Wednesday, February 13, 2019

உணர்வுகளின் இயல்பு ஒரு கண்ணாடியைப் போன்றது ..

உணர்வுகளின் இயல்பு ஒரு கண்ணாடியைப்
போன்றது ..

ஒரு கண்ணாடி எதையும் தீர்மானிப்பதில்லை ..
அப்படியே பிரதிபலித்து விடும் ..

உணர்வுகள் பிளவுபட்டு விடும்போது
அவை மனமாக மாறி விடுகிறது ..

மனம் என்பது ஒரு பிளவுபட்ட
கண்ணாடியைப் போன்றது ..

நீங்கள் விழிப்புடன் உணர்வுடன் இருக்கும்
நேரத்தில் மனம் வீழ்ந்து விடும் .

இருள் ஔி ,
இரவு பகல் ,
வாழ்க்கை இறப்பு ,
அன்பு வெறுப்பு ..

இவை போன்ற எதிர் நிலைகள்
உயிர் நிலைக்குள் அடங்கி உள்ளன ..

நீ உள்ளே பிளவு பட்டிருப்பதால் அவை
வெளியே வேறுபட்டு தெரிகின்றன ..

மனம் என்பது ஒருமை ஆகாது
பிளவுபட்டு இருப்பதையே அது விரும்புகிறது ..

எதிர் நிலை இல்லாமல் மனம் ஒரு பொருளைப்
புரிந்து கொள்வதில்லை ..

வேறுபாட்டின் வாயிலாகத்தான் எதையும்
மனம் பார்க்க பழகியுள்ளது ..

இறப்பே இல்லையென்றால் வாழ்க்கையை
நம்மால் புரிந்து கொள்ளமுடியாது ..

கவலையே இல்லையென்றால் நம்மால்
சந்தோஷத்தை புரிந்து கொள்ள முடியாது ..

மனதிற்கு எதிர்மறை தென்படும் போதுதான்
அது எதையும் புரிந்து கொள்ளும் ..

ஆனால் இருப்பு நிலைக்கு எதிர்மறை
எதுவும் கிடையாது ..

மனம் எதிர்மறையின் வாயிலாகத்தான்
இயங்கும் ..

ஆனால் இருப்புநிலை ஒன்றையே
சார்ந்தது அத்வைதமானது ..

மனம் இரட்டை நிலை கொண்டது
அது துவைதமானது ..

வாழ்க்கையில் மனம்தான் சாத்தானையும்
கடவுளையும் உண்டாக்குகிறது ..

வாழ்க்கையில் ராமனும் ராவணனும்
ஒன்றுதான் ..

ஆனால் மனம்தான் அவர்களை
இரண்டாகப் பிரிக்கிறது ..

இந்த பிளவுபட்ட இரட்டைத் தன்மையை
கடந்து  இருப்பு நிலைக்கு ..

அத்வைத நிலைக்கு ஒருமைக்கு செல்வதே
நமது குறிக்கோள் ஆகட்டும் ..

ஏகமாய் இருக்கும்
உண்மையைத்
தேட வேண்டியதில்லை
ஆநந்தம் பரமானந்தம்
ஆநந்தமாகஇ௫ங்கள்
அருட்சாமி (9442025394)
சமரசசுத்தசன்மார்கம்
ஆநந்தகுடில்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...