Monday, July 16, 2018

ஆங்கில மருத்துவம் எப்படி? செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள் பெரியபதிவு என்று புறக்கணிக்க வேண்டாம்,

ஆங்கில  மருத்துவம்  எப்படி?  செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள்  பெரியபதிவு  என்று  புறக்கணிக்க  வேண்டாம்,

நாம்  வீட்டை  பெறுக்கி அந்த  குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலைமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.

உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும்.

ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது.

கடுமையான தலைவலி, மாத்திரையை  போட்டதும் எப்படி  நீங்கியது. வெரி சிம்பிள்  நம்  மூளைக்கு  வலியை  உணர்த்தும்  நரம்பை செயலிழக்க செய்துவிடுகிறது பிறகு எப்படி தலை  வலிக்கும்?

பேதிக்கும்  இதே  சங்கதிதான், பேதியாகும்  போது மூளையானது நமது  உடலில்  இருக்கும்  நீரை  எல்லாம்  குடலுக்குவர  செய்து கழிவை வெளியேற்றும். இப்போது  நாம்  போடும் பேதி  மாத்திரை  குடலுக்கு  வரும்  நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர்  சப்ளையாகாததால் பேதி  நிற்கின்றது. அதனால் குடலில் விஷக்கழிவுகள் அப்படியே  தேக்கம்  அடைகின்றது.

சளி,  இருமல் மாத்திரை  போடுகின்றீர்கள் அந்த மாத்திரை  உங்களுக்கு  அதிகமாக  தூக்கத்தை  வரவழைத்து சளி  வெளியேறுவதை  தடுக்கின்றது. உடலின் கழிவை  வெளியேற்றும்  சக்தியை தடுத்து சளி  நுரையீரலில்  தேக்கமடைகின்றது.

கழிவுகள்  வெளியேற  குறிப்பிட்ட  அளவு  வெப்பம்  உடலுக்கு  தேவை, அதுதான்  காய்ச்சல் நாம்  ஜூரத்தையும்  விட்டோமா?  அதையும்  மாத்திரைகளைப் போட்டு தடுக்கிறோம். ஆக  கழிவுகளை  வெளியேற்ற நாம்  எந்தவகையிலும்  உடலோடு  ஒத்துழைப்பதே  இல்லை.
ஆங்கில.. மருந்துகளை  சாப்பிட்டு  தடுத்துக் கொண்டே  வருவதால்
நமது  உடலே சாக்கடையைப். போல  மாறிவிட்டது. இனி  மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும்  பலவித  வியாதிகள், பெயரே வைக்க  முடியாத  வியாதிகள்,  டாக்டருக்கே  புரியாத  வியாதிகள் .என  பல  வருகின்றன. எனவே  எந்த நோயையும்  குணப்படுத்தும்  திறன்  இல்லாத  ஆங்கில  மருத்துவத்தைப் புறக்கணியுங்கள். யோகா செய்திடுங்கள் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள்.பொது நலன் கருதி வெளியிடுவோர் ஸ்ரீபகவத்யோகா மதுரை

பாகற்காயின்_அற்புதம்...

அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய #பாகற்காயின்_அற்புதம்...

பாகற்காய் என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அதன் கசப்புத்தன்மை தான். எவ்வளவு தான் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சர்க்கரை நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.

பாகற்காயில் முக்கியமான ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. பாகற்காயில் டயட்டரி நார்ச்சத்துக்களும், இரண்டு மடங்கு அதிகமாக கால்சியம், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவைகளும் வளமான அளவில் நிரம்பியுள்ளது. பாகற்காய் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது? பாகற்காயில் மூன்று வகையான உட்பொருட்களுடன் சர்க்கரை நோய்க்கு எதிரான பண்புகளும் நிறைந்துள்ளது.

#டைப்-2 #மற்றும்_டைப்-1 #சர்க்கரை_நோய்

பாகற்காயில் இருக்கும் உட்பொருட்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கும். டைப்-2 சர்க்கரை நோய் என்பது, உடலில் முறையான செயல்பாட்டிற்குத் தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பது அல்லது உடலில் உள்ள செல்கள் உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை ஏற்காமல் இருக்கும் நிலையாகும். 

டைப்-1 சர்க்கரை நோய் என்பது உடலில் மிகவும் குறைவான அளவில் இன்சுலின் உற்பத்தி செய்வது அல்லது இன்சுலினை சுத்தமாக உற்பத்தி செய்யாமல் இருக்கும் நிலையாகும்.

#நான்கு_வார_ஆய்வு

ஜர்னல் எட்னோஃபார்மால்கியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, 4 வாரம் தொடர்ந்து 2000 மில்லிகிராம் பாகற்காயை எடுத்து வந்ததில், டைப்-2 சர்க்கரை நோயாளியின் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் பாகற்காயில் உள்ள தாவர வகை இன்சுலின் டைப்-1 சர்க்கரை நோயாளிக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது.

தினமும் எவ்வளவு பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்?

பாகற்காய் ஜூஸை ஒரு நாளைக்கு 50-100 மிலி வரை குடிக்கலாம். 900 மில்லிகிராம் பாகற்காயை ஒரு நாளைக்கு மூன்று வேளையும் சாப்பிடலாம். டின்சராக இருந்தால் ஒரு நாளைக்கு 10-50 மிலி வரை எடுக்கலாம்.

#பாகற்காய்_ஜூஸின்_இதர_நன்மைகள்!

#கெட்ட_கொலஸ்ட்ராலைக்_குறைக்கும்

பாகற்காய் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்தால், தானாக இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயமும் குறையும். பாகற்காய் ஜூஸில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சி, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும்.

  #கல்லீரலை_சுத்தம்_செய்யும்

பாகற்காய் ஜூஸ் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, பல்வேறு வகையான கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். ஆய்வு ஒன்றில் பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்ள, கல்லீரலில் உள்ள நொதிகளை வலிமையாக்கி, கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

#நோயெதிர்ப்பு_மண்டலத்தை_மேம்படுத்தும்

பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியல் மற்றும் வைரல் தொற்றுக்களை எதிர்த்துப் பாதுகாப்பு அளிக்கும், அலர்ஜியை சரிசெய்யும் மற்றும் கண் பார்வையை மேம்படுத்தும். இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜன் ராடிக்கல்களால் டிஎன்ஏ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் செல்கள் சீரான இயக்கத்திற்கு உதவும்.

#புற்றுநோயைத்_தடுக்கும்

பாகற்காயில் ஆன்டி-கார்சினோஜென்கள் மற்றும் கட்டி எதிர்ப்பு பண்புகள், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், அவ்வப்போது பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்

#எடையைக்_குறைக்கும்

பாகற்காயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து குடலியக்கத்தை மேம்படுத்துவதுடன், அதிகமாக உண்பதைத் தடுக்கும் மற்றும் பசியுணர்வைக் குறைக்கும்.இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். மேலும் இதில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களும் குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும்.

#கண்களுக்கு_நல்லது

ஒருவர் தினமும் பாகற்காய் ஜூஸைக் குடித்து வந்தால், அது பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் தான் காரணம். மேலும் பாகற்காய் ஜூஸை கண்களைச் சுற்றி தடவி வந்தால், அது கருவளையங்களைப் போக்கும்

பாகற்காய் ஜூஸைத் தயாரிப்பது எப்படி?

#தேவையான_பொருட்கள்:

நற்பதமான பாகற்காய் - 1-2  எலுமிச்சை - 1/2  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 சிட்டிகை

#செய்முறை:

முதலில் பாகற்காயை கழுவி, தோலை நீக்கிவிட வேண்டும். * பின் அதனுள் இருக்கும் விதைகளை நீக்கி, காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌல் நீரில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 10 நிமிடம் அந்நீரில் பாகற்காய் துண்டுகளை ஊற வைக்க வேண்டும்.  10 நிமிடம் கழித்து, ஊற வைத்த பாகற்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். குறிப்பு: வேண்டுமானால், இந்த ஜூஸ் உடன் மிளகுத் தூள் மற்றும் இஞ்சி சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பாகற்காயின்_அற்புதம்...

அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய #பாகற்காயின்_அற்புதம்...

பாகற்காய் என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அதன் கசப்புத்தன்மை தான். எவ்வளவு தான் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, சர்க்கரை நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.

பாகற்காயில் முக்கியமான ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. பாகற்காயில் டயட்டரி நார்ச்சத்துக்களும், இரண்டு மடங்கு அதிகமாக கால்சியம், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவைகளும் வளமான அளவில் நிரம்பியுள்ளது. பாகற்காய் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது? பாகற்காயில் மூன்று வகையான உட்பொருட்களுடன் சர்க்கரை நோய்க்கு எதிரான பண்புகளும் நிறைந்துள்ளது.

#டைப்-2 #மற்றும்_டைப்-1 #சர்க்கரை_நோய்

பாகற்காயில் இருக்கும் உட்பொருட்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கும். டைப்-2 சர்க்கரை நோய் என்பது, உடலில் முறையான செயல்பாட்டிற்குத் தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பது அல்லது உடலில் உள்ள செல்கள் உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை ஏற்காமல் இருக்கும் நிலையாகும். 

டைப்-1 சர்க்கரை நோய் என்பது உடலில் மிகவும் குறைவான அளவில் இன்சுலின் உற்பத்தி செய்வது அல்லது இன்சுலினை சுத்தமாக உற்பத்தி செய்யாமல் இருக்கும் நிலையாகும்.

#நான்கு_வார_ஆய்வு

ஜர்னல் எட்னோஃபார்மால்கியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, 4 வாரம் தொடர்ந்து 2000 மில்லிகிராம் பாகற்காயை எடுத்து வந்ததில், டைப்-2 சர்க்கரை நோயாளியின் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் பாகற்காயில் உள்ள தாவர வகை இன்சுலின் டைப்-1 சர்க்கரை நோயாளிக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது.

தினமும் எவ்வளவு பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்?

பாகற்காய் ஜூஸை ஒரு நாளைக்கு 50-100 மிலி வரை குடிக்கலாம். 900 மில்லிகிராம் பாகற்காயை ஒரு நாளைக்கு மூன்று வேளையும் சாப்பிடலாம். டின்சராக இருந்தால் ஒரு நாளைக்கு 10-50 மிலி வரை எடுக்கலாம்.

#பாகற்காய்_ஜூஸின்_இதர_நன்மைகள்!

#கெட்ட_கொலஸ்ட்ராலைக்_குறைக்கும்

பாகற்காய் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்தால், தானாக இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயமும் குறையும். பாகற்காய் ஜூஸில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சி, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும்.

  #கல்லீரலை_சுத்தம்_செய்யும்

பாகற்காய் ஜூஸ் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, பல்வேறு வகையான கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். ஆய்வு ஒன்றில் பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்ள, கல்லீரலில் உள்ள நொதிகளை வலிமையாக்கி, கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

#நோயெதிர்ப்பு_மண்டலத்தை_மேம்படுத்தும்

பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியல் மற்றும் வைரல் தொற்றுக்களை எதிர்த்துப் பாதுகாப்பு அளிக்கும், அலர்ஜியை சரிசெய்யும் மற்றும் கண் பார்வையை மேம்படுத்தும். இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜன் ராடிக்கல்களால் டிஎன்ஏ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் செல்கள் சீரான இயக்கத்திற்கு உதவும்.

#புற்றுநோயைத்_தடுக்கும்

பாகற்காயில் ஆன்டி-கார்சினோஜென்கள் மற்றும் கட்டி எதிர்ப்பு பண்புகள், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், அவ்வப்போது பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்

#எடையைக்_குறைக்கும்

பாகற்காயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து குடலியக்கத்தை மேம்படுத்துவதுடன், அதிகமாக உண்பதைத் தடுக்கும் மற்றும் பசியுணர்வைக் குறைக்கும்.இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். மேலும் இதில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களும் குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும்.

#கண்களுக்கு_நல்லது

ஒருவர் தினமும் பாகற்காய் ஜூஸைக் குடித்து வந்தால், அது பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் தான் காரணம். மேலும் பாகற்காய் ஜூஸை கண்களைச் சுற்றி தடவி வந்தால், அது கருவளையங்களைப் போக்கும்

பாகற்காய் ஜூஸைத் தயாரிப்பது எப்படி?

#தேவையான_பொருட்கள்:

நற்பதமான பாகற்காய் - 1-2  எலுமிச்சை - 1/2  மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 சிட்டிகை

#செய்முறை:

முதலில் பாகற்காயை கழுவி, தோலை நீக்கிவிட வேண்டும். * பின் அதனுள் இருக்கும் விதைகளை நீக்கி, காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌல் நீரில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 10 நிமிடம் அந்நீரில் பாகற்காய் துண்டுகளை ஊற வைக்க வேண்டும்.  10 நிமிடம் கழித்து, ஊற வைத்த பாகற்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். குறிப்பு: வேண்டுமானால், இந்த ஜூஸ் உடன் மிளகுத் தூள் மற்றும் இஞ்சி சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Monday, July 9, 2018

உணவில் இரசாயணம், விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள்..! உங்களுக்கு தெரியுமா..???

உணவில் இரசாயணம், விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள்..! உங்களுக்கு தெரியுமா..???

உலகமே கைக்குள் என்ற நிலைமை வந்துவிட்டது. விஞ்ஞானமும் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஆனாலும் புதிது புதிதாக வரும் நோய்களை வெல்ல எந்த அறிவியலாலும் முடியவில்லை.

இயற்கை மற்றும் மூலிகை மருத்துவத்தை முறையாகச் செய்தால் நிச்சயம் வெல்ல முடியும் என்று பலருக்குத் தெரியவில்லை. மூலிகை மருத்துவத்தால் நோய்கள் குணமாகின்றன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்லலாம். அதேநேரத்தில் மூலிகை என்றதும் அது ஏதோ அமேசான் காட்டில் இருந்து எடுத்து வரப்பட்டது, அப்படி எடுத்து வந்தால்தான் அதன் தரம் உயர்வாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் வீட்டின் சமையலறையில் அல்லது சாப்பாட்டில் நறுமணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு பிறகு தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைகூட ஓர் ஒப்பற்ற மூலிகை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? 

உதாரணமாக கறிவேப்பிலையைக் குறிப்பிட்டாலும் சமீப காலங்களில் அது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். சாதாரண காய்ச்சலில் தொடங்கி பன்றிக்காய்ச்சல் வரை எல்லாவிதமான காய்ச்சலையும் விரட்டுவதில் இதன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் கலந்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்தால் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் காணாமல் போகும்.
பன்றிக்காய்ச்சலுக்கும், எலிக்காய்ச்சலுக்கும்... ஏன் வவ்வால் மூலம் பரவியதாகச் சொல்லப்பட்ட நிபா வைரஸ் காய்ச்சலுக்கும்கூட இந்த கறிவேப்பிலை மருந்து நல்ல நிவாரணம் தரும். பலருக்கும் இந்த மருந்து பலனளித்தது, பலன் தந்து கொண்டிருக்கிறது.

காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்... மண்டலம் உண்டால் கோலூன்றி நடக்கும் கிழவனும் கோலை வீசி விட்டு குலுங்கிக் குலுங்கி நடப்பானாம்.

என்றும் இளமையுடன் வாழ திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிறார். அதாவது காலையில் இஞ்சியை சாறு எடுத்து குடிப்பது, டீயில் இஞ்சி சேர்த்துக் குடிப்பது, இஞ்சித் துவையல் செய்து சாப்பிடுவது, இஞ்சி ஜூஸ் குடிப்பது என அன்றாட நிகழ்வுகள் அமைய வேண்டும்.

இதேபோல் சுக்குடன் மிளகு, தனியா சேர்த்துப் பொடியாக்கி மாலை நேரத்தில் டீக்குப் பதிலாக அந்தக் கலவையை கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து குடிப்பதன்மூலம் செரிமானக் கோளாறில் தொடங்கி இதயம் தொடர்பான நோய்கள், சளித்தொல்லை என நிறைய நோய்கள் சரியாகும்.

இதேபோல் இரவில் கடுக்காயை (விதையை நீக்கிவிட்டு) இரவில் கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும், மூல நோய் விலகும்.

வீடுகளில் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் மிளகு, சீரகம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு என எல்லாமே மருந்துதான் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? சிலர் கேட்கலாம், அப்படியானால் தினமும் அந்த மருந்துகள் இல்லாமல் எங்கள் வீட்டில் சமையலே செய்வதில்லை. ஏன், எங்களுக்கு சுகர் வருகிறது, பிரஷர் வருகிறது, புற்றுநோய் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம்.

நீங்கள் அந்த மருந்துகளையும் சாப்பிடுகிறீர்கள். கூடவே, பட்டை தீட்டிய அரிசியைச் சாப்பிடுகிறீர்கள், பல்வேறு ரசாயனங்களைப் போட்டு பிளீச் செய்யப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை தினம் தினம் சாப்பிடுகிறீர்கள், கல் உப்புக்குப் பதில் அயோடின் சேர்த்த உப்பு என்று யார் யாரோ சொல்வதைக் கேட்டு பொடி உப்பைச் சேர்க்கிறீர்கள், பெட்ரோல் எடுத்ததுபோக மிச்சமாகிப்போன குருடாயிலில்  தயாரித்த எண்ணெய்களில்தானே தினம் தினம் வறுக்கிறீர்கள், பொரிக்கிறீர்கள், வடை செய்கிறீர்கள், பூரி போட்டு சாப்பிடுகிறீர்கள். இப்படி விஷமாகிப்போன உணவுகளை ஒவ்வொருவேளையும் சாப்பிடும்போது நீங்கள் எத்தகைய விலைஉயர்ந்த மருந்துகளைச் சாப்பிட்டாலும் நோய்கள் வரிசைகட்டி நிற்கத்தான் செய்யும்.

இதுமட்டுமல்ல வாரம் ஒருநாள்தான் நான்வெஜ் என்று சொல்லிக்கொண்டு ஊசி போட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் சிக்கனைச் சாப்பிடுகிறீர்கள். கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழத்தைச் சாப்பிடுகிறீர்கள், பூச்சிமருந்தில் முக்கி எடுத்த திராட்சைப்பழத்தைச்  சாப்பிடுகிறீர்கள், முட்டைக்கோஸ், காலிஃப்ளவரைச் சாப்பிடுகிறீர்கள். இவற்றில் உள்ள விஷங்கள் உங்களை பாதிக்காமல் என்ன செய்யும்?

இன்னும் நம்முடைய தட்பவெப்பநிலைக்கு ஒவ்வாத உணவுகளை வேண்டி விரும்பிச் சாப்பிடுகிறோம். டீக்கடையில் தேயிலையில் கலப்படம், அன்றாடம் அருந்தும் பாலில் கலப்படம் என எல்லாம் கலப்படம், ரசாயனம்... அவ்வளவும் நமக்கு நோயை வரவேற்க காரணமாகிறது.

இவற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முதலில் நம்மிடையே பொதுவான விழிப்புணர்வு வேண்டும். முன்பைக்காட்டிலும் பெரிய அளவில் விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றாலும் செயலாக்கத்தில் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனா அந்த விழிப்புணர்வு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்ட்ராகிராமிலேயே நின்றுவிடுகின்றன.

அதாவது பார்க்க, பகிர, கருத்து சொல்ல என முடிந்துவிடுகிறது. வீட்டுச் சாப்பாட்டை எடுத்துச் செல்வதில் ஏற்படும் சோம்பேறித்தனத்தின் விளைவாக ஓட்டல் உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறோம். அங்கே சுவையூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் அஜினோமோட்டாவில் தொடங்கி உங்களுக்கு பார்சல் போட்டு கொடுக்கப்படும் பாலித்தீன் பேப்பர் வரை எல்லாம் உயிர்க்கொல்லிகள்.

சிந்திப்போம். நோய்களை வெல்ல எளிய வழிகள் நிறைய இருக்கின்றன.

தலை வலித்தால் சுக்கை நீர் விட்டு உரசி (இழைத்து) நெற்றியில் பற்று போடுங்கள்,

ஜலதோஷம் வந்தால் மணத்தக்காளி சூப் குடியுங்கள்.

மூக்கில் நீர் வடிந்தால் நொச்சியிலையை கொதிக்க  வைத்து ஆவி (வேது) பிடியுங்கள்.

சளி பிடித்தால் வெள்ளைப்பூண்டு பாலில் (சிறிது நீர் சேர்த்து) வேக வைத்து மிளகுப்பொடி, மஞ்சள்தூள், பனங்கல்கண்டு சேர்த்துக் குடியுங்கள் குணம் கிடைக்கும்.

இவை மட்டுமல்ல கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர்முன் அமர்ந்து வேலை செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி என வலிகள் அணிவகுத்து நிற்கின்றன. இதுமட்டுமல்ல ஆண்மைக்கே சவால் விடும் பிரச்னைகளும் பூதாகரமாக எழுந்து நிற்கின்றன.

இவைதவிர பொதுவாக நமது உணவுமுறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வாய்ப்புண், வயிற்றுப்புண், மலச்சிக்கல், வாய்வுக்கோளாறு, இதயக் கோளாறு, சர்க்கரைநோய், புற்றுநோய் என  நோய்களின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கை நிறைய காசு இருக்கிறது. ஆனால் அவற்றைக் கொண்டு நோய்களை விரட்ட முடியவில்லை. நோய்களை விரட்ட சரியான ஆட்களும் இல்லை. நோய்களுக்கேற்ப மருத்துவர்களும் பெருகிவிட்டார்கள், ஆனால் அவர்களிலும் பலர் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கையில் கிடைத்ததை, கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கோ தயாரித்த மருந்துகளைக் கொடுத்து நம்மை சோதனை எலிகளாக்கி எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

இதனால் நோய் குணமாவதற்குப்பதிலாக பக்கவிளைவுகளே அதிகம் ஏற்படுகின்றன. அன்றைக்கு 100 மில்லி கிராம் குரோசினைச் சாப்பிட்டால்  காய்ச்சல் விலகியது. இன்றைக்கு 600-ஐத் தாண்டியும் நம்மிடம் சவால் விடுகிறது காய்ச்சல்.

எது வந்தால் என்ன? இயற்கையாக நம்மைச் சுற்றி மிக எளிதாகக் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு நோய்களை வெல்லலாம். 

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...