Wednesday, February 13, 2019

தீராத விக்கலை நொடியில் நிறுத்தும் கை வைத்தியங்கள் :-*

*தீராத விக்கலை நொடியில் நிறுத்தும் கை வைத்தியங்கள் :-*

*S.S.R*

சிலருக்கு அடிக்கடி விக்கல் ஏற்படும். என்ன செய்தாலும் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நிற்காது. இதற்கு எளிய கை மருத்துவம் உள்ளது.

சீரகத்தையும் (20 கிராம்), திப்பிலியையும் நன்றாக அரைத்துத் தேனில் கலந்து கொடுத்தல் விக்கல் உடனே நிற்கும்.

அரச மரப் பட்டையைச் சுட்டு, சாம்பலைத் தண்ணீரில் கரைத்து, தெளிந்த நீரைக் குடித்தால் விக்கல் பிரச்னை தீரும்.

விக்கல் வரும்போது, சுக்கைப் பொடி செய்து தேனில் குழைந்து நாக்கில் தடவினால் விக்கல் உடனே நிற்கும்.

கடுக்காய்த் தோலைப் பொடி செய்து, விக்கல் வரும் போது, கால் ஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

விக்கலால் அவதிப்படுபவர்கள், கீழாநெல்லிச் செடியின் வேரை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால், சிறிது நேரத்திலேயே விக்கல் நின்றுபோகும்.

தனியா, சோம்பு இரண்டையும் நன்றாக வறுத்து, சுடு தண்ணீரில் கால் ஸ்பூன் அளவுக்குப் போட்டுக் குடித்தால் உடனே விக்கல் நிற்கும்.

*S.S.R*🍓

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...