Friday, November 23, 2018

குண்டலினி சக்தி

#

குண்டலினி சக்தி

யைப் பற்றிய ஒரு விளக்கம்
#குண்டலினி சக்தி நம்
முதுகுதண்டின் அடிப்பகுதியில்
குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர்
வெண்பாஸ்பரஸ்.
இந்த வெண்பாஸ்பரஸ்
காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை
கொண்டது. அதேபோல் நம் உடலில்
உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு
கீழேயும் காற்று செல்வதில்லை.
இங்கே ஒரு
சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை
வழியாக காற்றை மூலாதாரத்திற்கு
கொண்டு
செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு
வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல்
மேலே எழுகின்றது.
இதுவே யோகமுறையில்
குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம்
உடலின் வெப்பத்தை உண்மையில்
மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த
வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே
எழுகின்றது.
அடுத்து அந்த அனல் மேலே எழும்பி
சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே
உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே
எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும்
வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்ப
டுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே
குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.
இதனால் அனல் மேலும் மேலே எழுந்து
மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது
வினைபுரியும் தனிமத்தின் பெயர்
ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை
குணமே வெடிப்பதாகும். எனவே
வெப்பநிலை
மேலும் அதிகரித்து அனாகதத்தை
அடைகின்றது.
அனாகதத்தில் உள்ள
தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம்
சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த
ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்
எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.
எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து
விசுத்தியை அடைகின்றது.
ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள
தனிமத்தின் பெயராகும். இங்கேயும்
வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும்
நிகழ்ந்து மேலேறுகின்றது.
அடுத்ததாக உள்ள
சக்கரத்தின் பெயர் ஆக்கினை. அங்கே சுத்த
நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே
எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும்,அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும்,
ஒரு குருவின்
பெருமைகளை வெறும் வார்த்தைகளால்
விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த
பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள்
அனுபவத்திற்கு வரும்போது நன்கு
விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
"சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்"
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்
திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய
பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக
சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்தி
நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு சகஸ்ராரம்
விழிப்படைதலும்,
யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,
ஞானத்தேடலுக்கு மூலாதாரம்
விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின்
மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு
விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது
குண்டலினியானது புருவமத்தி அல்லது
சகஸ்ராரத்திலும், தூங்கும் போது
விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்
விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது
விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).
குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்
விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக
அடையாளமாக காண்பது விந்தின்
வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள
மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து
வெம்மையானது நெருப்பாறாக மாறி
வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில்
நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக
புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ்
விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U"
நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்
உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்
தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்
தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக
நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.
சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்
வழியாக அமிர்தமானது பிறை வடிவ
நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்
வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று
பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி
சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்
பொன்னை உரசினாற் போல் மேனியுடைய
தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக
உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய
உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்
வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு
கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே
உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்
புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது
உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்
ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு
உருண்டையாக இருந்துகொண்டு எதையும்
நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு
உறுத்தல் ஏற்படும்.

குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள்
இருக்கும் ‘வெளிப்படாதசக்தி’. அதாவது அது
தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,
அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்
கூட நீங்கள் அறியமாட்டீர்கள்.
ஆம், ‘அசையாத
வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்
அது எழுச்சியுற்று, வெளிப்பட
ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்
உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்
மலைத்துப் போவீர்கள்.
இக்காரணத்தினால்தான்
இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’
குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு
நகர
ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.
அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும்
இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை
நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி
எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்
கூட நினைத்திடாதஅதிசயங்கள் உங்களுக்குள்
நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,
அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள்
நிகழ, அனைத்துமே வேறு வகையில்
இயங்கும்.
குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்
வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)
இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை
உருவாக்குவதில்லை.
எங்கோ ஓரிடத்தில் ஒரு
பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம்
இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை
உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு
நேரடியாக மின்சாரத்தை வழங்க
முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்
உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க
முடியும்.
பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை
நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா?
அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று
தெரியாமல் இருந்தாலும், ஒரு
மின்சாதனத்தை
இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,
அந்த சாதனம் வேலை செய்யும் என்பது
மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்
குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட்
போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம்
அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்
பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக்
பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்
இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார
சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக
இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக்
பாயிண்டைப்
போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5
பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்
இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்
(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்
பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப்
பற்றிய
அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது
உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க
முடியும். இப்படி உங்களுடைய பிளக்
அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக
சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள்
இருபத்தி நான்கு மணி நேரமும்
பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி
தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய
அவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்
சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிரு
க்கும்போது, நீங்கள் எல்லையில்லாத
சக்தியின் மூலத்தோடு தொடர்பு
கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.
யோகா செய்வதன் அடிப்படையே
அவர்களுக்குள் ஒரு சமநிலையை
ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை
வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக்
பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.
அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,
எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து
தொடர்பில் இருப்பீர்கள்.
சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்
‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.
யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின்
இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க
உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக
செயல்முறை என்றாலே உங்களின் உணரும்
திறனை அதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில்
உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை
எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே
இருக்கிறது.......... இறை அருளின் அற்புதத்தை உணர்ந்தால் மட்டுமே பேராணந்தத்தை அனுபவிக்க முடியும். இறை அருளை உண்மையாக உணர முற்படுவர்களுக்கு உறுதியாக அருள் புரிவான் இறைவன்🙏🌺

Thursday, November 22, 2018

மகிழ்வாக வாழ பல வழிகள்...

மகிழ்வாக வாழ பல வழிகள்...


1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,
14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.
38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
வாழ்க வலிமையுடன்!!!

வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன்!

🙌🌷💐🍁🙏

Wednesday, November 21, 2018

சுண்டைக்காய் மருத்துவம்*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍏🍏🍓🍓🍋🍋
*சுண்டைக்காய் மருத்துவம்*

கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு
நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம்
உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக
உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம்.
அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு
இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது
தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப்
பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில்
கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்
தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற
அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு
சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
☘☘☘
சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி,
சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான
சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம்
சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும்
சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை
சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன்
மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள்
கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம்
பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய்
மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது
பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.

எப்படி சுத்தப்படுத்துவது?
🌿🌿🌿
காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப்
பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி,
சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர்
உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு
கைகளால் லேசாக அவற்றை அலசினால்,
விதைகள் அடியில் தங்கும். விதைகளை
முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு
இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு,
சமையலுக்கு உபயோகிக்கலாம்.
🍃🍃🍃
உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து,
கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய
வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும்
மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது
சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை
சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு
விஷயங்களா என மலைக்க வைக்கிறது,
ஊட்டச்சத்து நிபுணரான ஹேமமாலினி
சொல்கிற தகவல்கள்...
🍁🍁🍁
* நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச்
சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய
ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான
மருத்துவக் குணங்கள் கொண்ட
சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல
குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண்
ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே
சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம்
உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து
விடும். நீரிழிவு, இதய நோய்கள் என
எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல்
பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு
ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின்
ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை
எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக
நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான
தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக்
கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா,
பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில்
உண்டு.
🍂🍂🍂
* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.
ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக்
குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி
இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி
குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த
அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த
சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது.
இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை
போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது
சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது
தெரியாது.
🎋🎋🎋
* சுண்டைக்காயை பச்சையாகவோ,
வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும்
சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில்
சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம்
வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன்,
காயங்களும் புண்களும் கூட ஆறும்.
🍀🍀🍀
* தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின்
போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும்
இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்
வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ
தையும் தடுக்கக் கூடியது.

* நரம்பு மண்டலத்துக்கு சக்தி
கொடுக்கக்கூடியது
சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும்
நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள
நல்ல குணங்கள் உதவக்கூடியவை.
☘☘☘
* நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத்
தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது
தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம்
விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை
என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ,
அத்தனையையும் சுண்டைக்காயிலும்
செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான
சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான்
இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற
முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற
முடியும்.

* சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன்
பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல
மருந்துத் தயாரிப்புகளுக்கு
உபயோகிக்கிறார்கள்.
🌿🌿🌿
* பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின்
ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று
கொடுப்பார்கள். அதில் பிரதானமாக
சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். 🍃🍃🍃
தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான
சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை
வெளியேற்றும் சக்தி கொண்டது அதில்
சேர்க்கப்படுகிற சுண்டைக்காய்.
“சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய
என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது,
எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்
🌞🌞🌞🌞🌞🌞
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*


*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

5 ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை மதுரையில் உள்ளது. அது வேலம்மாள் மருத்துவமனை .

5 ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை மதுரையில் உள்ளது. அது வேலம்மாள்  மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல ஒரு நர்ஸ் இருந்தார்.

ஒரு ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4
டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தான் முதலில் கண்டேன்.

எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் பீஸ் கிடையாது.

2.அட்மிஷன் பணம் கிடையாது .

3.அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.

4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 65 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.

5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.

நமக்கான ஒரேயொரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் 8% தள்ளுபடி.

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appoloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 13,500 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.

பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.

வேலம்மாள் மருத்துவமனை - மதுரை.

*படித்தவை பகிர்ந்தவை குழு நிறுவனர்*                       Velammal Medical College Hospital & Research Institute

Velammal Village, Anuppanadi, Near Chinthamani Toll Gate, Madurai, Tamil Nadu 625009
0452 711 3333

https://g.co/kgs/7Xfqbc

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...