DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Tuesday, September 13, 2022
இதயத்தை பாதுகாப்போம்!!
இதயத்தை பாதுகாப்போம்!!
24 மணி நேரமும் ஓய்வு இன்றி வேலை செய்யும் ஓர் உறுப்பு நம் இதயமாகும். தாயின் கருவில் முதலில் தோன்றும் உறுப்பும் இதயமே. அன்பு, காதல், இரக்கம், ௧ருணை என அனைத்து உணர்வுகளோடும் நாம் இதயத்தை ஒப்பிடுவோம். இரக்கம், கருணை இல்லாதவரை நாம் இதயமே இல்லாதவன் என்போம். அத்தகைய இதயத்தை பத்திரமாக பாதுகாப்பது நம் கடமை.
உலக அளவில் இதய நோய் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் மாரடைப்பு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மாரடைப்பு காரணமாக உலகம் முழுவதும் 17.3 மில்லியன் மக்கள் இறப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் தான் காணப்படுகிறது. கடந்த 20-ம் நூற்றாண்டில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக இருந்தது. ஆனால் 21-ம் நூற்றாண்டில் 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் இதய நோய்களால் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரும் மாரடைப்புக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைமுறையும், உணவு பழக்கவழக்கங்களும், அதிக மன அழுத்தமும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
மாரடைப்பின் அறிகுறிகள் மற்றும் முதலுதவி:
வயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுத்தல், மூச்சுத் திணறல், மயக்கம், உடல் வலி, சோர்வு , மார்பு பகுதியில் வலி போன்றவை மாரடைப்பின் அறிகுறிகளாகும். மாரடைப்புக்கான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது திடீரென மாரடைப்பு வந்து விட்டாலோ உடனடியாக ஆஸ்பிரின் மாத்திரையை போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பின், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்து இருக்க என்ன செய்ய வேண்டும்:
ஆரோக்கியமான உடல் எடையை தீர்மானிப்பதில் கொழுப்பு, குளுக்கோஸ், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு இருக்கின்றன. அவை சீராக இருப்பதற்கு சத்தான தானிய உணவு வகைகளை தினமும் சாப்பிட வேண்டும்.
இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதற்கு வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ செய்து வருவது அவசியமானது. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் மேற்கொள்வது ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு போன்ற பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாக்கும். இதயத்திற்கும் நலம் சேர்க்கும்.
புகைப்பழக்கம் இதய நோய் பாதிப்பை மூன்று மடங்கு அதிகப்படுத்திவிடும். புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
8 மணி நேர சீரான உறக்கம் அவசியம்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு மரபணு ரீதியிலும் தொடர்பு இருக்கிறது. தந்தையோ அல்லது சகோதரரோ 55 வயதுக்குள் மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அது முதல் தலைமுறையை சேர்ந்த ஆணுக்கு 50 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
மன அழுத்தத்திற்கும், மாரடைப்புக்கும் தொடர்பு உண்டு. திடீரென்று மன அழுத்தம் அதிகரிக்கும்போது இதய நோய் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும்.
ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் அடிக்கடி சரிபார்த்து வர வேண்டும். அவ்வாறு சரிபார்த்து அவைகளை சீராக வைத்துக்கொள்வது இதய நோய் பாதிப்பிலிருந்து விடுவிக்க வழிவகை செய்யும்.
Dr.Justin
🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤
Friday, August 26, 2022
அதிமதுரம் சேர்த்த திரிபலா:
அதிமதுரம் சேர்த்த திரிபலா:
நமது
ஆப்பிள் ஹெல்த் கேர்
நிறுவனம்
வழங்கக்கூடிய
திரிபலா
சூரணம்
அதிமதுரம் சேர்த்தது.
தினமும் நம் உடலுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டிய அருமருந்து.
இதில்
கடுக்காய்
நெல்லிக்காய்
தான்றிக்காய்
மற்றும்
அதிமதுரம்
சேர்த்து
சித்தமருத்துவ பாரம்பரிய முறைப்படி இந்திய அரசாங்கத்தின் ஆயிஷ் அமைச்சகத்தின்
சிறப்பு அனுமதியுடன்
தயாரித்து வழங்குகிறோம்.
ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் நிலை என்பது காலை மாலை இருவேளை உடல் கழிவுகளை வெளியேற்றும் உடலானது ஒரு ஆரோக்கியமான உடல் என்று சொல்லலாம்.
சிலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உடற் கழிவுகள் வெளியேறும் சிலருக்கு உடல் கழிவுகள் ஒருமுறை வெளியேற்றுவதிலும் சிரமங்கள் அதிகமாக இருக்கும் இவர்கள் கண்டிப்பாக தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் இருவேளையும் எடுத்துக்கொள்ள வேண்டியது நமது ஆப்பிள் ஹெல்த் கேர் வழங்கக்கூடிய அதிமதுரம் சேர்த்த திரிபலா சூரணம் சந்தையில் மிகக் குறைந்த விலையில் கூட திரிபலா சூரணம் கிடைக்கின்றன ஆனால் நமது ஆப்பிள் ஹெல்த்கேர் வழங்கக்கூடிய திரிபலா சூரணத்தின் சிறப்பு
மற்ற திரிபலா சூரணம்
கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய்
இவை மூன்று மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும் ஆனால் நமது திரிபலா சூரணத்தின் சிறப்பு அதிமதுரம் சேர்த்தது. கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் தினமும் எடுப்பதனால் கப பிரச்சனை அதாவது சளி பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆனால் நமது திரிபலா சூரணத்தில் அதிமதுரம் சேர்ப்பதனால் கப பிரச்சனை அதாவது சளி பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
மூச்சுப் பிரச்சனை
மற்றும் நுரையீரல் தொற்று
(Lungs infection)
ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
சாப்பிடும் முறை:
காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் ஒரு வெதுவெதுப்பான நீரிலோ அல்லது சுடுநீரில் ஒரு டம்ளர் நீரில் 5 லிருந்து 10 கிராம் வரை அதாவது ஒரு டேபிள்ஸ்பூன் ஒரு ஸ்பூன் அளவு கலந்து சங்கையுடன் (fibre) குடித்து வந்தால் காலை மற்றும் மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
சாப்பிட்ட உணவு சைவமோ அசைவமோ எதுவாக இருந்தாலும் சாப்பிட்ட உணவு நல்ல செரிமானம் ஆகும் மேலும் உடற் கழிவுகளை 2 வேலை வெளியேற்றும் மேலும் பசியை தூண்டும்
சிறு வயது முதல் சாப்பிட்டு உள்ள மருந்துகளின் கழிவுகள் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் தங்கி இருக்கும் அதனையும் கூட சுத்தம் செய்து உடற் கழிவுகளுடன் வெளியேற்றிவிடும். இது வீட்டில் உள்ள அனைவரும் பருக வேண்டிய ஒரு இயற்கை மருந்து.
நன்றி.,
தொடர்புக்கு:
9944444153
Tuesday, July 19, 2022
சைக்கிள் ஓட்டுவதினால் ஏற்படும் நன்மைகள்:
சைக்கிள் ஓடுவதினால் ஏற்படும் நன்மைகள்:
--------------------------------------------------------------------------------
நீண்ட துாரங்களுக்கு பிரயாணம் செய்யவும், மேடு பள்ளங்களிலும், குறுகிய பாதைகளிலும் பிரயாணத்திற்கு சைக்கிள் பயன்படுகின்றது. சாதாரண உடல்நிறையுடைய வளர்ந்த ஒருவர் தொடர்ச்சியாக ஒரு மணித்தியாலயத்திற்கு சைக்கிள் ஓடும்போது 500 – 600 கலோரி சக்திகள் எரிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் சைக்கிள் ஓட விரும்புபவர்கள் வாரத்தில் 2/3 நாட்கள் 20-30 நிமிடகள் வரை மிதமான வேகத்தில் ஓட துவங்கி பின்னர் படிப்படியாக வேகத்தையும் நேரத்தையும் அதிகரித்தால் மேற்கூறிய பலன்களை அடையலாம்.
(1) பைசிக்கிள் ஓடும்போது சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. இங்கு புகையோ, ஒலியோ ஏற்படுவதில்லை. இதனால் சூழலும் மாசுபடுவதில்லை. இதனால் இது ஒரு சுற்றாடலுக்கு நட்பானதும் பாதுகாப்பானதுமான (ENVIONMENT FRIENDLY AND ECO PROTECTIVE) ஒரு முறையாகும்.
(2) தொடர்ச்சியாக சைக்கிள் ஓடுவதால் கட்டுமஸ்த்தான உடம்பை பெற்றுக்கொள்ளலாம். ஜிம்மிற்கு சென்று பல மணி நேரங்களை செலவு செய்வதைவிட, சைக்கிள் ஓடும்போது இலகுவாக விரும்பிய உடலமைப்பு கிடைக்கின்றது.
(3) சைக்கிளோட்டம் ஏரோபிக்ஸ் வகை உடற் பயிற்சிக்குள் வருவதனால், இரத்தக் குழாய்கள், இதயம், நுரையீரல் போன்ற மூன்றையும் ஒன்று சேர இயங்க வைக்கின்றது.
(4) சைக்கிள் ஓடும்போது உடலின் எல்லா பாகங்களும் இயங்குவதால், 30 நிமிடம் ஓடும்போது 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகின்றது. முதல் 10 நிமிடங்களில் வியர்வையினுாடாக கழிவுகள் வெளியேறத் தொடங்குகின்றன. அடுத்த 20 நிமிடங்களில் சக்திக்காக குளுக்கோஸ் எரிக்கப்படுகின்றது. 30 நிமிடங்களில் கெட்ட கொழுப்புக்கள் குறையத் தொடங்குகின்றன. இதன் மூலம் இரத்த ஓட்டம் உடல் முழுதும் சீராகும். இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
(5) மற்றைய உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக பல மணி நேரம் செய்தாலும் அவை மொத்த உடல் உறுப்புக்களை ஈடுபட வைக்காது. ஆனால் சைக்கிள் ஓட்டம் அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்த பலனை உடலுக்கு பெற்றுக்கொடுக்கும்.
(6) தொடர்ச்சியான சைக்கிள் ஓட்டம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
(7) மனம் மகிழ்ச்சியாக இருந்தால் ஆரோக்கியம் அதிகமாகும். ஆரோக்கியம் அதிகமானால் ஆயுள் அதிகரிக்கும் என்பதற்கேற்ப தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் நமது ஆயுளில் ஒரு மணிநேரம் அதிகரிக்கக கூடும் என்று நெதர்லாந்து நாட்டில் உள்ள உட்ரெச் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
(8) உடலின் கீழ் அவயவங்கள், இடுப்பு வளையம் போன்றவைகளுக்கு உறுதியை வழங்குவதுடன், முழங்கால் மூட்டின் அசைவையும் சீராக்கிநமது சீரான இயக்கத்திற்கும், நடமாட்டத்திற்கும் உதவுவதுடன், உடலிற்கு புத்துணர்ச்சியையும் வழங்குகின்றது.
(9) மூட்டுவலியை தொடர்ச்சியான சைக்கிள் பயிற்சியின் மூலம் வெகுவாகக் குறைக்கலாம். உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளும் இறுகும் தன்மை மாறி வலுவான மூட்டாக மாறுகிறது. கை தொடை, முதுகு முள்ளந்தண்டு, இடுப்புப் பகுதி, கால் தசைகள் போன்றவை உறுதியாகின்றன. பாதங்களின் தசைகளும் உறுதியாகின்றது. உடலில் இருக்கும் எலும்புகளை உறுதியாக வைக்கிறது.
(10) உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க தவறியவர்கள் உடல் பயிற்சியின்றி உழைப்பின்றி உடல் பருமனைக் கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் சைக்கிள் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
(11) பொதுவாகவே உடற்பயிற்சி செய்து முடித்த உடன் உடலில் மகிழ்ச்சிக்குரிய ஓமோன் சுரக்கத் தொடங்குகின்றன. இதனால் எப்போதும் மனதில் உற்சாகம் அதிகமாக இருக்கும். இத்தகையவர்களை எப்போதும் சோர்வு, அழுத்தம் என்பது தாக்காது. நேர்மறை எண்ணங்களுடன் வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் கடந்துவிடும் அளவுக்கு உற்சாகத்தை சைக்கிள் பயணம் தருகிறது.
(12) சைக்கிள் ஓடும்போது உச்சி முதல் பாதம்வரையிலான உடலின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் ஒருங்கே செயற்படுவதால், உடலுக்கும் உள்ளத்திற்குமான தொடர்பு அதிகரிக்கின்றது. இதனால் உள நெருக்கீடு (ஸ்ரெஸ்) குறைகின்றது.
(13) உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதிலும், மலச்சிக்கல் வராமலும், குடல்களின் இயக்கம் சீராக இருக்கவும் முக்கியமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் அழகையும் கம்பீரத்தையும் அதிகரிக்கவும் சைக்கிள் பயணம் உதவியாக இருக்கும் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.
(14) சைக்கிள் ஓடும்போது, கால்களின் தசைகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் சீரான குருதி வழங்கலுக்காக, இதயம் சீராக இயங்கி, இதயத்தின் உறுதி 3 – 7 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. வாரத்திற்கு 20 மைல் சைக்கிள் ஓடுபவர்கள் ஏனையவர்களுடன் ஒப்பிடும்போது, இதய நோயின் தாக்கத்திற்குள் உள்ளாவது 50 சதவீதத்தினால் குறைக்கப்படுகின்றது.
(15) சிறந்த ஆரோக்கியமான நுரையீரல் சுகாதாரத்தை மேம்படுத்துகின்றது.
(16) பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது.
(17) சைக்கிளோட்டிகள் சிறந்த துாக்கத்தை பெறுபவர்கள் என் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
(18) மூளையின் ஆரோக்கியத்தை அதிகரித்து, வயோதிப காலத்தில் மூளையில் வருகின்ற நோய்களை இல்லாமல் செய்கின்றது.
(19) கனமான உடம்பை உடையவர்களுக்கு நடைப்பயிற்சி செய்யும்போது கால் மூட்டு தேய்மானம் அதிகம் ஏற்பட வாய்ப்பு அதிகம். சைக்கிள் ஓட்டும்போது இது குறைவு.
(20) எரிபொருட் செலவு குறையும் அல்லது நிறுத்தப்படும்.
(21) வாகனப் பராமரிப்பு செலவு சேமிக்கப்படும்.
(22) தெருக்களில் வாகன நெரிசல் குறைக்கப்படும்.
(23) நேரம் சேமிக்கப்படும்.
(24) விபத்துக்கள் குறையும்.
(25) வாகன நிறுத்துமிடங்களுக்கு ஒதுக்கப்படும் பெரிய இடங்கள் குறையும்.
(26) மற்றைய வாகனங்களை விட மிதிவண்டியில் செல்லும்போது, சூழலையும், மனிதர்களையும் அவதானிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். உறவுகள் மேம்பட வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
(27) ஒவ்வொரு நாளும் மிதிவண்டி ஓடுவராக இருந்தால், கொஞ்சம் அதிகமாக அல்லது இரண்டாவது தடவையும் காலையில் சாப்பிடலாம்.
(28) மிதிவண்டிப் பாவனை, வீதிகள், பாதைகள், தெருக்கள், புவியியல் அமிசங்கள் அதன் அமைவிடங்கள், விரைவாக செல்லக்கூடிய வழிகள் பற்றிய திறனை அதிகரிக்கும்.
(29) சமூகத்தோடு உறவுகளை அதிகரிக்கச் செய்து, புகழ் பெறுவீர்கள்.
(30) மற்றவர்களுக்கு முன்மாதிரியாவீர்கள்.
(31) சைக்கிள் ஓட்டதொடங்கும் முதல் நாளிலேயே 20 கி.மீ வேகத்தைக் கடக்க முயற்சிக்காமல் சிறிது சிறிதாக தூரத்தை அதிகரிக்கலாம். முதலில் 5 கி.மீ தூரம் வரை சைக்கிள் ஓடலாம். அதன் பிறகு படிப்படியாக தூரத்தை அதிகரிக்கலாம். குழந்தைகளும், மாணவர்களும் பாடசாலைகளுக்கு சைக்கிளில் செல்லலாம். வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொருவரும் தங்களது அலுவலகங்களுக்கு சைக்கிளில் செல்ல முயற்சிக்கலாம். இதன் காரணமாக பெற்றோலிய எரிபொருளுக்கான செலவுகள் தவிர்க்கப்பட்டு, வளி மாசடைவதும் தவிர்கப்படும் என்கின்றார்கள் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள். அதே வேளை, சிறு குழந்தைகள், மாணவர்கள் அதீத உடற்பருமனுக்குள்ளாகமல் இருக்கவும், தொடர்ச்சியாக ஒரே இடத்தில் இருந்து செல்ஃபோனில் நேரம் தொலைப்பதையும் தவிர்க்கவும் சைக்கிளைப் பழக்குங்கள் என்கிறார்கள் குழந்தை மருத்துவ நிபுணர்கள்.
Thursday, June 30, 2022
BYE PASS SURGERY தேவையில்லை
Please confirm this message with the contact nos given below.
.
*🫀🫀 நெஞ்சு வலி* சமீபத்தில், ஒருவர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் ஆஞ்சியோகிராஃபி பரிந்துரைத்தனர்.
இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராஃபிக்குப் பிறகு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு முன் இரத்தக்குழாயில் பல அடைப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு பதிலாக, 'பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
🫀அவரது இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுரித்தினர்,அன்று மாலை அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார், 10 - 15 நாட்களுக்குப் பிறகு, அதிக ஆபத்துடன் தான் பைபாஸ் செய்ய முடியும் என எச்சரித்தனர்.
இதற்கிடையில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்த பிறகு, ஒரு குடும்ப நண்பரிடமிருந்து புதிய தகவல் வந்தது.இந்திய மருத்துவ (எய்ம்ஸ்) டாக்டரால் * EECP சிகிச்சை * என அழைக்கப்படும் ஒரு புதிய சிகிச்சை அறிகமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது அது *US FDA & T.N GOVT ஆல் அங்கீகரிக்கப்பட்டது *
🫀 இங்கே,
பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் மற்றும் ஸ்டெட்கள் இல்லாமல் இதய அடைப்புகள் குணமாகும், ஆனால் இந்த மேம்பட்ட *EECP மெஷின் * எந்திரத்தின் உதவியுடன்
இந்த சிகிச்சையின் மூலம், பைபாஸ் செய்ய வேண்டிய ஒரு நோயாளி அவ்வாறு செய்யத் தேவையில்லை.
(இது இயற்கை பைபாஸ் என்று அழைக்கப்படுகிறது)
அதற்கு பதிலாக, நோயாளிக்கு சுமார் 20 பாட்டில்கள் IV திரவங்கள் கொடுக்கப்பட்டு அதில் சில மருந்துகள் செலுத்தப்படுகின்றன.
இந்த மருந்து இதயத்தில் உள்ள இரத்த குழாய்களிலுள்ள அனைத்து அடைப்புகளையும் நீக்குகிறது. நோயாளியின் வயது மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து மருந்து செலுத்தப்படும் பாட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
ஒரு பாட்டிலின் விலை ரூ .2,000/- வரை இருக்கலாம்.
தற்போது, இந்தியாவில் சில மருத்துவர்கள் மட்டுமே இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள DR.S.பிரபு,🫀🫀🫀
முக்கிய மருத்துவமனைகளில் இந்த இயற்கை பை-பாஸ் செய்த(EECP தெரபி) நோயாளிகளின் பட்டியல் அவரிடம் உள்ளது. இதய நோயாளிகள் இந்த புதிய சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் முற்றிலும் நன்றாக இருக்கிறார்கள் மற்றும் குறைந்தபட்ச மருந்துகள் கூட இல்லாமல் சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
இந்த சிகிச்சை கோயம்புத்தூரில் உள்ள
* PGS மருத்துவமனை*. செய்யப்பட்டது
மேலும் தகவலுக்கு
DR. S.பிரபு MD PGDHsc( ECHO)PPHC ( UA)
(General Physician & Preventive Cardiology )
ஆக்கிரமிப்பு & அறுவை சிகிச்சை இல்லாத இதய பராமரிப்பு & மேம்பட்ட வாழ்வியல் தரத்தின் அனுபவம்.
0422 4971331
Mobile : +91 91597 00800
+91 94430 61115
www.pgshospital.com
தயவுசெய்து இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் அது பலருக்கு உதவக்கூடும்.
தயவுசெய்து, இதை பகிராமல் நீக்க வேண்டாம்.
என்னால் முடிந்தவரை அதை அனுப்புகிறேன்.
அது 130 கோடி இந்தியர்களையும், மீதமுள்ளவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்!
*இது யாருக்காவது உதவலாம்.* உங்களால் முடிந்தவரை இதை அனைவருக்கும் பகிருங்கள்.
🙏🏻🙏🙏❤️❤️❤️❤️
Tuesday, March 29, 2022
தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்...!!!
#தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்...!!!
*******************************
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
* சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும்.
அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.
இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
* சீரகத்தின் வேறுசில நன்மைகள்!!
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது,
செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.
Monday, March 28, 2022
கொத்தமல்லி இலைச் சாற்றின் மகத்துவம்*
இரண்டு நாட்களில் இறந்து விடுவார் என மருத்துவரால் கைவிடப்பட்டு, மரணத்தின் வாசலிலிருந்த தனது சித்தப்பாவை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஓர் அற்புதம்
*கொத்தமல்லி இலைச் சாற்றின் மகத்துவம்*
அரவக்குறிச்சி பெரிய ஆஸ்பத்திரி வார்டில் ஒரு கிழிந்த துணி போல படுத்திருந்தார் தாத்தா.
உழைத்து மெலிந்த தேகம்.
84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!
ரவுண்ட்ஸ் வந்த சீஃப் டாக்டர் வீரமணி, தாத்தாவின் கைநாடியை பிடித்து பார்த்துவிட்டு மோவாயை தடவியபடியே... இன்னும் இரண்டு நாள்தான் தாங்குவார் ; சொந்தக் காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க.
வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க என்று கூறியபடியே அவர் பிள்ளைகளின் பெருங் குரலெடுத்த அழுகையை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்...!
ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார் வீரமணி தாத்தா. அவர் மூச்சு எப்போது வேண்டுமானாலும் நின்று விடுவேன் என்று போக்கு காட்டியது...
கட்டிலில் மூச்சு விட சிரமப்பட்டபடி கண்மூடி படுத்திருந்தார் தாத்தா.
தம் தங்கை முறையான தாத்தாவின் மகளிடம் விசாரித்தார் அக்கா...
" சாப்பாடு இறங்குதா..?"
"அப்பப்போ கூழாக ஏதாவது கொடுக்கிறோம். கொஞ்சமா உள்ளே போகுது"
"நான் ஒன்னு சொன்னா கேட்பியா தங்கச்சி"
"சொல்லுக்கா... நான் என்ன செய்யனும்...?"
"எப்படியும் இரண்டு நாளில் இறந்திடுவார்னு டாக்டர் சொல்லிட்டாரு இல்ல. கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்...
இன்னில இருந்து இந்த இரண்டு நாளும் வெறும் மல்லிச்சாறு மட்டுமே கொடுப்போம். அது கழிவுகளை வெளியேத்தி,
புது ரத்தத்தை ஊற வைக்கும். சித்தப்பா எழுந்து உட்காருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!" சரோஜா அக்காவின் கண்களில் அத்தனை உறுதி.
அவர்கள் குடும்பத்தில் சரோஜா அக்கா மீது மிகுந்த மரியாதை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அந்த குடும்பத்தின் ஆணிவேர் வீரமணி தாத்தா. அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்தால் அதுபோல வேறு சந்தோசம் உண்டா..?
அக்காவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். வீட்டில் மல்லிச்சாறு தயாரானது.
ஓர் எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் அங்கும் இங்கும் ஓடினர். தாத்தாவை மடியில் கிடத்தி மால்லிச் சாறை அவர் வாயில் சிறிது சிறிதாக புகட்டினர்.
இரண்டுநாள் முழுக்க மல்லிச்சாறு மட்டுமே..! இடையிடையே கொஞ்சமாய் பழச்சாறும்.
டாக்டர் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. நாளை விடியலில் தாத்தா உயிரோடு இருப்பாரா ? என்கிற பதைபதைப்பில் உறவினர்கள் எல்லாம் தாத்தாவையே சுற்றி வந்தனர்.
இரவு உறங்கி போனது...!
மூன்றாம் நாள் விடியலில் நெஞ்சு திக்... திக்.. என அடித்துக் கொள்ள சொந்தங்கள் தாத்தாவை நெருங்கிச் சென்றனர்.
கண்மூடி படுத்திருந்தவர்...
ஓர் இருமலோடு விழித்து கொண்டார்
ஓடு... மல்லிஜுஸ் எடுத்துட்டு வாங்க... ஐயாவுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ குரல் ஒலித்தது...
மீண்டும் ஓர் இருமல் இருமியபடி தாத்தா எழுந்து உட்கார்ந்தார்.
"ஏன் புள்ள என்ன பார்த்து அழுதுகிட்டு நிக்கித. எதுக்கு இம்புட்டுபேரு வந்திருக்காங்க" தன் மனைவியை கேள்வியோடு பார்த்தார் வீரமணி தாத்தா.
இந்த எண்பத்தாறு வயதிலும் ஆரோக்கியமாய் இருக்கிறார். நாம் பார்க்கச் சென்ற நேரம் மனிதர் கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தார். எவர் துணையுமின்றி எழுந்து நடமாடுகிறார்.
தொடர்ந்து..." இந்த மல்லிச் சாறை எல்லா ஏழை, பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரக் கணக்குல செலவு பண்ணியும் குணமாகாத என் நோய் இந்த மல்லிச் சாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர் நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்
அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி ?!
நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,
தேங்காய் - 1 ,
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
இதன் கூட தேவையான அளவு தண்ணீர், நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.
இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது.
(1) வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு, உப்பும், மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.
(2) கொத்துமல்லி இலைச்சாறுடன், பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.
(3) கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.
இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.
வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.
இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.
இதை அனைவரும் பருகலாம்,
தினமும் தண்ணீருக்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.
கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து உபயோகிக்கலாம்.
ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.
Tuesday, March 8, 2022
சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.
நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்...
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.
"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.
நன்றி:
Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S.
கிளினிக்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் .9865224588
(தவறாமல் SHARE பண்ணுங்கள் )
Monday, February 28, 2022
நோய் தீர்க்கும் பனங்கிழங்கு பால் கலவை பயன்கள்* 🌿🥛🥛
* நோய் தீர்க்கும் பனங்கிழங்கு பால் கலவை பயன்கள்* 🌿🥛🥛
✅மலச்சிக்கள் மற்றும் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
✅ சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தீர்வு
✅உடல் வெப்பத்தை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
✅இதில் ஒமேகா-3 இருப்பதன் காரணமாக உடல் எடையை (கழிவுகளை) குறைக்கிறது.
✅உடல் உள் உறுப்புகளை பலப்படுத்தும்.
வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்புகளை படிப்படியாக குறைக்கும்.
✅ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
✅எலும்பு வலுப்பெறும்.
✅ இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
நாளொன்றுக்கு ஒன்று முதல் இரண்டு வேளை 5 கிராம் Fiberovitaவை பால் அல்லது தேங்காய் பால் அல்லது சுடு தண்ணிருடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.
*சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று வேளை 5 கிராம் Fiberovitta வை சுடு தண்ணிருடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.*
*Benefits of Fiberovita - Palmyra Sprout Powder *
👉Rich in protein, iron folic acid, antioxidants & omega-3
👉Low in Fat & 0% Cholesterol
👉 Very high in nutrients, but very low in calories
👉Powerful booster for the immune system
1. Best cure for diabetes (stimulates insulin secretion)
2. Cures constipation & indigestion
3. Reduces body heat
4. Promotes weight loss (presence of ALNA, Omega-3) morning.
250 g ₹299 + Courier
கருப்பட்டியின் நன்மைகள்
Panamkarupatti
Any one need
Pl cal
9443249468
7904600019
Mini order..3 kg
கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
கருப்பட்டியின் மருத்துவ குணங்கள்
Advertising
Advertising
கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள்.
மேலுக்கு சுகமில்லாதபோது கொஞ்சம் கருப்பட்டியை தட்டி போட்டு காபி தூள் கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மேல் வலி எல்லாம் குறைஞ்சு சுறுசுறுப்பாகிவிடுவர். அந்தளவிற்கு கிராமத்து பகுதிகளில் கருப்பட்டி உபயோகம் பெரும்பாலும் காபி போடத்தான் பயன்பட்டது. அதுபோல் சில பகுதிகளில் இனிப்பு பலகாரங்கள் செய்ய கருப்பட்டி மட்டுமே பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.
நாம் தமிழ்நாட்டு மக்களோடு ஒன்றிணைந்த கருப்பட்டி பயன்பாடு சர்க்கரை வந்த பிறகு பெரும்பாலும் குறைந்து விட்டது. தற்போது மீண்டும் மக்களிடம் கருப்பட்டி பயன்பாடு அதிகரித்து உள்ளதன் காரணமாக அது குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
கருப்பட்டி எனும் பனை வெல்லம்
பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இதனை பனை வெல்லம், பனாட்டு, பனை அட்டு என்று சொல்வார்கள். தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் பனை மரங்கள் மூலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். பங்குனி, சித்திரை மாதங்கள் பதநீர் இறக்குவது அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் கருப்பட்டி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
வட்ட வடிவிலான இரும்பு பாத்திரமே கருப்பட்டி காய்ச்ச பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தாச்சு என்று பெயர். இதில் சுமார் 15 லிட்டர் பதநீரை ஊற்றி இரண்டு மணி நேரம் கிளறி பதம் வந்ததும் எடுத்து அச்சுகளில் வார்த்து எடுத்தால் அதிகபட்சம் 3 கிலோ அளவிற்கே கருப்பட்டி கிடைக்கும். இதன் காரணமாக கருப்பட்டி உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கே மேற்கொள்ளப்படும். ஆனால் ஆண்டு முழுவதும் சில்லு கருப்பட்டியின் தேவையுள்ள காரணத்தால் அதில் ஏராளமான கலப்படங்கள் செய்து விற்பனைச் செய்யப்படுகின்றன. எனவே, கருப்பட்டி வாங்கும்போது நல்ல தரமான கருப்பட்டி தானா என்பதை கண்டறிந்து வாங்குதல் வேண்டும்.
தரமான கருப்பட்டி கண்டறியும் முறைகள்
நல்ல தரமான கருப்பட்டி என்பது சீக்கிரமாக கரையாது. தண்ணீரில் ஒரு துண்டு கருப்பட்டியை போட்டால் அது முழுதாக கரைய ஒன்றரை மணி நேரம் ஆகும். போலியான கருப்பட்டி என்பது சீக்கிரமே கரைந்து விடும்.
கருப்பட்டியை நாவில் வைத்து சுவைக்கும்போது கரிப்பு தன்மையுடன் கூடிய இனிப்பு சுவையாக இருக்கும். அதுபோல் கருப்பட்டியில் உட்புறப் பகுதி என்பது கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலானதாக இருக்கும். இதுவே பளபளப்பாக காட்சி தந்தால் அது போலி கருப்பட்டி என்பதாகும்.
அதுபோல் விவரமறிந்தவர்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து சோதித்து பார்த்து வாங்குவது நலம். ஏனென்றால் உற்பத்தி குறைவு, பனை மரம் இன்மை போன்றவைகளால் சற்று விலை கூடுதலாக தான் கருப்பட்டி கிடைக்கும்.
கருப்பட்டியில் மருத்துவ குணங்கள்
கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.
கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.
கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.
கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும்போது நல்ல பசி ஏற்படுகிறது. குழந்தைகள் உணவு சாப்பிடாடல் அடம் பிடிக்கும்போது சீரக கருப்பட்டி உருண்டையை செய்து கொடுத்து விடுங்கள் பிறகு குழந்தைகள் நன்றாக சாப்பிட ஆரம்பித்து விடும். காலசூழலில் கருப்பட்டி பயன்பாடு குறைந்து விட்ட போதிலும் தற்போது மீண்டும் கருப்பட்டி பலகாரங்கள் பல கடைகளில் கிடைக்க ஆரம்பித்துள்ளன.
Friday, January 21, 2022
தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டு பிடிக்கலாம். அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.
*Important!!!*
தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டு பிடிக்கலாம். அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.
செல்போன் தவற விட்டால் பதறாமல் இருந்த இடத்தி லிருந்தே கண்டுபிடித்து விடலாம்.
அதுமட்டும் இல்லாமல், நம்முடைய தனி மனித இரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் ஃபைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....!
அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும்.
தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும்.
ஆச்சரியமாக இருக்கிறதா?
இது உண்மை.
இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
Find my device
Find my device மூலம் இதை எளிதான செய்ய முடியும்.
முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்..
பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டும்.
உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.
அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound, lock, erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.
ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map மூலமாக தெரியவரும்.
play sound கிளிக் செய்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.
lock ஆப்சனை கிளிக் செய்தால் செல்போன் லாக் ஆகி விடும்.
erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.
இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.
அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
By K.VisvaKaviarasan-
Police Department,
Chennai.
Tuesday, January 18, 2022
திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது...??
*திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது...???*
சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்..
அவர் ஒரு ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டும் கூட! தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது..
அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை. சிறுநீர் போக வேண்டும் போல அவரின் அடி வயிறு முட்டிக் கொண்டு இருக்கிறது. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை. இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்து விடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும் தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது.
டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர் தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
"நான் இப்போது புறநகர்ப் பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணி போல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.
‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன அந்த நேரம் பார்த்து இன்னொரு போன்.
அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது..
போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக் குள்ளாக்கும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈஎன்டி மருத்துவர்.
‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா கவலைப்படாதே.. சரி, நான் சொல்வது போல செய், வந்து விடும்!" என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.
‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும் போது உன் ரெண்டு கைகளை அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பது போல ஆக்சன் செய் இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.
என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர் வெளிவர ஆரம்பித்து விட்டது. அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈஎன்டி மருத்துவருக்கு!!
‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடி விட்டார்.
அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத் தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம்.
அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்!
நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில் இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன்
Excellent article just read
--- just forwarded as recd.
Shared: Nature medicine group 🙋🏻♂🙋🏻♂🙋🏻♂🙋🏻♂
பயனுள்ள பதிவு ...
பயன் பெறுங்கள்...
அவசியம் பகிருங்கள்...
Friday, January 14, 2022
இயற்கை பைபாஸ் NO HEART SURGERY
சமீபத்தில், ஒருவர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் ஆஞ்சியோகிராஃபி பரிந்துரைத்தனர்.
இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராஃபிக்குப் பிறகு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு முன் இரத்தக்குழாயில் பல அடைப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு பதிலாக, 'பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
🫀அவரது இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுரித்தினர்,அன்று மாலை அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார், 10 - 15 நாட்களுக்குப் பிறகு, அதிக ஆபத்துடன் தான் பைபாஸ் செய்ய முடியும் என எச்சரித்தனர்.
இதற்கிடையில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்த பிறகு, ஒரு குடும்ப நண்பரிடமிருந்து புதிய தகவல் வந்தது.இந்திய மருத்துவ (எய்ம்ஸ்) டாக்டரால் * EECP சிகிச்சை * என அழைக்கப்படும் ஒரு புதிய சிகிச்சை அறிகமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது அது *US FDA & T.N GOVT ஆல் அங்கீகரிக்கப்பட்டது *
🫀 இங்கே,
பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் மற்றும் ஸ்டெட்கள் இல்லாமல் இதய அடைப்புகள் குணமாகும், ஆனால் இந்த மேம்பட்ட *EECP மெஷின் * எந்திரத்தின் உதவியுடன்
இந்த சிகிச்சையின் மூலம், பைபாஸ் செய்ய வேண்டிய ஒரு நோயாளி அவ்வாறு செய்யத் தேவையில்லை.
(இது இயற்கை பைபாஸ் என்று அழைக்கப்படுகிறது)
அதற்கு பதிலாக, நோயாளிக்கு சுமார் 20 பாட்டில்கள் IV திரவங்கள் கொடுக்கப்பட்டு அதில் சில மருந்துகள் செலுத்தப்படுகின்றன.
இந்த மருந்து இதயத்தில் உள்ள இரத்த குழாய்களிலுள்ள அனைத்து அடைப்புகளையும் நீக்குகிறது. நோயாளியின் வயது மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து மருந்து செலுத்தப்படும் பாட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
ஒரு பாட்டிலின் விலை ரூ .2,000/- வரை இருக்கலாம்.
தற்போது, இந்தியாவில் சில மருத்துவர்கள் மட்டுமே இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள DR.S.பிரபு,🫀🫀🫀
முக்கிய மருத்துவமனைகளில் இந்த இயற்கை பை-பாஸ் செய்த(EECP தெரபி) நோயாளிகளின் பட்டியல் அவரிடம் உள்ளது. இதய நோயாளிகள் இந்த புதிய சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் முற்றிலும் நன்றாக இருக்கிறார்கள் மற்றும் குறைந்தபட்ச மருந்துகள் கூட இல்லாமல் சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
இந்த சிகிச்சை கோயம்புத்தூரில் உள்ள
* PGS மருத்துவமனை*. செய்யப்பட்டது
மேலும் தகவலுக்கு
DR. S.பிரபு MD PGDHsc( ECHO)PPHC ( UA)
(General Physician & Preventive Cardiology )
ஆக்கிரமிப்பு & அறுவை சிகிச்சை இல்லாத இதய பராமரிப்பு & மேம்பட்ட வாழ்வியல் தரத்தின் அனுபவம்.
0422 4971331
Mobile : +91 91597 00800
+91 94430 61115
www.pgshospital.com
தயவுசெய்து இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் அது பலருக்கு உதவக்கூடும்.
தயவுசெய்து, இதை பகிராமல் நீக்க வேண்டாம்.
என்னால் முடிந்தவரை அதை அனுப்புகிறேன்.
அது 130 கோடி இந்தியர்களையும், மீதமுள்ளவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்!
*இது யாருக்காவது உதவலாம்.* உங்களால் முடிந்தவரை இதை அனைவருக்கும் பகிருங்கள்.
*நன்றி 🙏🙏*
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...