் ஏ வகையை சார்ந்த தோலின் மேற்பரப்பு படலங்களை அகற்ற உதவும். இதன்மூலம் தோலின் அடர் நிற செல்கள் நீக்கப்படும்.

இந்த செயல்பாட்டில் தோலின் கீழே உள்ள நிறமி செல்கள் மேலே வருகின்றன. ப்ளாக்பெர்ரி, மல்பெர்ரி, திராட்சை இவற்றின் சாறுகள் தோலை சற்றே கொஞ்சமாக வெண்மையாக்கும். ஸ்டீராய்டுகள், மெர்க்குரி உப்புகள், பிஸ்மத்(ஒரு வகை உலோகம்) ஹைட்ரஜன் பெராக்சைடு, மெக்னீசியம் பெராக்சைடு, வைட்டமின் பி3 அமெரிக்க FDA மற்றும் ஐரோப்பிய ஒன்றியும் அங்கீகரித்த புற ஊதா எ மற்றும் பி கலந்த கலவை.

இவை அனைத்தும் கிரீம்களில் இருக்கும். அனைத்து கிரீம்களில் 2 முதல் 4% ஹைட்ரொகுவினோன் இருக்கும் இதை தினமும் உபயோகித்தால் தோல் மிகவும் உணர்ச்சி மிக்கதாக மாறிவிடும். இந்த கிரீம்கள் மெலனின் உற்பத்தியைத் தடுக்கிறது. இந்த கிரீம்கள் உபயோகிக்காமல் நிறுத்தினால் தோல் பழைய நிறத்திற்கோ (அ) இன்னும் அடர்ந்த நிறத்திற்கோ மாறிவிடும்.

மேலும் இந்த கிரீம்கள் முகத்தில் சமமாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் சீரற்ற நிறத்துடனும் புள்ளிகளுடனும் காணப்படும். சில கிரீம்களில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் தீவிரமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மெர்க்குரி நச்சுத்தன்மை-அதிக தாகம்,வயிற்று வலி, ரத்தம் தோய்ந்த வயிற்றுப்போக்கு, பெருங்குடல் அலர்ஜி, மலச்சிக்கல், நடுக்கம், ரத்தசோகை, தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். 40% கிரீம் உபயோகித்தவர்கள் முகத்தில் முடி, வலி, முகப்பரு, தோல் சுருக்கம், வெடிப்பு, அலர்ஜி போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர். இவை பெரும்பாலும் தோல் புற்றுநோய், சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...