Sunday, July 9, 2017

பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்களும்


பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்களும்

S.SETHU RAMAN.B.Sc

பெண்களின் பிறப்புறுப்பின் வழியே 'சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம்.

பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே 'சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.

இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும்.

கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும். இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்.

இந்த நோய் வருவதற்கான காரணங்கள் .......

* தவறான உணவுப் பழக்கங்கள்.

* கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்.

* சுகாதாரமற்ற உள்ளாடைகள்.

* சுய இன்பம் காணுதல்.

* மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்.

* ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள்.

* உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.

* கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள்.

* சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம்.

* ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

* தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.

* சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

* அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப்படுதல் உண்டாகிறது.

* மாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.

* எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

நோயைத் தவிர்க்க :

* உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

* உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

* சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவு முறைகள்:

* உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

* எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.

* மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.

* இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

* தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

* பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.

* சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

* வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.

* அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

* இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

* ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

* நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

* புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது!

* மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி

*♨பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்*

*♨பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்*

பிராய்லர் கோழி யாரும் சாப்பிடவேண்டாம். அதனை சாப்பிடுவதனால் அதிகமாக உடம்பு எடை அதிகமாகிறது. மிக குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர். மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை. அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது.

இதனால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. மிக குறைந்த வயதில் கர்ப்பப்பை பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. பெண்கள் சிறு வயதிலேயே பிராய்லர் கறி கோழி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் உடம்புக்கு நல்லது. உணவில் நல்ல அதிக அளவு காய்கறி எடுத்து கொள்ளுங்கள்.

கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளு க்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இரும்பு சத்துள்ள முருங்கை கீரை, உளுந்த கஞ்சி, மாதுளம் பழம், எல்லா சத்தும் நிறைந்த பழமான கொய்ய பழம் போன்றவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ளுங்கள். நவ்வாப்பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டை நன்றாக குறைக்கும்.

*♨உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்*

*♨உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்*

தற்போதைய அவசர உலகில் ஃபாஸ்ட் புட் மற்றும் ஜங்க் உணவுகளையே பெரும்பாலான மக்கள் தினந்தோறும் சாப்பிடுகின்றனர். இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை அன்றாடம் சாப்பிடுவதால், உடலின் பல முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும், நம்மால் வாயைக் கட்டிப் போட முடியாமல் வாங்கி ஒரு நாளில் ஒன்றும் ஆகாது என்று சாப்பிட்டுவிடுகிறோம். ஆனால் எப்போது இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டாலும், அதனால் தீங்கை கட்டாயம் சந்திக்கக்கூடும். ஃபாஸ்ட் புட் மற்றும் ஜங்க் உணவுகளால் உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய சில ஆரோக்கிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது.

க்ரீன் டீ உணவுகளின் மீதான அதிகப்படியான நாட்டத்தைத் தடுக்கும் மற்றும் ஜங்க் உணவுகளால் உடல் செல்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்கும்.

முட்டை மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஆம்லெட்டை சாப்பிட்டால், அது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மதுவால் உடல் ஆரோக்கியம் பாழாவதைத் தடுக்கும்.

தயிரில் பெர்ரிப் பழங்களைத் துண்டுகளாக்கி, ஜங்க் உணவுகளை உட்கொண்ட பின் சாப்பிட்டால், அது குடலில் அழற்சி அல்லது காயங்கள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தி, செரிமான கோளாறுகள் வராமலும் தடுக்கும்.

ஜங்க் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை உட்கொண்ட பின், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். இதனால் அந்த உணவுகளால் உடலில் சேர்ந்த டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதோடு, வயிற்று உப்புச பிரச்சனையும் தடுக்கப்பட்டு, செரிமானம் சுமூகமாக நடக்கும்.

புதினா அல்லது இஞ்சி கொண்டு தயாரிக்கப்பட்ட டீ குடித்தால், செரிமான பாதைகள் சுத்தமாகி, வயிற்று பிடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

இவற்றில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இதை ஒரு பௌல் உட்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த உடலும் சுத்தமாவதோடு, செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராக இருக்கும்.

நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிக்காய் போன்றவற்றை ஒரு பௌல் சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள நீர்ச்சத்து டாக்ஸின்களை வெளியேற்றி, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை கிடைக்கச் செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

வாழைப்பழத்தில் உள்ள கனிமச்சத்துக்கள், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்கும்.

*வறண்ட சருமம்*

*வறண்ட சருமம்*

பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு இன்னும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படையும் என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்சு.

அதேப்போன்று அரை மூடி எலுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.

தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர வறண்ட சருமம் மின்னுவதை காணலாம்.

வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும். மேற்கூறியவற்றில் உங்களுக்கு எளிமையானதை உபயோகித்து வறண்ட சருமத்தை போக்கி பளபளக்கும் மேனியை பெறுங்கள்.

*♨அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?*

*♨அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?*

தோலின் நிறமானது மெலனின் வகை மற்றும் அளவு, தோல் நிறமியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. தோலின் நிறம் சுற்றுப்புற சூழலை விட மரபணு சார்ந்தே மாறுகின்றது. இந்த அழகு சம்பந்தப்பட்ட அனைத்து கிரீம்களும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி தோலை சேதப்படுத்துவதுடன் இயற்கையாக தோலின் நிறம் அதிகரிப்பதை தடுக்கும்.

"இந்த கிரீம்கள் நிஜத்தில் அழகையோ, நிறத்தையோ தருவதில்லை". இந்த கிரீம்கள் தோலை அதிக சூரிய ஒளியினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாத்து பராமரிக்கின்றது. தோலை வெளுப்பாக்கக் கூடிய ரசாயனம் ஹைட்ரொகுவினோன் கொண்டுள்ளது என்றும் இவை தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களை கொண்டுள்ளது என்றும் நிரூபித்துள்ளது.

பெரும்பாலும் பலர் இருக்கும் இடத்தை பொறுத்தே இந்த கிரீம்கள் அதிகம் விற்பனையாகிறது. சிலர் இந்த கிரீம்களை பற்றிய அறிவுடன் இருந்தாலும் அழகை அதிகப்படுத்த நினைக்கும் ஆசையில் காதுகளை மூடி கொண்டு உபயோகப்படுத்துகின்றனர். பெரும்பாலான விளம்பரங்கள் மக்களின் ஆசையை தூண்டும் விதமாகவே அமைந்துள்ளன. இந்த கிரீம்கள் அதிகம் விற்கப்படுகின்றன.

கிரீம்களில் கலந்துள்ள பொருட்கள்: ஹைட்ரொகுவினோன்-இது தோலை வெண்மையாக்க பயன்படுத்தப்படுகிறது. இது தோலிற்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தும். கோஜிக் அமிலம்-இது 1 சதவிகிதத்திற்கும் குறைவாக சேர்க்கப்படுகிறது. தோலில் மெலனின் உற்பத்தியை தடுக்கும் வைட்டமின் சி வகையை சார்ந்த குணம் கொண்டது.ரெட்டினோயிக் அமிலம்-வைட்டமின் ஏ வகையை சார்ந்த தோலின் மேற்பரப்பு படலங்களை அகற்ற உதவும். இதன்மூலம் தோலின் அடர் நிற செல்கள் நீக்கப்படும்.

இந்த செயல்பாட்டில் தோலின் கீழே உள்ள நிறமி செல்கள் மேலே வருகின்றன. ப்ளாக்பெர்ரி, மல்பெர்ரி, திராட்சை இவற்றின் சாறுகள் தோலை சற்றே கொஞ்சமாக வெண்மையாக்கும். ஸ்டீராய்டுகள், மெர்க்குரி உப்புகள், பிஸ்மத்(ஒரு வகை உலோகம்) ஹைட்ரஜன் பெராக்சைடு, மெக்னீசியம் பெராக்சைடு, வைட்டமின் பி3 அமெரிக்க FDA மற்றும் ஐரோப்பிய ஒன்றியும் அங்கீகரித்த புற ஊதா எ மற்றும் பி கலந்த கலவை.

இவை அனைத்தும் கிரீம்களில் இருக்கும். அனைத்து கிரீம்களில் 2 முதல் 4% ஹைட்ரொகுவினோன் இருக்கும் இதை தினமும் உபயோகித்தால் தோல் மிகவும் உணர்ச்சி மிக்கதாக மாறிவிடும். இந்த கிரீம்கள் மெலனின் உற்பத்தியைத் தடுக்கிறது. இந்த கிரீம்கள் உபயோகிக்காமல் நிறுத்தினால் தோல் பழைய நிறத்திற்கோ (அ) இன்னும் அடர்ந்த நிறத்திற்கோ மாறிவிடும்.

மேலும் இந்த கிரீம்கள் முகத்தில் சமமாக பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் சீரற்ற நிறத்துடனும் புள்ளிகளுடனும் காணப்படும். சில கிரீம்களில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் தீவிரமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மெர்க்குரி நச்சுத்தன்மை-அதிக தாகம்,வயிற்று வலி, ரத்தம் தோய்ந்த வயிற்றுப்போக்கு, பெருங்குடல் அலர்ஜி, மலச்சிக்கல், நடுக்கம், ரத்தசோகை, தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். 40% கிரீம் உபயோகித்தவர்கள் முகத்தில் முடி, வலி, முகப்பரு, தோல் சுருக்கம், வெடிப்பு, அலர்ஜி போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர். இவை பெரும்பாலும் தோல் புற்றுநோய், சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

*அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!*

*'உங்கள் வாழ்வு செழிக்கச் சில அறிவுரைகள்'*
  தொகுத்துத் தருபவர்:💎💎💎💎💎💎💎💎
   Dr. Gouse MD (Acu) அவர்கள்.
 

    *அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்!!* Uswa kbk          🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3🕹. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4🕹. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5🕹. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6🕹. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7🕹. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

8🕹. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு  நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள்.  பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை  சொல்லிக் கொடுங்கள்.

9🕹. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.

10🕹. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11🕹. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12🕹. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13🕹. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 

14🕹. கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15🕹. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16🕹. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.  அதை செயல்படுத்தவும்  முயற்சி செய்யுங்கள்.

17🕹. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18🕹. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.  முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19🕹. குறுகிய கால இந்த வாழ்க்கையில்  யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20🕹. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21🕹. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22🕹. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23🕹. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள்.  உங்கள் மனபாரம் நீங்கும்.

24🕹. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25🕹. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.

26🕹. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27🕹. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28🕹. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29🕹. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
     
30🕹. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!

மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள்..

கல்லீரல்

மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.
அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !
மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான்.
இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.
மற்ற எந்த உடல்
உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.
இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.
நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.
பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும்.
அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.
இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.
இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.
இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.
அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.
மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.
கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.
கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.
கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல்.
அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.
கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.
கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !
இத்தகைய கல்லீரலை காப்பாற்ற
~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~
~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.
உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.
நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.~
கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்
நன்றி.
*NAGA/BNG*

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு:

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு:

1.மத்திய  அரசின் CCRAS RESEARCH DEPARTMENT -ன் 25 வருட ஆராய்ச்சிக்கு பிறகு    ( IME -9 Ayush 82 Research Product)  என்ற ஆயுர்வேதிக் மாத்திரை அறிமுகப்படுத்தியுள்ளது

2. இது சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தக்கூடியது.

3. சர்க்கரை நோய்க்கு எடுத்துக் கொள்ளும் ஆங்கில மருந்தை நிறுத்தாமல்,

  அதனோடு இந்த  IME 9 மாத்திரையை உட்கொள்ளலாம்.

பக்க விளைவுகள் ஏதும் கிடையாது

சர்க்கரையின் அளவு சாதரன நிலைக்கு வந்த பிறகு ஆங்கில மாத்திரையை நிறுத்தி விடலாம்.

ஒரு மாத்திரையின் அரசு விலை ரூ.5.

ஒரு பெட்டியில் 3 மாத்திரை பாட்டில்கள்,
ஒரு பாட்டிலில் 180 மாத்திரைகள் இருக்கும்.

மொத்தம் 540 மாத்திரைகள் விலை ரூ. 2700.

இது முற்றிலும் மத்திய அரசின் CCRAS நிறுவனத்தின் தயாரிப்பு .
This product manufactured by KUDOS LABORATORIES INDIA (100 Years of Experience in Ayurveda) ISO 9001:2008 CERTIFIED(GMP)
சர்க்கரை நோயை பொறுத்தவரை பணக்கார நோய் என்றே கூறுவர் ஏனெனில் மற்ற நோய் வந்தால் அந்த நோயுடன் நின்றுவிடும்...  ஆனால் இந்த நீரழிவு நோய் மட்டும் அதனுடன் சேர்த்து 9 நோய்களை கூட்டி வரும்... அதனால் தான் நம் பொருளின் பெயர் IME -9 (INSULIN MANAGEMENT EXPERT)  சர்க்கரை நோய் மூலமாக வரும் 9 நோய்களுக்கு எதிரி என்று அர்த்தம்....  ஏழை மக்கள் இந்த நோயிலிருந்து விடுபடுவதற்காகவே மத்திய அரசு (CCRAS)  25 வருட ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடித்த ஒரு அற்புதமான பொருள்தான் இந்த AYUSH -82 IME -9... பொருளை பற்றிய தகவல் அறிய
WWW.AYUSH 82.com (or)  WWW.IME 9.Com.....  என்ற இனைதளத்திலும் அறியலாம்.. 
மேலும் விவரங்களுக்கு: 
Suresh
9965767147

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...