Sunday, November 3, 2019

முகப்பருக்கள் முழுவதையும் நீக்க கடுகு எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க..!*

*முகப்பருக்கள் முழுவதையும் நீக்க கடுகு எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க..!*

By Senthil 

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

*பகிர்வு*

~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ 

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

பெரும்பாலும் நாம் சமையலுக்கு சில குறிப்பிட்ட எண்ணெய் வகைகளை மட்டுமே பயன்படுத்துவோம். இந்த எண்ணெய் வகைகள் அனைத்துமே நமது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் இருத்தல் வேண்டும். இல்லையெனில் நமது உடல் நலம் தான் பாதிக்கப்படும்.

நம்மில் சிலர் மட்டுமே கடுகு எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துவர். இந்த எண்ணெய்யில் ஏராளமான நன்மைகள் உள்ளதாம். இதை நாம் முக பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாகும். இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

*கடுகு எண்ணெய்யின் ஆற்றல்..!*

கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.

*கலவை குறிப்பு…*

முகம் வெண்மையாக மாற இந்த கலவை குறிப்பு உங்களுக்கு உதவும். 

இதற்கு தேவையானவை…

எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

கடுகு எண்ணெய் 1 ஸ்பூன்

உப்பு சிறிது

செய்முறை :-

முதலில் கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் உப்பு சேர்த்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இது முகத்தை பளபளவென மாற்றி அழகான சருமத்தை தரும்.

*கரும்புள்ளிகள் நீங்க...*

முகத்தில் கரும்புள்ளிகள் வராமல் இருக்க இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை…

கடுகு எண்ணெய் 1 ஸ்பூன்

கடலை மாவு 1 ஸ்பூன்

தயிர் 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

*தயாரிப்பு முறை!*

கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி மெல்ல மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

*பருக்களை ஒழிக்க...*

முகத்தின் அழகை கெடுக்கும் இந்த பருக்களை ஒழிக்க எளிய வழி உள்ளது. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். மேலும், பருக்களினால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து போகும்.

*அழுக்குகளை நீக்க..*

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்க இந்த குறிப்பு பயன்படும். இதற்கு தேவையானவை…

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

சந்தன தூள் 1 ஸ்பூன்

குங்குமப்பூ சிறிது

கடலை மாவு 1 ஸ்பூன்

கடுகு எண்ணெய் 2 ஸ்பூன்

*தயாரிப்பு முறை…*

மஞ்சள் தூள், சந்தன தூள், குங்குமப்பூ ஆகியற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். அதன்பின் கடலை மாவு மற்றும் கடுகு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்கி விடும்.

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

*பகிர்வு*

~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ 

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

Saturday, November 2, 2019

health images

சகல விதமான அபூர்வ மூலிகைகளும் கிடைக்கும்

சகல விதமான அபூர்வ மூலிகைகளும் கிடைக்கும் 

🙏🌺🌺🌺🌺🙏
9787280933/
சங்குநாரயண சஞ்சீவி
விஷநாரயண பச்சை
கம்பிதாமரை
கருஊமத்தை மூன்று அடுக்கு
பொன்ஊமத்தை
முப்பிரண்டை
வெள்ளை தூதுவளை
ஆகயதாமரை
கரிசலாங்கண்ணி
கற்பூரவல்லி
ஆடாதொடா
பேய்விரட்டி
தொட்டாற்சுருங்கி
ரம்பை
நாட்டு வல்லாரை
மலைவல்லாரை
ஆதொண்டை
உப்பிலாங்கொடி
பவழமல்லி
நத்தைசூரி
நத்தைசூரி ஒரிஜினல்
வெள்ளை மந்தாரை
கற்கரக்கி
வெள்ளருகு
பிரன்டை
இலைபிரன்டை
இரட்டை பிரன்டை
சென்பகம் ஆரஞ்சு
ஆவாரை
நீலநொச்சி
கருந்துளசி
லெமன்கிராஸ்
கல்யாணமுருங்கை
நீர்பிரம்மி
புளியாரை
அவுரி
கிரந்தி நாயகம்
பொடுதலை
வசம்பு
மனத்தக்காளி
கூவைகிழங்கு
எலும்பொட்டி
சிவப்பு கொடிவேலி
வெண்கொடிவேலி
குருவிச்சை 
நஞ்சு முரிச்சான்
யானைதிப்பிலி
கருஊமத்தை
சர்க்கரை துளசி
தழுதாழை
சிருகுரிஞ்சான்
கண்டகத்திரி
விஷ்ணு கிரந்தி
ஆடுதீண்டாபாளை
இரணகள்ளி
யானைநெருஞ்சில்
சிவனார் வேம்பு
விராளி
ஓரிதழ்தாமர
கோபுரம் தாங்கி
கேசவர்த்தினி
நாகமல்லி
கள்ளிமுளையான்
நிலப்பனை
சர்பகந்தா
அஸ்வகந்தா
சித்தாமுட்டி
நேத்திரமூலி
கொடிசம்பங்கி
நிலசம்பங்கி
சித்தாமுட்டி
பேய்விரட்டி
நிலவேம்பு
நித்யகல்யாணி
தொட்டால் சுருங்கி
நீர்பிரம்மி
பூனைமீசை
சிருகன்பீளை
அருவதாம்பச்சை
விழுதி
ஆடுதீண்டாபாளை
யானைநெருஞ்சில்
நத்தைசூரி
சிவனார் வேம்பு
கோபுரம் தாங்கி
விஷ்ணு கிரந்தி
நேத்திர மூலி
கள்ளிமுளையான்
சர்பகந்தா
சித்திரமூலம்
பொடுதலை
அருவதாம்பச்சை
ஆகயதாமரை
நிலவேம்பு
பூனைமீசை
கரிசலாங்கண்ணி
நித்திய கல்யாணி
பெப்பர் மின்ட்
கற்பூரவல்லி
ஆடாதொடா
இன்சுலின் செடி
பேய்விரட்டி
தொட்டாற்சுருங்கி
ரம்பை
நாட்டு வல்லாரை
மலைவல்லாரை
ஆதொண்டை
உப்பிலாங்கொடி
பவழமல்லி
நத்தைசூரி
நத்தைசூரி ஒரிஜினல்
வெள்ளை மந்தாரை
கற்கரக்கி
வெள்ளருகு
பிரன்டை
இலைபிரன்டை
இரட்டை பிரன்டை
சென்பகம் ஆரஞ்சு
ஆவாரை
நீலநொச்சி
கருந்துளசி
லெமன்கிராஸ்
கல்யாணமுருங்கை
நீர்பிரம்மி
புளியாரை
அவுரி
கிரந்தி நாயகம்
பொடுதலை
வசம்பு
மனத்தக்காளி
கூவைகிழங்கு
எலும்பொட்டி
சிவப்பு கொடிவேலி
வெண்கொடிவேலி
குருவிச்சை 
நஞ்சு முரிச்சான்
யானைதிப்பிலி
கருஊமத்தை
சர்க்கரை துளசி
தழுதாழை
சிருகுரிஞ்சான்
கண்டகத்திரி
விஷ்ணு கிரந்தி
ஆடுதீண்டாபாளை
இரணகள்ளி
யானைநெருஞ்சில்
சிவனார் வேம்பு
விராளி
ஓரிதழ்தாமரை
கோபுரம் தாங்கி
கேசவர்த்தினி
நாகமல்லி
கள்ளிமுளையான்
நிலப்பனை
சர்பகந்தா
அஸ்வகந்தா
சித்தாமுட்டி
நேத்திரமூலி
கொடிசம்பங்கி
நிலசம்பங்கி
வெண்தாமரை
செந்தாமரை
கருமஞ்சள்
சர்வரோகசஞ்சீவி
அகில்
அசுவகந்தி 
அத்தி
அதிவிடையம்
அந்திமல்லி
அம்மான்பச்சரிசி
அம்மையார் கூந்தல் 
அரசு
அரளி, 
அசோகு
அரிவாள்மனைப் பூண்டு 
அருநெல்லி
அரலி
அவுரி
அவரை
மருதாணி, 
அறுகு
அல்லிக்கிழக்கு
அழுகண்ணி
ஆடாதோடை
ஆடுதின்னாப்பாலை
ஆட்டுமல்லி
ஆவாரை – 
நிலாவாரை
ஆனைக்குன்றி
ஆனை நெருஞ்சி(அ) பெரு நெருஞ்சி
ஆனைத் தகரை
ஆரை மூலிகை 
ஆடுதின்னாப்பாலை
இலவங்கப்பட்டை
இலுப்பை
இலாமிச்சை
இருளி
உத்தாமணி (வேலிப்பருத்தி)
ஊமத்தை
எட்டி
எருக்கு 
எலிக்காதிலை 
ஒதி
ஓதியன் 
ஓரிதழ் தாமரை –
ஓடுவெட்டி
கடுக்காய்
கண்டங்கத்தரி _
கண்டத்திப்பிலி கத்தரி
கரிசிலாங்கண்ணி
கருங்காலி
கருஞ்சீரகம்
கருவேலம்
கருநெய்தற்பூ
கருநொச்சி
கல்யாண முருங்கை
கள்ளி மந்தாரை
கற்பூர மரம்
கற்பூரவல்லி
கற்பூரபுல்
கருவேல்
கண்டங்கத்தரி
கடற்பசளி
காஞ்சாங்கோரை
காட்டு ஆமணக்கு
காட்டு எலுமிச்சை
காட்டு மஞ்சள்
கிச்சிலி கிழங்கு
கீழ்காய்நெல்லி
கீழாநெல்லி
குப்பைமேனி
குருவேர்
குப்பைமேனி
குறிஞ்சா
கூவைக்கிழங்கு
கொழுஞ்சி
கொடிக்கள்ளி
கொள்ளுக்காய் வேளை
கோவைக்கொடி
கோரை
சதகுப்பை
சடாமாஞ்சில் 
சடைக்குப்பி
சமுத்திரப்பாலை
சர்பகந்தி
சர்முர்கா
சந்தனம் (மரம்)
சாறணை
சிறுநெருஞ்சி
சிறுசெருப்படை 
சிறுகுறிஞ்சா
சிறுபீளை
சிற்றரத்தை
சிற்றாமணக்கு
சிற்றாமுட்டி வேர் 
சிவகரந்தை -
சிற்றாமுட்டி
சிறுகுறிஞ்சா
சீந்தில்
சீரகம்
சீந்தில்
சுக்கு
சுடுகாட்டு மல்லி
செங்கத்தாரி 
செம்பருத்தி, 
தண்ணீர் விட்டான் கிழங்கு 
தகரை
தாழை 
தழுதாரை 
தாளிசபத்திரி
தான்றி
திப்பிலி
திருநீற்றுப்பச்சை
துளசி
துத்தி 
தூதுவளை
தொட்டாற் சிணுங்கி/ தொட்டால் வாடி
தேவதாளி
தேத்தாங்கொட்டை
தேள் கொடுக்கி
தேங்காய்ப்பூக்கீரை
தொழுகண்ணி
நந்தியாவட்டை
நஞ்சறுப்பான் 
நன்னாரி
நரிகையுறை
நறுவிலி
நஞ்சறுப்பான்
நாபி
நாயுருவி
நாவல்
நிலவேம்பு
நிலாவாரை 
நீலசெடி
நீர்நொச்சி
நீர்முள்ளி
நுணா 
நெருஞ்சி
நெல்லி
நொச்சி
புரசு 
பவழ மல்லி
பச்சை அலரி
பற்பாடகம் 
பாரிசாதம்
பாவட்டை
பிரமதண்டு
பிரண்டை
பிராயன்
பீர்க்கு
புரங்கம்
புரவம்
புல்லாந்தி
பிரண்டை
புன்னை, பின்னை
பெரியதகரை
பெருங்காயம்
பெருநாவல்
பெருநெல்லி
பொடுதலை
பொரம்பை
பேரரத்தை
பேய்மிரட்டி 
பேராமுட்டி
பேய்ப்புடல்
மகிழம்
மந்தாரை
மஞ்சள்
மஞ்சள் அலரி
மடமட்டகம்
மயிர்சிக்கி
மரவட்டை
மருதம், மருதபட்டை
மருதாணி 
மருத மரம் 
மலைக்கள்ளி
மலைவேம்பு
மாசிக்காய்
மாவிலங்கம்
மிளகுகரணை
முக்கம்பாலை
முடக்கத்தான்
முட்சங்கன் 
முத்தாமணக்கு
முசுட்டை
மூங்கில்
முடக்கொத்தான்
மொசுமொசுக்கை
மோகலிங்கம்
ரணக்கள்ளி 
வண்டுகொல்லி
வட்டத்துத்தி
வல்லாரை
வட்டுக்கத்தரி
வாதமடக்கி
வாதநாராயனன்
வால்மிளகு
வில்வம்
விளாமரம்
விட நாபி
விடத்தேர் 
வெங்காயம்
வெட்டிவேர்
வெந்தயம்
வெட்டுக்காயப் பூண்டு 
வெட்பாலை
வெள் எருக்கு
வெள்ளைக்கடம்பு 
வெள்ளைமருது
வெண்நொச்சி
வெண்ஊமத்தை
வெற்றிலை
வேம்பு, வேப்பிலை
வேலிகாத்தான்
ஜாதிக்காய்
ஜின்செங்
அத்தி 
அரசு 
அரப்பு மரம்
அருநெல்லி 
அழிஞ்சில்
ஆசாரிப்புளி
ஆத்தி 
ஆமணக்கு 
ஆயா 
ஆல் 
ஆவிமா 
ஆற்றிலுப்பை
ஆற்றுப்பாலை 
ஆற்றுப்பூவரசு 
இச்சி 
இடலை 
இரச்சை
இரத்தி 
இராப்பாலை
இராமசீத்தா
இருட்பூ 
இருவாட்சி
இருவேல்
இரேவற்சின்னி 
இலங்கைக் கருங்காலி 
இலம்பிலி 
இலவு 
இலுப்பை 
ஈரப்பலா 
உதி
உதிரவேங்கை
உரப்புப்பிசின்
உருத்திராக்கம்
உலக்கைப்பாலை
உலங்காரை 
உறுப்பா 
ஊஞ்ச மரம்
ஊழலாற்றி -
எட்டி 
எண்ணெய் மரம் 
எருமைமுன்னை 
எறுழ் -
ஏழிலைப்பாலை

கசங்கம் 
கடம்பம் 
கடலிறஞ்சி 
கடலை 
கடிச்சை
கண்டலங்காய் மரம் 
கண்ணா 
கண்ணாடியிலை மரம்
கபிலப்பொடி மரம் 
கம்பளிப்பிசின் மரம்
கர்க்கவம் 
கர்ப்பூரவில்வம் -
கரிக்கட்டை மரம்
கருங்காலி 
கருந்துவரை -
கரும்பாலை 
கருவா
கருவாகை
கருவாலி 
கருவேம்பு 
கருவேலமரம்
கரைவிளங்கு 
கல்லத்தி 
கலிக்கிமரம் 
கலிமருது
கற்பொறுத்தல் 
கறிப்பாலை
காக்காய்ப்பாலை
காட்டத்தி 
காட்டாஞ்சி 
காட்டிருப்பை
காட்டுக்கருவா மரம் -
காட்டுக்கிளுவை
காட்டுக்குமிழ் 
காட்டுக்கோங்கு
காட்டுச்சந்தனம் 
காட்டுத்துரியன் 
காட்டுநொச்சி
காட்டுப்பச்சிலை 
காட்டுப்பிராய்
காட்டுப்புன்னை 
காட்டுப்பூவம்
காட்டுமஞ்சரி
காட்டுமா -
காட்டுமுருங்கை -
காட்டுவாகை 
காண்டாமிருகரத்த மரம் 
காராஞீலி
காரைச்செங்காரி
கானமயிலை 
கித்தார்
கிழுவை மரம் -
கீரி
கீழாநெல்லி
குடைவேல் -
கும்பாதிரி 
கும்பி 
குமி்ழ் மரம்
குரங்குப்பலா
குழிநாவல் 
குறிஞ்சி
கூழ்முன்னை 
கைப்பங்கொட்டை)
கையாப்புடை
கொட்டைநாகம் 
கொட்டையிலந்தை
கொடித்தடக்கி
கொடிமாதுளை
கொடுக்காய்ப்புளி
கொய்யா - 
கொவிள் 
கொன்றை -
கோங்கிலவு
சடைச்சி 
சண்பகப்பாலை
சண்பகம் 
சந்தன மரம்
சரலங்கா
சவ்வு 
சவண்டலை 
சன்னத்துருக்குவேம்பு
சாப்பிரா
சாயல்வாகை
சிலந்தி மரம்  
சிற்றிலைப்பொலவு 
சிறுதேக்கு 
சிறுநாவல் 
சிறுநெல்லி
சின்னமாவிலிங்கை
சீமை ஆல்
சீமை கருவேலமரம்
சீமைக்கிழுவை -
சீமைக்கொட்டைக்களா 
சீமைத்தேவதாyரு
சீமைநூக்கு 
சீமைநெல்லி 
சீமைப்பிரப்பமரம் 
சீமைமகிழ்
சீமைமாதுளை
சீமைவேல மரம/9787280933🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

இரத்த அழுத்தம் என்றால் என்ன?✨ ஏன் ஏற்படுகிறது?✨ எப்படி குணமாக்குவது?_

இரத்த அழுத்தம் என்றால் என்ன?
இரத்த அழுத்தம் என்றால் என்ன?

✨ ஏன் ஏற்படுகிறது?

✨  எப்படி குணமாக்குவது?_

  வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

       இதற்கு மருத்துவம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உடலை நன்கு அறிந்தவர் நீங்கள்தான்.

    நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

“நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள்தான் நோயை உண்மையிலேயே குணமாக்குகின்றன”
என்றார்.

      உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒரு பிரச்சினை உங்களுக்கு வரும்போது (அப்படி ஒரு விஷயம் வெளியே தெரியும் முன்னரே) உடலானது தன்னைத் தானே சரிசெய்யும் முயற்சியை மேற்கொள்ளும்.

      பாதிக்கப்பட்ட உறுப்புக்கோ அல்லது அந்தப் பகுதிக்கோ அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது, அதனால் தேவைப்படும் அந்தச் சக்தியை அதி வேகத்துடன் இரத்தத்தின் மூலமே எடுத்துச் செல்ல வேண்டும்.

      அப்போது இரத்தத்தில் எண்ணற்ற வேதியியல் மாற்றங்கள் நடக்கும். இரத்தத்தின் அடர்த்தியும் மாற்றம் அடையும்.

      பின்னர் அந்தச் சக்திகளைச் சுமந்துகொண்டு இரத்தம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மெதுவாகவா செல்லும்?

      108 ஆம்புலென்ஸ் போல விரைவாகத்தானே செல்லும். அதற்கு இதயம் வேகமாக துடித்துத்தானே ஆகவேண்டும்.

    அதுதானே இரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தேவையை ஒட்டி அனுப்புகிறது.

        இவ்வாறு உடல் தன்னைத்தானே குணமாக்கும் நிகழ்ச்சியையே நாம் இரத்த அழுத்தம் என்று நினைத்துக்கொள்கிறோம்.

     ஏன் என்றால் படபடப்பு, தலைசுற்றல், மயக்கம் போன்றவை வருவதால்.

      உடலில் நோய் ஏற்பட்டுள்ளது அதைச் சரி செய்யவே பி.பி என்ற ஒரு விஷயம் உடலில் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

     பி.பி என்பது பின்னே நடப்பதை முன்னே சொல்லும் அறிவிப்பு மணியாகும்.

    பி.பி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் உடலில் ஏதோ பிரச்சினை அல்லது நோய் என்பதை அறிந்து, அதைக் குணமாக்கும் வழியை தேடுங்கள்.

       அந்த நோய் குணமானால் பி.பி தானாகவே காணாமல் போய்விடும்.
அதை விடுத்து பி.பி.யை மட்டும் குறைப்பது என்பது அறிவிப்பு மணியை மட்டும் கழற்றி வைப்பது போலாகும்.

      அறிவிப்பு மணியைக் கழற்றி வைத்து விட்டால் பின்னால் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் போய்விடும்.

     உடலில் உருவான
நோயைக் குணமாக்காமல் அதை உணர்த்தும் பி.பி.யை மட்டும் மருந்துகள் மூலம் குறைப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

      🌱வலுக் கட்டாயமாக இதயத்தின் துடிப்பு குறைக்கப்படுகிறது.

🌱 இரத்த நாளங்கள் விரிவாக்கப்பட்டு, அவை இயற்கையாகச் சுருங்கி விரியும் தன்மையை இழக்கின்றன.

🌱அதனால் நாளாவட்டத்தில் அவை தண்ணீர்க் குழாய் போல் ஆக்கப்பட்டு, உடலின் தன்மைக்கு அல்லது நோயின் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது.

🌱 இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதற்காக உடலில் இருந்து உப்புகளும் கனிமங்களும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுவதால் இரத்தம் நீர்த்துப்போய் விடுகிறது.

🌱இதற்குப்பின் எந்த நோய் வந்தாலும் நம்மால் உணர முடியாமல் போய்விடுகிறது.

🌱பி.பி. மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நோய்கள் தொடர்ச்சியாக வருவது இதனால்தான்.

🌱அதனால் தயவுசெய்து பி.பி எதனால் வந்தது என்பதை அறிந்து முதலில் அந்த நோயைக் குணமாக்குங்கள்.

🌱 நோய் குணமாக வேண்டுமானால் முதலில் உங்கள் ஜீரணத்தைச் சரி செய்யுங்கள்.

🌱 ஏன் எனில் உங்களின் இரத்த அழுத்தத்திற்கும், இரைப்பைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

கர்ப்பப்பையில்_கட்டி…❗#ஆபத்தை_அறியாத_பெண்கள்…❓❗

#கர்ப்பப்பையில்_கட்டி…❗
#ஆபத்தை_அறியாத_பெண்கள்…❓❗

காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது.

இன்றைய கால கட்டத்தில்
ஏராளமான பெண்களுக்கு ஏற்படக்கூடிய முக்கிய பிரச்னை ஃபைப்ராய்டு என்ற கர்ப்பை கட்டி.  

#தமிழில்_நார்_திசுகட்டி என்பதுண்டு. இந்த கட்டி ஏற்படுத்தும் பாதிப்பால் கர்ப்ப பையை அகற்ற நேர்வதும் சகஜம். 

70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். பலருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல் நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட. 

☀கர்ப்பப்பை கட்டி எதனால்    ஏற்படுகிறது❓

☀காரணங்கள் என்ன❓

☀புற்றுநோயாக மாறுமா❓

❓❓எதனால் வருகிறது………
 
★ நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் சம நிலையில்லாமை,

★ நோய் எதிர்ப்பு சக்தி
அளவுக்கு அதிகமா வேலை செய்தால் அலர்ஜி, (தோல் & தூசி)
ஆஸ்துமா,கட்டிகள்,
இரத்தம் புற்று நோய் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும்.

★ நோய் எதிர்ப்பு சக்தி
குறைவாக வேலை செய்தால் தொற்று நோய் மற்றும் புற்று நோய் வரும்.

👉மற்றும்……

☀ஈஸ்ட்ரோஜன், 

☀புரஜெஸ்ட்ரோன் 

ஆகிய ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் கட்டி வளரும் வாய்ப்புகள் உள்ளன. 

சிலருக்கு,மரபணு,
ஹார்மோன்,  குறைபாடுகள் காரணமாகவும் கட்டிகள் வளரலாம். எனினும், கர்ப்பப்பை கட்டிக்கான முழுமையான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

சுற்றுப்புறச் சூழல் தாக்கம் காரணமாக கர்ப்பப்பை கட்டிகள் ஏற்படலாம்.

பரம்பரையால் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே, இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சாதாரணமாக 20-40 வயது வரை உள்ள பெண்களுக்குத்தான் இந்தக் கட்டிகள் அதிகமாக வருகின்றன. மெனோபாஸ் அடைந்துவிட்டால், கர்ப்பப்பை கட்டி வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.

❓❓அறிகுறிகள்
என்னென்ன……👇👇👇👇👇👇👇👇👇👇

👉மாதவிலக்கு சமயத்தில் அதிக வலி, அதிக ரத்தப்போக்கு இருக்கும். 

👉ரத்தப்போக்கு மூன்று நாட்களுக்கு பதில் ஏழு நாட்கள் வரைகூட இருக்கலாம்.

👉எந்தத் தொந்தரவும் இல்லாமலே குழந்தைப்பேறு தடைப்படலாம்.

👉பெரிய கட்டியாக இருப்பின் பக்கத்து உறுப்பில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால் சில தொந்தரவுகள் ஏற்படலாம்.

👉அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, 

👉மலச்சிக்கல் ஏற்படும். 

👉கீழ் முதுகு, கால் வலி ஏற்படலாம்.

👉மாதவிடாய் நாட்களுக்கு இடையில் உதிரப்போக்கு ஏற்படுதல், 

👉இடுப்பு பகுதியில் அதிக வலி அல்லது அழுத்தம், 

👉வயிற்று வலி அல்லது வீக்கம், 

போன்றவை ஃபைப்ராய்டின் அறிகுறிகள். கட்டியின் தன்மை, அது உருவாகியுள்ள இடம் ஆகியவற்றை பொருத்து இந்த அறிகுறிகள் மாறுபடலாம். உடனடியாக மருத்துவர்களை அணுகி, ‘எம் ,ஆர், ஐ  ஸ்கேன்’ (MRI Scan) பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மூன்று வகைக் கட்டிகளில், எந்த வகைக் கட்டி  எனக் கண்டறிந்த பின், கர்ப்பப்பையில் எந்த இடத்தில், எவ்வளவு பெரிதாக இருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம் இந்தக் கட்டிகள் எந்த அளவுக்குத் தொந்தரவு தரும் எனத் தீர்மானிக்க முடியும். 

பொதுவாக, கர்ப்பப்பையில் கட்டி என்றாலே அது புற்றுநோய் கட்டியாக இருக்குமோ என்ற பயம் பெண்களிடம் பரவலாக உள்ளது. அத்தகைய பயம் தேவையில்லை. கர்ப்பப்பை கட்டிகள், புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

💢 ஃபைப்ராய்ட் என்பது என்ன❓ 
ஏன் ஏற்படுகிறது❓

பெண்களின் உடலில் ஹார்மோன் சுரப்பிகள் செயல்படும் முறையில் வித்தியாசம் நிகழும்போது கர்ப்ப பையில் தனி இழைகள் உருவாகி அவை ஒருங்கிணைந்து கட்டியாக மாறுகிறது. திசுக்களால் ஆன அந்த கட்டியை ஃபைப்ராய்ட் என்கிறார்கள். 30 முதல் 40 வயது வரையிலான பெண்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது.

ஃபைப்ராய்டு (Fibroid) என்பது, கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய தசைக்கட்டி. இது புற்றுநோய்க் கட்டி இல்லை. பொதுவாக, இது குழந்தைப்பேறுக்குத் தயாராக உள்ள காலகட்டத்தில் ஏற்படும். இந்தக் கட்டி கர்ப்பப்பையின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். இந்தக் கட்டிகளை அது தோன்றும் இடத்தைப் பொருத்து மூன்று விதமாகப் பிரிக்க முடியும். 

🔴சப்செரோசல்ஃ
பைப்ராய்ட்ஸ் 
(Subserosal fibroids): 

கர்ப்பப்பையின் வெளிப்புறச் சுவரில் வரக்கூடிய கட்டி.  55 சதவிகிதக் கட்டிகள் கர்ப்பப்பையின் வெளிப்பகுதியில்தான் வருகின்றன. 

🔴இன்ட்ராமியூரல்ஃ
பைப்ராய்ட்ஸ் 
(Intramural fibroids): 

இது, கர்ப்பப்பையின் வெளி மற்றும் உள் சுவருக்கு இடைப்பட்ட தசைப்பகுதியில் ஏற்படக்கூடியது. 40 சதவிகிதக் கர்ப்பப்பைக் கட்டிகள் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன.

🔴சப்மியுகோசல்
ஃபைப்ராய்ட்ஸ் 
(Submucosal fibroids): 

இது, கர்ப்பப்பையின் உள் சுவர் பகுதி. இந்தப் பகுதியில் கட்டிகள் வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. 5 சதவிகித கர்ப்பப்பை கட்டிகள் இங்கு ஏற்படுகின்றன. கர்ப்பப்பை உள் சுவரில் கட்டி ஏற்பட்டால், அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை ஏற்படலாம்.

♦யாருக்குக் கட்டிகள் வரலாம்❓

குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு ஃபைப்ராய்டு கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோல, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொண்ட பெண்களுக்குக் கட்டிகள் வரலாம்.  இவர்களுக்கு, ‘ஹார்மோன் மாறுதல்’ அதிகமாக இருக்கும் என்பதால், கட்டிகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.

♦குழந்தைப்பேற்றைப் பாதிக்கும் கட்டிகள் எவை❓

குழந்தைப்பேறு இல்லை என்று சிகிச்சைக்கு வரும் பெண்களில் 5-10 சதவிகிதம் பேருக்கு குழந்தையின்மைக்குக் காரணமாக இருப்பது இந்தக் கர்ப்பப்பை கட்டிகள்தான். ஸ்கேன் பரிசோதனை செய்யும்போதுதான் இது வெளிப்படும்.

பொதுவாக, குழந்தைபேற்றைப் பாதிப்பது உள் சுவரில் ஏற்படும் சப்மியுகோசல் வகை கட்டிகள்தான். மேலும், இன்ட்ராமியூரல் கட்டிகள் பெரிதாக இருந்தாலும் கர்ப்பம் தரிப்பதில் பாதிப்பு ஏற்படும். மற்ற கட்டிகள் குழந்தைப்பேற்றைப் பாதிக்காது. 

♦தடுக்கும் முறைகள் உண்டா❓

நம் முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வேண்டும். மற்றும் சம நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

🇨🇭💀இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கேன்சராக மாற வாய்ப்பு இருக்கிறதா❓

நூற்றில் ஒருவருக்கு அப்படி மாற வாய்ப்பு உண்டு.

💢 ஃபைப்ராய்டுகள் எந்த சைசில் இருக்கும்❓

எலுமிச்சை அளவுக்கு சிறியதாகவோ பந்து போல பெரிதாகவோ எந்த அளவிலும் இருக்கலாம். 15 வாரங்கள் ஆன கரு என்ன சைசில் இருக்குமோ அது போல ஃபைப்ராய்டுகள் உருவாவது அரிதல்ல. 

💢 கட்டி பெரிதாக ஆக ஆபாத்து தானே❓

அப்படி சொல்ல முடியாது. சைசுக்கும் பாதிப்புக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் பெரிதாக இருக்கும்போது வலி அதிகம் உணரப்படும். இப்போது ஃபைப்ராய்டுக்கு என்றே தனியான சிகிச்சை முறைகள் வந்து விட்டன. எனவே உயிருக்கு பயப்படும் நிலை இல்லை. அறிகுறிகள் தென்பட்ட்தும் டாக்டரை அணுகினால் வலியும் வேதனையும் குறையும்.

💢இதற்கென உள்ள சிகிச்சை முறைகள் என்ன❓

மருந்துகளால் குணப்படுத்துவது சாத்தியம். கட்டியின் தன்மை, அது இருக்கும் இடம் பார்த்து முடிவு செய்யப்படும்.

💢பல நோய்களுக்கு அறுவை சிகிச்சைதான் சரியான தீர்வு என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வதாக சொல்லப்படுகிறது. ஃபைப்ராய்ட் விஷயத்திலும் சுலபமான தீர்வு அதுதான் என்கிறார்கள் இது சரியா❓

தவறு. ஆனால் பல பெண்கள் அவ்வாறு நினைப்பது உண்மைதான். அதனால்தான் ஃபைப்ராய்ட் பாதித்த பெண்களில் 76 சதவீதம் பேர் ஆபரேஷன் செய்து கொள்கின்றனர். உண்மையில் இது அனாவசியமானது. கட்டி சிறிதாக இருந்தால் மருந்து மூலமே கரைத்து விட முடியும். பெரிதாக இருந்தாலும் பிரச்னைகள் இருந்தாலும்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு மருத்துவ மதிப்பீடுக்கு பொருத்தமான சிகிச்சையை தேர்வு செய்ய வேண்டும். 

💢முக்கியமான உறுப்புகள் முற்றிலுமாக நீக்கப்படுவதால் உடலுக்கு பாதிப்பு நேராதா❓

ஃபைப்ராய்ட் பரவுவதால் நேரும் பாதிப்புடன் ஒப்பிடும்போது இதை ஏற்கத்தான் வேண்டும். கட்டாய மெனோபாஸ் முதலான சில பின்விளைவுகள் மகிழ்ச்சி தராதுதான். ஒட்டுமொத்த உடல் நலனை கருத்தில் கொண்டு இதை பொறுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகள் சிகிச்சைகள் இருக்கின்றன. 

💢 கட்டி வராமல் தடுக்க ஏதாவது வழிகள் உண்டா❓

ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் கோளாறுகளே இதற்கு அடிப்படி காரணம். எனவே, ஹார்மோன் சமநிலையை பராமரிக்க வேண்டும். அதற்கு தவறாத நடை பயிற்சி, உடல் பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவை உதவும்.

💢 நடுத்தர வயது பெண்கள் உஷார்❗

திருமணமாகி குழந்தையில்லாத பெண்கள் அல்லது ஒரு குழந்தை மட்டும் உள்ள பெண்களில் 60 சதவீதம் பேருக்கும்,❗

மாதவிலக்கு நின்ற பெண்களில் 60 சதவீதம் பேருக்கும் கர்ப்பப்பையில் கட்டிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.❗❓

30 முதல் 40 வயது வரையுள்ள பெண்களில் 30 சதவீதம் பேருக்கும், 

40 முதல் 50 வயது வரையுள்ள பெண்களில் 60 சதவீதம் பேருக்கும் கர்ப்பப்பையில் கட்டிகள் உருவாகலாம் என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

👉30 வயது ஆகி விட்டதா❓❗❗❓❓

இதுவரை இருந்த வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்யுங்கள். 

சில கட்டுப்பாடுகளை புகுத்துங்கள். 

தினமும் வாக்கிங் அவசியம். 

வாரம் ஓரிரு முறையாவது எக்சர்சைஸ் அவசியம். 

ஒவ்வொரு உடலும் தனித்தனமை கொண்ட்து. உங்கள் உடலுக்கு ஏற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள். 

வருடம் ஒரு தடவை முழு மருத்துவ பரிசோதனை செய்யுங்கள். 

டாக்டர் சொல்வதை தவறாமல் பின்பற்றுங்கள்.

#குறிப்பு

கண்டுகொள்ளப்படாத
கர்ப்பப்பை கட்டிகள் அகற்றப்படாவிட்டால் ‘#சார்கோமா கேன்சர்’ (Sarcoma Cancer) ஆக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.

Friday, November 1, 2019

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.

இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.
இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும்.

தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது.

குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.

60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.

~உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.

~தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.

~ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
 
~விழிப்புணர்வுடன்  குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்...

*தொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...!!*தொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம். அதுபோல, அடெனோவைரஸ், எப்ஸ்டின் - பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் தொற்றும்; சில காரணங்களாலும் தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் தொற்றும்.சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டு பண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில் பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம்.தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் தடவ குறையும். பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் குறையும்.தொண்டை வலி ஏற்படும்போது மா இலைகளை தணலில் இட்டு வெளிவரும் புகையை சுவாசித்து வந்தால் தொண்டை வலி குறையும்.வேப்பம் பூவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்து வந்தால் தொண்டையில் ஏற்படும் புண் குறையும்.குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டைக் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்றவற்றோடு தொண்டை வலியும் சேர்ந்து வரலாம். தொண்டைப் புண் சிறு பிள்ளைகளுக்கு எளிதில் ஏற்படும் ஒரு நோயாகும்.4 பூண்டு பல் இடித்து கூழாக்கி 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும். இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.1 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து 1 டம்ளர் நீர் விட்டு சிறிது சூடேற்றி எடுத்து அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.

*தொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...!!*



தொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம். அதுபோல, அடெனோவைரஸ், எப்ஸ்டின் - பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் தொற்றும்; சில காரணங்களாலும் தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் தொற்றும்.

சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டு பண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில் பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம்.

தொண்டை கட்டிக் கொண்டு பேச முடியாமல் இருந்தால், தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்து கழுத்தில் தடவ குறையும். பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் குறையும்.

தொண்டை வலி ஏற்படும்போது மா இலைகளை தணலில் இட்டு வெளிவரும் புகையை சுவாசித்து வந்தால் தொண்டை வலி குறையும்.

வேப்பம் பூவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்து வந்தால் தொண்டையில் ஏற்படும் புண் குறையும்.

குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டைக் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்றவற்றோடு தொண்டை வலியும் சேர்ந்து வரலாம். தொண்டைப் புண் சிறு பிள்ளைகளுக்கு எளிதில் ஏற்படும் ஒரு நோயாகும்.

4 பூண்டு பல் இடித்து கூழாக்கி 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும். இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

1 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து 1 டம்ளர் நீர் விட்டு சிறிது சூடேற்றி எடுத்து அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.

தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். etc

1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். 
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.
இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில்
சாப்பிடவேண்டும்.

2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து
சாப்பிடக்கூடாது. வாழைப்பழம்
சாப்பிட்ட உடனும், தயிர், மோர்  சாப்பிடக்கூடாது.

3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும். 
சாப்பாட்டுடன் சேர்ந்து
சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

4.வெண்ணெயுடன்
காய்கறிகளைச் சேர்த்துச்
சாப்பிடக்கூடாது.

5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன்  பால், தயிர் சாப்பிடக்கூடாது.
அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு
உள்ளது.

6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும்.

7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு
உண்பது நல்லது.

8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய்,முள்ளங்கி ஆகியவற்றைச்
சாப்பிடக்கூடாது.

9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு
ஆகியவற்றை உண்ணக்கூடாது.

10.)நெய்யை வெண்கலப்
பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

11.)காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. 
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக்
குடிக்கலாம்.

12.)அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய்,
ஊறுகாய்ஆகியவற்றைச்சேர்த்துக்கொள்ளக்கூடாது.

13.)பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள்,அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச்சேர்த்து கொள்ளக்கூடாது.

14.)தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய்,புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு,அதிக காரம், அதிக புளிப்பு,கொத்தவரங்காய், பீன்ஸ்
ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

15.)கோதுமையை நல்லெண்ணெயுடன்
சமைத்துச் சாப்பிடக்கூடாது.

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

 2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

 3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

 4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

 5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும். 

6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். 7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

 8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

 9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். 10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

 10. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும். 

சேற்றுப் புண்:

இது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும். இது ஒரு வகையான பங்கஸ் தொற்று. 

*அரைக்கப்பட்ட மருதாணி இலையை தொடர்ந்து இந்த இடங்களில் பூசி வர இது குறையும்.

*அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூளை இட்டு வர, இது குறையும்.

*அல்லது, சிறிதளவு வேப்பெண்ணெயை காய்ச்சி சேற்று புண்ணில் தடவி வர சேற்று புண் குறையும்.

* ஊமத்தன் இலைச்சாறில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலம், குப்பைமேனி பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை கலந்து சேற்றுப்புண் பாதிக்கப்பட்ட இடத்தில் போட வேண்டும். இதனை சேற்றுப்புண் பாதிக்காமல் தற்காப்புக்காகவும் பயன்படுத்தலாம்.

*அல்லது, இதற்கு ஆங்கில மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் இந்த கிரீம்களை வாங்கியும் தடவலாம். Clotrimazole, Imidazole, Miconazole, Econazole, Terbinafine
 
1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 

2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்....

ஏல‌க்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

 நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சனை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். 

 சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

பப்பாளி:-யாருக்கு நல்லது:

பப்பாளி:-
யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.
யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.
பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
* பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
* பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
* பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
* நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
* பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
* பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
* பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
* பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
* பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
* பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
* பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
* பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

உடைந்த எலும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை: அதிர்ந்து போன மருத்துவர்கள்.

உடைந்த எலும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை: அதிர்ந்து போன மருத்துவர்கள்.
======================

இன்றைக்குத் தான் சாதாரண தலைவலிக்கே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். நம் முன்னோர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில் மூலிகைகளே பிரதானமாக இருந்தது.

அவர்களின் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் பூர்வீகம் மேலை நாடு என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் நம்மூரு காடுகளிலும் திபு, திபுவென வளர்ந்து விடுகிறது. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச் செடி மூன்றடி உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும்.

இவை வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடவை. இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. இவை வீடு, வணிக நிறுவனங்களிலும் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது. இந்த செடி நாய், பூனைகளுக்கும் ஆகாது.

இந்த இலைக்கு எழும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு.முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும். முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது அவரும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி இரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்கள அழிக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை சுளுக்கெடுத்து விடும். அதாவது போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும்.சுவாச பாதிப்பை போக்கும்.

இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.

இதேபோல் இந்த இலையை நிழலில் உலர்த்து, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

 அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, இதையெல்லா பொடியாக்கி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு எடுத்து அத்துடன் பணங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

உங்களை மன அழுத்தம் வாட்டுகிறதா? அதற்கும் கூட சதாப்பு இலை மருந்து தான். இந்த இலைகளை சிறிதுஎடுத்து, நன்கு மையமாக அரைத்து அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும்.

 இந்த இலைச்சாறை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இந்த இலையை நன்றாக அரைத்து அந்த விழுதை மிளகுத்தூள் சேர்த்து, கொஞ்சம் எடுத்து தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் ஊட்டினால் குழந்தைகளின் மார்பு சளி மட்டுப்படும்.

பக்கவாத பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருப்பார்கள். இவர்கள் சதாப்பிலைகளை நன்றாக அரைத்து உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவினால் சிறிது, சிறிதாக பாதிப்புகள் அகலும். இதேபோல் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் இது குணமாக்கும். இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீர் வற்றியதும் ஆறவைத்து தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை பருகினால் மூட்டுவலி சரியாகும். குடல் புழு அழியும். இரத்த நாள அடைப்புகள் இருந்தால் அதையும் போக்கிவிடும்.

ஞாபசக்தியை அதிகரிப்பது, கண் வீக்கம், வலியை போக்குவது என இதன் பயன்கள் இன்னும் அதிகம். உங்க ஊர் நாட்டு மருந்து கடைகளில் இந்த இலை கிடைக்கிறதா என முயற்சித்து பாருங்களேன்.... 
நன்றி 🙏

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...