Friday, January 27, 2017

*சித்த வைத்தியம் 🌿*


*உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்*

_உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்_

*கட்டைவிரல்*

உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

*ஆள்காட்டிவிரல்*

உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது
ஆள்காட்டி விரல் மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

*நடுவிரல்*

நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

*மோதிரவிரல்*

ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

*சிறுவிரல்*

சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

*உள்ளங்கை*

மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

_வாழ்க வையகம், வாழ்க தமிழ், வாழ்க வளமுடன்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_

*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
"யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்"
*பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்*

🍑எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் ஒரு அருமையான பழம் பப்பாளிப் பழம்..

🍑இது வெப்ப பிரதேசங்களில் நன்றாக விளையக் கூடியது. இது கிராம புறங்கள் அல்லாமல் நகர்ப்புற வீடுகளிலும் இந்த மரத்தை நாம் காணலாம்.

🍑 இதை வளர்க்கும் முறை மிகவும் எளிமையானது 

🍑விதைகளை போட்டாலே போதும் இது விரைவில் வளர்ந்து மரமாக நிற்கும். 

🍑இதில் ஆண் மரம் மற்றும் பெண் மரம் என்று இரு வகை உண்டு. 

😃ஆண் மரத்தில் கொத்து கொத்தாக பூக்கள் மட்டுமே பூக்கும் பழங்கள் வராது.

😍பெண் மரத்தில் ஒவ்வொரு இலையின் காம்பு ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு பூ மலரும் அதுவே வளர்ந்து கணியாக மாறும்.
இது பழுத்தவுடன் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாக இருக்கும். 

🍑இப்பழம் அதிக சூடுள்ள பழம் என்று நினைத்து பலர் சாப்பிடாமல் இருப்பர் அது தவறான கருத்தாகும். 

🍑இதில் உள்ள சூடு எந்த வித பாதிப்பையும் நமக்கு ஏற்ப்படுத்தாது.
உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்க கூடிய இப்பழம் மாம்பழத்திற்கு அடுத்து இதில்தான் அதிக அளவு வைட்டமின்கள் இருக்கின்றன.

*இதில் குளுக்கோஸ், இரும்புச் சத்து, உலோகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, எரியம், புரதம், நியாசின்,தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகிய சத்துக்ளும் எ,எ1,பி1,பி2 மற்றும் சி வைட்டமின்களும் நிறைந்துள்ளன*

🍑விலையுயர்ந்த பழத்தை விட பல்வேறு சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளன. 

🍑இதில் பெப்சின் என்னும் சத்து அதிக அளவில் உள்ளது. 

🍑இந்த சத்து குடலில் உள்ள ஏற்படும் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது.

🍑நமது இரத்தத்தில் கலக்கும் எந்த விதமான கிருமிகளையும் அழிக்கும் வல்லமையுடைய பழம் இது மற்றும் இரத்தத்தை விருத்தி செய்யும். 

🍑இப்பழத்தை உண்பதால் சொறி சிரங்கு குணமாகும். உடலிலுள்ள புண்கள் விரைவிலேயே குணமாகும். 

🍑உடற் சோம்பலை போக்கும். பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும், பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும். 

🍑பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்.நரம்புகளில் முறுக்கேற்றும்,தொற்று நோயை அண்ட விடாது. 

🍑கண்களுக்கு மிகவும் நல்லது. 

🍑குழந்தை பெற்ற பெண்கள் இப்பழச்சாற்றை உட்கொண்டால் அதிக பால் சுரப்பு ஏற்படும்.

🍑குடற் புண்களை ஆற்றும். உதடுகளில் ஏற்படும் வரட்சி, வாய் ஓரங்களில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்த கூடியது.
மலச்சிக்கலுக்கு எளிய மருந்தாக பயன்படுகிறது. 

🍑இந்த பழத்தை காலை மூன்று துண்டுகளும் மாலை மூன்று துண்டுகளும் ஐந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை குணப்டுத்தலாம்.

🍑மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோயை குணப்படுத்த பதினைந்து நாட்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மூல நோயின் மூலமே அற்று விடுமாம்.

🍑வயிறு சரியில்லாதவர்களுக்கு எந்த வேலையும் செய்யவும் தோன்றாது சாப்பிடவும் தோன்றாது. இப்படிபட்டவர்கள் பப்பாளி பழம் சாப்பிட்டு அன்று முழுவதும் எந்த உணவையும் தொடாமல் இருந்தால். வயிறு சரியாகிவிடும்

🍑இப்பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் வரை உணவு உண்ட பின் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும். இரத்தம் விருத்தியாகும் மற்றும் உடல் பளபளக்கும்.

🍑இந்த மலிவான பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளது. இதை நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்....

😎😎😎😃😃😃😃😍😍😍
*முள்ளங்கியின் பயன்கள்*

💜முள்ளங்கியை மஞ்சள் முள்ளங்கி,சிவப்பு முள்ளங்கி மற்றும் வெள்ளை முள்ளங்கி என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.

💙மஞ்சள் முள்ளங்கி
மஞ்சள் முள்ளங்கியை காரட் என்ற பெயரில் புகழ் அடைந்துள்ள ஒரு கிழங்கு வகை காய். 
இதை கழுவி சமைக்காமலேயே சாப்பிடலாம். 

💙தினம் ஒரு காரட் சாப்பிட்டால் கண் மருத்துவரிடம் செல்லும் நிலை ஏற்படாது. இது மூளைக்கு நல்லது , தலை சுற்றல், மயக்கம் முதலியவற்றைத் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.

💚சித்த பிரம்மையை போக்கும் வல்லமையுடையது. மூட்டு வலியை போக்கும், வாயுத்தொல்லை மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்க கூடியது.

💛சிவப்பு முள்ளங்கி
சிவப்பு முள்ளங்கிசிறு நீர்ப்பையைச் சுத்தமாக்கி சிறுநீரை முறைப் படுத்தும் நீர்க்குத்தலைப் போக்கும். 

💛வயிற்று பூச்சிகளை அழிக்கும் , சீரணத்தை எளிதாக்கும், மூலநோய்,வெள்ளை நோய் , பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். 

❤கண்ணெரிச்சலை நீக்கும் குணம் உடையது. எலும்புகளுக்கும் மூளைக்கும் பலம் தரும். வயிற்று புண்களை குணப்படுத்தக் கூடியது. 

💙உடல் சோர்வு, உடல் சூடு மற்றும் தோல்வறட்சி முதலியவற்றை போக்க கூடியது. 

💛தோலை வழவழப்பாக்கும் தன்மையுடையது. சிறு குழந்தைகளுக்கும், மழை காலங்களில் பெரியவர்களுக்கும் ஆகாது.

💙வெள்ளை முள்ளங்கி
வெள்ளை முள்ளங்கி சிறுநீரை ஒழுங்குப்படுத்தும், மூலநோய், தோல் வறட்சி, வயிற்றுப்போக்கு மற்றும் நீர்சுருக்கு போன்ற நோய்களை குணப்படுத்தும், 

💚சீதபேதியை கட்டுப்படுத்தும். எலும்புக்கு பலம் சேர்க்கும். 

💛மஞ்சள்காமாலைக்கு மிகவும் நல்லது. 

💜வாத நோய்க்காரர்கள் குறைவாக உண்ணலாம்
மாதவிடாய் காலங்களில் உண்டால் மாதவிலக்கு அதிகமாகும் இக்காலங்களில் தவிர்ப்பது நல்லது.
Chakras
The word “chakra” has Hindu (Sanskrit) roots and means “wheel” or “disk”.  The chakras are the central energy points within a person’s biological body. All the vital functions within the human body are determined by the energy that spins through the chakras.
There are 49 chakras mentioned in the Vedas, seven of which are the main chakras along the spine. These chakras in harmonious balance are partially open, but closed chakras are unable to receive energy, which leads to various disorders.
What does a balanced chakra feel like?
Calm, peaceful, less or no anxiety and balanced. Chances are good that you can handle stressful situations pretty well. If your energy is positive, the energy will flow evenly from the top of your head to your feet with ease.
Follow the link to join "Yoga and Holistic Health" group in whatsapp. https://chat.whatsapp.com/7Ow0h3qkqxp9d9iQ859fC0
Follow the link and join "Yoga and holistic health" group https://telegram.me/joinchat/DTSJDApP7zVlH9BJgP5Fyg
Symptoms suggesting that your chakras are out of balance:
– The first chakra, or root chakra or “Muladhara,” is located at the base of the spine. The primary symptoms of an unbalanced Muladhara chakra are paranoia, feeling faint, insecurity, and lack of faith in the future. The lack of activity in the Muladhara chakra triggers a lack of energy, digestive problems, and stress.
– The second chakra, or Swadhistana, is located three or four finger widths below the belly button. Blockage of this chakra may manifests as emotional problems, compulsive or obsessive behavior and sexual guilt.
– The third chakra, solar plexus chakra, or “Manipura,” is found in the center of the solar plexus. Symptoms of stagnant energy within the Manipura are increased worry, anger, frustration, lack of direction or a sense of victimization.
– The fourth, or heart chakra, also called the Anahata, is located within the heart. Symptoms of stagnant energy within the heart chakra include sad thoughts and loneliness.
– The fifth, or throat chakra, the Vishudha, is located at the throat. Symptoms of a low energy Vishuddha include a lack of emotional stability, and difficulties communicating.
– The sixth chakra, brow chakra or Ajna, is located between the eyebrows, an inch back, and is known as the “third eye.” If the Ajna stops functioning properly, a decrease in intellect, headaches, and psychological problems may result.
– The seventh, or crown chakra, also called the Sahasrara, is at the top of the head, and is where an individual’s energy vibrates at the highest frequency. A stagnant crown chakra results in a lack of inner wisdom, as well as a lack of intuition.


சிறுதானியங்கள்  என்னென்ன உள்ளது என்று கேட்டால் பொதுவாக
சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் போன்ற பதில் வரும்.

இன்னும் கொஞ்சம் அதிகம் தெரிந்தவர்கள் "காடைகன்னினு ஒன்னு இருந்துச்சு அல்லது இருக்கு"ன்னு சொல்வாங்க.

"நெல்லில் இருப்பதுபோல் சிறுதானியங்களில் ரகங்கள் எதாவது உள்ளதா?" என்று கேட்டால்
பலவிதமான பதில் கிடைக்கிறது. முழுமையான பதில் எங்கேயும் கிடைக்கவில்லை.

ஐவ்வாது மலை, போதமலை, கொல்லிமலை என்று கொஞ்சம் சுற்றியபோது  பல விடயங்கள் தெரியவந்தது.

சாமை, தினை, கம்புனு எதனை எடுத்தாலும் பல ரகங்கள் இருந்துள்ளது.

நெல்லை பிரித்துப் பார்த்த நாம் சிறுதானியங்களை பிரித்துப் பார்க்க தவறிவிட்டோமா?...

அரிசி ரகங்களைப் பொருத்து பலன்கள் மாறுவதுபோல சிறுதானியமும் "ரகங்களால்" பலன்கள் மாறவேண்டும் அல்லவா?...

சிறுதானியங்களின் உட்பிரிவுகள் பற்றி விவரங்கள் அதிகமாக பேசப்படுவதில்லை.

எனக்கு கிடைத்த சில வகைகளின் பெயர்கள் :

#சாமை _(Little Millet)

மல்லியச்சாமை
பெருஞ்சாமை வெள்ளைப்பெருஞ்சாமை
வெள்ள சாமை
கட்டவெட்டிச் சாமை
திருகுலாசாமை
சடஞ்சாமை
கருஞ்சாமை
செஞ்சாமை,
சிட்டஞ்சாமை
பில்லுசாமை

#தினை_(Italian Millet or Foxtail Millet)

கென்டி தினை
செந்தினை
மரதினை
பாலாந்தினை
வெள்ளை தினை
கோராந்தினை
கில்லாந்தினை
பெருந்தினை
மூக்காந்தினை
கருந்தினை
பைந்தினை
சிறுதினை
யாடியூரு தினை
மாப்பு தினை
நாட்டுதினை

#வரகு_(Kodo Millet)

திரிவரகு
புறவரகு

#கேழ்வரகு_(Finger Millet)

சாட்டைக் கேழ்வரகு
காரக் கேழ்வரகு
கண்டாங்கிக் கேழ்வரகு பெருங்கேழ்வரகு
சுருட்டைக் கேழ்வரகு
அரிசிக்கேழ்வரகு
கருமுழியான் கேழ்வரகு
ஜாகலூரு கேழ்வரகு
முட்டை கேழ்வரகு
மலளி கேழ்வரகு
பில்லிமண்டுகா கேழ்வரகு
பிச்சாகாடி கேழ்வரகு
நாகமலா கேழ்வரகு

#சோளம்_(Great Millet or Sorghum)

செஞ்சோளம்
கருஞ்சோளம் (இருங்கு சோளம் ) வெள்ளைச்சோளம்

இன்னும் பல வகைகளின் பெயர்களைக் கூட தவறவிட்டுவிட்டோம்.

இந்த பதிவைப் பார்ப்பவர்கள் இது மாதிரி உங்களுக்கு தெரியும் பெயர்களை தெரியப்படுத்தவும்.

#தொலைத்த_தகவல்களை_மீட்டெடுக்க_முயல்வோம்...

தகவல்: பசுமைப்பாதை

🎋🌾🍁🍂🍃☘🍃🍂🍁🌾🎋


சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !

இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.

இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.

மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். 

அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்... 

தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். 

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.

இஞ்சி ஒத்தடம்:
=============

இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்:

நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.

உணவு முறை
============

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.

பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================

உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

புரதங்கள் (ப்ரோடீன்):
=================

புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.

நீர்:
==

நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை

ஒமம்:
=====

ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.

புளி:
====

புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஞ்சள்:
=======

மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.

காய்கறிகள்:
==========

பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.

பழங்கள்:
=======

ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்

தவிர்க்க வேண்டியவை
*********************************

காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்

இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...

http://www.youtube.com/watch?v=ymsg0kS-0pQ

அருமை நண்பர்களே !... 

இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்யவோ அல்லது தனிநிலைத் தகவலாகவோ உங்கள் Time Line ல்பதிவு செய்து உதவுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

தகவல்: மைக்கேல்ராஜ், பசுமைப்பாதை.

🎋🌾🍁🍂🍃☘🍃🍂🍁🌾🎋
*அருகம்புல் மூலிகையும் மருத்துவமும்*

‘ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி…’

என்று வாழ்த்து கூறுகையில் நம் முன்னோர்கள் இப்படி சொல்லி வாழ்த்துவார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், ஆல மரம் சிறிய பகுதியை நட்டு வைத்தாலும் அது தழைத்து பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கும். அருகம்புல்லும் எந்த விதமான இடங்களிலும் எந்த சூழ்நிலையிலும் பட்டுப்போகாமல் வேரூன்றி விரிந்து வளர்ந்துகொண்டே போகும். அதே போல் வாழ்த்து பெறுபவர்களும் வாழ்க்கையில் வாழ வேண்டும் என வாழ்த்துவதுண்டு.

அருகம்புல்லானது, விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பல விதங்களில் பயன் தரக்கூடிய அற்புத மூலிகை குணம் நிரைந்த ஒரு வகை புல். அருகம்புல் என்பது ஒரு தெய்வீக வழிபாட்டு மூலிகையாகவும் உபயோகிப்பது உண்டு. இதனுடைய  பற்றி சித்தர்கள் பலர் தங்கள் நூல்களிலே குறிப்பிட்டுள்ளனர். இதை நாம் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் சற்று விவரமாக இக்கட்டுரையில் பார்ப்போம்
அருகம்புல் சாறு தயாரிக்கும் முறை :

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு, நாட்டு வெள்ளைப்பூடு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு, குறைந்த வேகத்தில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனை நன்கு வடிகட்டி, இனிப்பு தேவை என்றால் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம்.

இப்படி தயாரித்த சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து சப்பி சப்பி பருக வேண்டும். பருகிய பின் அரை மணி நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. மதிய வேலையிலோ அல்லது இரவிலோ என எந்த வேளையிலும் இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால், வெறும் வயிற்றில் குடிப்பதால் மட்டுமே இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும்.

அருகம் புல்லில் விட்டமின் ஏ, விட்டமின் சி சத்துக்களும், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளன.

அருகம் புல் சாறு அருந்துவதால் என்ன பயன் என்பது பற்றி இப்போது பார்ப்போம். இதில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நீக்கி, காரத்தன்மையை உருவாக்குகிறது.

அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது. சிறுநீர் பாதை அழற்சியை தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும், சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை  இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இரத்தத்தை சுத்தப்படுதுவதில் முதன்மை வகிக்கிறது. ஒவ்வாமை, விஷ ஜந்துக்கள் தீண்டுவதால் ஏற்படக்கூடிய விஷத்தன்மை, தோல் அழற்சி, தோல் நோய்களான சொறி, சிரங்கு, கரப்பான், பூஞ்சைகள் போன்ற நோய்களை அருகம்புல் சாறு குடித்து வந்தால் தடுக்கலாம். உடலில் உள் உறுப்புகளில் உள்ள நஞ்சுத் தன்மையை வெளியேற்றுகிறது. வெட்டுக்காயம் ஏற்பட்ட இடங்களில் அருகம்புல் சாறை ஊற்றுவதால் இரத்தக்கசிவானது நின்று விடும். அதே இடத்தில் அருகம்புல் சாறை ஒரு துணியில் நனைத்து கட்டி விட விரைவில் குணம் கிடைக்கும்.

அதிக உடல் சூடு கொண்டவர்கள் இதனைப் பருகுவதால் உடல் குளிர்ச்சித் தன்மை உண்டாகும். சிலருக்கு உஷ்ணத்தின் காரணமாக மூக்கில் இருந்து இரத்தம் ஒழுகும். அவர்கள் இரண்டு மூன்று சொட்டு அருகம் புல் சாற்றை மூக்குக்குள் விட்டால் இரத்தம் ஒழுகுவது நின்று விடும். அருகம்புல் சாற்றோடு, மஞ்சள் பொடியை சேர்த்து குழப்பி, புண்கள் மேல் தடவி வர புண்களானது  மறைந்துவிடும்.

இச்சாற்றினை தொடர்ந்து பருகி வருபவர்கள் சுறுசுறுப்புடனும், முக மலர்ச்சியுடனும் வசீகரத்துடன் இருப்பார்கள். இதை நீங்கள் பருகி வர இந்த மாற்றத்தை நீங்களே உணரலாம். குளிர்ச்சியான காலங்களில் மட்டும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பருக வேண்டும்.

சாற்றினை தயாரிக்க அதிகம் பேருக்கு நேரம் இல்லாமல் இருக்கும். எல்லோரும் விரும்பக்கூடிய இச்சாற்றினை நேரம் இருப்பவர்கள் தயாரித்து அத்தகையோருக்கு கொடுக்கலாம். காலையில் நடை பயிற்சியில் ஈடுபவர்களுக்கும், இதில் விருப்பம் இருக்கும் மற்றவர்களுக்கும் இந்த சேவை செய்து அதை ஒரு வியாபாரமாகவும் செய்யலாம்.



அருகம்புல் சாறு மட்டுமல்லாமல், அருகம்புல்லுடன் சிறிது தேங்காய் எண்ணெய், பசும்பால் சேர்த்து காய்ச்சி தலைக்கு தைலமாகவும் தேய்த்து வரலாம். முடி ஆரோக்கியமாக மினுமினுப்புடன் வளரும்.

அருகம்புல் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதையும் வாங்கி பயன்படுத்தி பயனடையலாம்.

அருகம்புல்லுடன் சிறிது மிளகு, வெற்றிலை, தேன் கலந்து தீநீராகவும் பருகலாம்.

தெய்வீக மூலிகையான அருகம்புல்லை பயன்படுத்தி வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ்வோம்.

*இனிய காலை வணக்கத்துடன் மண*ி
விழிப்புணர்வு பதிவு :-

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்!

சமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி கண்டறியப்பட்டிருக்கிறார்.
போலீஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

அந்தப் பெண்ணுக்கு அந்த மாலை வேளையில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவு கூர முடியவில்லை!
ஆனாலும் பரிசோதனை முடிவுகள் அவர் பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டுத்தப் பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது!

அவரது இரத்தத்தில் Rohypnol. என்ற மருந்து பொருள் கலந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது!

இந்த Rohypnol என்ற மருந்துப் பொருள் தற்போது பலாத்காரத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது!

இந்த Rohypnol. உண்மையில் தூக்கத்திற்கான  ஒரு சிறிய மாத்திரை.
இது தற்பொழுது கயவர்களால் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் பெண்ணை சுயநினைவு இல்லாமல் போகச் செய்வதற்காக விருந்துகளில் உபயோகப்படுத்தப்படுகிறது!

இந்த மாத்திரை கொடுக்கப்பட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும்.அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுகூர முடியாது!

அதையும் விட அந்த மாத்திரை பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட நபர் அதனால் கருத்தரிப்பதைத்  தடுக்கிறது!
எனவே பாலியல் பலாத்காரம் செய்பவர் பின்னாளில் 'paternity test ' மூலம் அடையாளப்படுத்தப்படுவாரோ என்ற பயத்திலிருந்தும் அந்த கயவர்கள் தப்பிக்க இது. உதவுகிறது!

இந்த மாத்திரையினால்   இன்னும் பல மோசமான நிரந்தரமான பின் விளைவுகள் உள்ளன!

இந்த மருந்தை எளிதில் ஒரு பெண் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுக்கின்றனர்.
Rohypnol
எளிதில் எந்த ஒரு பானத்திலும் விரைவில் கரையும் தன்மை உடையது! தனி சுவையோ, கலரோ கிடையாது. எனவே பானத்தின் கலரோ சுவையோ  இந்த மாத்திரையைக் கலந்த பின்னும் மாறுவதில்லை!

அதனால் அந்த பானத்தைக் குடிப்பவருக்கு அவரது பானத்தில் மருந்து கலந்திருப்பதே தெரிய வருவது இல்லை!

அதனைக் குடிப்பதால் அவரது நினைவுத் திறன் பாதிக்கப்பட்டு, மறுநாளோ, சம்பவம் நடந்த பின்னோ அதனைப் பற்றிய எந்த ஒரு விஷயமும்  அவர்களது  நினைவில் இருப்பதில்லை!

கயவர்கள் இந்த மருந்தை மருந்துத்துறையில் உள்ள யாரிடமிருந்தும் பெறலாம்.அவ்வளது எளிதாகக் கிடைக்கக்கூடியது!

இன்டர்நெட் பக்கங்களில் இந்த மருந்தை எப்படி உபயோகிப்பது எனத் தெளிவாக விளக்கிக்கூறும் வெப்சைட்ஸ் கூட இருக்கிறதாம்.

பெண்களே தயவு செய்து வெளியில் செல்கையில் அதிக கவனத்துடன் இருங்கள்!
 பாய்ஃபிரண்ட் உடன் வெளியிலோ, டேட்டிங்கோ, ஒரு டின்னர் என்று எங்கு யாருடன் வெளியில் சென்றாலும் நீங்கள் குடிக்கும், சாப்பிடும் உணவுப் பொருட்கள், பானங்கள் இவற்றில் அதிக கவனம் வைத்திருங்கள்!

கேன் டிரிங்க்ஸ், பாட்டில் கூல் டிரிங்க்ஸ் இவை எல்லாம் சீல் உடைக்கப்படவில்லை என்பதை பருகும் முன் உறுதி  செய்யுங்கள்!

வேறு அறிமுகமில்லாத நபர்கள் உங்களுக்கு காஃபியோ, கூல்டிரிங்க்சோ வாங்கிக் கொடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.

வேறு யாருடைய பானங்களை விளையாட்டிற்குக் கூட டேஸ்ட் செய்து பார்க்க வேண்டாம்.

ஆண்கள் அனைவரும் உங்களது குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், உறவினர் அனைவருக்கும் இந்த தகவலைத் தெரிவித்து எச்சரிக்கைப் படுத்துங்கள்!

முடிந்தவரை பகிருங்கள்!

எங்கோ ஒரு அக்கா , தங்க அல்லது ஒரு மகள் இந்த தகவலைப் பகிர்வதால் உங்களால் காப்பாற்றப்படலாம் என்பதை உணர்ந்து வேகமாகப் பகிருங்கள்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது ஒரு சிறந்த ஆயுதம்.அதுவே பெண்களைப் பாதுகாக்கும்!

பெண்களை மதிப்போம்
பூண்டு எண்ணை தயாரிக்கும் முறை"

நூறு கிராம் வெள்ளைப் பூண்டை உடைத்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும் 
நல்லெண்ணை ஒரு லிட்டர், கடுகெண்ணை அரை லிட்டர், வேப்பெண்ணை கால் லிட்டர் எடுத்து அரைத்த பூண்டைக்கலந்து வெயிலில் பத்து நாள் வைத்து எடுத்துக்கொள்ளவும்
கை கால்களில் ஏற்படும் வலி, குடைச்சலுக்கு தேய்த்து வர குணமாகும்.
நன்றி
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்


உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் ...
*Organic Village*
*Aura Foods*

நாம் ஏன் குண்டாகிறோம்?? 




நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம்

நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ?? 

மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம். 

ஏன் நாம் குண்டாகிறோம்???

நாம் உட்கொள்ளும் உணவு முறை தான் 

வேறு என்ன இருக்க முடியும்?? 

நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா??

நம் தாத்தாக்கள் எல்லாம் இப்படி இருபது வயதிலேயே தொப்பை தள்ளி இருக்கவில்லையாமே..
நாம் மட்டும் ஏன் வயிற்றை வளர்க்கிறோம்??

நமது முன்னோர்கள்( நமக்கு மின் சென்ற சில தலைமுறைகள்) என்ன உணவு உண்டார்கள்??

திணை, கைக்குத்தல் அரிசி, கம்பு, கேப்பை, எள்ளு, கொள்ளு என உண்டார்கள். அரிசியில் இட்லி செய்து சாப்பிடுவது எல்லாம் வருடம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான். 

ஆனால் நாம் தினமும் அரிசியில் செய்யப்பட்ட இட்லி தோசை சாதம் என ஃபுல் கட்டு கட்டுகிறோம். 
அதோடு நில்லாமல் ஸ்நேக்ஸ் என்ற பெயரில் ரீபைன்டு சுகரில் செய்யப்பட்ட ஸ்வீட்ஸ், எண்ணெயில் பொறிக்கப்பட்ட வடை, பஜ்ஜிகள், புரோட்டாக்கள், பப்ஸ், சமோசா.

காஸ்ட்லியான ஆட்களாக இருந்தால் பீட்ஸா, பர்கர், சேன்ட்விச், ஐஸ் கிரீம்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை. 

நம் முன்னோர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்??

நம் முன்னோர்கள் வாழ்வதற்காக உணவு உண்டனர் , நாமோ உணவு உண்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

அவர்கள் காலத்தில் இத்தனை எளியதாக உணவுகள் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் அயராத உழைப்பைச் சிந்தி நாளின் முடிவிலே கிடைக்கும் ஒரு வேளை உணவாயினும் உண்டு உயிர் பிழைத்து வந்தனர்.

நாமோ அனுதினம் மூன்றிலிருந்து ஐந்து வேளை உணவுகளை பசியே எடுக்காமலும் சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுகிறோம். 

அவர்கள் உண்ட உணவில் மாவுச்சத்தின் அளவுகள் மிகவும் குறைவாக இருந்தன ஆனால் நமது  உணவில் மாவுச்சத்து மட்டுமே பிரதானமாக நிரம்பியிருக்கிறது.

என்றாவது நாம் யோசித்திருப்போமா??
ஏன் தினமும் மூன்று வேளையும் சதா அரிசியில் செய்த உணவுகளையே தின்று வருகிறோம் என்று??

நமது உடல் குண்டாவதற்கு காரணம் அது தான்..
ஆம் நாம் உண்பது அதிக மாவுச்சத்துள்ள உணவு முறை 

நம்மை குண்டாக்குவதற்கே படைக்கப்பட்ட ஹார்மோன் 
"இன்சுலின்" (insulin) 

பசி பஞ்சத்தில் இருந்து நம்மை காக்க நமக்கு அருளப்பட்ட அமிர்தம் இந்த இன்சுலின். 

இந்த இன்சுலின் என்ன செய்கிறது தெரியுமா?? 

மனிதன் அதிகமான மாவுச்சத்தை சாப்பிட்டால், அதை வைத்து சிறிதை கல்லீரலில் க்ளைகோஜனாகவும் பெரும்பகுதியை கொழுப்பாகவும்
( triglycerides) சேமிக்கிறது 

ஏன் இப்படி கொழுப்பை சேமிக்கிறது??

வரப்போகும் பஞ்சத்தை நாம் தாக்குப்பிடிக்கும் விதமாக இந்த சேமித்த கொழுப்பு பயன்படும் என்ற நல்ல நோக்கத்தில் தான்.

உங்கள் கேள்வி புரிகிறது..

இப்போது தான் பஞ்சமே வருவதில்லையே??

ஆம் நமக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டு சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 
பிறகும் ஏன்.. பஞ்சத்தில் அடிபட்டவனைப் போல மூன்று வேளையும் சதா கார்போஹைட்ரேட்டை தின்று கொண்டே இருக்கிறோம் ??

நமக்கு எதுக்கு இப்போது தேவையில்லாத கொழுப்பு?? 

சரி விசயத்துக்கு வருவோம்

இந்த தொப்பையில் உள்ள கொழுப்பானது  நமது உடலில் கெட்ட கொழுப்பான ட்ரைகிளசரைடுகளை ஏற்றிவிடுகிறது. 

மாவுச்சத்து திண்ண திண்ண இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கிறது. 

இன்சுலினை சுரக்கும் கணையத்தின் பீட்டா செல்கள் மூச்சுத் திணறுகின்றன.

நாகரிக மனிதனின் கண்டுபிடிப்பான
"ரீபைன்டு சுகர்" எனப்படும் சீனி 
கணையத்தில் உள்ள இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்களை ஒரே அடியில் கொலை செய்தேவிடுகின்றன. 

ஆம்.. ரீபைன்டு சுகர் சந்தைக்கு வந்ததும் தான் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது. 

இந்த நீரிழிவு நோய்க்கு காரணம் 
நமது உடலில் சுரக்கும் இன்சுலின் 
வேலை செய்யாமல் போவது தான் 
இதைத் தான் "இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்" என்கிறோம்.

இன்சுலின் மட்டும் தான் காரணமா??

இல்லை இன்னும் இரு ஹார்மோன்கள் இருக்கின்றன.

முதல் ஹார்மோன் 
"க்ரெலின்" (GHRELIN) 
இரண்டாவது ஹார்மோன்
" லெப்டின்" (LEPTIN) 

இந்த க்ரெலின் இருக்கிறானே இவனது  வேலை
பசியைத் தூண்டிக்கொண்டே இருப்பது
                 |
                \/
 வயிறு காலியானால் உடனே சுரக்கப்பட்டு, மூளைக்கு அலாரம் அடித்து பசிக்கான பகுதி தூண்டப்படும் (appetite center)  , பசி எடுக்கும் 
                 |
                \/
நாம் பசி எடுத்ததும் சாப்பிடுவோம்
வயிறு நிறையும்
                 |
                \/
நமக்கு நிறைவு  ஏற்பட்டு பசி அடங்கியதும், லெப்டின் சுரக்கப்படும். அது மூளையின் திருப்திக்கான பகுதியைத் தூண்டும்( satiety center) 
                |
               \/
     பசி அடங்கும் 

இதுதான் சரியான நடைமுறை

ஆனால் குண்டாக இருப்பவர்களுக்கு (obese persons) , க்ரெலின் மட்டும் நன்றாக வேலை செய்வான்.

லெப்டின் மக்கர் செய்ய ஆரம்பிப்பான்.

ஏன் என்றால்.. 
லெப்டின் மூளைக்குச் சென்று திருப்திப் பகுதிக்குச் சென்று தனது வேலையைச் செய்வதை குண்டான மனிதரின் கொழுப்பான ட்ரைகிளசரைட்ஸ் தடுத்து விடுகின்றன. இதை "லெப்டின் ரெசிஸ்டெண்ஸ்" என்கிறோம்.

ஆகவே லெப்டின் வேலை செய்யாத நிலையில் , க்ரெலின் மட்டும் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்து கொண்டே இருப்பதால் நாம் தொடர்ந்து உண்டு கொண்டே இருக்கிறோம் ..
குண்டாகிறோம். 

இதில் இன்னொரு தகவல் யாதெனில்

இந்த க்ரெலின் ,மாவுச்சத்தை உண்போருக்கு அதிகமாகவும் 

புரதச்சத்தையும் கொழுப்பையும் அதிகமான அளவு உண்போருக்கு குறைவாகவும் சுரக்கிறது. 

கார்ப்ஸ் உண்பவர் அனுதினமும் பசியெடுத்து எதையாவது கொரித்துக் கொண்டே இருப்பதற்கும், 

கொழுப்புணவை உண்பவர் 20 மணிநேரம் விரதம் இருந்தாலும் அகோரப் பசி தோன்றாமல் இருப்பதற்கும்  இது தான் காரணம். 

ஆகவே உணவில் மாவுச்சத்தின் அளவைக் குறைத்து , புரதத்தை தேவையான அளவு உண்டு, கொழுப்பை நன்றாக எடுத்துக்கொண்டால்
தொப்பை கரையும் 

கொழுப்பை கொழுப்பால்தான் கரைக்க முடியும்.

தகவல்: பசுமைப்பாதை

🎋🌾🍃🍂🍁☘🍁🍂🍃🌾🎋
வெங்காய ஊத்தப்பம் ஜாக்கிரதை!*

பொதுவாக நம்மில் நிறைய பேர்கள் வீட்டிற்கு வெளியே வெங்காய ஊத்தப்பம் சாப்பிட ஆசைப்படுவர்! இதில் நம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்!

இதற்குக் காரணம் இருக்கிறது. பொதுவாக நம் பாட்டி வைத்தியத்தில் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு காய்சலிலிருந்து விரைவாக விடுபட நோயாளியின் தலையின் இருபக்கமும் பாதியாக வெட்டிய பெரிய வெங்காயத்தை வைப்பார்கள்! 

இந்த வெட்டிய வெங்காயமானது நோயாளியின் கிருமிகளை இழுத்துக்கொள்ளும்! இதனால் நோயாளியும் விரைவாக காய்ச்சலிலிருந்து விடுபடுவார்!

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், வெட்டிய வெங்காயம் அதன் அருகில் உள்ள கிருமிகளை வெகு விரைவாக இழுத்து வைத்துக்கொள்ளும் என்பதைத்தான்!

அடுத்து, 
தெரிந்துகொள்ளவேண்டிய விவரம், ஹோட்டல்களில் வெங்காயம் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றி!

தரம் குறைந்த ஹோட்டல்களில் அன்றைய தினம் தேவைப்படும் வெங்காயத்தை அனைத்தையும் அன்றைய அதிகாலையில் பொடிசாக வெட்டி வைத்து விடுவார்கள்! 

கிட்டதட்ட அந்த வெட்டிய வெங்காயம் இரவு ஹோட்டல் மூடும் வரை பயன்படுத்தும் விதமாகவே தேவையான அளவிற்கு வெட்டி வைத்திருப்பார்கள்! இது காலை முதல் இரவு வரை சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் அந்த வெட்டிய வெங்காயம் இழுத்து வைத்துக் கொள்ளும்!

அதுவும் ரோட்டோரம் திறந்த சாக்கடை இருக்கும் பகுதியில் இந்த வெட்டிய வெங்காயம் இருக்குமாயின் கிருமி கூட்டம் வெங்காயத்தில் நிச்சயம் இருக்கும்!

அப்புறம் நம் வெங்காயப் பிரியர் ஒரு ஆனியன் ஊத்தப்பம் கேட்க்கும்போது ஊத்தப்பத்தை ஊற்றி அதன்மேலே இந்த வெங்காயத்தை தூவிவிடுவார்! என்னதான் அந்த ஊத்தப்பத்தைத் திருப்பிப் போட்டாலும் வெங்காயத்தின் அத்தனை துகல்களும் வெந்துவிட வாய்ப்பில்லை!
இதனால் வெங்காயத்தில் இருந்த கிருமிகள் முழுவதுமாக அழிவதில்லை! 

அதோடு மிதமான வெப்பத்தில் அழியாத கிருமிகள் மளமளவென்று இனப்பெருக்கமாகிவிடும்!
இப்படி கிருமிகளின் இனப்பெருக்கமான நிலையில் நம் வெங்காயப் பிரியர் குறிப்பிட்ட நோய்க் கிருமியை உள்வாங்கிக் கொள்கிறார்! அதன் பலனை ஓரிரு நாளில் ஏற்படும் ஆரோக்கிய குறைவு நம்க்கு உணர்த்தும்...

இதுபோலவே, 
வெங்காயம் போட்ட *முட்டை ஆம்லெட்டும்*வேலை செய்யும்!

ஆகவே,
 _வீட்டிற்கு வெளியே வெங்காயம் தூவிய உணவுகளை தவிர்ப்பது நல்லது!_

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Aura Foods*
நீண்ட வாழ்வு தரும் உணவுப் பழக்கம்..!!

எவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று நிர்ணயிக்கும் தன்மை நம் கையில் இல்லை. ஆனால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள் இருக்கிறதா என்றால் இருக்கிறது. உடற்பயிற்சி, துடிப்பான வாழ்க்கை முறையுடன், எதை, எப்படி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கிறது என நீண்ட காலம் வாழ்பவர்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்கள், நீண்ட காலம் வாழ, முதுமையைத் தாமதப்படுத்தும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

*எந்த உணவில் அதிகமான நுண்ணூட்ட சத்துக்களும் குறைவான கலோரிகளும் உள்ளதோ அந்த வகை உணவுகளை உண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும். புரொகோலி சாலட், திராட்சை உள்ளிட்ட பல காய்கறிகள், பழங்கள் இப்படி உள்ளன. இவை பலவகை புற்றுநோய் வராமல் காக்கும் திறன் கொண்டவை.

*நல்ல கொழுப்பு நிறைந்தது நல்லெண்ணெய். இது, இதய நோய்கள் வராமல் தடுக்கும். அதேசமயம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் 2 டீஸ்பூன் நல்ல எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*சிவப்பு நிற காய்கறி, பழங்களான தக்காளி, மாதுளை, சிவப்பு கொய்யா போன்ற உணவுகளில் லைக்கோபீன் சத்து இருப்பதால் சிலவகை புற்றுநோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

*பீன்ஸ் வகை உணவுகளான பீன்ஸ், அவரை, துவரை, காராமணி, கிட்னி பீன்ஸ் போன்றவற்றில்  ஃபேட்டி ஆசிட் புட்டிரேட் (fatty acid butyrate) சத்து உள்ளதால் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

*நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களை உண்டால் கழிவுகள் வெளியேறி மலச்சிக்கல் இருக்காது. இதனால் சர்க்கரை நோய், இதய நோய், உடல்பருமன், ரத்தஅழுத்தம் ஆகியவை வராமல் தடுக்கலாம். ஃபோலிக் அமிலம் இருப்பதால், உடலில் செல்சிதைவு ஏற்படாமல் தடுக்கிறது.

*கிரீன் டீ, வெந்நீரில் தேன், எலுமிச்சை சாறு தலா ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகம், கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். நோய் பாதிப்புக்கான வாய்ப்பு பெருமளவு குறைந்துவிடும். உடல் பருமன் குறைக்க, சூரியக் கதிர்வீச்சால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்க இது உதவுகிறது.

*உடலில் நல்ல கொழுப்பு சமநிலையாக இருந்தாலே, உடல்பருமன் ஏற்படாது. பாதாமில் வைட்டமின் இ, தயமின், நார்ச்சத்து, ரிபோஃபிளேவின், இரும்புசத்து, கால்சியம் நிறைவாக உள்ளன. தினம் நான்கு பாதாமை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

*பச்சை, மஞ்சள், சிவப்பு குடமிளகாயில் வைட்டமின் சி, நார்ச்சத்து அதிகம். ஆரோக்கியத்தை மேம்படுத்த, வாரம் இருமுறை குடமிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை சாலட் செய்து சாப்பிடலாம்.

*கேரட், பப்பாளி, அன்னாசி உள்ளிட்ட ஆரஞ்சு நிற காய்கறி, பழங்களில் வைட்டமின் ஏ அதிகம். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆயுள் முழுக்க தெளிவான பார்வையை பெற, கேரட்டுக்குத்தான் முதலிடம்.

*நாட்டுக்கோழிமுட்டை மற்றும் மீனில், வைட்டமின் டி முக்கியமான விகிதத்தில் கலந்துள்ளது. இது எலும்பு சம்பந்தமான நோய்கள் உருவாகாமல் தடுக்கும். எலும்புகளின் தேய்மானத்தைக் குறைக்கும். வயோதிக காலத்திலும் நாம் ஓரளவுக்கு சமாளிக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் கைக்கொடுக்கின்றன.

*சுண்டை வத்தல் மற்றும் வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம். இவற்றை உட்கொள்வதால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.  ரத்தசோகை நோய் வராமல் தடுக்கும்.

*தயிர், வெண்ணெய், யோகர்ட் உள்ளிட்ட பால்பொருட்களில் நன்மை செய்யும் பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. செரிமானத்துக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம், சில வகை புற்றுநோயையும் இந்த பாக்டீரியா தடுக்கிறது.

*சீசனில் விளையும் உள்ளுர் காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆரஞ்சுப்பழம், அன்னாசி, சாத்துக்குடி. ஊளைச் சதை, கரப்பான், கண்நோய் போன்ற பிரச்னைகளை சரிசெய்யும். எலும்பு, பற்களை உறுதியாக்கும்.

*சிவப்பு அரிசி, கருப்பு அரிசி, பிரவுன் அரிசி ஆகியவற்றுக்கு உங்கள் தட்டில் இடம் கொடுங்கள். இதில் நார்ச்சத்து, பைட்டோகெமிக்கல், ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கலோரிகள் குறைவு ஆதலால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

*ஜூஸ், சாலட், நொறுக்கு தீனி, மோர், இனிப்புகள் என எதை வீட்டில் செய்தாலும் அதில் ஆளிவிதைகள் இடம் பெறட்டும். இதிலுள்ள நார்ச்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்,  ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை புற்றுநோய்களை எதிர்க்க கூடியவை. கொழுப்பை கரைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

நீடுழி வாழ வைக்கும் உணவுகளை சாப்பிட தொடங்குங்கள்!

தகவல்: பசுமைப்பாதை

🍑🍒🍓🍇🍈🍉🍌🍋🍊🍐🍍
சித்த மருத்துவம்


 நீளமான பதிவு...
மிக மிக ஆழமான பதிவு.மருந்து என்னும் சொல்லுக்கு ஒளடதம் (Medicine), பரிகாரம் (Remedy), அமிர்தம் (Ambrosia), வசியமருந்து (Pitter), சோறு (Cooked Rice), இனிமை (Sweetness), குடிநீர் (Drinking Water) ஆகிய பொருள்கள் உள்ளன. துன்பத்தை வேருடன் களைந்து பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவற்றை யொழித்து, உடலில் எக்காலமும் உயிர் நிலைத்திருக்கச் செய்யும் கருவியே மருந்து எனவும், அது பயன்படுத்தப்படும் முறையே மருத்துவம் எனவும் கூறுவர். இதனால் மருத்துவத்தின் பயனும், சிறப்பும் விளங்கக் காணலாம். சித்த மருத்துவத்தில் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்னும் பிரிவுகள் உள்ளன. இம்மருந்துகள் தேவ மருந்து, மனித மருந்து, இரச மருந்து என்னும் முப்பெரும் பிரிவுகளாகக் காணப்படுகின்றன.

மருந்து முறை
சித்த மருத்துவ நூல்கள்களில் உடலுக்கு உள்மருந்தாக அளிக்கப்படும் அக மருந்துகள், உடலுக்கு வெளிமருந்தாகப் பயன்படும் புற மருந்துகள், என இரண்டு வகைகள் கூறும் மருந்து முறை குறிப்பிடப்படுகின்றன.

அக மருந்துகள் 32
1.சுரசம், 2.சாறு, 3.குடிநீர், 4.கற்கம், 5.உட்களி, 6.அடை, 7.சூரணம், 8.பிட்டு, 9.வடகம், 10.வெண்ணெய், 11.மணப்பாகு, 12.நெய், 13.இரசாயனம், 14.இளகம், 15.எண்ணெய், 16.மாத்திரை, 17.கடுகு, 18.பக்குவம், 19.தேனூறல், 20.தேநீர், 21.மெழுகு, 23.பதங்கம், 24.செந்தூரம், 25.நீறு / பற்பம், 26.கட்டு, 27.உருக்கு, 28.களங்கு, 29.சுண்ணம், 30.கற்பம், 31.சத்து, 32.குளிகை.

புற மருந்துகள் 32
1.கட்டுதல், 2.பற்று, 3.ஒற்றடம், 4.பூச்சு, 5.வேது, 6.பொட்டணம், 7.தொக்கணம், 8.புகை, 9.மை, 10.பொடி, 11.கலிங்கம், 12.நசியம், 13.ஊதல், 14.நாசிகாபரணம், 15.களிம்பு, 16.சீலை, 17.நீர், 18.வர்த்தி, 19.சுட்டிகை, 20.சலாகை, 21.பசை, 22.களி, 23.பொடி, 24.முறிச்சல், 25.கீறல், 26.காரம், 27.அட்டைவிடல், 28.அறுவை, 29.கொம்பு கட்டல், 30.உறிஞ்சல் 31.குருதி வாங்கல், 32.பீச்சு என்பனவாகும்.

மேலே கூறப்பட்ட அகமருந்துகள் 32, புற மருந்துகள் 32, ஆக 64 மருந்துகளில், அகமருந்துகளுக்குத் தயாரிக்கப்படும் முறைகளினாலும், புறமருந்துகளுக்குச் செயல்படுத்தப்படும் முறைகளினாலும் பெயர்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இம்மருந்துகளின் பெயர்கள் அனைத்தும் தமிழ்ப் பெயராகவே இருப்பது, தமிழ் மருத்துவத்துக்கு உரிய மருந்துகள் என்பதற்கான சான்றுகளாக இருக்கின்றன.

மருந்து செய்முறைகள்
மருந்துகள் 64–ம் செய்யப்படும் போது கீழ்க்கண்ட 24 வகையான வினைகளால் செய்யப்படுகின்றன.
1.கருக்கல், 2.அரைத்தல், 3.கசக்கல், 4.கலக்கல், 5.வறுத்தல், 6.சுழற்றுதல், 7.உருக்குதல், 8.இறுத்தல், 9.உலர்த்தல், 10.உறைத்தல், 11.குழைத்தல், 12.உடைத்தல், 13.நறுக்குதல், 14.உருட்டுதல், 15.நகத்துதல், 16.நசுக்குதல், 17.பொசுக்குதல், 18.நனைத்தல், 19.எரித்தல், 20. வழிக்குதல், 21.இறுக்குதல், 22.இழைத்தல், 23.குழைத்தல்,  24.எடுக்குதல் என்பனவாகும். இவை, மருந்து செய்யும் வினையாகக் கொள்ளலாம்.

மருந்துகளின் மூலங்கள்
சித்த மருந்துகள் செய்வதற்கு மூலப் பொருள்களாக அமையும் மருந்துகள் இம் மருத்துவத்தின் சிறப்பை உணர்த்த வல்லவையாக இருக்கக் காண்கிறோம். அவை வருமாறு,
1. உப்பு வகைகள் – 25 4. பாடாணங்கள் – 64
2. உலோகங்கள் – 12 5. மூலிகைகள் – 1008
3. உபரசங்கள் – 120 6. கடை மருந்துகள் – 64
இவை, பல்வேறு முறைகளில் மருந்தின் மூலப் பொருள்களாக அமைந்து நன்மருந்தாகி நோயைப் போக்கப் பயன்படுகின்றன. 1293 எண்ணிக்கைகள் கொண்ட மூலப்பொருள்கள் வேறு எந்த மருத்துவ முறையிலும் பயன்படுத்தப்படுவதில்லை எனத் துணிந்து கூறலாம். அதேபோல், எல்லா மருத்துவ முறைகளிலும் பொதுவாக 4 வகைகளில் மட்டுமே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், சித்த மருத்துவத்தில் 1. உப்பு, 2. பாடாணம், 3. உபரசம், 4. இரசம், 5. உலோகம், 6. கந்தகம் என ஆறு முறைகள் பின்பற்றப் படுகின்றன.

மேலும் கட்டு, செந்தூரம், களங்கு, மெழுகு, தேன் போன்றவை ஆண்டுகள் பல ஆனாலும் வீரியம் கெடாமல் இருக்கும் மருந்துகளாகத் தயாரிக்கப்படுகின்றன. மற்ற மருத்துவ முறைகளில் இல்லாத வகையில் பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப்படுவது சித்த மருத்துவ முறையில் மட்டுமே என்பர்.

அவ்வாறு பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து செய்யும் முறைகளாவன, 1.இரசம் செய்முறை, 2.இரசக் செந்தூரம் செய்முறை, 3.வீரம் செய்முறை, 4.பூரம் செய்முறை, 5.அரிதாரம் செய்முறை.

இயற்கையில் கிடைக்கக் கூடிய பாடாணங்கள் 32 ஆகும். அவற்றைக் கொண்டு, வைப்புமுறை என்னும் செய்முறைகளால் மேலும் 32 பாடாணங்கள் சித்தர்களால் செய்யப்பட்ட செயற்கைப் பாடாணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மருந்துகளுக்கும் மருந்துகளைச் செய்வதற்கும் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதால், சித்த மருத்துவம் எல்லா நிலைகளிலிருந்தும் ஆராயப் பெற்றவை எனக் கொள்ளலாம். விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகளும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

” வயதென்ன நல்லபாம் பொன்றை வாங்கி
மாளாம லதன்விஷத்தை வாங்கிக் கொண்டு
அயதென்ன சூதமொரு கழஞ்சு கொண்டு
ஆலகால விஷத்தில் ஊற்றிக் கொண்டு.”
நல்ல பாம்பின் விஷத்தை எடுத்து, சூதம் ஒரு கழஞ்சு அந்த விஷத்துடன் கலந்து, வாலுகையில் ஒரு நாழிகை எரித்தால் சூதம் (ரசம்) கட்டும். அச் சூதக்கட்டு குருவாகும். அதனால் ஒன்பது வகையான உலோகங் களையும் உருக்கலாம் என்பர். இதனால், மருந்தாகப் பாம்பின் நஞ்சையும் பயன்படுத்தும் நிலையில் மருத்துவம் உயர்ந்திருப்பதை உணரலாம். அதேபோல, ஆனைத்தந்தம், குதிரைக் குளம்பு, ஒட்டகப் பிச்சு, கழுதை அமுரி, பன்றிக்குட்டி, நாய் மூளை, நரி மாமிசம், குரங்கு பிச்சு, ஓணான் பிச்சு, கெருடன் முட்டை, செம்போத்து, மயில் நெய், கிளியிறகு, நாணுவான் முட்டை, சக்கிர வாகம், அன்னம்–காக்கை முட்டை, கோழிமுட்டை, ஆந்தை–குயில் முட்டை, காட்டுப் புறா எச்சம், வீட்டுப் புறா எச்சம், தாரா முட்டை, ஊர்க்குருவி விந்து, அளுங்கு–உடும்பு நெய், முதலை நெய் , ஆமை, கல்லாமை, கட் டெறும்பு, பூனாகம், இந்திர கோபம், கரு நாகப் பாம்பு, நாகப்பாம்பு போன்றவை மருந்து செய் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை உயிரினங்களும் மருந்திற்குப் பயன்படுவன என்று ஆராய்ந்து காண்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் என எண்ணிப் பார்த்தால், இந்த மருத்துவ முறைகள் எத்தனை ஆண்டுகள் பழைமை கொண்டவை என்பது விளங்கும்.

சுத்தி
சுத்தி என்பது தூய்மைப்படுத்துதல் அல்லது பொருள்களில் இயற்கையாகவும், செயற்கையாகவும் தங்கியிருக்கின்ற மாசுகளை நீக்குதல், குற்றம் களைதல் என்பதாகும். மூலிகை, மருந்துப் பொருள், உலோகம், பாடாணம், இரச வகை ஆகிய அனைத்தையும் சுத்தி செய்த பின்பே மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் என்பது, சித்த மருத்துவ நெறிகளுள் ஒன்றாகும்.

சுத்தி செய்யப்படாமல் செய்யப்படுகின்ற மருந்தினால் முழுமையான மருத்துவக் குணமில்லாமல் போவதுடன், தீமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதால், சுத்தி முறைகள் வலியுறுத்தப் படுகின்றன. சுத்தியில்லையேல் சித்தியில்லை என்னும் மருத்துவப் பழமொழியும் இதனையே வலியுறுத்துகிறது.
” சுசியா னதுலோகத் தோமகற்ற லென்ன
சுசியா னதுலோகந் துவ்வாய்ச் சுசியா
முளரி யுலகை முயறலின் மாலுத்தி
முளரியுல கையுறு முன்.”
பிரபஞ்சம் என்று சொல்லக் கூடிய இந்த உலகத்தின்கண் சிறப்பினை வளரச்செய்ய, இவ்வுலகத்திலுள்ள குற்றங்கள் என்று சொல்லக் கூடிய உட்பகையை எப்படி நீக்க வேண்டுமோ அப்படி, மருந்துப் பொருள்களிடத்திலே தங்கியுள்ள மாசுகளை நீக்கி ஆண், பெண் ஆகிய இரு பாலார்க்கும் ஏற்றவாறு வகுத்துரைக்கப் பட்டதே சுத்திமுறையின் சிறப்புத் தன்மையாகும் என்று, தேரையர் கூறக் காணலாம்.

இஞ்சிக்கு மேல் தோலும், கடுக்காய்க்குக் கொட்டையும் மரங்களுக்குச் செதிலும் நஞ்சு என்பர். மருந்துக்குப் பயன்படுத்து முன், அந்நஞ்சு நீக்கப்பட்டால் சுத்தியாகும். குண்டுமணி, அலரிவிதை ஆகியவற்றை உண்டால் மரணத்தை உடனே வருவிக்கும். ஆனால், மருந்துகளில் அவை அரிய பணியைச் செய்கின்றன. அவற்றைக் கொண்டு செய்யப்படுகின்ற மருந்தை உண்பவர் மரணமடைவதில்லை. காரணம், சுத்தி செய்த பின்னர் மருந்தாகச் செய்யப்படுவதாலேயாம். பாடாணங்கள் எல்லாம் உயிரைக் கொல்லும். ஆனால், மருந்தாகப் பயன்படுகின்றன என்பதால், சுத்தி என்பதன் தேவை மருத்துவத்துக்கு இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது.

சுத்திப் பொருள்கள்
உலோகங்கள், பாடாணங்கள், நச்சுத்தன்மையுடைய கொட்டை, பருப்பு, விதை போன்ற பொருள்களைச் சுத்தி செய்வதற்காக, மூலிகைச் சாறு, கள், நீர், பால், மோர், பூநீர், இளநீர், சிறுநீர், சுண்ணாம்பு நீர், காடி நீர், எண்ணெய், பழநீர், செம்மண், செங்கல்தூள் போன்ற பல பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன.

ஒரு பொருளால் எல்லாவித மருந்துகளையும் சுத்தி செய்ய முடியாது. பொருள்களின் குணமும், சுத்திக்காகப் பயன்படுத்தப் படுகின்ற பொருள்களின் குணமும் கண்டறிந்து, அவற்றின் சேர்க்கை யால் உண்டாகும் எதிர் விளைவுகளையும் கண்டறிந்தே சுத்தி செய்யப்படும். மருந்துகளைச் சுத்தி செய்யும் முறை விரிவாகவும் விளக்கமாகவும் சித்தர்கள் கலைக் களஞ்சியத்தில் விளக்கப்பட்டுள்ளது.

மூலிகைகள்
தாவர இனங்களில் மூலிகைகள் தலை சிறந்தவை. உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் தாவரங்களைச் சார்ந்து வாழ்ந்திருப்பதைப் போல, மருத்துவ முறைகள் நேர் முகமாகவோ மறைமுகமாகவோ மூலிகைகளைச் சார்ந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக சித்த மருத்துவம் மூலிகைகளையே மூலப் பொருளாகக் கொண்டுள்ளது. இயற்கை வழி அமைந்த இலக்கியங்களும், மருத்துவமும் இயற்கைப் பொருளான மூலிகைகளின் குண நலன்களை அறிந்து அவற்றின் பண்புகளையும், மருத்துவக் குணங்களையும் தம்முள் சேர்த்துக் கொண்டுள்ளன.

தமிழ் மருத்துவ நூலார் அவற்றின் குணங்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்தி வந்தனர். மண்ணில் தோன்றிய பல்லாயிரக் கணக்கான தாவரங்கள் அனைத்தையும் மருத்துவம் ஏற்றுக் கொள்ளா விடினும், அறிந்தவற்றைப் பயன்படுத்தத் தக்கவை என்றுணர்ந்த வற்றை ‘மூலிகை’ எனப் பெயரிட்டுப் பயன்படுத்தி வருகிறது.
” மூலி யனேக மூவாயிரத்து முன்னூ ரெனினுங்
காலியின் வேகங் கடற் சூழ்ந் தகில காட்ட கத்திற்
பாலினம் நீரினம் நீரில்லா வேரினம் படரினமுஞ்
ஜோலிய தாட்டம் வாதத்தின் மூலியுஞ் சொர்ணமிதே.”
கடல் சூழ்ந்த நில உலகத்திலுள்ள காடுகளில் பாலினம், நீரினம், வேரினம், படரினம் எனும் வகைப்படுத்தப் பெற்ற மூலிகைகள் 3300 என்பர். இதனால் இத்தனை மூலிகைகளைச் சித்தர்கள் அறிந்திருந்தனர் எனக் கருதலாம்.

“ சொன்னதொரு மூலிகையின் தொகுப்புக் கேளு
சுளுக்காக நானூற்று யெழுபத்து மூன்று”
என்று, 473 மூலிகைகளின் பெயர்கள் பட்டியலிட்டுக் காட்டப் பட்டுள்ளன. இதனால், இந்நூலாசிரியர் தொகுத்த மூலிகை 473 எனக் கொள்ள வேண்டும். திருவருட்பா உரைநடைப் பகுதியில், சீந்தில் தொடங்கி துளசி ஈறாக 485 மூலிகைப் பெயர்களும், அவற்றின் மருத்துவக் குணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மருந்தாகும் மூலிகைகளாக இருக்கக் காணலாம். அவை, வடலூர் இராமலிங்க வள்ளலார் அறிந்திருந்த மூலிகைகள் எனக் கருதலாம்.

இந்தியாவில் சுமார் 2000 வகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன. அதில் 500 வகைகள் நாட்டு மருத்துவத்திலும் 100 வகை ஆங்கில மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன என்பர். இது, இந்நூலாசிரியர் அறிந்திருந்த செய்தியாக இருக்கலாம். என்றாலும், இவர் 300 வகை மூலிகைகளின் பெயர்களைத்தான் பட்டியலிட்டுள்ளார். எனவே, அவரவர் தொகுத்த காலத்திற்கு ஏற்ப மூலிகைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக இருக்கக் காண்கிறோம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் என்பவை மருத்துவ மூலிகையின் தொகுப்பு பெயர் பெற்று விளங்கக் காணலாம்.

ஏலாதி : சுக்கு, இலவங்கம், சிறுநாவல் பூ, மிளகு, திப்பிலி, ஆகிய ஆறு மருந்துப் பொருள்களும் முறையே 1,2,3,4,5,6 என்ற எடை அடிப் படையில் கலந்ததற்கு ஏலாதி எனப்பெயர்.

திரிகடுகம் : சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் சேர்ந்தது திரிகடுகம் எனப்படும்.

சிறுபஞ்சமூலம் : கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெரிஞ்சில் இவ்வைந்தின் வேர்கள் சிறுபஞ்ச மூலமெனக் கருதப்பெறும்.

இவ்வாறு தொகுப்பு மூலிகைகளாகக் காணப்படுபவை, திரிகண்டம், திரிஏலம், திரிகந்தம், திரிகாயம், திரிகாரசிகம், திரிகுமரி, திரிசாதம், திரிநிம்பம், திரிபலை, திரிபழம், திரிமஞ்சள், திரிமதம், திரிமூலம் எனவும்,

இரு ஓமம், இருகரந்தை, இருகுமிழ், இருசங்கன், இருசண்பகம், இரு சந்தனம், இரு சீரகம், இருதொட்டி, இரு நன்னாரி, இரு நாபி, இரு நிம்பம், இரு நெரிஞ்சில், இரு நொச்சி, இருபகம் எனவும்,

பஞ்ச கந்தம், பஞ்சகமம், பஞ்சகற்பம், பஞ்சகசாயம், பஞ்ச காயம், பஞ்ச காரகம், பஞ்ச கோலம், பஞ்ச சருக்கரை, பஞ்ச சீதம், பஞ்ச தரு, பஞ்ச நிக்தம், பஞ்ச திரவியம், பஞ்ச தீபாக்களி, பஞ்ச நிம்பம், பஞ்ச பட்டை, பஞ்ச பத்திரம், பஞ்ச லோதகம், பஞ்ச பாணப்பூ, பஞ்ச பூதமூலம், பஞ்ச பூடணம், பஞ்ச முட்டி, பஞ்ச மூலம், இடைப்பஞ்ச மூலம், பெரும் பஞ்ச மூலம், புற்பஞ்சமூலம், பஞ்ச மூலிகற்பம், பஞ்ச மூலிக் குடிநீர், பஞ்ச மூலித்தைலம், பஞ்ச லோகச் சாயம், பஞ்ச வர்க்கம், பஞ்ச வலக்கம், பஞ்சவாசம், பஞ்ச வில்வம், பஞ்சாக்கினிக் கொடி, பஞ்சாமிலம் எனவும் மருத்துவத் தொகையகராதி தெரிவிக்கக் காணலாம்.

“மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய்வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக் கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்
மீண்டேயும் தம்உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும், உள; நீ, வீர
ஆண்டு ஏகி, கொணர்தி என அடையாளத் தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்”
எனக் கம்பன் உரைக்கக் காணலாம். மாண்டாரை உய்விப்பதும், உடலை இரு வேறாக வகிர்ந்தாலும் பொருந்துவிக்கச் செய்வதும், படைக்கலங் களைக் கிளர்ச்சி செய்யச் செய்வதும், இழந்த உருவத்தை மீளச் செய்வது மாகிய மருந்து மூலிகையாகும் என்றதனால் மூலிகையின் சிறப்பு விளங்கச் செய்யும்.

தமிழ் மருத்துவத்தில் இடம்பெற்ற ‘இருவேலி’ வேலூர்ப்பாளையச் செப்பேட்டிலும், ‘வழுதிலை’யைச் சேலம் மாவட்டம் தாரமங்கலம் செப்பேட்டிலும் காண முடிகிறது. செவ்வல்லி, செவ்வாம்பல், செங்குவளை எனப்படுகின்ற செங்கழுநீர் சமயத்தோடு தொடர்புடைய மூலிகையாகும். இதனை நடுவதற்கு அரசிடம் உரிமை பெற வேண்டும் எனவும், இதை ‘உரிமை மலர்’ என்று தேவாரமும், தாரமங்கலம், செங்கம் இடங்களிலுள்ள சோழர் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன.

செங்கழுநீர் சிவனுக்கு உகந்த மலர் என்பதால், இதற்கு வழங்கப்பட்ட வரி ‘குவளைக் காணம்’ எனப்பட்டது. அதே போல், மருத்துவக் குணமிக்க நீலமலர் வளர்க்க ‘குவளை நடுவரி’யும், கண்ணோய், ஆஸ்துமா, காமாலை, இரத்தக் குறைபாடு முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும் ‘கரிசலாங்கண்ணிக்கு ‘கண்ணிட்டுக் காணம்’ என்னும் வரி செலுத்தி வளர்க்க வேண்டும் என்று, பல்வேறு வரி முறைகள் முடியாட்சிக் காலத்தில் மூலிகைகளுக்கு இருந்ததை அறியலாம். மூலிகைகளின் சிறப்பினையும் அதன் தன்மையையும் கருத்திற்கொண்டு, மூலிகைகளைக் கடவுளோடு இணைத்துக் கொண்டனர்.

மூலிகைகளும் மருத்துவ மலர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் வனங்கள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பும் கோயில்களைச் சார்ந்தே இருந்தால், அவை பாதுகாக்கப்பட்டதுடன் அவற்றின் புனிதமும் போற்றப்பட்டது எனலாம்.

1.கடம்பவனம் – மதுரை, 2.குண்டலிவனம் – திருவக்கரை, 3.சண்பகவனம் – திருநாகேச்சுரம், 4.சூதவனம் – திருவுச்சாத்தானம், 5.பாரிஜாதவனம் – திருக்களர், 6.மகிழவனம் – திருநீடூர், 7.மதுவனம் – நன்னிலம், 8.மறைவனம் – வேதாரணியம், 9.மாதவிவனம் – திருமுருகன்பூண்டி, 10.முல்லைவனம் – கருகாவூர், திருமுல்லைவாயில், 11.வில்வவனம் – திருவாடனை, 12.வேய்வனம் – திருநெல்வேலி

மூலிகை எனக் கொண்ட மரம், செடி, கொடி ஆகிய அனைத்தையும் பாதுகாப்பதில் சைவத் திருக்கோயில்கள் அதிக ஆர்வம் கொண்டனவாகக் காணப்படுகின்றன. சைவத் திருக்கோயில்கள் (தமிழகத்தில் உள்ளவை மட்டும்) அனைத்திலும் ‘தல விருட்சம்’ எனும் பெயரில் ஏதேனும் ஒரு மூலிகைக் குணங்கொண்ட தாவரத்தைப் பாதுகாக்க முற்பட்டிருக்கின்றன.

ஏகமூலிகை : ஏகமூலிகை என்பது கையான் தகரையைக் குறிக்கும். முறைப்படி செய்தால் அம்மூலிகை 9 உலோகங்கள், 64 பாடாணங்களையும் புடமிட்டுப் பற்பமாக்கப் பயன்படும். அதனாற்றான் அதற்கு அப்பெயர்.

வேலு மூலிகை: “பல்லுக் கடுத்த பல நோயகற்றியரைக் கல்லுக்கு நேராகக் காட்டுமே’’ வேல் என்னும் மூலிகை பற்களின் நோய்கள் பலவற்றையும் நீக்குவதுடன், பற்களை வலிமையடையச் செய்து கற்களைப் போல உறுதிப் படுத்தும்.

பூனைக்காலி : வாத, பித்த, ஐயம் என்னும் இம்மூவகைக் குற்றங்களால் வரும் நோய்களைப் போக்கும்.

காந்தனள் : சங்க இலக்கியம் குறிப்பிடும் காந்தளை. அதன் கிழங்கு ஏர்போல வளைந்து காணப்படுவதனால் கலப்பைக் கிழங்கு என்றும் பெயர் பெறும். அக்கிழங்கின் மேல்பகுதியும் கீழ்ப் பகுதியும் பண்பால் வேறுபட்டவை. ஒரு பகுதி இதய ஓட்டத்தை ஊக்குவிக்கும். மறுபகுதி, எதிராகப் பணிபுரியும். அதில் அடங்கிய கோகோசின் என்ற ‘அல்கலாய்ட்’ புற்றுநோய்க்கு நல்ல மருந்து. விஷமும் அதில்; மருந்தும் அதில். அமுதமும் நஞ்சும் ஒரே இடத்து என்னும் சிறப்பிற்குரியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான சிறப்புகள் மட்டுமல்லாது மேலும் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண் டிருப்பவை மூலிகைகளாகும்.

“அவுரி, ஓரிலைத் தாமரை, செவ்வல்லி, பிளியறணை, அமுரி, கோவை, பிடர்முக்கி, கொடியொளிச் சிகப்பு, செந்திராய், கரிய சாலை, சிறுகீரை ஆகியவற்றின் சாற்றைத் தனித்தனியே பாண்டத்தில் வைத்து, வெண்கரு, குன்றி, சீனம் இவற்றைப் பொடி செய்து, மேற்கண்ட சாற்றில் போட்டுக் காய்ச்சும் போது தாரம், இந்துப்பு, மெழுகு, வெண்ணை சேர்த்து மூடிசீலை செய்து எரித்தெடுத்து, அதன் சாம்ப லுக்கு எட்டுக்கு ஒன்று ஆவின் நெய், வெண்காரம், வெல்லம், குன்றி இவற்றைச் சேர்த்துப் பிசைந்து, பத்துக்கு ஒன்று குடோரி சேர்த்து மூன்று நாள் அரைத்து வெய்யலில் காய வைத்துசரஉலையில் ஊத மூலிகை செம்பாகும்” என்பதனால், மூலிகையில் இருந்து செம்பு உருவாகும் என்பதுடன், இந்தச் செயற்கைச் செம்பினால் செய்யப்படுகின்ற மருந்து வீரிய மிக்கதாகவும் நோயையும், நோயின் மூலத்தையும் அழிக்க வல்லதாகவும் இருக்கு மென்பர்.

” விழலாகப் போகாமல் கரிசாலை கரந்தை
மிக்கான பொற்றலையும் நீலிவல் லாரை
பழலாகப் பாக்களவு பாலில் கொள்ளு
பாங்கான மண்டலந்தான் உண்டா யானால்
கழலாக காயந்தான் ஆயிரத் தெட்டு
கனகம்போல் சடந்தானும் கனிந்து மின்னும்
மழலாக வார்த்தையது கின்னரத்தின் ஒலியாம்
மகத்தான வாசியுமே இறுகும் பாரே.”
கரிசாலை, கரந்தை, பொற்றலை, நீலி, வல்லாரை ஆகிய ஐந்து மூலிகைகளைத் தினமும் பாக்களவு ஒரு மண்டலம் உண்டு வந்தால், உடல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னாகக் கனிந்து மின்னுவதுடன், குரல் கின்னரம் போன்ற இனிமையானதாகவும்மூச்சும் இறுகி உடலை வளப்படுத்தும் என்று தெரிகிறது.

கறுப்பு மூலிகை
மூலிகைகள் இயல்பாக இருக்கும் நிறத்திலிருந்து மாறுபட்டு கறுப்பு வண்ணத்தில் அவற்றை வளர்த்து அதைக் கற்பமுறையில் உண்டால், நீண்ட நாள் வாழலாம் என்பது சித்தர்களின் கருத்தாக இருக்கிறது.
“இரண்டாள் மட்டம் குழியில் நிறையச் சேங்கொட்டையைப் போட்டு மூடி, அதன்மேல் கரு நெல்லி, கருநொச்சி, கஞ்சா, கொடி வேலி வைத்து வளர்க்க அவை கருத்து வளரும். அவற்றை முறையாக உண்ண கற்பமாகும்.”
இடுப்பளவு குழியில் சேங்கெட்டை இரண்டு முழ உயரம் கொட்டி, மண்போட்டு மூடி, நீர் பாய்ச்சி நன்றாக அழுகச் செய்து மூன்று திங்களுக்குப் பின், குமரி, ஓமம், கஞ்சா, வல்லாரை, கரிசாலை, செருப்படி, நீலி, வீழி, பொற்றலை, நொச்சி, கரந்தை, மத்தை, தும்பை, கொல்லன் கோவை, வாழை ஆகியவற்றைப் பதியமிடவும். அவை நன்றாக வளர்ந்து காய்ந்த பின் அவ்விதைகளை முன்போலவே சேங்கெட்டையிட்டுப் பாத்திக் கட்டி, வளர்த்து இவ்வாறு நான்கு முறை வளர்த்தால் சிறப்பான கருப்பு மூலிகையாகும். இவ்வகை மூலிகைகைளை மலைதோறும் சித்தர்கள் வளர்த்துள்ளார்கள். அவ்வகை இலையைக் கசக்கி, கொக்கின் இறகில் பூச, அவ்விறகு காக்கை நிறம் போலாகும். அவ்விலைகளைத் தின்றால் காய சித்தி அடைந்து பல்லாண்டு வாழலாம்.

மேற்கண்டவாறு வளர்க்கப் பெற்ற கறுப்பு மூலிகைகளை உண்டு காயசித்தி பெற்ற சித்தர்கள் வருமாறு:
மச்சமுனி வல்லாரை பலர் குமரி
கமலமுனி கொடுவேலி காலாங்கி ஓமம்
பிரமமுனி செறுப்படை சிவயோகமுனி இராமதேவர் கரிசாலை
வாசமுனி பொற்றலை பிரமமுனி நீலி
கோரக்கர் கஞ்சா/பொற்றலை கஞ்சமலைச் சித்தர் வீழி
கொங்கணர் கரிசாலை பதஞ்சலி கரந்தை
சொரூபாநந்தர் திருமேனி நந்தீசர் கோவை
போகர் கொல்லங் கோவை
மேற்கண்டவர்கள் மூலிகைகளை முறைப்படி உண்டு காயசித்தி பெற்று நீண்ட நாள் வாழ்ந்திருந்ததாக அறியப்படுவதனால் மூலிகையின் சிறப்புகள் அறியப்படும்.

மூலிகைகளைப் பற்றிய அறிவு சித்தர்களிடையே மிகுந்திருந் தற்குச் சான்றாகக் கீழ்க்கண்ட பாடல் விளங்கக் காணலாம்.
” போக்கான கிளிமூக்கு மரமொன் றுண்டு
புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்
வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்
மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு
நோக்கான வழிநடக்கச் சுறுக்காய் ஓடும்
நொடியிலே காயசித்தி கிடைக்கு மப்பா
போக்கான பூ பூத்த மற்றாநாள் பழமாம்”
என்று, கிளிமூக்கு மரம் அதன் காயின் வடிவத்தால் ஆகுபெயராய் அம்மரத்திற்குப் பெயர் அமைந்துள்ளது. இலையின் வடிவம், பூ பூத்த மறுநாளே பழம் பழுக்கும் என்னும் அரிய செய்தியுடன்,அதன் பழத்தை உண்ட உடனே காய சித்தி கிடைக்குமென்று கூறுவதைக் காணும் போது, மூலிகைகளைச் சித்தர்கள் நுட்பமாக ஆராய்ந்திருந்ததை உணரலாம்.

“ போக்கான கிளிமூக்கு மரம தொன்று
புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்
வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்
மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு.”
என்று, பிறநூல்களும் ஒத்த பாடல்களால் அம்மரத்தைப் பற்றி கூறக் காணலாம்

“இந்தியா முழுவதும் ஏறக்குறைய 8,000 மூலிகைகள் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் ஒவ்வொன்றிலும்,சராசரியாக 1700 முதல் 1900 மூலிகைகள் வரை பயன்படுத்தப் படுகின்றன. இவை தவிரவும், கிராமிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் மூலிகைகளின் எண்ணிக்கை அதிகமானதாக உள்ளதைப் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பாரம்பரிய மருத்துவ மறுமலர்ச்சி’ அறப் பேரவை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஏறக்குறைய 15,000 பூக்கும் வகைத் தாவரச் சிறப்பினங்களில் பாதியளவு தாவரங்கள் மருத்துவப் பயன்பாடு உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்த அளவில், ஏறக்குறைய 2000 தாவரங்கள் பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்படுத்தப் படுகின்றன. இதில் பல தாவரங்கள் தமிழகத்தில் விளையாமல், பத்து சதவீதம் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டு, கச்சா மருந்துகளாகக் கிடைக்கின்றன என்று மருத்துவ மூலிகை ஆய்வறிஞர் முனைவர். என். லோகநாதன் தெரிவிக்கிறார்.’’

இவற்றிலிருந்து மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகைகளின் உண்மையான நிலைமை புலப்படும். ஆனால், சித்த மருத்துவ நூல்களில், மருத்துவத்துக்காகப் பயன்பட்ட மூலிகைகளின் முழு விபரங்கள் காணப்படவில்லை. காரணம், அவ்வாறான நூல்கள் அருகி விட்டன போலும்.

சென்னை, அரும்பாக்கத்தில் செயல்படும் இந்திய மருத்துவத் துறை வெளியிட்ட குணபாடம்மூலவர்க்கம் நூலில் ஏறக்குறைய 800 மூலிகை இனங்களின் பெயர்களும், அவற்றின் மாற்றுப் பெயர்களும் குறிப்பிடப் பட்டுள்ளன.

மருத்துவக் கலைக் களஞ்சியத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மருத்துவத் தாவர இனங்கள் இடம்பெற்றுள்ளன. மூலிகைக் கலைக்களஞ்சியத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களுடன், அவற்றின் உபயோகங்களும் தாவரவியல் பெயர்களும் குறிப்பிட்டுள்ளன.

ஆனால் மூலிகைகளின் எண்ணிக்கை இருபது இலட்சம் என்று சித்தர்கள் கூறியுள்ளதாகக் குன்றத்தூர் இராமமூர்த்தி குறிப்பிடுகிறார். அவை,
1. கற்ப மூலிகைகள் (Refuvemating Herbs)
2. ஞான மூலிகைகள் (Spiritual Herbs)
3. இரசவாத மூலிகைகள் (Alchemical Herbs)
4. வசிய மூலிகைகள் (Psychie Herbs)
5. மாந்திரீக மூலிகைகள் (Magic Herbs)
6. வழிபாட்டு மூலிகைகள் (Religious Herbs)
7. பிணி தீர்க்கும் மூலிகைகள் (Therapeutic Herbs)
8. உடல் தேற்றி மூலிகைகள் (Tonic Herbs)
9. உலோக மூலிகைகள் (Metallogenic Herbs)
10. வர்ம மூலிகைகள் (Chiropratic Herbs)
11. விஷ மூலிகைகள் (Toxic Herbs)
12. நஞ்சை முறிக்கும் மூலிகைகள் (Antidotes)
13. எலும்பொட்டும் மூலிகைகள் (Bone Sectors)
14. சதை ஒட்டும் மூலிகைகள் (Muscle Tones)
15. பச்சை குத்தும் மூலிகைகள் (Tattooing Herbs)
16. காதணி ஓம்பி மூலிகைகள் (Ear Boring Herbs)
17. பல்பிடுங்கும் மூலிகைகள் (Herbs for Dental Extraction)
18. கருச்சிதைவு மூலிகைகள் (Abortifacient Herbs)
என்று மூலிகைகள் வகைப்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
மேற்கண்ட நூல்களில் இடம் பெற்றுள்ள மூலிகைகள், மூலிகை பற்றிய ஆய்வுகள் மேலும் விரிவடைந்து மருத்துவப் பயனுக்குத் துணைபுரிய வேண்டும்.

மூலிகைகளின் பட்டியல்கள் மட்டும் பயன்தந்து விடாது. அத்தகைய மூலிகைகள் எந்தெந்த மருந்துகளுடன் இணைந்து மருந்தாகி, எவ்வகையான நோய்களைத் தீர்க்கின்றன என்பதும் கண்டறியப் படவேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால் தான், மூலிகை ஆய்வு முழுமை கொண்ட தாக அமையும்.

மருந்தியல்
சித்த மருந்தியல் அணுவை அடிப்படையாகக் கொண்டது. மருந்துப் பொருள்களில் உள்ள அணுவை நுண்ணணுவாகவும்’ பரமாணுவாகவும் மாற்றுவது, சித்த ‘மருந்தியல்’ ஆகும்.

ஒரு பொருளிலுள்ள அணுக்களை வேறொரு பொருளிலுள்ள அணுக்களுடன் இணைத்து, வேதியல் முறைப்படி புதிய அணுக்களை உருவாக்கி, அதன் மூலம் நோய்களைக் களைவது சித்த மருந்தியலின் அடிப்படையாகும்.

இவ்வாறு, அணுவியல் மாற்றங்களை உருவாக்க, வெப்பம், தீ, நெருப்பு போன்ற உலைகளின் மூலம் அணுக்கள் தயாரிக்கப் படுகின்றன. மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்ற உலைகள், ‘புடம்’ என்னும் சொல்லால் குறிப்பிடப் படுகின்றது.

புடம்: மருந்துகள் தயாரிக்கும் போது, அரைத்து, வேகவைத்து, எரித்து, நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவர்.
தீயின் அளவு: புடமிடும் போது, விறகின் மூலம் எரிக்கப்படும் தீ நான்கு வகைப் படும். அவை,
தீபாக்கினி : விளக்கின் சுடரைப் போல எரிவது.
கமலாக்கினி : தாமரைப் பூப்போல எரிவது.
கதலியாக்கினி : வாழைப் பூப்போல எரிவது.
காடாக்கினி : தீப்பந்தம் போல எரிவது.

புடத்தின் வகை: எரு, வறட்டி இவற்றைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும்.

” புடம் போடச் சொல்வேன் பேஷான காடை
நடமாடு விராட்டி நல் ஒன்று திடமாக
கவுதாரி விராட்டி கனமா யெருமூன்று
நவுதாரி சேவல் நலம்பத்துப் பவமாகும்
பண்ணி புடவிராட்டி பதமாக ஐம்பது தான்
எண்ணிக் கனபுடமே எழுநூறாம் பின்னாம்
கசபுடமே விராட்டி கடிபடவே ஆயிரமாம்
தசமாக இப்படியே சாற்றுவீர்”
என்று, உலாநூலில் உரைக்கக் காணலாம். காடைபுடம் 1; கவுதாரி 3; சேவல் 10; பன்றி 50; கனம் 700; கசம் 1000 என்றும், வறட்டி எண்ணிக்கையைக் கொண்டு புடத்தின் வகை குறிப்பிடப்படும்.

” புடம்போடுந் திட்டங்கள் பேசக் கேளு
பேரான யெருவொன்று காடை யாகும்
நடம்போடுங் கவுதாரிப் புடமும் நல்ல
நாடியே யெருமூன்று ஞானிக்குத்தான்
விடம்போடு பத்தெருவில் புடமு மாகும்
விராட்டிதான் ஏனத்தின் செயலுக்குத்தான்
கடம்போடு அறைதோறு மழுக்கி நல்ல
களமாகப் போடுவது கணக்கு மாமே
திடமா யெருநூறு கன புடந்தான்
திடமான கெசபுடமும் ஆயிரந்தான்”
என்னும் வாத சூத்திரம், காடை 1; கவுதாரி 3; ஏனம் 10; கனம் 100; கெசம் 1000 என்னும் எண்ணிக்கையைத் தருகிறது.

மருந்துகள் ஒவ்வொன்றுக்கும் அவற்றின் சேர்க்கைக்கும், தயாரிப்புக்கும் ஏற்றவாறு புடங்களின்வகை இருக்கும். மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் புடங்களின் பட்டியல் வருமாறு;
வரிசை எண்- புடம் பெயர் -எரு அல்லது வறட்டி எண்ணிக்கை
1. -காடைப் புடம்- 1
2. -கவுதாரிப் புடம்- 3
3. -குக்குடப் புடம் -10 அல்லது 8
4.- வராக புடம் -50
5. -கஜம் அல்லது யானை புடம்-500அல்லது 1000
6. -கன புடம் -700 அல்லது 800
7.– மணல் மறைவுப் புடம்- 800
8. -கோபுடம் -1000
என்னும் செயற்கைப் புட வகையால் மருந்து தயாரிக்கப்பட்டன. தீயினால் உண்டாகும் வெப்பத்தைக் கொண்டு மட்டுமே மருந்து தயாரிக்கப் படுவதில்லை. இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பத்தைக் கொண்டும் தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப் பயன்படும் புடங்கள் இயற்கைப் புடம் எனப்படும்.

இயற்கைப் புடங்களின் விபரம் வருமாறு:
வரிசை எண்  – புடம் பெயர்  – பயன்படும் பொருள்
1.  – கோபுர புடம்  – மணல்
2. –  பாணிடப் புடம்  – தண்ணீர்
3. –  உமிப் புடம்  – உமி
4.  – தானியப் புடம்  – நெல்
5.  – சூரியப் புடம்  – வெயில்
6. –  சந்திரப் புடம்  – நிலவொளி
7. –  பருவப் புடம்  – பௌர்ணமி நிலவு
8.  – இருள் புடம்  – அமாவாசை இரவு
9. –  பனிப்புடம் –  பனி
10.  – பட்டைப் புடம்  – மரத்தூள்
11. –  நிழற்புடம் –  சூரிய ஒளி படாத அறை

எரி பொருள்கள்
தைலம், எண்ணெய், களிம்பு, குழம்பு போன்ற மருந்துகள் எரிப்பு முறையால் தயாரிக்கப்படுபவை. அவை, எரித்தெடுக்கப் பயன்படும் விறகுகள் பல வகையாகும். ஒரே வகையான விறகுகளால் தயாரிக்கப் படாமல், மருந்தின் குணத்திற்கு ஏற்ற விறகுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

விறகின் வகையும் அவற்றால் தயாரிக்கப்படும் மருந்தின் விபரமும் வருமாறு:
எண் வரிசை -விறகின் பெயர் -தயாரிக்கப்படும் மருந்தின் பயன்
1.  – ஆவாரை -உடலில் ஏற்படும் வெப்பு முதலிய
2.  – சிற்றாமுட்டி -நோய்களுக்கான தைலம்
3.  – உசில் – கண், காது, மூக்கு, பாதம் ஆகிய
4.  – இலந்தை  – இடங்களுக்கு இடும் நெய், தைலம்
5.  – இலுப்பை  – உடலில் பூசுவதற்காகப் பூசும்
6.  – புளி  – பிடித் தைலம்
7.  – வேம்பு  – வாத நோய்களுக்குப் பயன்படும்.
8.  – பூவரசு  – குடிநீர், தைலம்
9.  – அரசு –
10.  – நுணா –
11.  – வன்னி –  வாத நோய் தைலம்
12.  – மாவிலிங்கம் –
13.  – நெல்லி
14.  – வேம்பு –  பித்த நோய் தைலம்
15.  – விளா
16.  – வேலன்  – ஐய நோய் தைலம்
17.  – கொன்றை
18.  – வேங்கை
19.  – பனை
20.  – தென்னை –  இரசம் சேர்ந்த மருந்து
21.  – வேலன்  – இரும்பு சேர்ந்த மருந்து
மேற்கண்ட பட்டியல்களைக் கொண்டு சித்த மருத்துவ மருந்துகள் தயாரிக்கப்பட்ட முறைகளை அறியலாம்.

மருந்து செய்முறை
சித்த மருத்துவத்தில் பயன்படும் அகமருந்துகள் முப்பத்திரண்டு. இவற்றின் செய்முறைகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட முறைகளைக் கொண்டிருக்கும். அவற்றை முறைப்படி செய்து முடிக்க வேண்டுமானால், மருந்துப் பொருளின் குணத்தையும், செய்யப்படும் மருந்துக்கு உரிய காலத்தையும் அறிந்திருக்க வேண்டும். செய்யப்படும் மருந்து ஒவ்வொன்றும் ஒவ்வொறு கால எல்லைக்குள் பலனளிப்பது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அம்மருந்து பலனளிப்பதில்லை என்பன போன்றவை மருத்துவர் அறிந்து செய்ய வேண்டியவை.

அக மருந்துகள் செய்முறையும், மருந்தின் கால எல்லையும் வருமாறு:

வரிசை -மருந்தின் செய்முறை (சுருக்கம்) – கால எண்
1. -சுரசம் – மூலிகைகளின் இலை, வேர், பட்டை, பூ, காய் இவற்றைத் தனித்தோ சேர்த்தோ நேரம் இடித்து, காய்ச்சி, முரித்து எடுப்பது -3 மணி நேரம்
2. சாறு – மூலிகைகளின் சாறு பிழிவது – 3 மணி நேரம்
3. குடிநீர் – மருந்துகளை இடித்துக் காய்ச்சி வடிகட்டி எடுப்பது – 3மணி நேரம்
4. கற்கம் – இரும்புத்தூளை மருந்துகளுடன் சேர்த்துக் கெட்டியாக அரைப்பது – 3 மணி நேரம்
5. உட்களி – வறுத்து அரைத்த அரிசி மாவுடன் உளுந்து, விதைப் பொடி கலந்து வெல்லம், சர்க்கரை 3 மணி நேரம் சேர்த்துக் காய்ச்சி, களிபோலக் கிளறி வைப்பது
6. அடை – அரிசிமாவுடன் சில மூலிகைகள் கூட்டியரைத்துத் தட்டி, வேகவைப்பது. – 3 மணி நேரம்
7. சூரணம் – மருந்து மூலிகை உலர்த்தி, வறுத்து, பொடித்து, வடிப்பது. – 3 தினங்கள்
8. பிட்டு – மருந்துகள் உலர்த்திப் பொடித்துப் பாலின் ஆவியில் இட்லிபோல் அவிப்பது. -3 திங்கள்
9. வடகம் – பிட்டு அவிப்பது போல் அவித்து, உரலிட்டு இடித்து, உருண்டையாக உருட்டுவது. -3 திங்கள்
10. வெண்ணெய் – மருந்துகளைப் பொடித்து ஆவின் நெய்விட்டு இரும்புக்கரண்டியில் எரித்து, கடைவது. -3 திங்கள்
11. மணப்பாகு – தேவையான மருந்துகளுடன் மூலிகைச்சாறு விட்டு, கற்கண்டு, சர்க்கரை கலந்து காய்ச்சி மணப் பக்குவத்தில் காய்ச்சுவது. – 6 திங்கள்
12. நெய் – மூலிகைச்சாறு, கிழங்குச் சாறு, கற்கம், சிலவகைக் குடிநீர் ஆகியவற்றுடன் நெய் கூட்டிக் காய்ச்சி, நெய் பதத்தில் வடிப்பது. – 6 திங்கள்
13. இரசாயனம் – மருந்துப் பொருள்களைச் சூரணஞ் செய்து (சுவைப்பு) சர்க்கரை, நெய் சேர்த்துக் குழம்பு போலச் செய்வது. -6 திங்கள்
14. இளகம் – மூலிகைச் சாறு வகைகளுடன் சர்க்கரை, வெல்லம் சேர்த்து வற்றக் காய்ச்சி, மருந்துப் பொடிகளைத் தூவி, நெய் சேர்த்துக் கிளறி இளக்கமாக எடுப்பது. -6 திங்கள்
15. எண்ணெய் – நல்லெண்ணெய்யுடன் மருந்துகளைச் சேர்த்துக் காய்ச்சி வடிப்பது.- ஓராண்டு
16. மாத்திரை – மருந்துகளை மூலிகைச்சாறு, பால், குடிநீர் இவற்றில் அரைத்து உருட்டி உலர்த்துவது.- ஓராண்டு
17. கடுகு – மருந்துகளை நெய், எண்ணெய் விட்டுக் காய்ச்சிக் கடுகு பதத்தில் எடுப்பது.- ஓராண்டு
18. பக்குவம் – மருந்துகளைப் பக்குவப்படுத்த ஊறவைப்பது, கழுவுவது, பொடிப்பது போன்ற செயல்களாகும். -ஓராண்டு
19. தேனூறல் – நெல்லிக்காய், கடுக்காய், இஞ்சி போன்றவற்றை நீரில் ஊறவைத்து, அவற்றின் மேல் துளை செய்து, உள்ளிருக்கும் நீரைப் போக்கி, பாகு,தேன் போன்றவற்றில் ஊறவைப்பது. -ஓராண்டு
20. தேனீர் – மருந்துகளை வாலையில் நீர்விட்டு எரித்து எடுப்பது. – ஓராண்டு
21. மெழுகு – இரச கலப்புள்ள மருந்துகளைத் தனியாகவோ, மருந்துப் பொருள்களுடனோ தேன், மூலிகைச் சாறுகளில் அரைத்து மெழுகு பதத்தில் செய்வது. – ஐந்தாண்டு
22. குழம்பு – மூலிகைச்சாறு, மருந்து, சர்க்கரை போன்றவற்றைக் குழம்பு பதத்தில் காய்ச்சி வடிப்பது. – ஐந்தாண்டு
23. பதங்கம் – இரசம் தனியாகவோ கலப்புள்ள மருந்துகளையோ மண்சட்டியில் உப்பு செங்கல் தூள் நடுவில் மருந்துகளை வைத்துச் சீலை செய்து எரித்து, மேல்
சட்டியில் படிந்திருப்பதை வழித்தெடுப்பது. – பத்துஆண்டுகள்
24. செந்தூரம் – உலோகம், பாடாணம் போன்றவற்றை மூலிகைச்சாறு, புகை நீர், செயநீர் இவற்றில் அரைத்துப் புடம் போட்டு எடுப்பது. – 75 ஆண்டுகள்
25. பற்பம் – உலோகம், பாடாணம், உபரசம் ஆகிய இவற்றை மூலிகை, புகைநீர், செயநீர் இவற்றில் அரைத்துப் புடமிட்டு நீறாக்குவது. -100 ஆண்டுகள்
26. கட்டு – பாடாணங்களைச் சுருக்குக் கொடுத்து, பற்பம், செந்தூரம் போன்ற பொருள்களுடன் சேர்த்து அரைத்து மாத்திரையாகச் செய்வது. – 100 ஆண்டுகள்
27. உருக்கு – பாடாணம், உலோகம் இவற்றுடன் நட்பு, பகைப் பொருள்களைக் கூட்டி எரித்து எடுப்பது. – 100 ஆண்டுகள்
28. களங்கு – இரசம், பாடாணம் போன்ற மருந்துகளை மூலிகை, செயநீர், புகைநீர் முதலியவற்றால் சுருக்குக் கொடுத்து, புடமிட்டு, மணியாக்கி, தங்கம் நாகம் சேர்த்துக் கூட்டி எடுப்பது. -100ஆண்டுகள்
29. சுண்ணம் – இரசம், பாடாணம், உலோகம் என்னும் இவை தனியாகவோ கலந்தோ மூலிகை, செயநீர், புகைநீர் இவற்றில் அரைத்து சீலை செய்து நெருப்பில் ஊதி எடுப்பது. -500 ஆண்டுகள்
30. கற்பம் –மூலிகை, உலோகம், உபரசங்கள் போன்ற பலவற்றைப் பக்குவத்துடன் செய்வது.
31. சத்து – காந்தம், இரும்புத்தூள் முதலியவற்றுடன் பல பாடாணங்களைச் சேர்த்து அரைத்து ஊதி இரசம், கந்தகம், தங்கம் சேர்த்து எரித்து எடுப்பது.
32. குளிகை – வாலை ரசத்தை மணியாக்கிக் கோவை பலயாக்கிக் கொள்வது.

மேற்கண்ட பட்டியலின்படி மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப்படும் என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட்டது. இம்மருந்துகள் செயல்புரியும் கால அளவு மூன்று மணி நேரத்திலிருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் என்று குறிப்பிடப்படுவதைக் கொண்டு, அம்மருந்துகளின் வன்மையைக் கண்டறியலாம். சுண்ணம் ஐந்நூறு ஆண்டுகளும், களங்கு, உருக்கு, கட்டு, பற்பம் ஆகிய மருந்துகள் நூறு ஆண்டுகளும் வன்மையுடையது என்றால், அவற்றை உண்பவர் உடம்பில் அத்தனை ஆண்டுகள் மருந்தாக நின்று செயல்படும் என்பதே சரியாம். அத்தனை ஆண்டுகள் உடலைக் காக்கக் கூடிய மருந்தென்றால், அவை மக்களைக் காக்கும் மகத்தான மருந்தெனலாம்.

தகவல்: பசுமைப்பாதை

🎋🌾🍂🍃🍁☘🍁🍃🍂🌾🎋

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...