Saturday, March 27, 2021

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்

 பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்

பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

மெலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம்

 ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம்

துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பலமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல் படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது..

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும் பயன்படுகிறது-. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் மரத்தின வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் சுரவெதிரியில் இருந்து குணம் பெறலாம். துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது. கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும்.

இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும். மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.இந்த பழத்தில் கொண்டுள்ள பாஸ்பரஸ் பல் சுகாதாரத்திற்கு உதவுகிறது. துரியன் பழத்தில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான வைட்டமின் சி உள்ளதால் முதிர்ச்சியை தடுத்து இளமையை தக்க வைத்துக்கொள்கிறது.

துரியன் பழம் பைரிடாக்சின் உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால் தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.. உடலில் ஏற்படும் கட்டிகளை தடுக்கிறது. காப்பர் மற்றும் ரிபோப்லாவின் கொண்டுள்ளதால் தைராய்டை பராமரித்து ஒற்றைதலைவலிக்கு நிவாரணம் அளித்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது. துரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு வழங்குகிறது. தயாமின் மற்றும் நியாமின் கொண்டுள்ளதால் பசியை தூண்டுகிறது. படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது.

48 நாளில் எய்ட்ஸ் மற்றும கேன்சர் ஐ குணமடைய வைக்கும் மூலிகை

 48 நாளில் எய்ட்ஸ் மற்றும கேன்சர் ஐ குணமடைய வைக்கும் மூலிகை..! உலக ஆராட்சிக்கே சவால் விடும் நம் தமிழரின் கண்டுபிடிப்பு, எளிதில் கிடைக்கும் அந்த மூலிகையின் பெயரை கூறுகின்றார்....

கொட்டக்கரந்தை.
மூலிகையின் பெயர் –: கொட்டக்கரந்தை.
தாவரவியல் பெயர் -: SPHOERANTHUS MIRTUS.
;தாவரக்குடும்பம் -: ASTERACEAE.
வேறு வகைகள் -: 1. SPHOERANTHUS SENEGACENSIS. 2. SPHOERANTHUS ANGOLENSIS. 3. SPHOERANTHUS HIRTUS.
4. SPHOERANTHUS POLYCEPHALUS.
வேறு பெயர்கள் - விஸ்ணுகரந்தை. மொட்டப்பாப்பாத்தி, நாறும் கரந்தை என்பன. ஆங்கிலத்தில் EAST INDIAN GLOBE-THISTLE & RICE FIELD WEED.
பயன்படும் பாகங்கள் -: செடிமுழுதும்.
வளரியல்பு -: கொட்டக்கரந்தை ஈரமான வளமான இடங்களில் வளரக்கூடியது. முக்கியமாக வயல்களில் நெல்லுடன் கழையாகவும் வரப்போரங்களிலும் வளரக்கூடியது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா. இது சுமார் 30-60 செ.மீ.உயரம் வளரக்கூடியது. பற்களுள்ள நறுமணமுடைய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட சிறு செடி. இது அதிக கிளைகளைக் கொண்டிருக்கும். தண்டு உருண்டையாக இருக்கும். இலையின் நீளம் 2-7 செ.மீ ம், அகலம் 1 – 1.5 செ.மீ. கொண்டது. பிரவுன் மற்றும் பச்சையாக இருக்கும். பூ தனியாக தண்டின் உச்சியில் குஞ்சம் போன்று சிறு பந்து போன்று உரண்டையான சென்நிறப் பூ கொத்தினை உடையது. பூ உருண்டையாக கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். வெளிபக்கப்பூ பெண் பூக்கள் மத்தியில் நீண்டிருபது தன்மகரந்தசேர்க்கையைக் கொண்டது. நவம்பர் முதல் மார்ச்சு வரை பூத்துக் காய்க்கும். பழம் வாசனையுடையது, குவிந்திருக்கும். நாட்பட்டால் வாசனை மறைந்து விடும்.
மருத்துவப்பயன்கள் -; கொட்டக்கரந்தை மலமிளக்கவும், தாது வெப்பு தணிக்கவும் பயன்படும். நுரையீரல் நோய், யானைக்கால் வியாதி, இரத்த சோகை, கற்பப்பையில் வலி, மூலம், ஆஸ்த்துமா, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி, இருமல், விரைவீக்கம் நோய், மூத்திரப்போக்கு, பெருகுடல் வலி, கொங்கை தளர்ந்து தொங்குதல், பைத்தியம் மற்றும் 'எயிட்ஸ்'ஆகிய நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வண்டுகடி, இருதய நோய் குணமாகும். இதன் வேரில் ஆயில் எடுத்து உடம்பின் மேல் பூசினால் கண்டமாலை (Scrofula) குணமாகும். பூ கண் பார்வையை அதிகப்படுத்தும். தோல் வியாதி குணமடையும். இதன் விதை மற்றும் வேரின் பொடி குடல் புழுவை (Anthelmintic) அழிக்கும்.
கொட்டக்கரந்தையின் பூக்காத செடிகளைப் பிடுங்கி நிழலில் உலர்த்தி. பொடி செய்து 5 கிராம் பொடியுடன் சிறிது கற்கண்டுப் பொடி கலந்து சாப்பிட்டு வர வெள்ளை உள் ரணம்,, கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். நீடித்துச் சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றைப் பலப்படுத்தும்.
மேற்கண்ட பொடியுடன் கரிசிலாங்கண்ணிப் பொடி சமன் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர இள நரை தீரும். உடல் பலம் பெறும்.
‘கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு----------
வெட்டைதணியுமதி மேகம்போம் – துட்டச்------------------------
சொறிசிரங்கு வன்கரப்பான் றோன்றா மலப்பை----------------
மறிமலமுந் தானிறங்கு மால்.’
குணம் – கொட்டைக் கரந்தைக்கு வெள்ளை, ஓழுக்குப் பிரமேகம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் இவைகள் நீங்கும். வெளிவராமல் தங்கிய மலத்தைப் போக்கும்.
காய் விடுவதற்கு முன் பயன் படுத்துதல் அதிக பலன் தரும். இதன் பட்டையை அரைத்து மோரில் கலந்து உட்கொள்ள மூலத்திற்கு நல்லது. இதன் சமூலம் தலை, மூளை, இருதயம், நரம்பு இவைகட்குப் பலத்தைக் கொடுக்கும். கசாயமாகச் சாப்பிடப் பைத்தியம், கிரந்தி போம். இக் கசாயத்தோடு சீரகத்தைப் பொடித்துப் போட்டு உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் போம். இதன் சமூலத்தில் சாற்றைச் சூதகத்திற்குச் சுருக்கக் கொடுக்க வெள்ளிக் கம்பியைப் போலாகும். சித்த நூல் படி இதன் சமூலத்தின் ரசமும், இலை ரசமும், வாத முறைக்கும் கற்பமுறைக்கும் மிக்க உபயோகமுள்ளது. ஆயை இராமமூர்த்தி கூறுகிறார் இதன் இலையை நன்கு அறைத்து கசாயமாக 48 நாட்கள் குடித்தால் எயிட்ஸ் என்னும் நோய் குணமாகும் என்கிறார். இது சித்தர்கள் கூற்றாம்.

பூண்டின் பிரமாதமான மருத்துவக் குணங்கள்

 பூண்டின் பிரமாதமான மருத்துவக் குணங்கள்

நம் சமையலறை அலமா‌ரி‌யி‌ல் உள்ள ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு எப்போதும மு‌ன்னு‌ரிமை உண்டு.

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம்.

பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.

பூண்டை உணவில் சேர்த்தால் நல்லது. ஆனால் அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன. அதனால், அப்படியே கடித்து விழுங்குவது மிகவும் நல்லது.

தொண்டை கரகரப்பாக இருந்தால் நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விட்டால் உடனே சரியாகும். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால் சர்க்கரை அளவை சீராக்குகிறது. இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு. மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும் அலர்ஜி நீங்கிவிடும். பல் வலி வந்தால் ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் பல்வலி போய்விடும்.

தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டால் ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் என எதுவும் வராது.

பூண்டு சாப்பிட்டால் மூச்சு விட்டாலும் அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது

மரு.கிருஷ்ணன்

பித்தப்பை கற்களை இயற்கை முறையில் அகற்ற எளிய வழி

 பித்தப்பை கற்களை இயற்கை முறையில் அகற்ற எளிய வழி

புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.
pi
ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும்.
பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.
ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.
அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.
மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

மாதவிலக்கை சீர்படுத்தும் கழற்சிக்காய்..!!!

 *OrganicVillage 9884122255/9841722255*

மாதவிலக்கை சீர்படுத்தும் கழற்சிக்காய்..!!!

காய்ச்சலை குறைக்க கூடியதும், கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதும், மாதவிலக்கை சீர்படுத்த வல்லதும், கர்ப்பபை கோளாறுகளை குணப்படுத்த கூடியதுமான மருத்துவ வகைகளில் ஒன்று கழற்சிக்காய். கழற்சிக்காய் கடினமான ஓட்டை உடையது. கழற்சி கொடியில் கூர்மையான முட்கள் இருக்கும்.

காடுகளில் வளரக் கூடியது. வைரத்தை போன்ற கடுமையான விதையான இது காய்ச்சலை குறைக்க கூடியது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வீக்கத்தை குறைக்கும் கழற்சிக் காயானது, சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ரத்த போக்கை நிறுத்தக்கூடியது. மலேரியா காய்ச்சலை போக்கும்.கழற்சிக்காயை பயன்படுத்தி கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.

கால் ஸ்பூன் அளவுக்கு பொடியுடன், சிறிது பெருங்காயம், அரை கப் மோர், சிறிது உப்பு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில், 48 நாட்கள் குடித்துவர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். ஈரல் பலப்படும். வயிற்று புண்கள் ஆறும். வயிற்று வலி குணமாகும். வாயுவை வெளித்தள்ளும். விரைவாதம் குணமாகும். கழுத்து, கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். தைராய்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கழற்சிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 பங்கு அளவுக்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகுப் பொடி ஆகியவற்றை கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தினமும் மூன்று விரல்களில் எடுக்கக்கூடிய அளவுள்ள பொடியை, 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும். வயிற்று வலி குணமாகும்.

கழற்சிக்காய் குழந்தையின்மைக்கு மருந்தாகிறது. கர்ப்பபை கோளாறுகளை சரிசெய்ய கூடியது. வயிறு, இடுப்பு வலியை போக்க கூடியது. எந்தவகையான காய்ச்சலையும் குணப்படுத்தும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

யானைக்கால் நோயை குணப்படுத்தும். கால்களில் நரம்புகள் தடித்து இருக்கும் நிலையை போக்கும். உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்கும். கழற்சிக்காயை பயன்படுத்தி வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண் ணெய்யுடன் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்து கொள்ளவும். இதை தடவுவதன் மூலம் மூட்டு வீக்கம், தொண்டை வீக்கம், விரைவாதம் சரியாகும். எந்தவொரு வீக்கத்தையும் போக்கும். வயிற்று வலியை குணமாக்கும் தன்மை கொண்டது கழற்சிக்காய். நெறிகட்டை சரிசெய்யும். நெறிக்கட்டால் வரும் காய்ச்சலை போக்கும். கருச்சிதைவு ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் கழற்சிக்காயை எடுத்துக் கொள்ள கூடாது. கழற்சிக்காய் இலையை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலை களை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். முட்கள் இருக்கும் என்பதால் இலையை பாதுகாப்பாக சுத்தப்படுத்துவது அவசியம். இலைகளை, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் வதக்க வேண்டும். இதை வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்கவும். வீக்கம், வலி குறையும். மூட்டு வலி சரியாகும். கழற்சிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இது மலேரியா காய்ச்சல், மனபிரமைக்கு மருந்தாகிறது.

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*OrganicVillage*

சிறுநீரக செயலிழப்புக்கு தீர்வு

 சிறுநீரக செயலிழப்புக்கு தீர்வு

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூனை மீசை மூலிகை , நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செயற்கை உரங்களின் பயன்பாட்டால் நம் உண்ணும் உணவுகள் விசமாகிக்கொண்டுஇருக்கின்றன , நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சு பொருட்கள் நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கின்றன , ஒரு கட்டத்தில் அதனால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றன .ஆனாலும் நாம் தினமும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டஉணவுகளைவாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம் , முடிந்தவரை அந்தநட்சுபோருட்களின் தாக்கத்தை குறைத்து நம்மை பாதுகாத்து கொள்வதே இப்போது இருக்கும் தற்காலிக வழி . இதற்கு தினமும் பூனை மீசை தேநீர் அருந்துவது நல்ல பயனளிக்கும் .இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யலாம் மேலும் இதன் பயன்கள் பல.

இந்த பூனை மீசை மூலிகை பயன்படுத்தினால் சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும்.

பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின்செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை (ஜாவா டீ ) என்றும் அறியப்படும் Orthosiphon stamineus, பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரமாக உள்ளது . மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது .மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல் படுகிறது . தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது , சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது, கட்டுப்பாடில்லாசர்க்கரை நோய்,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது, சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை . இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இலாதவரும் பயன்படுத்தலாம் . இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள் . தினசரி 2 வேலை பயன்படுத்துவதால் மேற்கண்ட அணைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது , மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்கிறது.இந்த டீ தயாரிக்க 1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும் . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் பனைவெல்லம்  சேர்த்துகொள்ளலாம் .

சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது . தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்யமாக வாழலாம்..இந்த பூனை மீசை மூலிகை ஒரு சிறு நீரக சீரமைப்பு மூலிகை தேவைபடுபவர் கேட்கலாம், என்னிடம் உள்ளது .... my Mail ID : seeliexim@gmail.com
mob: +91 9942505652.

சிறுநீரகத்தைக் காக்க 8 வழிமுறைகள்

சிறுநீரகத்தைக் காக்க 8
வழிமுறைகள்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

சிறுநீரக செயல் இழப்பு சிலருக்கு திடீரென்று ஏற்படும். சில நேரங்களில் சிலருக்கு நாள்பட்ட நோயின் விளைவால் ஏற்படும். எப்படியிருந்தாலும் சிறுநீரகம் மிக கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு ஆகும்.
  
♦உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரியுங்கள்  

♦ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, உயராமல் பார்த்துக் கொள்ளுங்கள்  

♦ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள்  

♦புகைப் பிடிக்காதீர்கள்  

♦பொட்டாசியம் அல்லது உப்பு அதிகமாக கலந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ளுங்கள்  

♦போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்  

♦தினசரி முறையான உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யுங்கள்  

♦சுயமருத்துவம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்


அசுத்தமான நுரையீரலை சுத்தம் செய்யும் ஓர் அற்புத மருந்து!*

 *🔔🐎அசுத்தமான நுரையீரலை சுத்தம் செய்யும் ஓர் அற்புத மருந்து!*

Thu, Aug 11, 2016, புகைப்பிடித்தல் என்பது மோசமானபழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அக்கெட்ட பழக்கத்தைக் கைவிட முடியாமல் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் இன்றைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையினால், மனதில் உள்ள பாரத்தைக் குறைப்பதற்காகவே பலர் புகைப்பிடிக்கின்றனர்.மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?இப்படி புகைப்பிடிப்பதால், நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, அதனால் நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றால் நாள்கணக்கில் அவஸ்தைப்படக்கூடும். புகைப்பிடித்தால் மட்டும் தான்நுரையீரலில் பிரச்சனைகள் வரும்என்பதில்லை. அதை சுவாசித்தாலும் தான் பாதிப்பு ஏற்படும்.நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க...ஆகவே சிகரெட் புகையினால் பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஓர் அற்புதமான நாட்டு மருந்து ஒன்று உள்ளது.தேவையான பொருட்கள்:மஞ்சள் தூள் - 2 டேபிள் ஸ்பூன்பூண்டு - 400 கிராம் (பொடியாக நறுக்கியது)இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)நாட்டுச்சர்க்கரை - 400 கிராம்தண்ணீர் - 1 லிட்டர்

மஞ்சள்!

இந்த மருந்தில் சேர்க்கப்படும் மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மைகள் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள்நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை நேரடியாக அதிகரிக்கும். மேலும் ஆய்வுகளும் மஞ்சள் நுரையீரலில் உள்ள பிரச்சனைகளைக் குணப்படுத்துவதாக கூறுகின்றன.  

            பூண்டு!!!

பூண்டில் உள்ள அல்லின், உடலினுள் செல்லும் போது அல்லிசினாக மாறி, பூஞ்சை மற்றும் பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, நுரையீரலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலுக்கும் ஓர் நல்ல பாதுகாப்பை வழங்கும்.

       இஞ்சி !!!      
 
இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்னும் உட்பொருள், நுரையீரலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழித்து, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இஞ்சி, நுரையீரலில் உள்ள சளியை முறித்து உடலில் இருந்து வெளியேற்றும்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் நீர் ஆகியவற்றை சேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கவும்.

பயன்படுத்தும் முறை! 

இந்த கலவையை தினமும் இருவேளை உட்கொள்ள வேண்டும். அதில் அதிகாலையில் எழுந்ததும் காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். பின் இரவு உணவு உண்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.குறிப்புஇந்த நாட்டு மருந்தை உட்கொண்டு வரும் போது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் இருந்து டாக்ஸின்களும் வெளியேற்றப்படும்.🐎🔔

அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால்

 மிகவும் முக்கியம்......

அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........

(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.

(2) மருந்து பெயரை தேடவும்...........

(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.

(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......

(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.

(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......

(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....

(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.

ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......

இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற

சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........

உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......

அன்புக்கு விலை இல்லை.....மற்ற குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்...

சீரகம்:-உடலில் இருக்கும் *கழிவுகள்,அசடுகள்* போன்றவற்றை நீக்கும். *இரத்தம் சுத்தமாகும்.*

 *Organic Village 9884122255/9841722255*

சீரகம்:-
   சீரகத்தை திரித்து முதல் நாள் இரவில் 250மில்லி ஆறிய வெந்நீரில் பெரியவர்களுக்கு 2 ஸ்பூன் சிரியவர்களுக்கு 1 ஸ்பூன் அளவில் ஊற வைத்து அதிகாலையில் எழுந்து அருந்தவும்.
இதன் பயன்கள்:-
          சீரகம்:-உடலில் இருக்கும் *கழிவுகள்,அசடுகள்* போன்றவற்றை நீக்கும்.

*இரத்தம் சுத்தமாகும்.*

*இரத்த கொதிப்பு 100% குணமாகும்*.
இதனை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து ஆரோக்கியத்துடன் வாழுங்கள்...

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*

பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற

 பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற

கருப்பு உளுந்து லட்டு

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து - 1 கப்
பொட்டுகடலை - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த வெல்லம் -   3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் தேவையான அளவு.
சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு சிறிதளவு.

செய்முறை:-

1.முதலில் கருப்பு உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க
வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

2.வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

3.சலித்தெடுத்த மாவுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

4.ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்.

5. சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் வெல்லம் கலந்து வைத்துள்ள லட்டு மாவில் நெய் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.

6.சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

7.முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.

குறிப்பு:

1. சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

2.நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக்கொண்டு வர வேண்டும்.

3.நெய் மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக்கொள்ளலாம்.

உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்

கருமஞ்சள் அற்புத அனுபவம் -3

 கருமஞ்சள் அற்புத அனுபவம் -3

ஒரு மாதத்திற்கு முன் ஜாதகம் பார்க்க ஒருவர் வந்திருந்தார்.அவரது ஜாதகத்தில் சர்ப தோஷம் இருந்தது.மேலும் அவர் வியாபார ரீதியாக சுமார் அறுபது லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.இப்போது வியாபாரம் நஷ்டத்தில் இருக்கிறது எனவும் குடும்பத்தில் சொல்லமுடியாத பிரச்னைகள் இருப்பதாகவும்.நிம்மதியாக தூங்க முடிவதில்லை அப்படிதூங்கினாலும் யாரோ கழுத்தை பிடித்து இறுக்குவது போல உள்ளது எனவும் கூறி அழுதார்.அவரது வீட்டில் துர் மாந்திரீக சக்திகள் உலவுவதாக நம்புவதாகவும் கூறினார்.அவரது பெண் 30 வயதாகியும் திருமணம் இல்லாமல் வரன் கிடைக்காமல் தவித்து வருகிறார் எனவும் கூறினார்.
எவ்வளவு பெரிய கஷ்டம் பாருங்கள்.பெண்ணிற்கு திருமணம் செய்ய முடியாத வரன் கிடைக்காத சூழ்நிலை மிக மிக கொடியது.
நான் கருமஞ்சள் பற்றி அவரிடம் கூறினேன்.காளியும் பைரவரும் குடிகொள்ளும் கருமஞ்சள் இருக்கும் இடத்தில் துர்மாந்திரீகம் வேலை செய்யாது. இது உங்களது பிரச்சனைகளை கண்டிப்பாக தீர்க்கும் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தேன்.அவரும் அதனை வாங்கி சென்றார்.மேலும் சில கோவில்களுக்கு செல்ல சொல்லி இருந்தேன்
நேற்று போன் செய்தார்.அவரது பெண்ணிற்கு வரன் கிடைத்து விட்டதாகவும்,தன் பிரச்சனைகள் தன்னை விட்டு விலகுவதை அவர் உணர்வதாகவும் கூறினார்.எதிர்பாராத வண்ணம் அவரது பெண்ணுக்கு வரன் அமைந்த நிகழ்வையும் கூறினார்.கருமஞ்சளின் அற்புதம் இது.
கலைஞர் கருணாநிதி ஏன் மஞ்சள் துண்டு அணிந்து இருக்கிறார் என்று யோசித்து இருக்கிறீர்களா?
ஜெயலலிதா ஏன் பச்சை உடை அணிந்து உள்ளார் ?
ஒபாமா ஏன் அனுமன் சிலையை தன் பாக்கட்ல எப்போதும் வைத்து இருக்கிறார்.?
ருத்ராட்சம் ஏன் பிராமணர்கள் அணிந்து இருக்கிறார்கள் ?
அனைத்துக்கும் காரணம் உள்ளது.
உங்களை சுற்றி நெகடிவ் எனர்ஜி (தீய எண்ணம் உள்ளவர்கள்)அல்லது தீய ஆவிகள் சுற்றி கொண்டே இருக்கும்.அவை உங்களை தாக்காமல் உங்களை நீங்கள் காப்பாற்றி கொள்ள இதுபோல சில பாசிடிவ் எனர்ஜி தரக்கூடிய தெய்வ அம்சம் உள்ள பொருட்களை நம்முடம் வைத்து இருக்கும் போது நமது வெற்றி உறுதி ஆகிவிடுகிறது.
கருமஞ்சள் தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும் 9842470667

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட..!!!

 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட..!!!

100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும்
நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும் .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது
இது கடுமையான விஷம் ,மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்

#சூரியனும்_சித்தர்களும்

 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

#சூரியனும்_சித்தர்களும்

சூரியனைப் பற்றி சித்தர்கள் ஆய்வு நமது பூமி சூரிய மண்டலத்தில், பால் வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பதை அன்றே அகத்தியர் கூறுகின்றார்.

‘‘புவி தானும் ஜோதி வெளியின் ஒளியில்
மிதக்க மிதந்தே கண்டோம்
போகனும் புலிப்பாணியுஞ் சாட்சியே
பருதி குலத்து செம்மையான உயிர்
கோளிது புவியாமே’’

என்றார். ஜோதி வெளி ஒளி என்பது MILKY WAY என்று பொருள்பட, பருதி குலம் என்பது SOLAR FAMILY என்றும் பொருள் ஆகிறது.

இனி சூரியனின் தன்மைகளைச் சித்தர்கள் விவரிப்பதை அவர்தம் பாடல்கள் வழி பார்ப்போம்.

••• சூரியனில் இருக்கும் வாயுக்களில் ஹைட்ரஜன், மற்றும் ஹீலியம் என்பது விஞ்ஞானிகளின் ஆய்வு. இதனை கோரக்கர் என்னும் சித்தர்,

‘‘பருதி தனில் பிரணமிலா நீரின்வாயு நிறைய
மீதக் காலே சோம்பல் பிராண காரிரும்பென
கண்டோமே’’

••• என்றார். பிராணமிலா நீர்வாயு என்பது ஹைட்ரஜன் வாயுவைக் குறிக்கும். இது சூரியனின் எடையில் முக்கால் பகுதி எனவும், INERT எனப்படும் ஹீலியம், ஆக்சிஜன், கார்பன், இரும்பு என்றும் பொருள்படுகிறது. இதையே இன்றைய NASA விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

‘‘ பருதி நிறை சூடுமலராம் - புவியெப்ப
அஸ்டோத்திர நிறையாம் - மங்களவர்ண
மாய் புவி காட்ட, மண்டல நீலமே கரு’’
--- என்றார் புலிப்பாணி.

••• HOT PLASMA என்று சூரியனை அக்காலத்திலேயே சித்தர் வர்ணிக்கிறார். சூடுமலர் என்பதே இது. பூமியைப் போன்று நூற்றியெட்டு பங்கு எடை மிகுத்தது என்றும் பேசுகின்றார். பூமியிலிருந்து சூரியனைப் பார்க்க மஞ்சளாகத் தெரிவது - ஆகாயத்தில் ஏற்படும் SCATTERING EFFECT & BLUE OF THE SKY என்று பேசுவது அறிவியலையே வியக்கச் செய்யும் அளவுக்கு எந்த உபகரணமும் இன்றி வானவழி இதனை சித்தர்கள் உணர்ந்து, நமக்கு உரைத்தமை வியப்பளிக்கின்றது.

சூரியனின் மேற்புறத்து வெப்பத்தை போகர் பாட்டினால் உணரலாம்.

‘‘அக்கனியே அடுதி அளவு இருக்க கண்டோமே’’

••• அடுதி என்பதனை ஐந்தாயிரத்து ஐந்நூறு சென்டிகிரேடு என்று நாடி எண்ணிக்கையின் அகராதி பேசுகிறது. ஆக சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 5,500 டிகிரி செல்சியஸ் என்கிறார் சித்தர். வான்வெளி ஆய்வாளர்கள் 5,505 டிகிரி செல்சியஸ் என்று குறிப்பிடுகின்றனர்.

ஒவ்வொரு நொடியிலும் சூரியனின் ஹைட்ரஜன் வாயு சிதைவடைகிறது. இதன் அளவை சித்தர் தெளிவாக விவரிக்கின்றார்.

‘‘ அமிலவாயு தாமுமழியுஞ் சிதைவைச் செப்ப
சட்டிச் சதமிரு பாந்தோகை நிறையென
சாற்ற இஃது தாம் மாத்திரை பொழுதன்றோ’’

••• மாத்திரை என்றால் நொடி என்று பொருள். தோகை என்றால் பத்துலட்சம் அல்லது ஒரு மில்லியன் என்பது நாடியின் பொருள். ஒரு நொடியில் ஹைட்ரஜன் வாயுவை சிதைக்கும் - FISION - அளவு 620 மெட்ரிக் டன் மில்லியனில் என்று சித்தர் பேசுவது - கணக்காளர் மத்தியில், ஆய்வாளர் மத்தியில் ஆச்சரியத்தைத் தோற்றுவிக்கிறது. ஆம். ஆய்வாளர்கள் 620 மில்லியன் டன் HYDROGEN ஒரு நொடியில் FUSION ஆகிறது என்பது மிகுந்த துல்லியமான சித்தர் சொல் கணக்கைக் காட்டுகின்றது.

‘‘ஞாயிறான் ஓட்டமும் பால்வடிவமே
புவிக்கு மூபஞ்சமிரண்டு ஒளியாண்டே
பால்வழியும் பறக்குது பாரு, விழியறியாயளிக்
கற்றை ஒப்பிட கனியான தொலை மாத்திரை
யாகுமே’’

••• இப்பாடல் மிகுந்த நுட்பம் வாய்ந்தமை காண்க. வழியறியா ஒளிக்கற்றை என்பது COSMIC MICROWAVE BACKROUND RADIATION என்பர். இதனொடு ஒப்பிடுகையில் கனியான தொலை என்பது 550 கி.மீட்டரைக் குறிக்கும். ஒரு நொடியில் இவ்வளவு தொலை பால்வழி பறக்கிறது. அதாவது MILKWAY நகர்கின்றது என்று தெளிவாகக் கூறுவது, விஞ்ஞானத்திற்கு சிறிதுகூட மாற்றமில்லாது மெய்ஞானம் விளங்குகிறது என்பதனைக் காட்டுகின்றார் சித்தர்.

••• சூரியனிலிருந்து வரும் ஒளியானது பூமியை வந்தண்ட ஆகும் காலம் எவ்வளவு என்பதனை விளக்கும் பாடல் இதோ.

‘‘பருதி கிரணம் பாய்ந்து வந்திம் மண்ணை
யண்ட,யண்டத்தில் சஞ்சாரமாகுமே
பஞ்சரத மாத்திரை காலமே’’

••• என்றார் போகர். அதாவது ஐந்நூறு வினாடி
கள் என்கிறார் சித்தர். இதனை விஞ்ஞானிகள் 499 நொடிகள் என்கின்றனர்.

‘‘பருதியுமோர் விண்மீனே - கடுதிக்குரு
மீனே. பருதி குலத்து ஈரேழு கடுகித்தப்ப
விழுக்காடு குன்ற யீர்பிலா நிறையாமே.
சூடுமலர் உச்சியிறும் மையத்திலுஞ் சுற்றப் பார்ப்பீரே’’

••• இது ஒரு பழம் பாடல். இது சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என்கின்றது. இதனை விஞ்ஞானிகள் G-TYPE MAIN-SEQUENCE STAR என்பர். ஆக சூரிய குடும்பத்தின் நிறையில் 99.86% சூரியனின் நிறை என்கிறது இப்பாடல். கடுதிக்குரு என்பது 0.14% என்பதாகும்.

‘‘மதிப்பிலடங்கா உலோக முடைத்தான்
கதிரோன் - தங்கமுமுண்டு - ஒளியுலோக
முமுண்டு சாற்றுவோம் - இவையே
அணுச்சக்தி தமை யெழுப்பக் கரு’’

••• என்று பாம்பாட்டி. எளிமையாகக் கூறுகின்றார். யுரேனியம், தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் சூரியனில் நிறைய இருப்பதினால், NUCLEAR REACTION ஆங்கு எளிதில் நடைபெறுகின்றது என்கிறார். இதனாலேயே மிகவும் ஆபத்து வாய்ந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெளிவருகின்றன. அவை பூமியை வந்தடைகையில்,

‘‘ கருணை மிகுந்த கடிவாளமிட்டான்
சங்கரன் வடிவாய் பற்பல வடி
கட்டிகளை நிறுத்தி நஞ்சைத்தடுக்க
நன்மையே நன்றான நற்கதிரே
மண்ணடைய வைத்தனனே பைத்தமா
நிதியே’’

••• என்ற கொங்கணரின் பாடல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அண்டத்தில் ஏகப்பட்ட LAYER கள் உண்டு. COSMIC LAYER, OZONE LAYER, APPLETION LAYER என்று பற்பல உருவாக்கி, தீமை பயக்கும் கொடிய வெப்பக் கதிர்களை வடிகட்டி நன்மை மட்டும் தரும் கிரணங்களை நமது பூமிக்கு வந்தடைய கருணையே வடிவான கடவுள் - வைத்த மா
நிதி - அனுகிரத்தனன் என்றார் சித்தர்.

‘‘பகுதியானொலியின் ஏகத்துஞ் சற்றே
குன்ற யளி வருமண்டத்தே நம்புவீர்’’

••• என்ற கொங்கணர் வரியிலிருந்து, சூரியனின் புறத்தே ஏற்படும் ஒளி வெள்ளத்தில். 0.8 சதவிகிதமே பூமியை வந்து அடைந்து நம்மை வாழ்விக்கின்றது என்றால், சூரியக் கோளின் தன்மையைக் கண்டு வியப்பு மேலிடுகின்றதான்றோ.
அகத்தியரின் பாடலில்,

‘‘ஆதித்யனவன் ஆற்றலனைத்துமாகாது
அதிலொரு காலே ஒளிக்குதவ, மீதமது
சூடேறி தாமிருப்ப, அμவில் மேலாம்
முப்பானேடு கோடியளவே மாத்திரையில்சலாட
நொடியில் காட்டும் கடுசி துகளே’’

••• சூரியனின் ஆற்றல் அனைத்தும் இனியும் வெளிவரவில்லை. கால்பகுதி சூரியனில்தான் DIF-FUSION,NUCLEAR REACTION நடைபெறுகின்றது. இதனால் ஏற்படும் வெப்பம், மற்ற இடங்களைவெப்பமடையச் செய்கிறது. புரோட்டான் - புரோட்டான் சங்கலி 38 கோடி முறை ஒவ்வொரு நொடியிலும் நிகழ்கின்றது. 3.7---ஜ் 1038 புரோட்டான் ALPHA PARTICLE ஆக உருவெடுக்கின்றது எனப்பேசுகிறார்.

‘‘ஆதித்யனின் அபரிமித வெப்பமது
அளவாய் சாற்ற கேளீர் - ஈர்ப்பிலா
யெடையான சக்தியளி மாற்றமது
தகடேசான நிறையாம் - திறனே கசடானதா
மது மாத்திரை பொழுதெனப் பகரு’’

••• அதாவது சூரியனின் வெப்ப சக்தி வெளிவருதல் 4.3 மில்லியன் மெட்ரிக் டன் (தகடேசான) ENERGY WATT. 9.000 X 1011 MEGATONS TNT PER SECOND (கசடானதாம் - 3.9 X 1026 W) இவ்வளவு துல்லியமான கணிதத்தை அக்காலத்திலேயே சித்தர்கள் கூறியதை விஞ்ஞானிகள் உண்மை என ஆய்ந்து கூறுவது நமது சித்தர்களின் வான்வெளி புலமையைப் பறைசாற்றுகிறதன்றோ.

••• TAKEN FROM : kaviyam.in ., September2013 Month Issue
===============================================

••• குறிப்பு: இஃதே போல் தெய்வத் தமிழ் திருநாட்டில் உள்ள கீழ் சூரிய மூலை சிவாலயத்தில் இருந்து தாம் சூரியனுக்கு தேவையான கதிர்வலைகள் அனுப்படுகின்றன என்று 2004ல் ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் [சித்தர்களின் ஞான பத்ர கிரந்த விளக்கங்களே ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழ் ]இதழில் வந்த போது japanல் இருந்து solar scientists வந்து ஆய்வு செய்து விட்டு சென்றனர்.., அதே போல் சூரியனிடமிருந்து வரும் ஏழு கதிர்களை அவரவருக்கான கர்ம பரிபாலன நியதிப் படி பயன்படுத்தி இரவு பகல் காலங் வேறுபாட்டை கடக்கும் மார்கமும் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

••• [விஞ்ஞான பூர்வமாக சூரியனிடமிருந்து ஏழு கதிர்கள் தாம் பூமியை அடைகின்றன என்கிறனர் .., இதை தான் ஏழு குதிரையில் சூரிய பகவான் பவனி வருவதாய் அன்ம நுணுக்கமாய் ஆன்மீகப் பூர்வமாய் விளக்கப்பட்டுள்ளது.... என்பதும் குறிப்பிடத்தக்கது...]

••• என்னே தெய்வத் தமிழின் தொன்மையும் ...திண்மையும்!!!
💦🏌...roopesh...🏌💦
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

நெறிஞ்சிகாய் எடுத்து அரைத்து அதனுடன் கால் லிட்டர் நீர் சேர்த்து வெறும் வயற்றில் குடித்துவர கற்கள் மூன்று நாட்களில் கரைந்துவிடும்....

 நெறிஞ்சிகாய் எடுத்து அரைத்து அதனுடன் கால் லிட்டர் நீர் சேர்த்து வெறும் வயற்றில் குடித்துவர கற்கள் மூன்று நாட்களில் கரைந்துவிடும்....

🏻பெண்களே எச்சரிக்கை📡 ~~~~~~~~~~~~ ❌ROHYPNOL❌ மாத்திரை என்பது காம வெறியர்களின் புதிய ஆயுதம்...

 💃🏻பெண்களே எச்சரிக்கை📡

~~~~~~~~~~~~
❌ROHYPNOL❌ மாத்திரை என்பது காம வெறியர்களின் புதிய ஆயுதம்...
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். இந்த மயக்கம் 11 லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்...
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்கமுடியாது. மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம.்
அதை விட கொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.
மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள் இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்கக்கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..
இதைப் பயன்படுத்தும் முறைகள் கூட தற்போது இணைய தளங்களில் உள்ளது. இதற்கு மேல் என்ன செய்ய இயலும்??
மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே எங்கும் செல்லாதீர்கள் மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்
முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்... ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்..

🙏🏻என்றும் மக்கள் நலப்பணியில்.....🙏🏻

🏨பழனியப்பா  மெடிக்கல் குருப்ஸ்

💊புவனேஸ்வரி மெடிக்கல்,
💊ஸ்ரீபழனியப்பா மெடிக்கல்,
💊பழனியப்பா மெடிக்கல்1,
💊பழனியப்பா மெடிக்கல் 2,
💊அண்ணா மெடிக்கல் ,

உடுமலைப்பேட்டை,

திருப்பூர் மாவட்டம்.

Please pass this massage to your mom, sister, daughter n friends.

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!! தீராத விக்கலை நிறுத்த...

 சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.

தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் !!!
* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.
* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.
* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
=====================================================
தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
* சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை. அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.  நன்றி K. குழந்தைவேல, ஈரோடு கிராமிய விருந்து, குடும்ப உணவகம் ,நசியனூர் ரோடு, வில்லசம் பட்டி நால்ரோடு, ஈரோடு .செல்நெல் .9842833100.

Friday, March 26, 2021

அடிக்கடி முதுகுல மூச்சு பிடிச்சுக்குது சார் ஒரு வழி சொல்லுங்கள்

 *Organic Village 9884122255/9841722255*

கேள்வி :
அடிக்கடி முதுகுல மூச்சு பிடிச்சுக்குது  சார் ஒரு வழி சொல்லுங்கள்

    பதில் :
சீரக தண்ணீர்
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
கேள்வி :
What is the solution for disc prolapse. Could not stand for long time. Getting pain in the knee. Age 38. Weight 82 kg. Pain also in the left side thigh near knee after standing

   பதில்:
சிறுநீரக சத்து குறைவு, அக்குபங்சர் மருத்துவரை சந்திக்கவும்.

💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
கேள்வி :
அய்யா...ஆணி காலுக்கு மருத்துவம் பற்றி கூறமுடியுமா?

   பதில்
அம்மன் பச்சரிசி இலை பால் தடவி வரலாம்.
🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�

கேள்வி :
My brother age 22 but mudi athikama kottuthu sir munadi valukkai vanthutu sidtha medicine sollunga plzzz ?

     பதில் :
மன உளைச்சலை குறைக்க வேண்டும். சிறுநீரகங்கள் பலம் பெற வேண்டும். நீர்காய்கனிகள் அதிகம் எடுக்கவும்.
          
(:-)(:-)(:-)(:-)(:-)(:-)(:-)(:-)(:-)(:-)(:-)(:-)(:-)
கேள்வி :
நன்பரின் கேள்வி :
எனக்கு  2 வயதில் இருந்தே ஆஸ்துமா உள்ளது அடிக்கடி காய்ச்சலும் வருகிறது, தினசரி aerocort inhaler Tablets Deriphylline 150mg retard, Pantaprazole+Domperidone, Montelucost+Levo citrate inevitable சாப்பிடுகிறேன்,  அடிக்கடி  Nebulizer use பண்ணுகிறேன்  எனக்கு  ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக மருந்து தாருங்கள் நன்றி

  பதில் :
மருந்தால் மட்டும் உங்கள் பிரச்சனையை சரி செய்ய முடியாது. உங்கள் வாழ்கை முறை, உணவு முறையில் நீங்கள் செய்யும் தவறுகளை முதலில் களைய வேண்டும். நிரந்திர தீர்விற்கு மரபு மருத்துவரை உடனே பாருங்கள் .

:)-:-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-)(:-)
கேள்வி :
உடல் கொழுப்பு குறைய நிவாரணம் கூரவும்
உடலில் அடிவயிறு கொழுப்பு குறைய என்ன செய்ய வேண்டும்.

          ~ சூரியன் உதித்து ஒளி பரவ பரவ இருள் மறையும்.

பானையில் உள்ள கெட்ட நீரில், தூய நீர் நிரப்ப நிரப்ப, கெட்ட நீர் வெளியேறும்.

ஒருவரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க, தீய குணங்கள் மறையும்.

அடிவயிறு கொழுப்பு குறைய தினம் காலை பொருக்கும் அளவு சுடு நீரில் தேன் கலந்து குடித்து வரவும்.

வாரம் 1 நாள் கொல்லு உணவில் சேர்க்க வேண்டும்.
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
உங்கள் கேள்விகள் கேட்க...
What's @p 9884122255
👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் ...
*Organic Village*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...