Thursday, October 5, 2017

*ஆயுளை நீட்டிக்கும் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய்*

*ஆயுளை நீட்டிக்கும் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய்*

காலையில் இஞ்சி , மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்று உண்டால், உண்மையில் உங்கள் ஆயுள் கெட்டி.

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க.

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.

ஆனால்அவற்றை உண்ணும்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவற்றிலும் விஷத்தன்மை உண்டு.

*இஞ்சி*

இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும்.

*இஞ்சி உண்ணும் முறை:*

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும்வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

*தரமான தேன் கிடைக்கும் தொடர்புக்கு*

Whatsapp Or Call

9488909135
9488909136

*சுக்கு:*

சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்றாக ஆறிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும்.

*சுக்கு உண்ணும் முறை:*

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவுசுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

*கடுக்காய்:*

கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை எடுத்துவிடுங்கள். ஏனெனில் கொட்டை நஞ்சாகும். கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்து கொள்ளுங்கள்.

*கடுக்காய் உண்ணும் முறை:*

இரவில் படுக்கும் போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.இது கபத்தை சமன் செய்யும்.மலச்சிக்கல் குணமாகும். இந்த மூன்றையும் தினமும் செய்து வாருங்கள். எந்த நோயும் உங்களை எட்டி கூட பார்க்காது என்பது உறுதி.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :கடுக்காய் உண்டால் மிடுக்காய்  வாழலாம்.ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.

*மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும*

https://m.facebook.com/TamizhanHelth/?hc_ref=ARSRcp7Q_xaZf5zkzUouuJOk2EDP8MsAzrW2FG1QkR3AXMwohgT0q0Q68WyzdSAW-U8&fref=gs&dti=1739742539646622&hc_location=group

*தரமான தேன் கிடைக்கும் தொடர்புக்கு*

Whatsapp Or Call

9488909136
9488909135

*நண்பர்களுக்கு பகிரவும்*

இந்த மருந்து 48 மணிநேரத்தில் டெங்குவை குணப்டுத்துகின்றது...

உடனே பகிருங்கள்.
#உடனடி_நிவாரணம்

டெங்கு முதலான கடும் ஜூரத்தைக் குணப்படுத்தி பிளட் கவுண்டை சீர் செய்யும் இலகுவான மருந்து இலங்கை பாராளுமன்ற அரங்கிலும் பேசப்பட்டு வியப்பூட்டியது.

அது என்ன வென்று தெரியுமா?

பப்பாளி மரத்தின் கொழுந்து இலையின் சாற்றை நீர் கலக்காமல் எடுத்து நோயாளி அருந்த வேண்டும்.

சிறுவர்கள் ஒரு மேசைக்கரண்டி அளவும், பெரியோர் இரண்டு மேசைக்கரண்டி அளவும் அருந்தலாம்.

ஆச்சர்யம் ஆனாலும் உண்மை. சிறுது நேரத்திலேயே உடலில் மாற்றம் ஏற்பட்டு குணமடைவதைக் காணலாம்.

இந்த பார்மூலாவை பயன்படுத்தி #பெப்ரிக்கா பில்ஸ் என்று டேப்லட்டுகளும் இலங்கையில் தயார் செய்யப்பட்டு விட்டது.

கெரிகா பப்பாயா லீஃப் எக்ஸ்ட்ராட் டெப்லட் என்னும் இந்த மருந்து 48 மணிநேரத்தில் டெங்குவை குணப்டுத்துகின்றது...

இதனை நீங்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாது பகிருங்கள்...

It is increasing the blood platelets incredibly...

HEALTH awareness images

Following diseases can be treated with stem cells?  

Following diseases can be treated with stem cells?  • Parkinson’s • Alzheimer’s • Rheumatoid Arthritis • Diabetes Type 2 • Muscular Sclerosis • Lupus • Kidney Disease • Liver Disease • Stroke • Heart Conditions • COPD • ALS • Spinal Cord Injuries • Muscular Dystrophy • Angina and Coronary Artery Disease • Osteoarthritis and Rheumatoid Arthritis • Fatigue and Fibromyalgia • Sport Injuries and Rotator Cuff Tears • Natural Joint Reconstruction for Hips and Knees • Allergies and Sinitus • Sexual Dysfunction • Prostate Disorders • Heartburn, Hiatal Hernia, Indigestion, GERDS • Osteoporosis • Lung Disorders • Chronic Hepatitis • Memory Loss • Colitus, Irritable Bowels, Crohn's Disease • Headaches and Migraines • Neurological Disorders • Ataxia • Acne • Autism and many others (64 different diseases in total)

ஆங்கில மருதுவம் படித்த ஒருவரின் ஆதங்கம்!

ஆங்கில மருதுவம் படித்த ஒருவரின் ஆதங்கம்!

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கிருமிகளைக் கொல்லாது; உங்களைத்தான் கொல்லும்!!!
ஆங்கில மருத்துவம் மொத்தத்திலேயே 4 மருந்துகளைக் கொண்டிருக்கிறது. இந்த 4 மருந்துகளைகளையும் நீக்கிவிட்டால், ஆங்கில மருத்துவம் அடியோடு நொறுங்கிப் போகும். இந்த நான்கு வகை மருந்துகள் இவைதாம்.

1. ஜுரம் – குறைப்பதற்கான மாத்திரைகள்.

2. Antibiotics – நுண்ணுயிர்க் கொல்லி – ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள்.

3. Anti – inflammatory Drugs – வலி, வீக்கம், குறைப்பதற்கான மாத்திரைகள்

4. Alliergy Drugs – ‘அலர்ஜி’க்கான மாத்திரைகள்.
.

4 மாத்திரைகள் – மகா பாதகம்

இந்த 4 மாத்திரைகள்தாம் ‘அலோபதி’ எனும் ஆங்கில மருத்துவம். இந்த நான்கு மாத்திரைகளையும் எந்த நோயாளிக்கும், எக்காலத்திலும், எந்தக் காரணத்திற்க்காகவும் கொடுக்கக் கூடாது. அது மகா பாதகமாகும். எப்பொழுது இந்த மருந்துகளை முதன் முறையாக உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறோமோ, அன்று தொடங்கியதுதான், தொடர்வதுதான் இன்று மனித இனத்தையே அளித்து வரும் நாட்பட்ட நோய்கள். இந்த மருந்துகளின் காரணமாகத் தாமே குணமாகக் கூடிய நோய்கள் அனைத்தும் வாழ்நாள் முழுமையும் நீங்காத நோய்களாக மனித சமுதாயத் தினரிடையே நிலைபெற்றுவிட்டன. இவற்றை Chronic Diseases என்று பெயரிட்டிருக்கின்றனர்.
.

இப்படியும் ஒரு மருத்துவமா?

இவர்களுக்கு, இந்த ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு Chronic Diseases – நாட்பட்ட நோய்களுக்குக் காரணம் என்ன? என்பது இன்று வரை தெரியாதது தான் கொடுமையிலும் கொடுமை! இந்த ஆங்கிலேயர்கள் இவ்வளவு அறிவற்றவர்களா? ஆம். இப்படியும் இறைவன் படித்திருக்கிறான் என்பதுதான் உண்மை.

வாசகர்களே! நாங்கள் படிக்கும் காலத்திலிருந்தே ஏன் ஆங்கிலேயர்கள் இறக்குமதி செய்த உருப்படாத மருத்துவத்தை மனதளவில் எதிர்த்தோம்? என்பதைக் கீழ்வரும் கேள்வி – பதில் நிகழ்ச்சியைக் கவனமாகப் படிப்பதைக் கொண்டு அறியமுடியும்.

மருத்துவக் கல்லூரியில் STANLEY MEDICAL COLLEGE – ல் 3-ம் ஆண்டு படிப்பின் ஆரம்பம். மருந்துகள் சம்மந்தப்பட்ட பாடம் ஒன்று ஆரம்பமாகியது. அந்த ஆரம்பமே பிடிக்கவில்லை.

மூன்றாம் ஆண்டில்தான் எங்களை நோயாளிகள் வார்டுகளுக்குள் அனுமதிப்பார்கள். என்னுடைய வார்டு சீப் டாக்டர், ப்ரொஃபசர் டாக்டர். எம். பி. பிரபாகரன் அவர்கள். மருந்துகள் சம்மந்தப்பட்ட பாடம் Pharmacology ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நோயாளிகளை எவ்விதம் அணுகுவது? வைத்தியமளிப்பது எவ்விதம்? எந்த எந்த மருந்துகளைக் கொடுப்பது போன்ற பாடம் மற்றொரு புறம். மருந்துகளைப் பற்றி என்ன கற்றுக் கொடுத்தார்களோ, அது ஒரு போதும் நோயாளிகளுக்கு நன்மையைத் தர முடியாது என்பதை மிகத் தெளிவாக உணர முடிந்தது.
.

டாக்டர். எம். பி. பிரபாகரன் அவர்கள் என்னிடம் சற்று பிரியமானவர் என்பதால் அவரிடம் ஒருமுறை என் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். நானும், ப்ரொஃபசர் அவர்களும் பரிமாறிக் கொண்ட கேள்விகளையும், பதில்களையும் படியுங்கள்.
.

நான்: சார், எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கிறது. கேட்கலாமா?

ப்ரொஃபசர்: 3-ம் ஆண்டுக்குள் நுழைந்து 3 மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என்ன சந்தேகம்?
.

நான்: ஆரம்ப பாடத்திலேயே சந்தேகம் வந்து விட்டது. எனவே ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

ப்ரொஃபசர்: சரி. கேள்.
.

நான்: மருந்துகள் சம்பந்தமான Pharmacology – யில் முதல் பாடமே ஹிப்போக்ரேட்டஸ் என்பவரைப் பற்றியது.

ப்ரொ: ஆம். அவர் தாம் பா “நவீன மருத்துவத்தின் தந்தை” என்றழைக்கப்படுபவர். அவர் மட்டும் இல்லையென்றால் மருந்துகளே உருவாகியிருக்காது. அவரைப் பற்றி என்ன சந்தேகம்?
.

நான்: அவரைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. அந்தப் பாடத்தில் மருந்துகளைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
.

“ஒறு மருந்தை ஒறு நோயயாளியிடத்தே பிரயோகிக்கும்போது, அவர் நோய் குனமடையாவிட்டாலும் பரவாயில்லை; மருந்துகளின் காரணமாக அவர் வேறு நோய் தொந்தரவுகளுக்கு ஆளாகக் கூடாது. புது நோய்களும் உருவாகக்கூடாது. அவ்வாறு மருந்துகளுக்குப் பக்க விளைவுகளாக வேறு வேறு நோய்கள் தோன்றினால், அந்த மருந்துகளை உபயோக்கிக்கக் கூடாது. அது உடல் நலனுக்குக் கேடு. அது வைத்தியமும் இல்லை.”

சார், நவீன மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஹிப்போக்ரேட்டஸ் குறிப்பிடும், எச்சரிக்கும் இந்தக் கொள்கையை ஏன் நாம் கடைபிடிப்பதில்லை. நாம் நோயாளிகளுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு மருந்துக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, எக்கச்சக்கமான பக்கா விளைவுகள். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
.

புரொ: உன்னுடைய கேள்வி சரிதான். நம்முடைய மருத்துவம் உண்மையான நியாயமான மருத்துவமில்லைதான். இதெல்லாம் பார்த்தால் ‘ப்ராக்டீஸ்’ பிழைப்பு நடத்தவே முடியாதே?

நான்: நோயாளிகளுக்குத் துரோகமான தொழில் என்று தெரிந்தும் நாம் செய்யும் இந்தப் பாதகம் எப்படி பிழைப்பு ஆகும்?
.

புரொ: நோயாளிகளும் நன்மை அடையத்தானே செய்கிறார்கள்? எத்தனை ஆயிரக்கணக்கான நோயாளிகள் நம்மைச் சுற்றி வருகிறார்கள் பார்! நம்மால் அவர்களுக்கு ஏதும் நன்மைகள் இல்லை என்றால் இவ்வளவு கூட்டம் வருமா?

நான்: நம் மருத்துவ அறிவின்படி நோயாளி துன்பத்துடன் தான் வருகிறார். மருந்துகள் கொடுக்கிறோம். பக்கா [பக்க] விளைவுகள் நிச்சயம். ஒவ்வொரு மருந்துக்கும் இருக்கிறது என்பதை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். ஒன்றோ, இரண்டோ பக்க விளைவுகள் இல்லை. எண்ணிக்கையில்லா பக்க விளைவுகள். பக்க விளைவுகள் ஒவ்வொன்றும் நோய்கள் தானே? ஒரு நோயாளிக்கு, பல நோய்களை நம் கொடுக்கும்போது அது எப்படி நோய்களைக் குணப்படுத்தும்?
.

புரொ: அவை பக்க விளைவுகள்தான். நோய்கள் அல்ல.

நான்: பக்க விளைவுகள் என்றால் என்ன? நோய்கள் என்றால் என்ன? வித்தியாசம் என்ன?
.

புரொ: நோய்கள், உடலில் தானே தோன்றுவது. பக்க விளைவுகள் மருந்துகளால் ஏற்படுவது. அது தானே சரியாகி விடும். மருந்தை நிறுத்தி விட்டால் போதும்.

நான்: நோய்கள், தானே சரியாகாதா?
.

புரொ: சரியகாமல்தானே நோயாளிகள் நம்மிடம் வருகிறார்கள்? தானே சரியாகியிருந்தால் ஏன் வரப் போகிறார்கள்?

நான்: நோய்கள் தானே சரியாகாது என்றால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்று ஒன்று இருக்கிறதே? அதன் வேலை என்ன?
.

புரொ: ஆம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கத்தான் செய்கிறது. அதன் வேலை நோயை எதிர்ப்பதாகும்.

நான்: ஒரு நோய் வந்து விட்டால், நோயை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தி எப்போது உருவாகிறது?
.

புரொ: நோய் ஏற்பட்ட பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. நோயின் வீரியம் ஒரு குறிப்பிட்ட அளவை அடைய வேண்டும். The disease force must reach an optimal level before defense force develops against the particular disease.

நான்: சார், தவறாக நினைக்காதீர்கள். அப்படியானால் நிச்சயமாக நோயை எதிர்த்து, நம் உடலிலேயே ஒவ்வொரு நோய்க்கும் எதிர்ப்பு சக்தி தோன்றி விடும். பின்னர் அந்த எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட வியாதியை நம் உடலில் மீண்டும் தோன்ற விடாது. அந்த நோயிலிருந்து நிரந்தரமாக Immunity விடுதலை கிடைக்கப்பெறுவார்கள். சரிதானே?
.

புரொ: சரிதான். ஆனால் வாழ்நாள் முழுதும் திரும்பவும் அந்த நோயே வராது என்று சொல்ல முடியாது.

நான்: சரி, அப்படியானால் குறைந்த பட்சம் அடிக்கடி வராமலாவது இருக்கும் இல்லையா?
.

புரொ: ஆம்.

நான்: நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாலும், குறிப்பிட்ட வியாதிக்கு எதிராக ஏற்கனவே Immunity, நோய் எதிர்ப்பு சக்தி தோன்றி விட்டதாலும், நோய் திரும்ப வந்தாலும், அந்த நோய் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்துவதர்க்கு முன்பாகவே அழிக்கப்பட்டு விடும் இல்லையா?
.

புரொ: சரிதான்.

நான்: ஒரு நோய் திரும்பவும் வரும்போது, அந்த நோயை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம் இன்னும் உறுதியாகும் இல்லையா? இதன் விளைவாக எவ்வளவு தான் ஒரு நோய் திரும்ப திரும்ப வந்தாலும், ஒவ்வொரு முறையும் திரும்பவும் நம் உடலில் ஏற்படும் அந்த நோய் ஒரு முறைக்கு அடுத்த முறை பலவீனமடைந்து தானே இருக்கும்?
.

புரொ: ஆம்.

நான்: இந்த இயல்பு உடல் சுகத்திற்கு மாறாக, நம்மிடம் வரும் நோயாளிகள் ஒவ்வொருவரும், சில நாட்கள் அல்லது சில வாரங்கள் சுகத்திற்குப் பிறகு(?) மீண்டும் அந்த நோயால் முந்தியதை விட பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் அல்லவா வருகிறார்கள்? இது நமக்கு எதை உணர்த்துகிறது?
.

புரொ: நோய்களை உருவாக்குவதும், நோய்களை வளர்ப்பதும், நோயாளிகள் பெருக்கத்திற்கும், பின் நோயாளிகள் சாவதும் நம்மால் தான் என்றா சொல்ல வருகிறாய்.

நான்: தப்பாக நினைக்காதீர்கள். என் சந்தேகம் தான் அப்படிக் கேட்டேன். நீங்களும் அதே சந்தேகத்தில்தான் இருப்பதாகத் தோன்றுகிறது.
.

புரொ: நீ ஆபத்தானவன். இதற்கு மேல் உன்னிடம் பேசினால், ஆங்கில மருத்துவத்தையே காட்டிக் கொடுத்து விடுவாய் !

நான்: நான் எப்படி சார் கட்டிக் கொடுக்க முடியும்?! எனக்கு யாரும் காட்டித் தரவில்லையே? உண்மை தானாகவே வெளிவருகிறது.
.

புரொ: ஏம்ப்பா உயிரை எடுக்கறே? உங்கிட்டே இவ்வளவு நேரம் பேசியதே ஜாஸ்தி.

நான்: அது வீண் போகவில்லை சார்! உங்களால் தான் சார் என சந்தேகம் தெளிவடைந்தது. சந்தேகமே இல்லை. ‘நாம் தான் நோய்களை உருவாக்குகிறோம்; நோய்களை வளர்க்கிறோம்’ என்ற உண்மையை எவ்வித சந்தேகமுமின்றி உங்களால் தான் சார் உணர முடிந்தது. இன்னும் ஒரே ஒரு விளக்கம் வேணும் சார்.
.

புரொ: என்ன? (எரிச்சல் வந்துவிட்டது சாருக்கு)

நான்: ஆங்கில மருந்துகளைக் கொடுக்கும்போது புதிய வியாதிகளை நாம் நோயாளியின் உடலில் புகுத்துகிறோம்?
.

புரொ: ஏய் குழப்பாதே. அதுக்குப் பெயர் பக்க விளைவுகள். அதாவது Side Reactions. புதிய நோய்கள் என்று உளறாதே.

நான்: Side Reactions என்றே கூறுகிறேன் சார், இந்த பக்க விளைவுகளுக்குக் காரணம், உடல் எதிர்ப்பு சக்தி நாம் நோயாளிகளுக்குக் கொடுத்த மருந்துகளை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்த்து அழிப்பதால் ஏற்படுகிறதா?
.

புரொ: அதப்பத்தியெல்லாம் தெரியாது. நீ மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். தான் படிக்கிறாய். சொல்லிக் குடுக்கறதைப் படிச்சிட்டு பாஸ் பண்ற வழியைப் பார்.

நான்: படிச்சிட்டுத்தானே சார் சந்தேகம் கேட்கிறேன். எப்படிப் பாஸ் பண்ணாமல் போய் விடுவேன்?
.

புரொ: எங்கிட்டே கேள்வி கேட்கிற மாதிரி மத்த பேருங்ககிட்ட கேட்டுடாதே. ஜென்மத்துக்கும் நீ பாஸ் பண்ணமாட்டே!

நான்: சரி சார், அப்ப சந்தேகம்?
.

புரொ: யோவ்! போய்யா! (ப்ரொஃபசர் வேகமாக திரும்பிப் போயே போய் விட்டார்)….
.
நன்றி; Dr.ஃபஸ்லூர் ரஹ்மான் MBBS,MD,DV MRSH PHD(AC

Friday, September 29, 2017

உங்கள் சிறுநீரகம் நலமாக இருக்கிறதா? #மாவேள்

உங்கள் சிறுநீரகம் நலமாக இருக்கிறதா? #மாவேள்
நாம் நலமாகத்தான் இருக்கின்றோமா? என்ற கேள்வி எல்லோர் மனதையும் ஆட்டுவித்தே வருகிறது. எல்லாவற்றையும் நாம் ஏன் முடிவிற்கு கொண்டுவரக்கூடாது?
" நீரகம் " தேநீரை அருந்துங்கள். சிறுநீரக கல் உள்ளவர்கள் " நீரகம் + " காலை & மாலை நேரத்தில் தொடர்ந்து 10 நாட்கள் அருந்துங்கள்.
இணையதளத்தில் வாங்கிட :
http://www.maavel.com/product/save-kidney-tea/
http://www.maavel.com/product/neeragam-plus-save-kidney-tea/
வாட்சப் : 9688660235
நோய் வந்தபின் வருந்தி செல்லவேண்டாம். மருந்துகளை உணவாக எடுத்துக்கொள்ளத்தொடங்குங்கள்.
ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன,
1. உடல எடை இழப்பு
2. குமுட்டல் வாந்தி
3. பொதுவான உடல்நலக்குறைவு
4. சோர்வு
5. தலைவலி
6. அடிக்கடி ஏற்படும் விக்கல்
7. உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)
பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன:
1. வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
2. இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
3.சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
4.வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
5.மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
6.தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
தோலில் வெள்ளைநிற படிகங்கள்
7.கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
8.அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
9.அதிக தாகம் ஏற்படுதல்
10.தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
11.நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
12.சுவாசம் நாற்றம் எடுத்தல்
13.உயர் இரத்த அழுத்தம்
14.பசியின்மை
15.அடிக்கடி நீர்கடுப்பு ஏற்படுதல்
போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பனை சக்கரை சுவையில் உள்ள #நீரகம் தேநீரை பயன்படுத்துங்கள். பாதுகாப்பான உணர்வில் மகிழ்வாக வாழுங்கள்!
-#மாவேள்

டெங்கு காய்ச்சல் குணமாக !

டெங்கு காய்ச்சல் குணமாக !
______________________________

நிலவேம்பு கசாயம்

தேவையான பொருட்கள்

1 - நிலவேம்பு பொடி - 1 தே.க

2 - பற்படாகம் - 1/2 தே.க

3 - விஷ்ணுகிரந்தை - 1/2 தே.க

4 - பூண்டு - 2 பல்

5 - சுக்கு - சிறிய துண்டு

6 - மிளகு - 1/2 தே.க

7 - திப்பிளி - 3 nos

இவை அனைத்தையும் 250ml நீரில் கொதிக்க வைத்து 100ml ஆன பிறகு வடித்து காலை மாலை குடித்து வரவும்.

இதனுடன் பப்பாளி இலை சாறு, பீர்கன்காய் + எழுமிச்சை பழம் (தோலுடன்) சாறு மற்றும் மாதுளம் பழச்சாறு எடுத்து வந்தால்.

டெங்கு காய்சல் விரைவில் குணமாகும்.

நன்றி

Tuesday, September 26, 2017

What diseases can be treated with stem cells?  •

What diseases can be treated with stem cells?  •
Parkinson’s •
Alzheimer’s •
Rheumatoid Arthritis •
Diabetes Type 2 •
Muscular Sclerosis •
Lupus •
Kidney Disease •
Liver Disease •
Stroke •
Heart Conditions •
COPD •
ALS •
Spinal Cord Injuries •
Muscular Dystrophy •
Angina and Coronary Artery Disease •
Osteoarthritis and Rheumatoid Arthritis •
Fatigue and Fibromyalgia •
Sport Injuries and Rotator Cuff Tears •
Natural Joint Reconstruction for Hips and Knees •
Allergies and Sinitus •
Sexual Dysfunction •
Prostate Disorders •
Heartburn,
Hiatal Hernia,
Indigestion,
GERDS •
Osteoporosis •
Lung Disorders •
Chronic Hepatitis •
Memory Loss •
Colitus, Irritable Bowels, Crohn's Disease •
Headaches and Migraines •
Neurological Disorders •
Ataxia •
Acne •
Autism and many others (64 different diseases in total)

இரத்தப் புற்றுநோய் மூளைப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய் கல்லீரல் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் புரோஸ்டேட் புற்றுநோய் கருப்பை புற்றுநோய்

தயவு செய்து அழிக்க வேண்டாம் முடிந்த வரை Forward செய்யவும் இரத்தப் புற்றுநோய் மூளைப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய் கல்லீரல் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் புரோஸ்டேட் புற்றுநோய் கருப்பை புற்றுநோய் அன்பிற்குறிய நண்பர்களே மேற்கூரிய பல புற்றுநோயிற் கான மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது இந்த செய்தியை Forward செய்யாமல் அழிக்க வேண்டாம் நான் இதை அதிக பச்சமாக Forward செய்துள்ளேன் அனைத்து மக்களையும் இச்செய்தி சென்ற அடைய வேண்டும்

கர் கூமினோயிட்ஸ்"

என்னும் மருந்து பலவித புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தாகும் இது பெங்களூரில் உள்ள புற்றுநோய் மூலிகை மருத்துவ மனையில் நியாயமான விலையில் கிடைக்கும், அனைவருக்கும் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும் இதனால் இச்செய்தி யாருக்காவது உதவலாம் எனவே கருனை கூர்ந்து Forward செய்யவும்

கேன்சர் ஹெர்பலிஸ்ட் பெங்களுர் முகவரி - 6, டி வி ஜி சாலை காந்தி பஜார் பசவன குடி பெங்களுர் - 560004 லேன்ட் மார்க் - வித்யார்தா பவன் ஹோட்டல் அருகில் தொலைபேசி - 080 - 412 18877 080 - 266011 27

8884588835

Cancer herbalist@mail.com

ரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

ரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ரத்த அணுக்கள் வெகுவாக குறைந்திடும் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படுவதுண்டு.

 இதனை தவிர்க்க, டெங்கு காய்ச்சல் ஏற்படாதவாறு உங்களை பாதுகாத்துக் கொள்வதுடன் ரத்த அணுக்களை மேம்படுத்தும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளிப் பழம் :

ரத்த அணுக்களை மேம்படுத்துவதில் பப்பாளிப் பழம் மிகச்சிறந்த இடம் வகிக்கிறது. பழத்தை விட பப்பாளி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளம் பழம் :

சிகப்பு வைரம் என்று புகழப்படும் மாதுளம்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால் ஹீமோக்ளோபினை அதிகப்படுத்தும். மாதுளம்பழத்தில் விட்டமின்ஸ்களும் இருப்பதால் உங்களுக்கு உடல் வலிமையையும் கொடுத்திடும். இது டெங்கு வைரஸுக்கு எதிராக போராடவும் செய்திடும்.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் நிறைந்த மீன்,நண்டு,சிக்கன் போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். அவை உங்களின் ரத்த அணுக்களை மேம்படுத்துவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

பூசணிக்காய் :

விட்டமின் ஏ நிறைந்த பூசணிக்காய் அல்லது பூசணிப்பழம் சாப்பிடலாம். இது நம் ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்திடும். அதே போல உடலில் உள்ள செல்களில் ப்ரோட்டீன் அதிகரிக்கச் செய்திடும். இதனால் ப்ளேட்லெட்ஸ் அதிகரிக்கும்.

விட்டமின் சி :

ரத்த அணுக்களை மேம்படுத்த விட்டமின் சி நிறந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இது சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் செயல்படும். இதனால் ரத்த அணுக்கள் பாதுகாக்கப்படும். ஒரு நாளைக்கு 400 முதல் 2000 கிராம் அளவில் விட்டமின் சி எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம், எலுமிச்சைப் பழம், ப்ரோக்கோலி,கீரை வகைகள் போன்றவற்றில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது.

நெல்லிக்காய் :

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த அணுக்களை மேம்படுத்தவும் பயன்படுத்துவது நெல்லிக்காய். காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். நெல்லிக்காயை சாறு எடுத்து தேனுடன் கலந்து குடிக்கலாம்.

பீட்ரூட் :

மிகவும் ரத்தசோகையில் இருப்பவர்கள் பீட்ரூட் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும். வாரத்திற்கு இரண்டு முறை ஒரு கப் நிறைய பீட் ரூட் சாப்பிட வேண்டும். பீட்ரூட் ஜூஸ் செய்தும் குடிக்கலாம். சாலட் அல்லது சூப் என எதாவது ஒரு வடிவில் பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...