Friday, August 17, 2018

எவற்றுடன்_சேர்த்து #எவைகளைச்_சாப்பிடக் #கூடாது??

#எவற்றுடன்_சேர்த்து #எவைகளைச்_சாப்பிடக்
#கூடாது??

#தெரிந்து_கொள்வோம்!!!

× தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்!!;
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது...!! இவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் சாப்பிடவேண்டும்!!

√ இரவு தூங்கும் முன் மிதமான சூடு செய்யப்பட்ட பாலில் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

√ பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.

√ மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் உடலில் புது ரத்தம்உண்டாகும்.

√ எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

√ நெல்லிக்காய் சாற்றுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

√ ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

√ ரோசாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

√ தேங்காய்ப்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.

√ இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

√ கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

× தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.

√ தண்ணீரில் அல்லது பழச்சாறுகளில் கலந்து தான் சாபிடவேண்டும்.

× தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது.

× தேனும் முட்டையும் கலக்கக்கூடாது.

× தேனும் சீனியும் கலக்கக்கூடாது.

× வாழைப் பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது!!

× வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது!

× √ பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்!

× வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது!

√ உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்!

√ உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது!

× ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது!

× மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது!

× நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது!

× √ காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்!

× அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது!

× பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது!

× தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது!

× கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

♠ தேன்
Vs இறைச்சி:

*சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இந்த காம்பினேஷனை ஆயுர்வேதத்தில் ‘ஆம விஷம்’ என்று கூறுவர். இது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.*

முள்ளங்கி
vs இறைச்சி:

*வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு.*

கிழங்குவகைகள்
vs இறைச்சி:

*பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுப்பொருட்கள் உண்பதை பெரும்பாலும் தவிர்ப்போம். கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். மேலும் இந்த காம்பினேஷன் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லையை உண்டாக்கும்.*

மைதா உணவுகள்
vs அசைவ உணவு:

*பொதுவாகவே மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு. இவை எளிதில் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரச்னையை அதிகப்படுத்தும்.*

உளுந்து
vs இறைச்சி:

*கறுப்பு உளுந்துடன் இறைச்சியைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு, குமட்டல், வாந்தி, படபடப்பு உண்டாக்கும்.

பயறு
vs இறைச்சி:

*முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றபோதிலும் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்.*

தானியங்கள்
vs அசைவ உணவு:

*தானியங்களோடு சேர்த்துச் சாப்பிடுவதால், நம் உடலின் தேவைக்கும் அதிகமான எனர்ஜி கிடைக்கும். இதனால் வெயிலில் செல்ல முடியாமல் போவதோடு காலையில் எழுந்திருக்கவும் முடியாது. இதனால் யூரிக் ஆசிட் அதிகரிப்பதால் சிறுநீரகக் கல் வருவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

கீரை
vs இறைச்சி:

*இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.*

தயிர்
vs அசைவ உணவு:

*அசைவ உணவுடன் தயிர் சேர்க்கக்கூடாது. மேலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் எந்த பொருளுடனும் இறைச்சி சேர்த்து சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி சேர்த்துச் சாப்பிடுவதால் உருவாகும் ரத்தம் சுத்தமாக இருக்காது. அது தோல் நோய்கள் பலவற்றுக்கு வழிவகுக்கும்.

(#குறிப்பு: கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடவே கூடாது.)*

எண்ணெய்
vs இறைச்சி:

*கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை இறைச்சி சமைக்கப் பயன்படுத்தக்கூடாது. மேலும், இவை பருவகால மாற்றங்களைப் பொறுத்து மாறும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயால் சமைக்கப்படும் இறைச்சி செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.*

குளிர்பானங்கள்
vs அசைவ உணவு:

*அசைவ உணவு உண்டதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.*

*மேலும், செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, தூக்கமின்மை, உடல் அசதியை உண்டாக்கும்.*

#எதனுடன்_சேர்த்து #சாப்பிடலாம்…

*இறைச்சியை நல்ல எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.*

*இறைச்சியை பப்பாளிக்காயுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இறைச்சியை மிருதுவாக மாற்றும் தன்மை பப்பாளிக்கு உண்டு.*

*அசைவ உணவுக்குப் பின் எலுமிச்சைப் பழச்சாறு அருந்தலாம். செரிமானத்துக்கு உதவும்.*

*அசைவ உணவு உண்பதற்கு முன்னரோ பின்னரோ அஷ்ட சூரணம் சாப்பிடலாம். இது இறைச்சி எளிதில் செரிமானமாக உதவும்.*

*அசைவ உணவுக்குப் பின் பெருஞ்சீரகம் அல்லது பெருஞ்சீரகத் தண்ணீர் குடிக்கலாம். உணவை செரிமானமாக்குவதில் மிகச் சிறந்த பணியாற்றக்கூடியது. கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் தடுக்கும் சக்தி பெருஞ்சீரகத்துக்கு உண்டு.*

*இறைச்சியை உணவாக எடுத்துக்கொண்டதும், சுடுதண்ணீர் குடிக்கலாம். இது ரத்தக் குழாயை சுத்தம் செய்து சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது.*

*பால் சேர்க்காத சுக்கு மல்லி காபி அருந்தலாம். இது வயிற்று உபாதைகளில் இருந்து நம்மைக் காக்கும்*

*இறைச்சியுடன் வெறும் வெங்காயம் சேர்த்துச் சாப்பிடலாம். தயிரோடு கலந்து ராய்தா போல் சாப்பிடக்கூடாது. வெங்காயம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.*

*இறைச்சி உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளப்படும் இஞ்சி மற்றும் இந்துப்பு, நொதிகளின் சுரப்பை அதிகரிப்பதோடு, செரிமானத்தன்மையை அதிகரிக்கும்.* *நச்சுத்தன்மையைக் குறைக்கும்.*

♦ இறைச்சியின்
பலன்கள்:

*உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக கிடைக்க உதவும். மனித உடலின் எலும்பு மற்றும் தசைகள் வலுப்பெற இவை உதவும்.

♦ யாருக்கு…
எப்போது…
இறைச்சி கூடாது..!

*அனைவருமே இரவு வேளைகளில் இறைச்சி உணவைத் தவிர்க்க வேண்டும்.*

*இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இறைச்சியை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.*

*முதல் நாள் செய்த இறைச்சியை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்தக்கூடாது.

முதல் நாள் செய்த அசைவ உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடக் கூடாது.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...